பிப்ரவரி 12
தூய போன்பிலியோ (13ஆம் நூற்றாண்டு)
தூய போன்பிலியோ (13ஆம் நூற்றாண்டு)
(மரியின் ஊழியர் சபையின் நிறுவுனர்களில் ஒருவர்)
தூய போன்பிலியோ இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் என்ற இடத்தில் ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தார். தனக்குள்ள செல்வாக்குகளைப் பயன்படுத்தி அன்னை மரியாவிற்கு ஊழியம் செய்து வந்தார். 1225ம் ஆண்டு |மரியின் புகழ்பாடிகள்| என்ற குழுவில் சேர்ந்தார். அதில் இன்னும் 6 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 1233ஆம் ஆண்டு மரியாவின் விண்ணேற்பு நாளன்று போன்பிலியோவும், அவருடைய நண்பர்களும் மரியா அளித்த காட்சியைக் கண்டனர்.
அன்றிலிருந்து புனிதர் தன் வாழ்வை செப தவங்களில் செலவழித்தார். பின்பு அவர்கள் மரியின் ஊழியர் சபையை உருவாக்கினார். போன்பிலியோ அவர்களின் தலைவராக இருந்து செயல்பட்டார். 1245ம் ஆண்டு ஆயர் இதை ஒரு துறவற சபையாக அங்கீகரித்தார்.1259ஆம் ஆண்டு இச்சபை திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது. வியாகுல மாதாவின் பக்தியை பரப்புவது தான் இச்சபையினரின் முக்கியப் பணியாகும்.
|