புனித வாரம் 1. கிறிஸ்து பெருமான் தம் பாஸ்கா மறைபொருளை நிறைவேற்ற எருசலேமுக்கு வருகை தந்தைத் திருச்சபை இன்று நினைவுகூருகின்றது: எனவே, எல்லாத் திருப்பலிகளிலும் இந்த நினைவு கொண்டாடப்படும். முக்கியமாக திருப்பலிக்குமுன் பவனி அல்லது சிறப்பான வருகைச் சடங்கினாலும், மற்றத் திருப்பலிகளுக்குமுன் சாதாரான வருகைச் சடங்கினாலும், இது கொண்டாடப்படும், மக்கள் பெருமளவில் வரும் மற்றத் திருப்பலிகளுக்கு முன்னும் சிறப்பான வருகைச் சடங்கை நடத்தலாம். ஆனால் பவனியை மறுமுறை நிகழ்த்தலாகாது. ஆண்டவர் எருசலேமுக்கு வருவதை நினைவுகூர்தல் முதல் வகை: பவனி தக்க நேரத்தில் மக்கள் கோயிலுக்கு வெளியே ஒரு சிற்றாலயத்தில் அல்லது மற்றொரு தகுந்த இடத்தில் கூடுவார்கள். அவர்கள் கையில் குருத்தோலை பிடித்திருப்பார்கள். பல்லவி மத் 21: 9 தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே! இஸ்ராயேலின் பேரரசே, உன்னதங்களிலே ஓசான்னா! பின்னர் குரு வழக்கம்போல மக்களை வாழ்த்துகிறார். சிற்றுரை ஆற்றி, இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் நன்கு அறிந்து அதில் ஈடுபட்டுப் பங்கெடுக்கத் தூண்டுகிறார். இதற்குக் கீழுள்ள உரையை அல்லது அதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே! தவக்காலத் தொடக்கத்திலிருந்தே தவமுயற்சிகளாலும் அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைப் பண்படுத்திய பின் நம் ஆண்டவரின் பாஸ்கா மறைநிகழ்ச்சியின் தொடக்கத்தைத் திருச்சபையோடு சேர்ந்து கொண்டாட நாம் இதோ கூடியிருக்கிறோம். பாஸ்கா மறைநிகழ்ச்சியின் ஆண்டவருடைய திருப்பாடுகளையும் உயிர்த்தெழுதலையும் குறிக்கின்றது. பாஸ்காவை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்கு எழுந்தருளினார். எனவே, மீட்பளிக்கும் இந்த வருகையை நாம் முழு விசுவாசத்துடனும் பக்தியுடனும் நினைவிற்கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். இவ்வாறு அவருடைய அருளினால் சிலுவையில் பங்குகொள்ளும் நாம் உயிர்ப்பிலும் முடிவில்லா வாழ்விலும் பங்குபெறுவோமாக. சிற்றுரைக்குப்பின் குரு கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைக் கைகளைக் குவித்துச் சொலகிறார்: செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, இந்தக் குருத்தோலைகளை உமது ரு ஆசியால் புனிதப்படுத்தியருளும். எல். ஆமென். அல்லது செபிப்போமாக (மன்றாடுவோமாக) இரக்கமுள்ள இறைவா, உம்முடைய மக்களாகிய எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தருளும். எங்கள் வேண்டுதலைக் கனிவுடன் கேட்டருளும். எல். ஆமென். குரு மௌனமாக குருத்தோலைகள்மீது தீர்த்தம் தெளிக்கிறார். (முதல் ஆண்டு: 2008, 2011, 2014) தூய மத்தேயு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 21:1-11 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், "இவை ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார்."மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர். இது ஆண்டவரின் அருள்வாக்கு. இரண்டாம் ஆண்டு: (2009, 2012, 2015) தூய மாற்கு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 11:1-10 இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர். இது ஆண்டவரின் அருள்வாக்கு. மூன்றாம் ஆண்டு: (2010,2013,2016) தூய லூக்கா எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 19:29-40 ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள்" என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்; பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்; "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். இது ஆண்டவரின் அருள்வாக்கு. நற்செய்திக்குப்பின் சுருக்கமாக மறையுரை ஆற்றலாம். பவனி தொடங்குமுன் குரு அல்லது பணியாளர் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று அழைப்பு விடுப்பார்: அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த மக்கள் திரளைப் பின்பற்றி, நாமும் சமாதானமாகப் புறப்பட்டுப் பவனியாகச் செல்வோம். திருப்பலி நடக்கவிருக்கும் கோயிலுக்குப் பவனி புறப்படுகிறது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, எரியும் திரிகளைத் தாங்கும் இருபணியாளர்களிடையே அலங்கரிக்கப்பட்ட சிலுவை பிடித்திருப்பவரும், அவர்களுக்குப்பின் குருவும் மற்றப் பணியாளரும் செல்வர். இறுதியாக இறைமக்;கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு அணிவகுத்துச் செல்வர். பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுவர். ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம் ஓசானா தாவீதின் புதல்வா - ஓசானா ஓசானா ஓசானா மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா தாவீது அரசரின் புத்திரரே - ஓர் கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர் புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம் குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம் மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம் பாவிகளைகத் தேடி வந்தவரே - எம் கோவேறு குட்டியை ஆசனமாய் - எம் உலகமே உமது அரிய வேலை - எம் பல்லவி 1: மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன, பூவுலகும் அதில்வாழும் குடிகள் யாவரும் அவர்தம் உடைமையே, ஆண்டவரது மலைமீது ஏறிச்செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவன் யார்? இவனே ஆண்டவரிடம் ஆசிபெறுவான்,இவனே தன்னைக் காக்கும் ஆண்;டவரிடம் மீ;ட்பு அடைவான். வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள், பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
