ஏப்ரல் 28
புனித லுயிஸ் டி மான்போர்ட்
புனித லுயிஸ் டி மான்போர்ட்
புனித லூயிஸ் தே மான்ஃபோர்ட் (1673 - 1716)
பேதுரு இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம் “என் ஆட்டுக்குட்டிகளை பேணி வளர்” என்றார். (யோவா 21:15)
பிரான்ஸ் நாட்டில் மான்ஃபோர்ட் என்னுமிடத்தில, 1673, ஜனவரி 31 அன்று பிறந்தவர் லூயிஸ். குழந்தைப் பருவம் முதலே நற்கருணை ஆண்டவர் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்த லூயிஸ் அடிக்கடி ஆலயத்திற்குச் சென்று செபிக்கும் பழக்கம் உடையராகத் திகழந்தார்.
லூயிஸ் 12 வயதில் ரென்னஸ் என்னுமிடத்தில் உள்ள இயேசு சபை கல்லூரியில் படிக்கச் சென்றார். அங்கிருந்த ஆலயத்தில் இளைஞர் குழு ஒன்று இருந்தது. அவர்கள் விடுமுறை நாட்களில் ஏழைகள் மற்றும் குணப்படுத்த முடியாத நோயுடன் அல்லலுற்றவர்களைப் பார்க்கச் செல்வார்கள். அந்த நேரங்களில், அவர்களின் புண்களைச் சுத்தம் செய்து மருந்திட்டு ஆறுதலாகப் பேசுவார்கள். உணவு வேளையில் நல்ல புத்தகங்களை அவர்களுக்கு வாசித்துக் காட்டுவார்கள். இவர்களுடன் தவறாமல் எப்போதும் லூயிஸ் சென்றார்.
இறையியல் கற்பதற்காக 19 வயதில் பாரிஸ் நகருக்கு நடந்தே சென்றார். அவ்வாறு செல்லும்போது, தன்னிடம் இருந்த பணத்தை வழியோரம் இருந்த ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். ஆடைகளையும் அவ்வாறே கொடுத்தார். படிப்பு முடித்த லூயிஸ் 27 வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். மருத்தமனையில் உள்ளவர்களுக்கு அருள்பணி புரிந்தார்.
தமது அழைத்தலின் உண்மையான நோக்கத்தை 1705-ஆம் ஆண்டு 32-வது வயதில் லூயிஸ் புரிந்து கொண்டார். அதன்படி நற்செய்தி போதிக்கத் தன்னையே அர்ப்பணித்தார். கிராமங்கள், நகரங்கள் என 17 ஆண்டுகள் ஆண்டவரின் வாழ்வுதரும் மீட்புச் செய்தியைப் போதித்தார். சிறந்த பேச்சாளரான லூயிசின் எளிய வாக்கியங்கள் மக்களைக் கவர்ந்தன. ஏழைகள் மீது அளவற்ற அன்பு மிகுந்தவராக விளங்கினார். நம்ப முடியாத அளவுக்கு ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இவரின் ஏழ்மையைக் கண்டு பலர் இகழ்ந்துரைத்தாலும் இறைவனின் துணையுடன் துணிவுடன் வாழ்ந்தார்.
இவருடைய வாழ்வில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஒன்று ஒருமுறை லா ரொச்சலே என்னுமிடத்திலஈ போர் வீரர்களுக்கு இறைச் செய்தியைப் போதித்தார். அந்த உரையைக் கேட்ட அனைத்து வீரர்களும் தங்களது குற்றங்களை நினைத்துக் கதறி அழுதார்கள். புனிதர் பவனியின் போது அந்தப் படையணியின் தலைவன் உள்பட அனவைரும் வெறுங்காலுடன் ஒரு கையில் சிலுவையும், மறுகையில் செபமாலையும் பிடித்து பக்தியுடன் நடந்தார்கள்.
இரண்டாவது நிகழ்வுஈ பொன்சாத்து என்னுமிடத்தில் மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் கல்வாரி மலையின் வடிவத்தை எழுப்ப முடிவு செய்தார். 200 முதல் 400 பேர் இணைந்து 15 மாதங்கள் முயன்று கல்வாரி மலையை எழுப்பினார்கள். வேலை முடியும் நிலையில் இருந்தபோது அதனை இடிக்க வேண்டும் என்று அரசர் கட்டளை பிறப்பித்தார். மக்கள் பல்வேறு வழிகளில் முயன்றும் அரசரின் உத்தரவே வெற்றி பெற்றது. இதனை லூயிசிடம் சொன்னபோது அவர் “கடவுள் போற்றப்படுவாராக” என்று பதிலுரைத்தார்.
அப்போஸ்தலிக்க மறைப்பணி:
பாப்பு கிளமெண்ட் பதினொன்று லூயினுடைய ஆர்வத்தால் மிகவும் கவரப்பட்டதால் மீண்டும் அவரை பிரான்ஸ் நாட்டிற்கு ''அப்போஸ்தலிக்கப் பணியாளர்''; என்ற பெயருடன் அனுப்பி வைத்தார். நிறைய குறை கூறுதலுக்கு மத்தியிலும், லூயி கோயில்களிலும், நகர் சதுக்கங்களிலும், ஏழை வீடுகளிலும் மக்களை ஜெபமாலை ஜெபிக்கத் தூண்டினார். மேலும், அவர் ஒரு பிரபலமான புத்தகம் ஒன்று எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ''பரிசுத்த கன்னியிடம் உண்மையான அர்ப்பணிப்பு'' மேலும் இரண்டு சபைகளை தோற்றுவித்தார். இரண்டு சபைகளின் குறிக்கோள்கள் மரியன்னையின் கூட்டம் இந்தக் கூட்டமானது (குழுவானது) மறைபரப்பு வேலைகளைச் செய்யும். இரண்டாவது ஞானத்தின் பெண் பிள்ளைகள் ஏழைகளுக்காக பள்ளிக்கூடம் நடத்துவார்கள். இன்று, இந்த இரு சபையினரும் நம்மை ஊக்குவிக்கும் வகையில் தங்களுடைய இறை வார்த்தை பணியை செய்து வருகிறார்கள்.
அனைத்தையும் இறைத்திட்டமென ஏற்றுப் பிறருக்காவே வாழ்ந்து நற்செய்தி போதித்த லூயிஸ், ஏழை மக்கள் வாழ்வு பெறவும், நோயளிகள் சுகம் பெறவும் தொடர்ந்து பணியாற்ற விரும்பினார். தான் இறப்பதற்கு முந்திய ஆண்டில் அருள்சகோதரிகளுக்கு ஒரு சபையும் ஏற்படுத்தினார். இறைவனின் திட்டப்படி 1716, ஏப்ரல் 28இல் இறந்தார். திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் 1888, டிசம்பர் 31இல் லூயிசை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். 1947, ஜூலை 27 அன்று அவருக்கு திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் புனிதர் பட்டம் வழங்கினார்.
தான் பிறந்த பிறப்பின் பொருளை அறிந்து கொள்ளும் எல்லாருமே பிறருக்காக தங்களையே கையளிப்பார்கள்: இறைவனின் கையாக இருப்பார்கள். |