பிறந்த இடம் : பிரபாந்த், பெல்ஜியம்
காலம் : 712
பாதுகாவல் : ப்ரூசல்ஸ் பாதுகாவலி
சிறப்பு : தடைகளைத் தாண்டி வருதல்.
வாழ்க்கைக் குறிப்பு :
இப்புனிதை ஏழாம் நூற்றாண்டிலே, பிரபாந்த் என்ற ஊரிலே பிறந்தவர். இவளது குடும்பம் ஆன்மீகத்தில் ஊன்றிய ஒன்று. இவள் கற்பு, செபவாழ்வு எனத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டாள். மேலும் இவள், தன் உடல் உணர்வுகளுக்கு அடிமையாகிவிடாது, சோதனைகளையும், தடைகளையும் தாண்டி, தகர்த்தெறிந்து நன் வாழ்வினை நடத்திய புனிதை. இவளைப்பற்றிக் கூறும்போது, ஒன்றைச் சொல்வார்கள் என்னவென்றால், ஒருநாள் இரவு விளக்கை எடுத்துக்கொண்டு, ஆலயத்திற்குச் செல்லும் போது, சாத்தான் இவளைத் தவறானப் பாதையில் செல்ல வைக்கும் நோக்கத்துடன், அந்த விளக்கை அணைத்தானாம். ஆனால் வானதூதர் மீண்டும் விளக்கினை ஏற்றி, அவளதுப் பாதைக்கு ஒளிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இவள் 712ம் ஆண்டு உயிர் நீத்தார். இவளது புனிதப் பொருட்கள் ப்ரூசல்ஸ் என்னும் நகரிலே வைக்கப்பட்டுள்ளது.
ஜெபம் :
இறைவா, நீர் எல்லா மக்களையும், உமது ஆவி நிறைந்த வாழ்விற்கு அழைக்கின்றீர். புனித குதுலா - வைப் போன்று நாங்களும் உம்மை என்றும் தரிசிக்க உதவிப் புரியும். மேலும் தூய உள்ளத்தோடு வாழ எங்களுக்கு உதவியருளும்.
ஆமென்.
ஜனவரி 8
புனித லாரென்ஸ் ஜியுஸ்தினியானி
புனித லாரென்ஸ் ஜியுஸ்தினியானி
பிறந்த இடம் : வெனிஸ், இத்தாலி
காலம் : 1381 - 1455
பாதுகாவல் : போதனை, பகிர்வு
சிறப்பு : தாழ்ச்சி
வாழ்க்கை குறிப்பு :
வெனிஸ் நகரத்திலே 1381ம் ஆண்டு பிறந்தவர் லாரென்ஸ். இவர் சிறுவயது முதலே ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டவர். தனது 19வது வயதிலே அகுஸ்தினின் துறவிகள் இல்லத்திலேச் சேர்;ந்தார். இவர் தனது இல்லத்திற்காக தர்மம் கேட்டும் வந்தார். எளிமை, தாழ்ச்சி மற்றும் தன்னடக்கம் ஆகியவைகளைக் கடைபிடித்து வந்தார். 1406ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவருடைய ஈடுபாடு, நல்லச் செயல்களைச் செய்யும் மனநிலையே இவரை ஆயராக நியமிக்கும் பொறுப்பிற்கு வழி வகுத்தது.
சிறப்பு :
ஆயரானப் பின்னும் கூட, இவர் எழைகளின் பேரில் அதிக அக்கறைச் செலுத்தினார். அவர்களுக்கு அறிவுரை, மனஆறுதல், தர்மம் இவைகளையும் செய்து வந்தார். 1451ல் திருத்தந்தை நிக்கோலாஸ் அவர்களால், இவர் வெனிஷ் நகரத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். இவருடைய தாழ்ச்சியின் பொருட்டு பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இவர் கடவுளின் அன்பை மையப்படுத்தி, நிறையப் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் தன் 74ம் வயதிலே நோய்வாய்ப்பட்டார். இறப்பானது மிக அண்மையில் இருப்பதையுணர்ந்த இவர் தர்மம் கேட்பவர்களுக்கும் நாம் மரியாதைச் செலுத்த வேண்டும் என்று கூறி சனவரி 8ம் தேதி 1455ல் மரித்தார்.
செபம்:
அன்பு இறைவா, ஆயர்களின் மாணிக்கமான தூய லாரென்ஸ் தனது அன்பை தன் செயல்களினால் ஏழைகளுக்குச் செலுத்தினார். அதுபோல, நானும் பிறரை என்னைப் போல் மதித்து அன்புச் செய்திட அருள்தாரும். எளிமையையும், தாழ்ச்சியையும் என் வாழ்வில் போற்றிப் புகழ அருள்புரியும். ஆமென்.
St. Gudula
St. Laurence
St. Severinus
St. Angela
ஜனவரி 8
புனித செவரின் -482
புனித செவரின் -482
இளமைப்பருவத்தைப் பற்றித்தெளிவான விளக்கங்கள கிடைக்கப் பெறாத புனிதர்களில் இவரும் ஒருவர். ஒரு சில எழுத்தாளர்கள் இவரைத் தெற்கு இத்தாலியைச்சார்ந்தவர் என்றும் சிலர் உரோமையைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர். இவரின் எழுத்துக்கள் மொழி நடை இவரை உரோமையைச் சார்ந்தவர் என்று சான்று பகர்கின்றது.
