கடுமையான ஒறுத்தல் முயற்சிகளாலும் தவமுயற்சிகளாலும் சகோதரி ஜூலியானாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே போனது. சரி, அவர் பெரிதும் ஆராதிக்கின்ற நற்கருணையையாவது அவருக்குக் கொடுத்துப் பார்ப்போம் என்று ஜூலியானாவின் ஆன்ம குருவானவர் அவருக்கு நற்கருணை கொடுத்தபோது, அதுவும் அவருக்குள் போகவில்லை. எனவே, ஆன்ம குருவானவர் அவருடைய நெஞ்சத்தில் நற்கருணையைப் பதித்துவிட்டுப் போய்விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே ஜூலியான இறந்துபோனார். இறந்த அவருடைய உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, நற்கருணை பதிக்கப்பட்ட அவருடைய மார்புப் பகுதியில் சிலுவை அடையாளம் இருந்தது. அப்போதுதான் அவரோடு இருந்தவர்கள் ‘ஜூலியானா ‘கடவுளால் சிறப்பான முறையில் ஆசிர்வதிக்கப்பட்டவள்’ என்னும் உண்மையை உணர்ந்துகொண்டார்கள்.
ஜூலியான தன் வாழ்நாள் முழுக்க, நற்கருணை ஆண்டவர்மீது உண்மையான பக்தி கொண்டு வாழ்ந்தினால் அவர் நற்கருணைப் புனிதை என்று அன்போடு அழைக்கப்படுகின்றாள்.
வாழ்க்கை வரலாறு
ஜூலியானா, இத்தாலியில் 1270 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் சியாரிசிமோ, ரிகுர்டாடா என்பவர் ஆவர். இந்தத் தம்பதியர்தான் இத்தாலியில் உள்ள மங்கள வார்த்தை ஆலயத்தைக் கட்டிக்கொடுத்த சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆவர். ஜூலியானாவின் சித்தப்பாவோ (அலெக்சிஸ்) மரியின் ஊழியர் சபையை நிறுவிய ஏழு நபர்களில் ஒருவர்.
ஜூலியான வளரும்போதே உலக காரியங்களில் பற்றுக்கொள்ளாமல் இறைவன்மீது மட்டுமே பற்றுகொண்டு வாழ்ந்து வந்தார். இப்படிப்பட்ட நேரத்தில் அவருடைய தந்தை அவரைவிட்டுப் பிரிந்தார். தந்தையின் பிரிவுக்குப் பிறகு, தாயின் பராமரிப்பில் தான் வளர்ந்துவந்தார். அவர் ஜூலியானாவை இளம்வயதிலேயே திருமணம் முடித்துவைக்க நினைத்தார். ஆனால், ஜூலியானாவோ, தனக்கு உலக வாழ்க்கையில் நாட்டமில்லை என்று சொல்லி மறுத்துவிட்டு, விட்டிலேயே ஒரு துறவியைப் போன்று வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து அவருடைய தாயார் இறந்துவிடவே, மரியின் ஊழியர் சபையில் சேர்ந்து இறைவனுக்காக தன்னை முழுமையாய் அர்ப்பணித்து வாழத்தொடங்கினார்.
ஜூலியானா, மரியின் ஊழியர் சபையில் (பெண்களுக்கான சபை) சேர்ந்த சில நாட்களில், அதனுடைய தலைமைப் பொறுப்பை ஏற்றார். இரக்கம் காட்டுதல், தாராளமாக உதவுதல், ஜெபவாழ்வு, நற்செய்தியை அறிவித்தல் இவற்றை முதன்மையான நோக்கங்களாகக் கொண்டு பணிசெய்து வந்தார். இவர் ஏழைகளிடத்தில் மிகுந்த அன்பு செலுத்தினார். அதே நேரத்தில் நற்கருணை ஆண்டவர் மீது தனிப்பட்ட பக்திகொண்டிருந்தார். அந்த பக்திதான் துன்ப நேரத்தில் அவருக்குப் பேருதவியாக இருந்தார். ஜூலியான மிகக் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளையெல்லாம் செய்துவந்தார். அதனால் அவருடைய உடல்நலம் குன்றியது. அதனால் 1341 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜூலியானா பால்கோனியேரியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. நற்கருணை ஆண்டவர் மீது பக்தி
தூய ஜூலியானா பால்கோனியேரியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் எந்தளவுக்கு நற்கருணை ஆண்டவர்மீது பக்தி கொண்டிருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரைப் போன்று நற்கருணை ஆண்டவர்மீது பக்திகொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பொனவெந்தூர் கூறுவார், “நற்கருணைதான் எத்துணை விலையேறப்பெற்றது, அது நமக்கு மீட்பினைப் பெற்றுத்தரக்கூடியது” என்று. ஆம், நற்கருணையின்மீது ஆழமான பக்தி கொண்டு வாழும்போது அது மீட்பினை, இன்னும் பிற நன்மைகளையும் நமக்குப் பெற்றுத்தரும் என்பது உறுதி.
