மறைவானவை பற்றியும், வெளிப்படையானவை பற்றியும் கற்றறிந்தேன் (சா.ஞா 7:22)
பாதுகாவல் : ஸ்கான்டினேவியா நாடு
பணி : இவர் ஸ்காண்டிநேவியாவின் மறைபோதகர். பெனடிக்டைன் (ஆசீர்வாதப்பர்) சபைத்துறைவி.
ஸ்காண்டினேவியா மறைபரப்புபணிக்கு திருத்தந்தையின் தூதுவராக நியமனம் பெற்றவர்.
பிரான்சு நாட்டில் பிக்கார்டி என்னும் இடத்தில் பிறந்தவர் ஆன்ஸ்கர். சிறு வயதிலேயே தமது தாயை இழந்து தவித்தார். அரவணைக்க ஆளில்லாத நிலையில் கோர்பியில் இருந்த புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் இருந்த கொண்டு கல்வி கற்றார்.
ஒரு நாள் படித்துக் கொண்டிருந்தபோது இவர் ஒரு காட்சியைக் கண்டார். அந்தக் காட்சியில் இறந்து போன தமது தாய் தூய அன்னை மரியாவின் தோழமையில் விண்ணகத்தில் இருப்பதைக் கண்டார். இதைப் பார்த்த பிறகு ஆன்மீகக் காரியங்களிலும், பிற செயல்பாடுகிளலும் முழு அர்ப்பணத்துடன் செயல்பட ஆரம்பித்தார். ‘ஆன்ஸ்கரின் வாழ்க்கை’ என்ற புத்தகம் எழுதிய ரிம்பெர்ட் இந்தக் காட்சியை தம் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்த அற்புதக் காட்சி ஆன்ஸ்;கரின் புனித வாழ்விற்கு அடித்தளமாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ரிம்பெர்ட், ஆன்ஸ்கரின் மாணவராகவும், அவருக்குப் பிறகு அவரின் பணியை முன்னெடுப்பாளராகவும் விளங்கியவராவார்.
‘சாக்சனி (தற்போது வடக்கு ஜெர்மனியில் இருக்கிறது) பகுதியை கிறி;தவ மயமாக்குவோம்’ என்ற அமைப்பை சார்லமாக் என்பவர் தொடங்கினார். இவருக்குப் பிறகு இவரது மகன் லூயி;ஸ் பயஸ் இந்த அமைப்பிற்கு தலைவராக இருந்தார். இந்த அமைப்பில் சேர்;ந்து தம்மை ஆன்ஸ்கர் வளப்படுத்தினார்.
சாக்சனி மறைபரப்புத் தளமாக இனங்காணப்படும் முன்பாக சில துறவிகளுடன் டென்மார்க்கிற்கு ஆன்ஸ்கர் சென்றார். இரண்டு ஆண்டுகள் இளைஞர்களுடன் பணியாற்றினார். அங்கிருந்து திரும்பியவுடன் துறவு மடம் அமைப்பதற்காக 822இல் வெஸ்ட்பாலியாவிற்கு அனுப்பினார்கள். அங்கே ஆசிரியராகவும், மறையுரையாளராகவும் சிறப்புற்றார். பிறகு 829ஆம் ஆண்டு சுவீடனுக்கு வந்து பணியாற்றுமாறு அரசர் ப்ஜோன் அழைத்ததின் பேரில் சென்றார். ஸ்காண்டிநாவாவில் மறைப்பணி ஆற்ற திருத்தந்தையின் தூதுவராகச் சென்றார். அங்கே முதல் ஆலயம் எழுப்பினார். பிர்க்கா என்னும் இடத்தில் ஆறு மாதங்கள் மறையுரையாற்றி பலரை மனமாற்றினார்.
