பிறந்த இடம் : ஹங்கேரி
திருநாள் : சனவரி 18
பாதுகாவல் : தைரியம்
:
உலகத்தின் எல்லா ஆடம்பரங்களையும் பெற்ற ஒரு இளவரசியாய்ப் பிறந்தவர் மார்க்கரேட். ஆனால் எளிமையான ஒரு துறவியாக வாழ அவள் விரும்பினாள். ராணுவ ஆட்சியின்போது ஹங்கேரியின் அரசராயிருந்த அரசர் நான்காம் பேலா-தான் அவளது தந்தை. அவள் பிறந்தவுடனேயே அவளது பெற்றோர்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டால் அவளைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டியிருந்தனர்.
பேலா வெற்றி பெற்றார். தனது 3ம் வயதில் மார்க்ரேட் டோமினிக் சபை கன்னியர்களுடன் வாழ அனுப்பப்பட்டாள். சிறிது காலத்திற்குப் பின் அவளது தந்தை அவளுக்கென்று ஒரு துறவற மடத்தை தான்யூப் ஆற்றின் தீவில் கட்டிக் கொடுத்தான்.
அழகான இளம்பெண்ணாக அவள் வளர்ந்தபோது யோயோமியாவின் அரசரான ஓட்டோகார் அவளை மணக்க விரும்பினார். ஆனால் அவள் துறவற வாழ்வையும், துறவற மடத்தையும் விட்டு வருவதற்குப் பதிலாக தனது மூக்கையும் உதடுகளையும் வெட்டிக்கொள்வேன் என்று பயமுறுத்தினாள்.
பணிச்சிறப்பு :
தனது 13ம் வயதில் மார்க்ரேட் வார்த்தைப்பாடு எடுத்தார். இளவரசி என்பதனால் அவர் அங்கு சிறப்பாகக் கவனிக்கப்பட்டாள். ஆனால் அச்சிறப்புக்களையெல்லாம் அவள் மறுத்துவிட்டாள். மிகவும் எளிமையான தாழ்ச்சியான வாழ்வு வாழ்ந்தாள். தனது உடைகளை ஒருபோதும் சுத்தம் செய்யாமல் - பிறர் தன் அருகில் வர முகம் சுழிக்கும் துறவற வாழ்வை மேற்கொண்டார். தபசு காலத்தில் பிற கன்னியர்கள் அவளது உடல் நலம் குறித்துக் கவலைப்படும் அளவிற்கு நோன்பிருந்தார்.
தன்னுடைய புதுமையினால் வேலைக்காரப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். ஷஷஅவள் நல்லவள், மிகவும் புனிதமானவள். பணிப்பெண்கள் எங்களைவிட அவள் மிகவும் தாழ்மையானவள் ஷஷ என்று அந்த பணிப்பெண் கூறுகிறாள். தனது 28ம் வயதில் மார்க்ரேட் இறந்தாள்.
செபம் :
ஆண்டவரே எங்கள் தந்தையே! நம் திருச்சபையின் அருட்கன்னியர்களைப் பாதுகாத்தருளும். உமக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணங்களை எண்ணி அவர்களை மதித்து வாழ எமக்கு உதவும். அவர்கள் தங்களையே உமக்கென ஒப்புக்கொடுத்தவர்கள். எங்களை வழிநடத்தவும் உதவவும் இருப்பவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியருளும். உமது பணியைத் தொடரும் தைரியமும் உமது பிள்ளைகளாயிருக்கும் அருளும் அவர்களுக்குக் கொடுத்துக் காத்தருளும். ஆமென்.
