St. Anacletus St. Marcellinus St. Pedro de San Jose Betancur

ஏப்ரல் 26

✠ புனிதர் பெட்ரோ டி சேன் ஜோஸ் பெடன்கர் ✠

mary

✠ புனிதர் பெட்ரோ டி சேன் ஜோஸ் பெடன்கர் ✠
(St. Pedro de San Jose Betancur)


* மறைப்பணியாளர், நிறுவனர் :


*பிறப்பு : மார்ச் 21, 1626
விலாஃப்லோர், டெனேரிஃப், ஸ்பேனிஷ் பேரரசு

*இறப்பு : April 25, 1667
என்டிகுவா குவாட்மலா, ஸ்பேனிஷ் பேரரசு
(Antigua Guatemala, Captaincy General of Guatemala, Spanish Empire)

*முக்திபேறு பட்டம் : ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*புனிதர் பட்டம் : ஜூலை 30, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

*நினைவுத் திருநாள் : ஏப்ரல் 26

*பாதுகாவல் :
கெனரி தீவுகள் (Canary Islands), குவாட்மலா (Guatemala), மத்திய அமெரிக்கா (Central America), குவாட்மலாவின் மறைக்கல்வி ஆசிரியர்கள் (Catechists of Guatemala), தென் டெநெரிஃப் நாட்டிலுள்ள நகரசபைகளின் கௌரவ மேயர்கள் (Honorary Mayor of municipalities in the South of Tenerife), என்ட்டிகுவா, குவாட்மலா நகரசபையின் கௌரவ மேயர் (Honorary Mayor of Antigua Guatemala), வீடற்ற மக்கள் (The homeless)

புனிதர் பெட்ரோ டி சேன் ஜோஸ் பெடன்கர், மத்திய அமெரிக்க நாடுகளிலுள்ள "குவாட்மலா குடியரசின்" (Republic of Guatemala) மறைப்பணியாளரும், ஒரு ஸ்பேனிஷ் புனிதருமாவார். இவர், (St. Francis of Assisi of the Americas) "அமெரிக்காக்களின் புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ்" என்றும் அறியப்படுகின்றார். கேனரி (Canary Islands) தீவுக்களின் முதல் புனிதரான இவர், குவாட்மலா (Guatemala) மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் (Central America) ஆகியவற்றினதும் முதல் புனிதராகக் கருதப்படுகின்றார். இவர், "பெத்தலமைட் சகோதரர்கள்" (Bethlehemite Brothers) என்றழைக்கப்படும் "பெத்தலஹெம் அன்னையின் சபையின்" (Order of Our Lady of Bethlehem) நிறுவனர் ஆவார்.

"ஹெர்மனோ பெட்ரோ டி சேன் ஜோஸ் பெடன்கர்ட்" (Hermano Pedro de San José Betancurt) என்றும், "ஹெர்மனோ பெட்ரோ" (Hermano Pedro) என்றும், "சேன்ட்டோ ஹெர்மனோ பெட்ரோ" (Santo Hermano Pedro) என்றும், "சேன் பெட்ரோ டி விலஃலோர்" (San Pedro de Vilaflor) என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர், 1626ம் ஆண்டு, "டெனேரிஃப்" (Island of Tenerife) தீவிலுள்ள "விலாஃப்லோர்" (Vilaflor) எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை, "ஜீன் டி பெத்தென்கார்ட்டின் வம்சாவளியினரான" (Descendant of Jean de Béthencourt) "அமடோர் பெடன்கோர்ட்" (Amador Betancourt) ஆவார். இவரது தாயார், "ஆனா கொன்சேல்ஸ் பெடன்கோர்ட்" (Ana Gonz�les Betancurt) ஆவார்.

சிறுவயதில், பெட்ரோ தமது குடும்பத்தின் ஒரே வருமானமான சிறு பண்ணையில் கால்நடைகளை மேய்க்கும் பணி செய்தார். 1638ம் ஆண்டு ஒருமுறை, தமது குடும்பத்துக்கு கடன் கொடுத்தவர், கடனுக்காக, தமது பண்ணை நிலங்களை பறிமுதல் செய்தார். குடும்பத்தின் கடனை அடைக்கும் முயற்சியாக, அந்த நிலச் சுவான்தாரிடம் சம்பளமில்லா வேலைக்காரனாக வேலை செய்தார். இந்த காலகட்டத்தில், இவரது சகோதரரான "மடேயோ" (Mateo) என்பவர், ஸ்பெயின் நாட்டின் காலனியாட்சி நடைபெறும் "ஈகுவேடார்" (Ecuador) காலனிக்கு புலம்பெயர்ந்து சென்றார்.