பல்லவி 2
(தேவைக்கேற்ப இப்பல்லவியை 46ஆம் சங்கீதத்தின் அடிகளுக்கு இடையே பல்லவியாகப் பாடலாம்.) சங்கீதம் 46 மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார். நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார். மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார். எக்காளம் முழங்க, ஆண்டவர் எழுந்தருளுகிறார். ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்.அவருக்கு இன்னிசை எழுப்புங்கள். ஆபிரகாமின் இறைமக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர் கிறிஸ்து அரசருக்குப் பாடல்
எல். கிறிஸ்து அரசே..... பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர், தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர், எல். கிறிஸ்து அரசே,.... பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ் எல். கிறிஸ்து அரசே,.... பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள் குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்; எல். கிறிஸ்து அரசே..... பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம் வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே: எல். கிறிஸ்து அரசே..... பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே, நலமார் அரசே, அருள் அரசே, எல். கிறிஸ்து அரசே..... பவனி கொயிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடல் அல்லது இக்கருத்துள்ள வேறு பாடல் பாடப்படும். ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில், எபிரேயச் சிறுவர் குழாம் எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெலாம் குரு பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம் செலுத்துவார்; வசதிபோலத் தூபம் காட்டலாம். பின்னர் தம் இருக்கைக்குச் சென்று ("காப்பா" மேல்போர்வையை அகற்றித் திருப்பலி உடை அணிந்து), திருப்பலியின் தொடக்கச் சடங்கை விட்டுவிட்டு, பவனியின் முடிவுரையாகத் திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். வழக்கம்போலத் திருப்பலி தொடர்;ந்து நடைபெறும். 2ஆம் வகை: சிறப்பு வருகை கோயிலுக்கு வெளியே பவனி நடத்த முடியாதெனில், அந்நாளின் முக்கியமான திருப்பலிக்கு முன் கோயிலுக்குள்ளேயே சிறந்த முறையில் ஆடம்பர வருகை நடத்திக் கொண்டாடலாம். இறைமக்கள் கோயில் வாசல்முன் அல்லது கோயிலுக்குள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கூடி நிற்பர் அவர்களுள் பெரும்பான்மையோர் பார்க்கக்;கூடிய இடத்திற்குக் குருவும் பணியாளர்களும் இறைமக்களின் பிரதிநிதிகள் சிலரும் வருவர். இந்த இடம் பீடமுற்றத்திற்கு வெளியே இருக்கவேண்டும். குரு அங்கு வருகையில், "தாவிதின் மகனுக்கு ஓசான்னா" என்னும் பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும், பின் குருத்தோலைக்களை மந்திரித்தலும் ஆண்டவர் எருசலேமுக்கு வருகை தந்தைப்பற்றிய நற்செய்தி அறிவிப்பும் (எண 5-7இல் உள்ளதுபோல) நடைபெறும். நற்செய்திக்குப்பின் குருவும் பணியாளரும் பிரதிநிதிகளும் ஆடம்பரமாகக் கோயிலின் வழியாகப் பீடத்திற்குப் பவனியாகச் செல்வர். அப்பொழுது "ஆண்டவர் புனித நகரத்தில்" என்னும் பதிலுரைப் பாடல் (எண் 10) அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடப்படும். பீடத்தை அடைந்;ததும், குரு வணக்கம் செலுத்தி, தம் இருக்கைக்குச் சென்று திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். திருப்பலி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும். 3ஆம் வகை: சாதாரண வருகை சிறப்பு வருகை நடைபெறாத இந்நாள் திருப்பலிகளில் எல்லாம் சாதாரன வருகை நடத்தி, ஆண்டவர் எருசலேமுக்கு வருகை தந்ததின் நினைவு புதுப்பிக்கப்படும். குரு பீடத்திற்கு வரும்போது வருகைப் பல்லவி சங்கீதத்துடன் (எண் 18) பாடப்படும் அல்லது அதே கருத்துள்ள வேறு பாடலைப் பாடலாம். குரு பீடத்தை அடைந்து, வணங்கி, தம் இருக்கைக்குச் சென்று, இறைமக்களை வாழ்த்துவார். திருப்பலி வழக்கம்போலத் தொடர்ந்து நடைபெறும். திருக்கூட்டம் இல்லாத திருப்பலியிலும், வருகைப் பாடல் பாட முடியாதபோதும் குரு பீடத்தை அடைந்ததும், வணங்கி, இறைமக்களை வாழ்த்துவார். பின் வருகைப் பல்லவியை வாசித்து வழக்கம்போலத் திருப்பலியைத் தொடர்வார். வருகைப் பல்லவி : வாயில்களே, நிலையான உயர்த்துங்கள், சங் 23:9-10 பவனியோ சிறப்பு வருகையோ நடத்தமுடியாத இடங்களில், கிறிஸ்து எருசலேமுக்கு வந்ததையும் பாடுபட்டதையும்பற்றி இறைவாக்கு வழிபாடு நடத்துவது பயனளிக்கும். இதைச் சனிக்கிழமை மாலையில் அல்லது ஞாயிறன்று வசதியான நேரத்தில் நடத்தலாம். திருப்பலி
பவனி அல்லது சிறப்பு வருகைக்குப்பின் குரு சபை மன்றாட்டைச் சொல்லி திருப்பலியைத் தொடர்வார். சபை மன்றாட்டு உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். (முதல் வாசகம்: 1,2,3 ஆண்டுகளில்: எசாயா 50:4-7) இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்: 4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. 6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