St. Margaret
St. Prisca
St. St.Emily de Vialar
ஜனவரி 18
J}புனித பிரிஸ்கா அல்லது பிரிஸில்லா
புனித பிரிஸ்கா அல்லது பிரிஸில்லா (3ஆம் நூற்றாண்டு)
பிரிஸ்கா என்னும் புனிதர் பிரிசில்லா என்றும் அறியப்படுகிறார். உரோமை நாட்டில் மேன்மை மிக்க குடும்பத்தில் முன்றாம் நூற்றாண்டில் பிறந்த பிரிஸ்கா இளம் வயதில் வேத சாட்சியாக மரித்த புனிதர் ஆவார். மூன்றாம் நூற்றாண்டில் உரைமை பேரசசை ஆண்ட கிளாடியுஸ் அரசன் கிறிஸ்தவர்களை அவனது சூரிய கடவுளுக்கு வணங்கசொன்னான். பிறிஸ்காவின் பெற்றோர்கள் வேதத்தை மறுதலிக்காமல் மறைவான வாழ்க்கை நடத்திவந்தார்கள். ஆனால் இளம் பிரிஸ்கா தன் விசுவாசத்தை மறைக்காமல் தான் கிறிஸ்தவள் என்பதை வெளிப்படையாக வாழ்ந்து காட்டினாள்.
அதனால் அரசன் அவளை சிறைபிடித்து அப்பெல்லோ எனும் சூரிய கடவுளுக்கு பலிசெலுத்தச் சொன்னான். இவளோ தான் கிறிஸ்துவை மட்டுமே வணங்குவதாக அறிக்கையிட்டாள். கோபமுற்ற அரசன் அவளை சிங்கங்கள் வாழும் குகையில் அடைத்தான். ஆனால் சிங்கங்கள் அவளை ஒன்றும் செய்யவில்லை. ஆகவே அரசன் அவளது தலையை வெட்டச் செய்தான். ஏழாம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட உரோமை அரரசின் வேத சாட்சிகளின் கல்லறைகளில் அவரது சரித்திரம் இடம் பெற்றுள்ளது.
St. Margaret
St. Prisca
St. St.Emily de Vialar
ஜனவரி 18
தூய எமிலி தே வியலா
தூய எமிலி தே வியலா (ஜனவரி 18)
திருமணமின்றி தனியாக வாழும் பெண்களின் பாதுகாவலர்.
“மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கு செய்தீர்கள்” - இயேசு.
வாழ்க்கை வரலாறு
எமிலி, பிரான்ஸ் நாட்டில் உள்ள கையிலாக் என்னும் இடத்தில் 1797 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், 12 ஆம் நாள் பிறந்தார். எமிலியின் குடும்பம் மிக வசதியான குடும்பம், அதனால் அவர் எந்ததொரு குறையுமில்லாமல் வளர்ந்துவந்தார். எமிலிக்கு 13 வயது நடக்கும்போது அவருடைய தாயார் அவரை பாரிசில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்காக கூட்டிச் சென்றார். அவர் எமிலியை பள்ளியில் சேர்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, வரும் வழியில் துரதிஸ்டவசமாக இறந்துபோய்விட்டார். அப்போது எமிலி அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. தாய் இறந்துபோனதால், தந்தையின் பராமரிப்பிலேயே அவர் வளர்ந்து வந்தார்.
எலிமி தன்னுடைய படிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியபோது அவருடைய தந்தை அவருக்குத் திருமணம் முடித்து வைக்க திட்டமிட்டார். ஆனால், எமிலியோ தான் ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை, மாறாக ஆண்டவருக்காக தன்னை முழுவதுமாய் அர்ப்பணிக்கப் போகின்றேன் என்று சொல்லி தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இதற்கிடையில் எமிலியின் தாய் வழித் தாத்தாவின் வீடும் சொத்துகளும் அவருக்கு வந்தது. அந்த வீட்டை தன்னுடைய சேவை மையமாக வைத்துகொண்டு எமிலி அங்கு வந்த நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்துவந்தார். எமிலியின் இத்தகைய போக்கு அவருடைய தந்தைக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. அப்படி இருந்தும் எமிலி தான் ஆற்றி வந்த சேவைகளை நிறுத்தாமல் 15 ஆண்டுகளுக்கும் மேல் செய்து வந்தார்.
