காந்தர்பரி நகரத்துக்குப் பெருமை சேர்த்தவர், உளவாளி என்று பொயக்குற்றம் சாட்டப்பட்;வர், பேராயர்பதவிக்குப் பரிந்துரைக்கப் பட்டவர், இங்கிலாந்து நாட்டின் விடிவெள்ளிகளில் ஒருவர் யார்?
புனித ஏட்ரியான்
புனித ஏட்ரியான் ஆப்பரிக்காவில் பிறந்தார். இத்தாலி நாட்டில் உள்ள புனித பெனடிக்ட் துறவற மடத்தில் இவர் சேர்ந்தார். புனித ஏட்ரியான் ஒழுக்கம் தவ வாழ்வு கராணமாக தலைமைப் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. அந்த பொறுப்பில் ஏட்ரியான் தம் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தினார்.
அப்போது திருத்தந்தையாக இருந்த புனித விட்டாலியன் ஏட்ரியான் காந்தர் பரி நகர பேராயர் புனித டேயுஸ்ட்டல் பணி நிறைவு பெற்ற பின் அப்பொறுப்பை ஏட்ரியான் ஏற்க விரும்பினார். ஆனால் அதற்குத் தனக்குத் தகுதியில்லை என்று கூறி மறுத்து விட்டார்; ஏட்ரியான். மாறாக தியோடர் என்பவரைப் பரிந்துரைத்தார் ஏட்ரியான். அவருக்கு ஆலோசகராக ஏட்ரியான் இருந்தார்.
உரோமையி;ல் 668 ஆம் ஆண்டு தியோடர் பேராயாராக திருநிலைப் படுத்தப்பட்டார். பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குச்சென்ற போது பேராயரும் ஏட்ரியானும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ஏட்ரியான் மீது உளவாளி என்று தவறான குற்றச்சாட்டை சுமத்தினர். 2 ஆண்டுகள் அவர்கள் காவலில் வைக்கப் பட்டார். அவர் மேல் எந்த குற்றமும் இல்லை என்று உறுதியான உடன் அவர் விடுவிக்கப் பட்டார். இங்கிலாந்து சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. புனித பீட்டர் துறவு மடத் தலைமைப் பொறுப்பு அவருக்காகக் காத்திருந்தது. வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். புனித பீட்டர் துறவு மடத்தை நிறுவியர் புனித அகஸ்டின். ( அவர் மோனிக்கம்மாளின் மகனான கிப்போ நகரத்து அகஸ்டின் அல்ல. காந்தர் பரி நகரத்து அகஸ்டின் ஆவார். அந்த துறவு மடம் பிறகாலத்தல் புகழ் பெற்ற கல்வி நிறுவனமாக மாறியது.) அதன் பொறுப்பை ஏட்ரியான் ஏற்றுக் கொண்ட பின் பல்வேறு இடங்களில் கல்விச் சாலைகளை அமைத்தார். அதன் விளைவாக் அறிவுச் சோலை மணம் வீசியது.
இந்த கல்விசாலைகளிலருந்துதான் ஜெர்மன் நாட்டிற்கு 8ஆம் நூற்றாண்டில் விசுவாசத்தளர்ச்சி ஏற்பட்ட போது மறை பணியளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் விசுவாத்தைத் தூக்கி நிறுத்தினர்.
இறுதியாக உழைப்பின் களைப்பின் மிகுதியால் 709ஆம் ஆண்டு ஜனவரி ஆம் நாள் தம் ஆன்மாவைக் கடவுளிடம் ஒப்படைத்தார். இவரது கல்லறை காந்தர் பெரி பேராலயத்தில் உள்ளது.
இறை வார்த்தை : நாமும் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும் (யோவா. 17:11)
தொகுப்பு: அருட்பணி. சந்தீஸ்டன்
St. Adrian
St. Julian
ஜனவரி 9
புனித ஜீலியன்
புனித ஜீலியன் (- 313)
சிரியா நாட்டில் அந்தியோக்கு நகரில் 3ஆம் நூற்றாண்டில் பிறந்தார். இவருடைய மனைவியின் பெயர் புனித பசிலிஸ்ஸா. இவர்கள் இருவரும் தொடக்கத்திலிருந்தே திருமண உறவு இல்லாமல் வாழ உறுதி பூண்டு அதற்கேற்ப வாழ்ந்து வந்தனர். ஆத்தும, சரீர, பிறர் சிநேக செயல்களில் ஈடுபட்டு ஏராளமாக நன்மை செய்து வந்தார்கள். தங்கள் இல்லத்தை இவர்கள் மருத்துவமனையாக மாற்றினார்கள். ஆண் நோயாளிகளை ஜீலியனும், பெண் நோயாளிகளை மனைவியும் பராமரித்து வந்தார்கள். சிறிதுகாலத்தில் பசிலிஸ்லா இறைவனடி சேர்ந்தார். பேரரசன் டொசிலக்டன் காலத்தில் கிறிஸ்தவ வேதகாலபனையின்போது ஜீலியான் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் 20 ரோமை வீரர்களை மனமாற்றுகிறார். இதைக் கேள்விப்பட்ட அரசன் அவரை பாம்புகள் மற்றும் கொடிய விலங்குள் நிறைந்த குழியில் தள்ளிவிட்டனர். ஆனால் கொடிய விலங்குகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. அதனால் கோபமுற்ற அரசன் அவர்களை தூக்கிலிட்டான்.
சிந்தனை : நோயாளிகளின் ஆன்ம நலனைக் கவனிக்கக் கூடிய மருத்துவர்களை நம் நாட்டுக்குத் தர இறைவனை மன்றாடுவோம்.
செபம் :
ஆண்டவரே, ஏழைகள் மீதும் நோயாளிகள் மீதும் அனுதாபத்தை எல்லா மக்களின் உள்ளங்களிலும் எழுப்புவீராக.
=============————