இவர் பிற்காலத்தில் நோரிக்கும் பகுதியில் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்தவர் என்பது எல்லாரும் ஏற்றுக்;கொள்கின்ற பொதுவான செய்தியாகும். தொடக்க கால கட்டத்தில் அந்த இடத்தில் நற்செய்திக்காகச் சென்ற போது கடுமையான் எதிர்ப்பு இருந்தது. அப்போது அவர் வேதனையில் “இந்த பகுதிக்கு கடவுளின் ;தண்டனை வரும்” என்று மன வேதனையில் கூறி விட்டு கெய்ன்பர்க் பகுதிக்குச் சென்று விட்டார்.
அவர் சொன்ன இறைவாக்கு உண்மையானது. குணர்கள் என்ற முரட்டுக கூட்டத்தினர் அந்த பகுதியை சூரையாடினர். அந்த பகுதி முழுவதும் கடுமையாகத்தாக்கப் பட்டது. பலர் அழிவின் விளிம்பிற்கே சென்றனர். இதனால் மக்கள் அழைத்து தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது. அதன் விளைவாக இவர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவழைக்கப்பட்டார்.
டான் டியூப் ஆற்றங்கரையில் பவியானா என்ற நகர மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் வாடிய போது புனித செவரினின் கடும் செபமும் தவமும் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுத்தந்தன. பணக்காரப் பெண் ஒருத்தி தன்னிடம் இருந்த அனைத்துப்பொருட்களையும் மக்கள் அனைவருக்கும் வாரி வழங்கினார். மக்கள் மனமகிழ்ந்தனர். மேலும் அந்த பகுதியில் பல ஆற்றல் மிகு செயல்களைச் செய்தார். அடிமைகளை விடுவித்தார்;. நோயாளிகளைக் குணப்படுத்தினார். வரவிருந்த ஆபத்தை தடுத்து நிறுத்தினார்.
புனித செவரின் சமாதானத்தின் தூதர் என்று அழைக்கப் பட்டார். அந்த பெயருக்கேற்ப வாழ்ந்தார். சண்டை சச்சரவுகள் இருந்த இடத்திற்குச் சென்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
இவர் பணிகளைக் கண்ட மக்கள் புனித செவரின் ஆயராக வேண்டும் என்ற தங்கள் ஆவலைத் தெரிவித்தனர் ஆனால் அதற்கு புனித செவரின் மறுத்து விட்டார். ஆயர் பொறுப்பு தன் மேய்ப்புப்பணிக்கு இடையூறாக மாறி விடுமோ என்று அஞ்சினார்.
காசா பவியானா போன்ற பகுதிகளில் துறவு மடங்களை நிறுவினார். பல நேரங்களில் இவர் ஒரு முறை மட்டுமே உணவு உட்கொண்டார். பாதத்திற்கு செருப்பு கூட அணிய வில்லை. பல அரசர்கள் உயர் குடும்பத்தைச்சர்ந்தவர்கள் அனைவரும் இவரது தவ வாழ்வைக் காண புனித செவரின் இருப்பிடம் நோக்கி வந்தனர். ஆனால் அவர் வாழ்ந்த இருப்பிடத்தைக் கண்ட அவர்கள் திகைத்தனர். காரணம் அவர் வாழ்ந்த இடம் ஒரு குடிசை. அந்த குடிசைக்குள் செல்லவும் அமரவும் எழவும் மிகச் சிரமமாக இருந்தது.
தம் சாவை புனித செவரின் முன்னறிவித்தார். தாம் முன்னறிவத்தபடியே 482 ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் தம் ஆன்மாவைக் கடவுளிடம் ஒப்படைத்தார். அவருடைய இறுதி வார்த்தை அனைத்து உயிர்களே ஆண்டவரைப் புகழுங்கள்.
இறை வார்த்தை: பசித்திருப்போருக்காக உனனையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும் (எசா. 58:10)
தொகுப்பு: அருட்பணி. சந்தீஸ்டன்
St. Gudula
St. Laurence
St. Severinus
St. Angela
ஜனவரி 8
புனித ஆஞ்சலா
Saint Angela of Foligno
Saint of the Day for January 8
(1248 – January 4, 1309)
Saint Angela of Foligno’s story
Some saints show marks of holiness very early. Not Angela! Born of a leading family in Foligno, Italy, she became immersed in the quest for wealth and social position. As a wife and mother, she continued this life of distraction.
Around the age of 40, she recognized the emptiness of her life and sought God’s help in the Sacrament of Penance. Her Franciscan confessor helped Angela to seek God’s pardon for her previous life and to dedicate herself to prayer and the works of charity.
Shortly after her conversion, her husband and children died. Selling most of her possessions, she entered the Secular Franciscan Order. She was alternately absorbed by meditating on the crucified Christ and by serving the poor of Foligno as a nurse and beggar for their needs. Other women joined her in a religious community.
At her confessor’s advice, Angela wrote her Book of Visions and Instructions. In it she recalls some of the temptations she suffered after her conversion; she also expresses her thanks to God for the Incarnation of Jesus. This book and her life earned for Angela the title “Teacher of Theologians.” She was beatified in 1693, and canonized in 2013.
Reflection
People who live in the United States today can understand Saint Angela’s temptation to increase her sense of self-worth by accumulating money, fame or power. Striving to possess more and more, she became more and more self-centered. When she realized she was priceless because she was created and loved by God, she became very penitential and very charitable to the poor. What had seemed foolish early in her life now became very important. The path of self-emptying she followed is the path all holy men and women must follow. The Liturgical Feast of Saint Angela of Foligno is January 7.
இறை வார்த்தை: பசித்திருப்போருக்காக உனனையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும் (எசா. 58:10)