1649ம் ஆண்டு, தமது 23 வயதில், குடும்ப கடனுக்காக கூலி வேலை செய்துவந்த பெட்ரோ, அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரும் தமது சகோதரரைப் போலவே வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அங்கிருக்கும் ஏதாவது ஒரு சொந்தம் மூலமாக ஏதேனும் ஒரு அரசு பணியில் சேரும் நோக்கில், புதிய ஸ்பெயின் நாட்டின் (New Spain) தலைநகரான குவாட்மலா (Guatemala) பயணித்தார். அவர் கியூபாவிலுள்ள (Cuba) ஹவானா (Havana) சென்று சேர்ந்தபோது, அவரிடம் கையில் பணம் ஏதும் கிடையாது. பின்னர், ஒரு வருடம் அங்கிருந்த குருவிடம் பணியாற்றினார்.

பெட்ரோ, 1653ம் ஆண்டு, குருத்துவக் கல்வி கற்பதற்காக "சேன் போர்ஜியா" (San Borgia) எனும் இடத்திலுள்ள இயேசுசபை (Jesuit College) கல்லூரியில் சேர்ந்தார். மூன்று வருடங்களின் பின்னர், கல்லூரியின் தேர்வுகளில் தோல்வியடைந்ததால், கல்லூரியிலிருந்து விலகினார். பின்னர், குருவாகும் யோசனையை கைவிட்டார். அங்குள்ள அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றில் சாக்ரஸ்டனின் நிலையை வகித்தபின் (Sacristan - கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள புனிதப் பொருட்களைக் காப்பவர்), "கல்வாரி" (Calvary) என்றழைக்கப்படும் புறநகர்ப் பகுதியொன்றில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து, சிறிது காலம் அங்கே ஏழைச் சிறார்களுக்கு படிக்கவும், மறைக் கல்வியும் கற்பித்தார்.

"என்ட்டிகுவா குவாட்மலா�வின்" (Antigua Guatemala) "கோஸ்டா ரிக்கா" (Costa Rica) ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்தில் இணைந்து துறவியானார். "புனிதர் சூசையப்பரின் பீட்டர்" (Peter of Saint Joseph) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். அவர் மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் வேலையற்றோர் ஆகியோரைக் காணச் சென்றார். அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறினார். 1658ம் ஆண்டு, தமக்கு தரப்பட்ட குடில் ஒன்றினை சிறு மருத்துவமனையாக மாற்றினார். நகரின் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்னமும் ஓய்வும் உடல்நிலையில் முன்னேற்றமும் தேவைப்பட்ட ஏழை நோயாளிகளை அங்கே தங்கவைத்து சிகிச்சையும் சேவையும் செய்தார். அவரது ஆர்வம் அவரைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து வந்த பலன்களையும் பெற்றது. ஆயரும் ஆளுநரும் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவருக்கு வழங்கினார்கள்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர், பீட்டரின் குடிலைச் சுற்றியிருந்த பல வீடுகளை வாங்குவதற்காக பலர் உதவிகள் செய்தனர். பின்னர் அவர்களது தளத்தில் ஒரு மருத்துவமனை நிறுவப்பட்டது. அதில் அவரால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அவர், தாமே கட்டிடப் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்தார். அது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது. ஏழை நோயாளிகளுக்கான மருத்துவமனையும் நிறுவனமும் பெத்தலஹெம் அன்னை மரியாளின் (Our Lady of Bethlehem) பாதுகாவலில் அர்ப்பணிக்கப்பட்டது. விரைவிலேயே வீடற்றவர்களுக்கு ஒரு தங்குமிடமும், ஏழை சிறுவர்களுக்கு ஒரு பள்ளியும், குருக்கள் மற்றும் துறவியர்க்கு ஒரு சிற்றாலயமும், தங்கும் இல்லமும் கட்டப்பட்டது.

