ஏப்ரல் 6 முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா
முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா (Michael Rua SDB)
பிறப்பு : 9 ஜூன் 1837 தூரின், இத்தாலி
இறப்பு : 6 ஏப்ரல் 1910 தூரின், இத்தாலி
முத்திபேறு பட்டம்: 29 அக்டோபர் 1972 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் 1837 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9 ஆம் நாள் பிறந்தார். இவர் தனது 15-ம் வயதில் தனது படிப்புகளை முடித்துவிட்டு, புனித தொன் போஸ்கோ அவர்கள் குருவாக இருந்தபோது, அவரால் தொடங் கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மிக்காயேல் ரூவாவும், தொன்போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள். 1861 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன்போஸ்கோவிற்கு பெரும ளவில் உதவிசெய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவி தங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த தொன்போஸ்கோ வின் அம்மா இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களு க்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.
இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உண ர்ந்து, தொன்போஸ்கோவிற்கு துணையாக, தனது 22-ம் வயதில் 1860 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாளன்று குருப்பட்டம் பெற்று இளைஞர்களுக்கு ஞானமேய்ப்பராக பணியாற்றினார். அதன் பிறகு தொன்போஸ்கோவிடமிருந்து விலகி சென்று 1885-ல் பார்சிலோனாவில் இளைஞர்களுக்கான சீடத்துவத்தை தொட ங்கினார். தமது 26 ஆம் வயதில் அழகு துணை வால்டோக்கோ (Mirabello) என்ற குழுவை தொடங்கி, அதற்கு முதல்வராக பொறுப்பேற்றார். பின்பு கத்தோலிக்க அவைகளின் மேலாள ராக பணியாற்றினார். 1865 -ல் போஸ்கோ அவர்களால் சலேசிய சபைகளுக்கு துணைமுதல்வராக அறிவிக்கப்பட்டார். பிறகு 1872 ஆம் ஆண்டு கிறித்தவர்களின் சகாயமாதா சபையை தொட ங்கினார். (Daughter of Mary Help of Christians)
1888 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் பொறுப்பை மிக்கா யேல் ரூவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன் றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் இச்சபை சலேசிய சபை யாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் சென்று இச்சபை தொடங்கப்பட்டது. பிறகு தனது 73ஆம் வயதில் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் இத்தாலியிலுள்ள தூரின் என்ற நகரில் இறந்தார். தொன்போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக்குழுமங்களை (communities) ரூவா 345 சபை க்குழுமங்களாக பெருக்கினார். 773 ஆக இருந்த சலேசியர்களை 4000-மாக பெருக்கினார். 6 ஆக இருந்த சபை மாநிலங்களை 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் தொடங்கி வைத்தார். இவர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் முத்திபேறு பட்டம்(Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெய ரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றது.
செபம்:
உமது சிறகுகளின் நிழலில் வைத்து எம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் எம் அன்பு இறைவா! எங்களால் இயன்றவரை ஓர் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்க, எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்து வழிநடத்தியருளும்.
|