நசியான்சஸ் நகர ஆயர் புனித கிரகோரி மற்றும் புனித நோன்னா இருவருக்கும் 331ஆம் ஆண்டு பிறந்த இளைய மகன் செசாரியஸ். சிறுவயது முதலே சுறுசுறுப்புடன் இருந்த இவரை எகிப்து நாட்டில் அலெக்சாந்திரியா நகருக்குப் படிக்க அனுப்பினார்கள். அங்கே வானியல், மருத்துவம் போன்றவற்றைக் கற்று புகழ்மிக்க மாணவராகத் திகழ்ந்தார். மருத்துவ பணியாற்ற கொண்ஸ்தாந்தினோபிளுக்கு 355ஆம் ஆண்டு சென்றார். தமது வசீகரமான புன்னகையாலும், நேர்த்தியான கவனிப்பு மற்றும் துல்லியமான அவதானிப்பினாலும் அப்பகுதி முழுவதும் கைராசி மருத்துவராக மாறினார். பெயரையும், புகழையும் விரும்பாமல் நசியான்சஸ் வந்து தமது பெற்றோருடன் தங்கினார்.
கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலித்த ஜூலியன், செசாரியசைத் தமது தனிப்பட்ட மருத்துவ ஆலோசகாராக வைத்துக் கொள்ள விரும்பி செசாரியசை அழைத்தார். பெற்றோர் மறுப்பு தெரிவித்த போதும் ஜூலியனிடம் சென்றார். தன்னையும் அவர் பக்கம் இழுப்பதை உணர்ந்தபோது ஜூலியனை விட்டு விலகினார் செசாரியஸ்.
பேரரசர் வாலன்ஸ் பிர்த்தினியா நாட்டின் கருவூலக் காப்பாளராகவும், நாட்டின் வரிகளை வசூல் செய்து நாட்டின் பொருள் வளத்தைப் பேணும் வருவாய் அதிகாரியாகவும் செசாரியசை நியமித்தார். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென 368ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதியன்று நிகாயே பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. எங்குப் பார்த்தாலும் அழுகுரல் நெஞ்சைப் பிளந்தது.
அற்புதமாகக் காப்பாற்றப்பட்ட செசாரியஸ் மனக்கலக்கத்துடன் இருந்தார். தந்தையின் பெயரையே தாங்கியிருந்த செசாரியசின் சகோதரர் கிரகோரி செசாரியசைச் சந்தித்தார். மேலும் அரசியல் வாழ்க்கையைத் துறந்துவிட்டு ஆண்டவரைத் தேடுமாறு அறிவுறுத்தி கடிதம் ஒன்றை எழுதினார். அண்ணனின் கூற்றில் இருந்த உண்மையை ஏற்றுச் சிந்தித்த செசாரியஸ் தன் பதவியைத் துறந்தார். நல்ல கிறிஸ்தவராக வாழ ஆரம்பித்தார். திருமுழுக்குப் பெற்றார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பிளேக் என்னும் தொற்று நோய் பரவியது. இந்நோய்க்கு ஆளான சொhரியஸ் திருமுழுக்குப் பெற்ற சில நாட்களிலேயே 369-ஆம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். அடக்கத் திருப்பலியில் தம்பியின் ஆசையைச் சொல்லி உரையாற்றிய அண்ணன் கிரகோரி, செசாரியசுக்கென இருந்த பெருந் தோட்டத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்து தம்பியின் ஆசையை நிறைவேற்றினார்.
சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி தம் உடன் பிறப்புக்களை வழிநடத்தும் சகோதர சகோதரிகள் பேறுபெற்றோர்.
