தியாக்கோன் பென்சமின் 4ஆம் நூற்றாண்டில் பெர்சியாவில் பிறந்தார். நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் பெர்சியன் அரசர்களால் வேதகலாபனைக்குள்ளாகினர். பெர்சிய அரசரான சாபோர் தொடங்கி அவர் மகன் ஐடேகர் அவரைத் தொடர்ந்து அவர் மகன் வாரணாஸ் காலத்திலும் கிறிஸ்தவர்கள் மிகுந்து துன்பத்திற்கும் கொடுமைக்கும் உள்ளாகினர். அவர்களுள் அதிகம் கொடுமைக்குள்ளாக்கியவர் தியாக்கோன் பென்சமின். கிறிஸ்துவை போதித்ததால் அவர் சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் அவர் அனைத்துக் கொடுமைகளுக்கும் உள்ளாகினார்.
கிறிஸ்தவர்களை ஆதரிக்கும் கான்ஸ்டான்டிநோபிள் அரசனின் பரிந்துறையாலும் தியாக்கோன் பென்சமின் இனி போதிக்கமாட்டார் என்ற அவரின் உறுதிமொழியாலும் வாரணாஸ் அவரை விடுவித்தார். சிறையிலிருந்து விடுதலையான பென்சமின் பெர்சிய நாட்டின் வீதிகளில் மீண்டும் போதிக்கத் தொடங்கினார்.
கி.பி. 424 ஆம் ஆண்டில் தியாக்கோன் பென்சமின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் அடி, உதை மற்றும் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். கிறஸ்துவை போதிப்பதை கைவிடுமாறு அறிவுத்தப்பட்டபோது தான் கிறிஸ்துவைப் போதிப்பதற்காகவே வாழ்வதாகவும் அதனால் எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்வதாயும் உறுதியுடன் கூறினார்.
கடைசிவரையிலும் அவர் கிறிஸ்துவை மறுதலிக்கவே இல்லை. சிறையில் நாளும் சித்தரவதைகளுக்குள்ளாகி சிறையிலேயே மரித்தார்.
மார்ச் 31
பொம்போசா நகர் தூய கய்
பொம்போசா நகர் தூய கய்
உரோம் நாட்டில் ராவண்னா நகரில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் கய் பிறந்தார். சிறந்த ஆடைகளும் கல்வியும் இளம் வயதில் பெற்றார். திருமணம் வயதை எட்டியபோது பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். ஆனால் கய் தன்னுடைய சிறந்த மணவாட்டி கிறிஸ்துவே என்று சொல்லி துறவு பூண்டார்.
தன்னுடைய உடைமை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு உரோம் நகர் சென்றார். அங்கு அவர் குருவாக ஆவதற்கான பயிற்சியில் சேர்ந்தார். . குருவாகிய பின் தன் சொந்த ஊராகிய ராவண்னா நகருக்கு வந்தார். அங்கு மார்டின் எனும் துறவியிடம் இளம் துறவியாக சேர்ந்தார். இருவரும் "போ" ஆற்று தீவில் இரண்டு ஆண்டுகள் தங்கி கடும் தவம் மேற்கொண்டனர்.
இப் பயிற்சிக்குப் பின் கய் தூய சவேருஸ் என்ற மடத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பின்னாட்களில் அவர் பொம்பசா எனும் ஊரின் அமையப் பெற்றிருந்தத துறவியர் மடத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
அப்போது பொம்பசா நகரின் ஆயராக இருந்தவர் திடீரென்று மடத்துக்கு வந்து மடத்தை மூடும் எண்ணம் கொட்டவராய் படைவீரர்களோடு வந்தார். ஆனால் கை அவர்களின் பணிவான வரவேற்பினாலும் அவருடைய தூய்மையான உள்ளத்தாலும் ஆயர் பெரிதும் கவரப்பட்டார். மடத்தை முடவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தவர் கய் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு மடத்திற்கு தீங்கு ஏதும் செய்யாமல் திரும்பினார்.
தன்னுடைய தூய்மையான வாழ்வால் அனேகரை கவர்ந்தார். அந்நாட்டின் அரசர் அவரது ஆலோசனையை கேட்பதற்காக அவரைத் தேடி வருவார். ஒருநாள் தம்முடைய மடத்தில் மீண்டும் என்னைக் காணமாட்டிர்கள் என்று சொல்வி அரசரைக் காணச்சென்றார். ஆனால் வழியிலேயே சுகவீனமுற்று மூன்று நாட்களில் இறந்தார்.
nrgk;: k
மார்ச் 31
முரானோ நகர் புனிதர் டேனியல்
முரானோ நகர் புனிதர் டேனியல் * (St. Daniel of Murano)
இறப்பு: மார்ச் 31, 1411 சான் மாட்டியா டி முரானோ, வெனிஸ், இத்தாலி (San Mattia di Murano, Venice, Italy)
நினைவுத் திருநாள்: மார்ச் 31
புனிதர் டேனியல், ஒரு கமால்டோலிஸ் துறவி (Camaldolese monk) ஆவார். முதலில் ஒரு ஜெர்மன் வணிகரான இவர், அவர் வியாபார நிமித்தமாக பயணம் செய்து, இத்தாலியின் முரானோ நகரில் தாங்கினார். அங்கு அவர் கமால்டோலீஸ் ஆனார்.
இவர் ஜெர்மனியில் பிறந்த பதினைந்தாம் நூற்றாண்டு துறவி. இந்த துறவியின் பல விவரங்கள் பொது களத்தில் அறியப்படவில்லை. ஆனால் அவர் இத்தாலியின் வெனிஸ் நகரில், ஒரு கமால்டோலிஸ் துறவி ஆனார்.
ஒரு துறவியாக, அவர் ஒரு எளிய வாழ்க்கையை நடத்தினார். தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்காகக் கொடுத்ததற்காகவும் அவர் அறியப்பட்டார். கடும் குளிர் காலத்தில், போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஒரு ஏழையைக் கண்டால், கடுமையான குளிர்கால இரவுகளில் கூட அவர் தனது துணிகளைக் தானமாக வழங்கிவிடுவார் என்று நம்பப்படுகிறது.
அல்லும் பகலும், தொடர்ச்சியான பிரார்த்தனைகளில் அவர் தமது வாழ்க்கையை நடத்தினார். கமால்டோலீஸ் மடாலயத்தால் அவர் மிகவும் செல்வாக்கு பெற்றார். கமால்டோலீஸ் துறவற சமூகங்கள் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனிதர் ரொமுவால்ட் (Saint Romuald) தொடங்கிய துறவற இயக்கத்தின் பரம்பரையை கண்டுபிடிக்கின்றன. அவர்களின் பெயர் மத்திய இத்தாலியின் மலைகளில், அரேஸ்ஸோ (Arezzo) நகருக்கு அருகிலுள்ள கமால்டோலியின் புனித மடாலயத்திலிருந்து பெறப்பட்டது.
இத்தாலியின் வெனிஸில் உள்ள சான் மட்டியா டி முரானோ நகரில், கி.பி. 1411ம் ஆண்டு, மார்ச் மாதம், 14ம் நாளன்று, அன்று அவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.