மொலாய்ஸ் எனவும் அழைக்கப்பட்ட லசாரியன் அயர்லாந்தில் பிறந்தார். இவர் உல்ஸ்டர் நாட்டு அரசன் கெய்ரலின் வழி மரபில் உயர்ந்த குடியில் பிறந்தவராவர். தனது சிறுவயதில் ஸ்காட்லாந்திலுள்ள மடங்களை சென்று சந்தித்ததாகவும் இவரைப் பற்றி சொல்லப்படுகிறது. திருந்தந்தை பெரிய கிரகோரியாரால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பின் கவுண்டி கார்லோவிலுள்ள லீ-லின் துறவற மடத்தில் இருந்தார். அயர்லாந்து திருச்சபை வகுத்த உயிர்ப்பு நாள் கணக்கினை கடைபிடித்த இவரது முன்னவர் பின்டேனுக்கு மாற்றாக இவர் ரோம் வகுத்த கணக்கினைப் பின்பற்றினார். 635ஆம் ஆண்டு இதனை நடைமுறைபடுத்தவும் திருச்சபை பிரித்த சில காரியங்களை ஒழுங்கப்படுத்தவும் ரோம் நகருக்கு சென்றார். இந்நேரத்தில் தான் இவர் திருத்தந்தை முதலாம் ùஉறானேரியஸ்-ஸôல் ஆயராக திருநிலைநடுத்தப்பட்டு அயர்லாந்து திரும்புகையில் புனித பெர்ன் நாட்டு அய்டனுடைய அருளீக்கங்களைக் கொண்டு வந்து அதனை கண்ணாடியிலும் எனாமலிலும் எழுதி வைத்தார். இதனுடைய எஞ்சிய பாகங்கள் இன்னும் டப்ளினில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
637ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரர் கோபன்-ஐத் தொடர்ந்து லீலின் துறவு மடத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 639ஆம் ஆண்டில் இறந்தார். ஸ்காட்லாந்து கடற்கரையில் அமைந்துள்ள லாம்லாஷ் தீவின் பாதுகாவலரான இருடைய பெயரில் ஒரு குகையும் உள்ளது. 1914ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் லசாரியனை வேண்டி கிணற்றிலிருந்த நீரைப் பருகியபோது அற்புதமாக குணமடைந்ததால் அந்நீர் புனித நீராக போற்றப்படுகிறது. அவ்விடத்தில் பழைய கல்சிலுவை நாட்டப்பட்டு புனித இடமாக திகழ்கிறது.
ஏப்ரல் 18
புனித கால்டினுஸ்
புனித கால்டினுஸ்
நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்;. (உரோ 13:8)
இத்தாலி நாட்டில மிலான் நகரில் ஏறக்குறைய 1100-ஆம் ஆண்டு பிறந்தவர் கால்டினுஸ். புகழ்மிக்க வல்வர்சி டெல்லாசாலா குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறந்த கல்வி வழங்கப்பட்டது. அன்பும், அருள் வளமும் மிக்க குடும்பத்தின் வாரிசான இவர் இறைவனின் திருப்பணியாற்ற குருத்துவப் பயிற்சி பெற்று அருள்பொழிவு பெற்றார். இரண்டு பேராயர்களின் கீழ் தலைமைச் செயலராகவும், தலைமைத் திருத்தொண்டராகவும் பணியாற்றினார்.
கால்டினுசின் காலம் சவால் நிறைந்த காலமாகும். 1159-இல் திருத்தந்தை அட்ரியன் இறந்தபிறகுஈ புதிய திருத்தந்தையாக மூன்றாம் அலெக்சான்ண்டர் தேர்ந்தெடுக்கபட்டார். பேரரசர் ஃபிரடரிக் பார்பராசாவுக்கு ஆதரவாக இரந்த கர்தினால்கள் சிலர் ஒன்று சேர்ந்து பேரரசரின் தூண்டுதலின் பேரில் நான்காம் விக்டர் என்பவரைப் போட்டித் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
மிலான் நகர மக்கள் திருத்தந்தை மூன்றாம் அலெக்சான்டருக்கே வணக்கமும், மரியாதையும் செலுத்தியதால் பேரரசர் வெகுண்டெழுந்தார். மிலான் நகரைச் சுற்றி இராணுவ முற்றுகைக்கு உத்தரவிட்டார். பேராயர்கள் ஹ_பெர்ட் மற்றும் கால்டினுஸ் இருவரையும் கட்டாயத்தின் பேரில் ஊர்விட்டு ஊர் ஓட வைத்தார். எனவே மிலான் நகரில் ஆயர் இல்லாத நிலையானது. பட்டினியும், நோயும் மக்களைத் தாக்கி பலர் இறக்க ஆரம்பித்த போதுதான் பார்பராசா முற்றுகையைத் தளர்த்தினார்.
திருத்தந்தை மூன்றாம் அலெக்சான்ணடருடன் சேர்ந்து மகுலோன், மொன்பெல்லியர் மற்றும் க்ளர்மோன்ட் ஆகிய இடங்களுக்கு பயணித்தார். மேலும் சிசிலி வழியாக உரோமைக்கு திரும்பி வந்தபோதும் உடனிருந்தார். தன்னுடன் தொடர்ந்து 1165 வரை உடன் நடந்த கால்டினுசை 1165-ஆம் ஆண்டு உரோமையில் சாந்தா சபினா பேராலயத்தின் கர்தினாலாக திருத்தந்தை நியமித்தார்.
பேராயர் ஹ_பர்ட் 1166-இல் இறந்ததால் மிலான் நகர பேராயராக கால்டினுஸ் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தமது வாழ்நாள் முழுவதுமே தம் மக்களின் அமைதியான மற்றும் நிலையான வாழ்வுக்காக கால்டினுஸ் கையளித்தார். 1167-இல் லம்பார்டு நகருக்குத் திருப்பீடத் தூதுவராக நியமனம் பெற்றார். பேரரசர் பார்பராசா இறந்தவுடன் லம்பார்டு மறைத்தளம் முழுவரையும் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார். போட்டி திருத்தந்தை நான்காம் விக்டரை ஆதரித்த அனைத்துக் குருக்களையும் நீக்கிவிட்டு புதிய குருக்கள் மற்றும் ஆயர்களைத் திருப்பொழிவு செய்தார்.
பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் மிலான் நகர ஏழைகளுக்கு உதவி செய்து எல்லாரின் அன்புக்கும் உரியவராக விளங்கிய கால்டினுஸ் ஏப்ரல் 18, 1176-ஆம் ஆண்டு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை ஆற்றிவிட்டு அமர்ந்தவர் அப்படியே இறந்து இறைவனில் ஒன்றித்தார்.
கடன்பெறாது வாழும் வாழ்வும், அது தரும் மகிழ்வும் நிலையானது என்பதை உணர்கிறவர்கள் ஆசிர் பெறுவார்கள்.