பிப்ரவரி 24
அருளாளர் ஜோஸப்பா நபல் கிர்பஸ் (1820 - 1893)
அருளாளர் ஜோஸப்பா நபல் கிர்பஸ் (1820 - 1893)
முக்திபேறுபெற்ற ஜொஸப் நவல் கிர்பஸ் வலன்சியாவில் உள்ள, அல்ஜிமிசி என்ற சிறிய ஊரில் பிறந்தார். இவர் வலன்சியாவில் உள்ள கத்திட்ரல் பள்ளியில் பயின்றார். இந்த பள்ளி அங்குஉள்ள ஏழைக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியும், மற்றும் அவர்களின் குணநலன் களை நல்ல முறையில் வளர்த்தெடுக்கும் இடமாக இருந்தது. இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்ததால் இவர் தனது பாட்டியின் வீட்டிலே வளர்ந்தார். அவர் பள்ளி செல்லுதல் அது ஒரு முழு மனது இல்லாமல் செய்கின்ற ஒரு கடமை, இல்லை எனவும் மாறாக அது அவருக்கு பல திறமைகளை கொடுத்து தனது குடும்பத்திற்கு அதன் மூலம் தனது குடும்பத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று நம்பினார். அவர் எம்ப்ராய்டிங் வேலையில் மிக தேர்ச்சி பெற்றதால், அந்த இடங்களில் உள்ள பெண்களிடம் மிகவும் அறிமுகமாகியிருந்தார். தான் பெற்ற வருமானத்தை தனது குடும்பத்திற்கு வழங்கினார். 18 வயது முடிந்தவுடன் வுhசைன ழசனநச ளநஉரடயச ழக னுளைஉயடஉநன ஊயசஅநடவைநள என்ற சபையில் சேர்ந்தார். தனது தையற்கலையை முழுமனதுடன் பிறருக்கு கற்றுக் கொடுத்தார். எனவே அப்பகுதியில் உள்ள இளம் பெண்கள் அவரை அடிக்கடி சந்திக்க வந்தனர். இவர்களின் இந்த சந்திப்புகளில் தையற்கலையை மட்டுமல்லாமல், அவர்கள் மதம், குழந்தை தெரசா, சிலுவை யோவான் இவர்களை பற்றி விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
ஜோசப்பின் வீடு எப்பொழுதும் அப்பகுதியில் உள்ள மக்களால் நிறைந்திருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை பற்றியும் மற்றும் அறிவுரைகள் கேட்பதற்கும் அங்கு கூடுவதுண்டு. அவர் எப்பொழுதும் அத்தை ஜோசபே என்று அழைக்கப்படுகின்றார் எனவே இது அவரின் அன்பையும், அக்கரையும் காட்டுகின்றது. 1885ம் ஆண்டு வலன்சியாவின் தொற்றுநோய் பரவியதன் விளைவாக அவர் நோயுற்றோரை கவனித்துக்கொண்டார். அவர் பிப்ரவரி 24ம் நாள் தனது நண்பர்களாலும், மாணவர்களாலும் நிறைந்திருந்த தனது வீட்டில் உயிர் துறந்தார். 1988 செப்டம்பர் 25 நாளில் இவருக்கு முத்திபேறு பெற்ற பட்டம் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 24
அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert
அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert
பிறப்பு 6 ஆம் நூற்றாண்டு, கெண்ட் Kent, இங்கிலாந்து
இறப்பு 616, இங்கிலாந்து
இவர் பிரான்சிஸ்கன் அரசி குளோட்விக் Chlodwig என்பவரால் வளர்க்கப்பட்டார். அரசி குளோட்விக் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஏத்தல்பெர்ட்டையும் சிறு வயதிலிருந்தே ஆலயங்களுக்கு அனுப்பியும் அனுதின செபத்தின் வழியாகவும், இறைபக்தி கொண்டவராக வளர்த்தெடுத்தார். எதிலும் இறைபக்தியுடன் செயல்பட்ட ஏத்தல்பெர்ட் 596 ஆம் ஆண்டு திருத்தந்தை பெரிய கிரேகோரிடம் தன் நகருக்கு பல மறைபரப்பு பணியாளர்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.
இவர் தன் நகர் முழுவதிலும் வாழ்ந்த மக்கள் அனைவரையும் விசுவாச வாழ்வில் வளர தூண்டினார். அத்துடன் இங்கிலாந்து நாடு முழுவதிலும் மறைப்பணியாளர்களை நிரப்பி கடவுள் விசுவாசத்தை வளர்த்தெடுத்தார். 601ஆம் ஆண்டு ஏத்தல்பெர்ட் மறைப்பணியாளர்களிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். இவர் திருமுழுக்கு பெற்றபின் இறக்கும் வரை ஏறக்குறைய 16 ஆண்டுகள் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து தன் நாட்டு மக்களுக்கு பணிவிடைச் செய்தார்.
செபம்:
இரக்கம் நிறைந்த ஆண்டவரே! சில மறைப்பணியாளர்களின் வாயிலாக இங்கிலாந்து நாடு முழுவதிலும் நற்செய்தியின் ஒளியை பரவச் செய்தீர். அம்மக்களின் உள்ளங்களில் உமது வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும், உண்மையான நம்பிக்கையைப் பறைசாற்றவும், ஒன்றுபட்டு வாழவும் வரம் தந்தீர். அரசி ஏத்தல்பெர்ட்டைப்போல அடுத்தவர்களை விசுவாச வாழ்வில் வளரச் செய்ய எம்மையும் தயாரித்து, உமது கருவியாய் மாற்றி, சான்று பகிர்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.