* ஆர்ல்ஸ் ஆயர் : (Bishop of Arles) * பிறப்பு : கி.பி. 403 * இறப்பு : கி.பி. 449
* நினைவுத் திருநாள் : மே 5
புனிதர் ஹிலாரி, தென் ஃபிரான்ஸ் (Southern France) நாட்டின் ஆர்ல்ஸ் (Arles) மறைமாவட்ட ஆயரும், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளால் புனிதராக அங்கீகரிக்கப்பட்டவருமாவார். இவரது நினைவுத் திருநாள் மே மாதம் ஐந்தாம் நாளன்று நினைவுகூறப்படுகின்றது.
ஹிலாரி, தமது பதினேழு வயதில், "செயின்ட் ஹோனரட்" (Island of Saint-Honorat) தீவிலுள்ள "சிஸ்டேர்சியன்" துறவறமான (Cistercian monastery) "லெரின்ஸ்" (L�rins Abbey) மடத்தில் சேர்ந்தார். அக்காலத்தில், அவரது உறவினரான "புனிதர் ஹோனரடஸ்" (Saint Honoratus of Arles) "லெரின்ஸ்" மடத்தின் மடாதிபதியாக இருந்தார். அவரே ஆர்ல்ஸ் மறைமாவட்டத்தின் ஆதிகால ஆயராகவும் இருந்தார். ஹிலாரி இதற்கு முன்னதாக "டிஜோனில்" (Dijon) வாழ்ந்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள், அவர் "பெல்கிக்கா" (Belgica) அல்லது "ப்ரோவென்ஸ்" (Provence) நகரிலிருந்து வந்ததாக நம்புகின்றனர்.
இவர், மேற்கத்திய ரோமப் பேரரசின் அரசியல்வாதியான "ஹிலாரியஸ்" (Hilarius) என்பவரது மகன் அல்லது உறவினர் என்று நம்பப்படுகின்றார். ஹிலாரியஸ், கி.பி. 396ம் ஆண்டில் "கௌல்" (Gaul) நகரிலும், கி.பி. 408ம் ஆண்டில் ரோம் நகரிலும் தலைமை அதிகாரியாக (Prefect) இருந்துள்ளார்.
ஹிலாரி, தமது உறவினரான ஆர்ல்ஸ் ஆயர், "புனிதர் ஹோனரடஸ்" என்பவருக்குப் பின்னர் 429ம் ஆண்டு, ஆர்ல்ஸ் ஆயராக பதவியேற்றார். இவர், புனிதர் அகுஸ்தினாரை (St Augustine) முன்னுதாரணமாக ஏற்று, அவரது சபைக் குருமார்களை ஒரு "சபைக்குள்" ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது; அவர்கள் கடுமையான சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பயிற்சிகளுக்கு தங்கள் நேரத்தை அர்ப்பணித்தனர். ஹிலாரி, தமது உழைப்பு முழுவதையும் ஏழை மக்களுக்கே பகிர்ந்தளித்தார்.
கைதிகளை மீட்கும் பொருட்டு, இவர் ஆலயங்களின் பரிசுத்த பாத்திரங்களை (Sacred vessels) விற்றார். அவர் ஒரு அற்புதமான பேச்சாளர் (Orator) ஆனார். அவர் பயணம் செய்த எல்லா இடங்களுக்கும் நடை பயணமாகவே பயணித்தார். எப்போதும் எளிய ஆடை அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அது பிரகாசமான பக்கமாகும். ஹிலாரி பிற பிஷப்புகளுடன் தனது உறவுகளில் சிக்கலை எதிர்கொண்டார். அவரிடம் சில அதிகார வரம்பு இருந்தது. அவர், பாரபட்சம் பாராது, ஒரு ஆயரை பதவியை விட்டு விலக்கினார். நோய்வாய்ப்பட்டிருந்த ஆயர் ஒருவருக்குப் பதிலாக, வேறு ஒருவரை ஆயராக தேர்வு செய்தார். ஆனால், விடயம் சிக்கலானது. நோய்வாய்ப்பட்ட ஆயர் மரிக்கவில்லை. திருத்தந்தை புனிதர் பெரிய லியோ (Pope Saint Leo the Great), ஹிலாரியை ஒரு ஆயராகவே வைத்திருந்தார். ஆனால் அவருடைய சில அதிகாரங்களைக் கைப்பற்றினார்.
ஹிலாரி, கி.பி. 449ம் ஆண்டு மரித்தார். மிகவும் சரியான நேரத்தில், ஒரு ஆயர் எப்படி இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொண்ட திறமைசாலியாகவும் பக்திமானாகவும் ஹிலாரி இருந்தார்.
மே 5
தூய ஆஞ்சலோ
தூய ஆஞ்சலோ
“யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்திப் பறைசாட்சிக்கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்” (மாற் 1: 14 – 15)
வாழ்க்கை வரலாறு
12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூதாவில் உள்ள எருசலேமில், ஒரு யூதக் குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்தில் இருந்த பெண் மிகவும் பக்தியானவள். ