Pope St. Soterus St. Adalbert of Prague

ஏப்ரல் 22

✠ புனிதர் அடால்பர்ட் ✠

mary

mary

✠ புனிதர் அடால்பர்ட் ✠ (St. Adalbert of Prague)
 *ஆயர் மற்றும் மறைசாட்சி :

*பிறப்பு : 956
லிபைஸ் நாட் ஸிட்லினோ, பொஹேமியா, ஸ்செச்சியா
(Libice nad Cidlinou, Bohemia, Czechia)

*இறப்பு : ஏப்ரல் 23, 997
ட்ரூசோ, ப்ருஷியா
(Truso, Prussia)

*புனிதர் பட்டம் : 999
திருத்தந்தை இரண்டாம் சில்வஸ்ட்டர்
(Pope Sylvester II)

பாதுகாவல் :
போலந்து, பொஹேமியா, எஸ்டேர்கோம் உயர்மறைமாவட்டம்
(Poland, Bohemia, Archdiocese of Esztergom)

"வோஜ்டெக்" (Vojtěch) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் அடால்பர்ட், பொஹேமியா'வின் மறை பணியாளரும், "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague), "ஹங்கேரிய" (Hungarians), "போல்ஸ்" (Poles) மற்றும் "ப்ருஷியன்" (Prussians) மக்களின் மறைபோதகரும் ஆவார். இவர், "பால்டிக் ப்ருஷியன்" (Baltic Prussians) இன மக்களை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றும் முயற்சியில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

தற்போது, "செக் குடியரசு" (Czech Republic), "போலந்து" (Poland), "ஹங்கேரி" (Hungary) மற்றும் "ஜெர்மனி" (Germany) ஆகிய நாடுகளால் பெரிதும் போற்றப்படும் புனிதரான அடால்பர்ட், அக்காலத்தில் கிறிஸ்துவின் நற்செய்திகளின் எதிர்ப்பு ஒருபோதும் இவரை சோர்வடையச் செய்யவில்லை.

பொஹெமியாவின் (Bohemia) பிரபுத்துவ குடும்பமொன்றில் பிறந்த இவருடைய தந்தையார் "ஸ்லாவ்னிக்" (Slavn�k) ஆவார். இவரது தாயார் "ஸ்ட்ரேசிஸ்லாவா" (Střezislava) ஆவார். சிறு வயதிலேயே பெரும் நோயோன்றினால் பாதிக்கப்பட்டு பிழைத்த இவரை கடவுளின் சேவையில் அர்ப்பணித்திட இவரது பெற்றோர் தீர்மானித்திருந்தனர்.

சிறந்த கல்விமானான இவர், தமது ஆரம்ப கல்வியை "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) எனும் புனிதரிடம் கற்றார். தமது "உறுதிப்பூசுதல்" (Confirmation) திருவருட்சாதனம் பெரும் நிகழ்வின்போது, தமது ஆசிரியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆசிரியரது பெயரையே தமது ஆன்மீக பெயராக ஏற்றார்.

981ம் ஆண்டு, இவரது ஆசிரியரான "புனிதர் அடால்பர்ட்" (Saint Adalbert of Magdeburg) மரித்ததும், இவர் பொஹேமியா திரும்பினார். பிறகு, "ப்ராக்" மறைமாவட்ட ஆயரும் (Bishop of Prague) "டயட்மார்" (Dietmar of Prague) என்பவர், இவரை கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு செய்வித்தார். 982ம் ஆண்டு, ஆயர் "டயட்மார்" (Dietmar of Prague) மரித்துப் போகவே, தமது 27 வயதிலேயே ப்ராக் (Prague) மறைமாவட்டத்தின் ஆயராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது நற்பணிகளை எதிர்த்தவர்களின் வற்புறுத்தலால் எட்டு வருடங்களின் பின்னர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

காலப்போக்கில், ப்ராக் மக்கள் அவரை தங்களது ஆயராக திரும்பி வர வேண்டினார்கள். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆலயத்தின் பரிசுத்தம் கெடும் வகையில், விபச்சார குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை கையை பிடித்து இழுத்து மான பங்கம் செய்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.

ஹங்கேரியில் சிறிது காலம் மறைபோதனை செய்த பின்னர், "பால்டிக்" கடற்கரையோரம் (Baltic Sea) வசித்த மக்களுக்கு நற்செய்தி போதிக்க சென்றார். அவரும் அவருடன் சென்ற இரு நண்பர்களும் "பாகனீய குருக்களால்" (Pagan Priests) மறைசாட்சியாக கொல்லப்பட்டனர்.

image