அசிசி நகர தூய கிளாரா அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு சமயம் கொள்ளையர் கூட்டம் ஒன்று தூய கிளாரா இருந்த மடத்திற்குள் ஜன்னல் வழியாகப் புகுந்து, அம்மடத்தை சூறையாட நினைத்தது. இதையறிந்த கிளாரா தன்னுடைய மடத்தில் இருந்த சகோதரிகளிடம் ஜெபிக்கச் சொல்லிவிட்டு, நற்கருணை ஆண்டவரைத் தாங்கிய கதிர்பாத்திரத்தை கொள்ளையர்கள் வந்த திசையை நோக்கிக் காட்டினார். ஆச்சரியம் என்னவென்றால், அந்த கொள்ளையர் கூட்டம் திரும்பிக் கூடப் பார்க்காமல் தலை தெறிக்க ஓடியது. இவ்வாறு தூய கிளாராவும் அவருடைய மடத்தில் இருந்த சகோதரிகளும் நற்கருணை ஆண்டவரால் காப்பாற்றப்பட்டார்கள்.
நற்கருணை ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் கொண்டு வாழ்கின்றோபோது அவர் நம்முடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்வார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
ஆகவே, தூய ஜூலியானா பால்கோனியேரியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நற்கருணை ஆண்டவரிடம் ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
தூய லூக்கா கிரேக்க நாட்டிலுள்ள அஜினா என்ற தீவில் பிறந்தார். இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். இதில் இவர் மூன்றாவதாகப் பிறந்தார். இவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக இவருடைய குடும்பம் சொந்த ஊரிலிருந்து "தெசாலி" என்ற இடத்திற்கு புலம்பெயற வேண்டியிருந்தது. அங்கு அவர் விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் தொழில் செய்து வந்தார். மிகவும் கடமையுணர்வு உடையவர். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தம்மால் ஆன உதவிகளைச் செய்து வந்தார். தன் உணவுகளையும், உடைகளையும் ஏழைகளோடு பகிர்ந்து வந்தார். தன் வயல்வெளியில் தானியங்கள் விதைக்கும் போது ஏழையர்களின் வயல்களிலும் பாதி தானியத்தை விதைப்பார். தந்தை இறந்தபின் துறவியாக தன்னை மாற்றிக் கொண்டார். தாய் இதனை ஏற்றுக் கொள்ளாதக் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறி துறவு மடத்தில் சேர்ந்தார். தாய் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தான் துறவியாகவே மரித்தார்
பிப்ரவரி 7
ஒன்பதாம் பத்திநாதர் 1792- 1878
ஒன்பதாம் பத்திநாதர் 1792- 1878
(திருத்தந்தை)
திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1792ம் ஆண்டு மே 13ம் நாள் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஜியோவானி மரியா என்பதாகும். சிறுவயதிலே இவர் காக்காவலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 1809ம் ஆண்டு குருமடத்தில் நுழைந்தார். புகழ்பெற்ற உரோமை கல்லூhயிpல் படித்து 1819ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான சில ஆண்டுகளிலே மீண்டும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டார். தனது 35வது வயதில் பொஸேடோவின் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து இம்மாலா என்ற மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றினார். 1839ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். பின்னர் 1839 ம் ஆண்டு திருத்தந்தை பதினான்காம் கிரகோரியின் மரணத்திற்குப் பின் ஜீன் 16ம் தேதி திருத்தந்தையாக பதவியேற்றார். நிறைய சீர்திருத்தங்களை திருச்சபையில் புகுத்தினார். குறிப்பாக அரசியல் கைதிகளிடத்திலும், யூதர்களிடத்திலும் மென்மையானப் போக்கை கடைபிடித்தார். இதனால் பல்வேறு மோதல்களும், புரட்சிகளும் இவருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. 1848ல் தலமையிடத்தை உரோமையிலிருந்து இத்தாலிக்கு மாற்ற கலிக்காரர்கள் முனைந்தனர். இதனால் திருத்தந்தை காசியா நகருக்கு தஞ்சம் புக வேண்டியிருந்தது.
1870, செப்டம்பர் 20ம் நாள் உரோமையின் கைதியாக்கப்பட்டார். எனினும் துணிச்சலுடன் இரண்டு மிகப்பெரிய கோட்பாடுகளை பிரகடனப்படுத்தினார். அதாவது 1854ல் வெளிவந்த மரியாவின் அமல உற்பவம் மற்றும் 1970 ல் வெளிவந்த திருத்தந்தையின் உருவாவரம் பற்றிய கோட்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
முதலாம் வத்திக்கான சங்கத்தைக் கட்டிய பெருமை இவரையேச் சாரும். 1878ம் ஆண்டு பிப்ரவரி 7ம் நாள் இறைவனடி சேர்ந்தார். 2000ம் ஆண்டு செப்டம்பர் 3ம் ந்hள் மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இவரை புனிதராக உயர்த்தினார்.