831இல் ஹம்பர்க் நகரின் ஆயராக உயர்த்தப்பட்ட ஆன்ஸ்கர் அங்கே பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் துறவு மடம் ஒன்றையும் ஆரம்பித்தார். சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் ஹம்பர்க் நகருக்குள் புகுந்த டோனஸ் என்பவன் அனைத்து ஆலயங்களையும் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டு, புத்தகங்கள் மற்றும் பொக்கிஷங்களைத் தீக்கிரையாக்கினான். சோர்வுற்ற ஆன்ஸ்கர் இறைவனின் துணையுடன் மீண்டும் பணியைத் தொடர்ந்தார்: பேராயனார். அரசர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு கிறி;ஸ்தவ மதம் சகிப்புத்தன்மை உடைய மதம் என்னும் கருத்தை நிறுவினார். 865இல் இறந்த ஆன்;ஸ்கர் திருத்தந்தை முதலாம் நிக்கோலாசின் திருக்கரத்தினால் புனித நிலைக்கு உயர்ந்தார்.
ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையின் வழிகள் வெளிப்படுத்தப்படுகின்றன – அதை உணர்ந்து கொள்கிறவர்கள் வாழ்வடைகின்றனர்.
கொடுங்கோலன் தியோகிலேசியன் ஆட்சிக் காலத்தில் செபாஸ்டி என்ற இடத்தில் (தற்போதைய அர்மேனியா) ஆயராக இருந்த பிளைஸ் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்தின் பொருட்டு கொல்லப்படுவதற்காக கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
அவ்வாறு அவர் இழுத்துச் செல்லப்பட்டபோது சிறுவன் ஒருவன் தொண்டையில் மீன்முள் குத்தி மிகவும் அவதிப்பட்டான். அவனைப் பார்த்து அவன்மீது இரக்கப்பட்ட பிளைஸ் அவனைத் தன்னருகே அழைத்து அவனுடைய தொண்டையில் கைவைத்து ஜெபித்தார். உடனே அந்த சிறுவனது தொண்டையில் இருந்த மீன்முள்ளானது வெளியே வர, அவன் வேதனையிலிருந்து சுகம் பெற்றான். பிளைஸ் சிறுவனது தொண்டையிலிருந்து மீன்முள்ளை நீக்கி அவனுக்கு சுகம் தந்ததால், அதன் அடையாளமாக அவருடைய விழாவின்போது யாராரெல்லாம் தொண்டை வலியால் அவதியுறுகிறார்களோ அவர்களுடைய தொண்டையில் குருக்கள் கை வைத்து ஜெபிப்பார்கள். அவர்களும் நலம் பெற்றுச் செல்வார்கள்.
வாழ்க்கை வரலாறு
தொடக்கத் திருச்சபையில் மிக முக்கியமான ஆளுமையாக – புனிதராக – அறியப்பட்டவர் தூய பிளைஸ். ஆனால் இவரைக் குறித்த செய்திகள் அவ்வளவாக இல்லை என்பதுதான் உண்மை.
தூய பிளைஸ் கொடுங்கோலன் தியோகிலேசியன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அக்காலத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றுவதே மிகக் கடினமாக இருந்தது. அப்படிருந்தாலும் ஏராளமான பேர் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார்கள். தங்களுடைய உயிரே போனாலும் பரவாயில்லை, கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திலிருந்து மட்டும் ஒருபோதும் தளரமாட்டோம் என்றளவுக்கு இருந்தார்கள். இவர்களில் தலைசிறந்தவராக அறியப்பட்டவர் பிளைஸ்.