தியானப்பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24 பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்தீர் என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர் ஏனனில் பல நாய்கள் என்னை சூழ்துகொண்டன என் ஆடைகளைகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் நானோ உம் நாமத்தை உம் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன் இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2: 6-11 அப்போஸ்தலரான தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; 11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும். இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9 8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார். 9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்
ஆண்டவருடைய திருப்பாடுகளில் வரலாறு. எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லையெனில், குரு அதை வாசிப்பார். வாசகர்களும் அதை வாங்கிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் குருவே வாசிக்க வேண்டும். திருப்பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன் திருத்தொண்டர்கள் மட்டும் நற்செய்திக்குமுன் நடப்பது போல குருவிடம் ஆசி பெறுவார்கள். முதல் ஆண்டு: (2008, 2011, 2014, 2017, 2020) மத்தேயு 26:14 - 27:66 முன்று ஆண்டு சுற்றுகளை கொண்ட ஞாயிறு வாசங்களில்
திருப்பாடுகளின் வரலாற்றுக்குப்பின் வசதிபோல சுருக்கமாக மறையுரையாற்றலாம். விசுவாச அறிக்கை சொல்லவும். ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென். விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :
விசுவாசிகளின் மன்றாட்டு:
ஆமென். நற்கருணை வழிபாடு
காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல்- காணிக்கைப் பாடல் (குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது) (குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.) (குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது) (குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.) (கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.) குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள். காணிக்கைமிது மன்றாட்டு இரக்கமுள்ள இறைவா, உம் திருமகனின் பாடுகளையும் இறப்பையும் கொண்டாடும் நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும். எங்கள் செயல்களால் உமது மன்னிப்பைப் பெற இயலாது எனினும். ஒப்பற்ற இப்பலியின் ஆற்றலால் உமது மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து வாழ்ந்திடச் செய்தருளும். எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென் தொடக்கவுரை: வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் சாவு குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. எல். உம்மோடும் இருப்பாராக குரு: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள். எல். ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம். குரு: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். எல். அது தகுதியும் நீதியுமானதே. ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்து மாசற்றவராயினும் பாவிகளுக்காகப் பாடுபடவும், பொல்லாதவர்க்காக அநீத முறையில் தண்டனை பெறவும் திருவுளமானீர்; ஆகவே, நாங்கள் வானகத் தூதர் அனைவரோடும் சேர்ந்து உம்மைப் புகழ்ந்தேத்தி, அக்களிப்புடன் குரல் எழுப்பிச் சொல்வதாவது:
நற்கருணை மன்றாட்டு 3 வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர். ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம். ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்! ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக. இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம். இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இக்குடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய மக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும். இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
மக் : ஆமென். திருவிருந்துச் சடங்கு : குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும். (பாடல் திருப்பலியில்) உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! (குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்) குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்! (கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
என் தந்தையே, நான் குடித்தால் ஒழிய இத்துன்பக்கலம் அகல முடியாதெனில், உமது விருப்பப்படியே ஆகட்டும். திருவிருந்து பாடல்: நன்றி மன்றாட்டு ஜெபிப்போமாக: அன்புத் தந்தையே, இத்திருவிருந்தில் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். எல்: ஆமென் குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று. (குரு பீட வணக்கம் செய்து பரிசாரகருடன் திரும்பிச் செல்கிறார்.
|