எமிலி தன்னுடைய ஆன்ம ஆலோசகரான மெர்சியரிடம் அவ்வப்போது ஆலோசனைகள் கேட்டு வந்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் 1835 ஆம் ஆண்டு வளனாரின் அருட்சகோதரிகள் என்னும் சபையைத் தோற்றுவித்தார். அந்த சபையின் பிரதானப் பணியே நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதும் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியறிவு புகட்டுவதும்தான். எமிலி தொடங்கிய சபையில் ஏராளமான பேர் சேர்ந்தார்கள். அதன்மூலம் அவர் நோயாளிகளைப் பராமரிக்கின்ற பணியையும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டுகின்ற பணியையும் மிகச் சிறப்பான முறையில் செய்து வந்தார். அதனால் குறுகிய காலகட்டத்திலே அவருடைய சபை பல்வேறு இடங்களுக்குப் பரவியது. இப்படி ஏழையரின் வாழ்வு ஏற்றம் காண தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த எமிலி 1856 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1951 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய எமிலியின் நினைவு நாளைக் கொண்டாடும் இன்று, அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. ஏழை எளியவர்மீது அக்கறை
தூய எமிலி ஏழை எளியவர்மீது எந்தளவுக்கு அக்கறைகொண்டு வாழ்ந்துவந்தார் என்பதை அவருடைய வாழ்வை ஆழ்ந்து படிக்கின்றபோது நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. திருமணம் செய்துகொள்ளாமலே ஏழையரின் வாழ்வு ஏற்றம்பெற அவர் தன்னை முழுதாய் அர்ப்பணித்தது நமக்கெல்லாம் வியப்பாக இருக்கின்றது.. இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்மோடு வாழ்கின்ற ஏழை எளியவரிடத்தில் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா? அவர்களுக்காக நம்மை முழுதாய் அர்ப்பணிக்கின்றோமா? என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பல நேரங்களில் ஏழை எளியவர் பற்றிய நம்முடைய பார்வையும் அவர்களைக் குறித்த நம்முடைய பேச்சுகளும் வேதனை அளிப்பது போன்று இருக்கின்றன. ‘ஏழைகள் அப்படி இருப்பது அவர்களுடைய தலைவிதி’ என்பது போன்ற பேச்சுகள் நம்மத்தியில் இருப்பது நாம் ஏழைகளைப் பற்றி எந்தளவுக்கு தவறான பார்வையைக் கொண்டிருக்கின்றோம் என்பதைக் குறித்துக் காட்டுவதாக இருக்கின்றது. இத்தகைய பார்வைகள் நம்மிடமிருந்து மறையவேண்டும்.
ஒருமுறை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் ஒருவன், திடிரென்று அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்டான். அவன் உதவி உதவி என்று எவ்வளோ கத்தினான். ஆனால், அவனைக் காப்பாற்றுவதற்கு யாருமே அங்கு இல்லை. அப்போது அந்த வழியாக வந்த அந்த மாணவனுடைய வகுப்பு ஆசிரியர், “ஆழமான இடத்திற்குச் நீச்சலடிக்கக் கூடாது என்று எத்தனை முறை வகுப்பில் சொல்லியிருந்தாலும் புரியவில்லையே உனக்கு, மரமண்டை, மரமண்டை” என்று அவனைத் திட்டத் தொடங்கினார். இதைக் கேட்டு கடுப்பான மாணவன், “உபதேசம் வேண்டாமையா; உதவிதான் வேண்டும்” என்று கூப்பாடு போட்டான். உடனே அந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து அவனைக் காப்பாற்றினார்.
ஆபத்தில் இருக்கின்ற அல்லது தேவையில் இருக்கின்ற ஒருவருக்கு உதவி வேண்டுமொழிய, நம்முடைய உபதேசம் தேவையில்லை என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய எமிலி வறிய நிலையில் இருந்தவர்களுக்கு வெறுமென உபதேசித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு அக்கறையோடு உதவி செய்தார். அவரைப் போன்று தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வோம், அதன்மூலம் கடவுளின் அன்பை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.