செபாஸ்டி என்ற இடத்தில் ஆயராக இருந்த பிளைஸ் ஆட்சியாளர்களால் கிறிஸ்துவை மறுதலித்து உரோமைக் கடவுளை வழிபடப் பணிக்கப்பட்டார். ஆனால் பிளைசோ கிறிஸ்துவின் மீதுகொண்ட விசுவாசகத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சீற்றம் கொண்ட கப்பதோசியாவைச் சார்ந்த அக்ரிகோலா என்ற ஆளுநன் பிளைசை கொலைகளத்திற்கு இழுத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்யச் சொன்னான். இதனால் 316 ஆம் ஆண்டில் பல்வேறு விதமாக சித்ரவதை செய்யப்பட்டு அவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
விசுவாசத்தில் உறுதி
தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடமே அவரிடமிருந்த உறுதியான விசுவாசம் – நம்பிக்கைதான். அவர் எத்துணை அச்சுறுத்தல்கள் வந்தபோதும் பலவிதமான சித்ரவதைகளை அனுபவித்தபோதும் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மட்டும் மனம் தளரவே இல்லை. அவரிடத்தில் இருந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், “என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்... என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மனவுறுதியுடன் மனவுறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்” என்று. (மத் 10: 18, 22) ஆம், நாம் இயேசுவின் பொருட்டு பல்வேறு துன்பங்களையும் கொடுமைகளையும் சந்திக்க நேரிடலாம், அத்தகைய தருணங்களில் நாம் மனம்தளர்ந்து போய் விசுவாசத்தைக் கைவிட்டுவிடக்கூடாது, இறுதிவரை மனவுறுதியுடன் தூய பிளைசைப் போன்று சாவுக்கு அஞ்சாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் மீட்கப்படுவோம்.
இந்த இடத்தில் இன்னொரு நிகழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.
எட்டாம் ஹென்றியின் ஆட்சியில் இரண்டு குருக்கள் கிறிஸ்துவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்து, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து வந்தார்கள். அவர்கள் இருவரையும் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் அவர்கள் இருவரையும் தன்னிடம் அழைத்து, “கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை யாருக்கும் அறிவிக்கக்கூடாது, மீறி அறிவித்தால் தாமஸ் (Thames) நதியில் தூக்கி வீசப்பட்டு, கொலைசெய்யப்படுவீர்கள்” என்றான். அதற்கு அந்தக் குருக்கள் இருவருமே ஒருமித்த குரலில், “எங்களுடைய இலக்கு விண்ணகம் அடைவதுதான், அதனை நாங்கள் நீரில் வைத்து இறந்து பெற்றால் என்ன? நிலத்தில் இறந்து பெற்றால் என்ன?” என்றார்கள். இதைக் கேட்டு மன்னன் மிரண்டுபோய் நின்றான்.
சாவுக்குப் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்த அந்த குருக்களும் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகை. தூய பிளைசும் அப்படித்தான் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.
ஆகவே, தூய பிளைசின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரைப் போன்று கிறிஸ்துவின்மீதுகொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
பிப்ரவரி 3
தூய வெர்பர்கா
தூய வெர்பர்கா ( 650 – 700 )(துறவி)
பிறந்தஇடம் : இங்கிலாந்து
காலம் : 650 - 700
இவர் மெர்சியாவின் அரசர் மகள். இவர் தந்தை வெல்பர் சிறுவயதிலிருந்தே இவரை கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்த்தார். இவருக்கு மறைக்கல்வி கற்பிக்க அந்த தல ஆயர் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு மறைக்கல்வி கற்பிக்க இவருடைய பெரிய அத்தை, பாட்டி மற்றும் தாய் உதவினர். இவர்கள் மூவரும் பின்னாளில் புனிதைகளாக உயர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண வயது நெருங்கியதும் இவருடைய தந்தை இவரை இளவரசர் ஒருவருக்கு மணமுடிக்க விரும்பினார். ஆனால் அதை மறுத்துவிட்டார்.
இதனால் தன் 20வது வயதில் தன் பெரிய அத்தையால் தொடங்கப்பட்ட சபையில் துறவியாக சேர்ந்தார். தன் தந்தை இறந்தவுடன் இவருடைய மாமா அரசராக பதவியேற்றார். இவர் வெர்பர்காவை தன் ஆட்சியுரிமைக்கு உட்பட்ட அனைத்து சபைகளுக்கும் பொறுப்பாளராக இவரை பணியமர்த்தினார். இதனால் இவர் எண்ணற்ற இளையோர்களை கிறிஸ்தவ மறைக்கு இழுத்தார். ஆயிரக்கணக்கானோர் இவர் வழியைப் பின்பற்றினர். இவரும் புதுமை செய்யும் வரம் பெற்றிருந்தார். இவர் இறந்தப்பின்பு இவருடைய கல்லறையில் நிறைய புதுமைகள் நிகழ்ந்தன.