பிற சபை மற்றும் மடங்களின் துறவியர் வந்து பீட்டருடன் இணைய தொடங்கினர். பீட்டர், துறவியர் சமூகம் ஒன்றோ, அல்லது சபையோ நிறுவும் எண்ணமேதுமில்லாதிருந்தார். ஆனால், தமது மருத்துவமனையை நிறுவுவதில் தீவிரமாக இருந்தார். தமது முதல் உதவியாளர்களை திறம்பட பயிற்றுவித்தார். தாம் ஒரு ஃபிரான்சிஸ்கன் (Franciscan) சபையைச் சேர்ந்த துறவியாயிருந்தும், தமது மருத்துவமனை சமூகத்திற்கு, விரைவிலேயே "தூய அகுஸ்தினாரின் சட்டதிட்டங்களை" (Rule of St. Augustine) எழுதினர். பெண்களுக்கான இவரது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறார்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியைச் செய்தனர். இவர்களது இச்சமூகம் விரைவிலேயே "பெத்தலஹெம் அன்னையின் சபை" (Order of Our Lady of Bethlehem) அல்லது "பெத்தலமைட் சகோதரர்கள்" (Bethlehemite Brothers) என்றானது. இச்சபையில் இணைந்த ஆண்களும் பெண்களும், இவர்களுடைய மருத்துவமனை மட்டுமல்லாது, நகரின் வேறு இரண்டு மருத்துவமனைகளிலும் பணி புரிந்தனர். பீட்ட வழக்கம் போல ஏழைச் சிறுவர்களின் கல்வியில் கவனம் செலுத்தினார். இவர்களது "பெத்தலமைட்" சபை, ஃபிரான்சிஸ்கன் சமூகத்திற்கு சொந்தமானதாகும்.

பின் வரும் வருடங்கள் :
சிறைச்சாலைக் கைதிகளும்கூட பீட்டரின் இரக்கத்தினால் உணர்ச்சி வசப்பட்டு உற்சாகம் கொண்டனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும், அவர் நகர் முழுதும் சென்று சிறைக் கைதிகளுக்காக யாசகம் பெற்றார். அதனை சிறைச்சாலை சென்று அவர்களுக்கு கொடுத்தார். ஏழை எளிய குருவானவர்களால் நடத்தப்படும் திருப்பலிகளுக்காகவும், அவற்றில் பங்கேற்கும் ஏழை மக்களுக்காகவும் நகர் முழுதும் சென்று யாசகம் பெற்று அவற்றை அவர்களுக்கு அளித்தார். கத்தோலிக்க பாரம்பரியம் மற்றும் மரபுகளின்படி, ஒருவர் மரித்ததன் பின்னர் ஆத்துமாக்களை புனிதப்படுத்தும் இடமான "உத்தரிய ஸ்தலத்தில்" (Purgatory) காத்திருக்கும் புறக்கணிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மீது அக்கறையும் கவலையும் கொண்டிருந்தார். இரவு நேரங்களில், நகரின் தெருக்களில் மணியடித்தவாறு பயணித்து, உத்தரிய ஸ்தலத்திளிருக்கும் ஆத்துமாக்களுக்காக செபிக்குமாறு மக்களிடம் பரிந்துரைத்தார்.

உழைப்பு மற்றும் நோன்பு, தவம் ஆகியவற்றினால் முற்றிலும் சோர்வடைந்து, நலிந்து போன பீட்டர், 1667ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 25ம் நாளன்று, தமது 41 வயதில், "என்ட்டிகுவா குவாட்மலா" (Antigua Guatemala) நகரில் மரித்துப்போனார். கபுச்சின் (Capuchin Friars) துறவியரது வேண்டுகோளின்படி, அவர்களது ஆலயத்தில் பீட்டர் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டர் தமது வாழ்க்கையை தேவைப்படும் மக்களுக்காக அர்ப்பணித்தார். நோயாளிகளுக்காக - முக்கியமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்காகவும், சிறைக் கைதிகளுக்காகவும், அடிமைகளுக்காகவும், இந்தியர்களுக்காகவும் மனித உரிமைகளின் முன்னோடியாக பணியாற்றினார்.

image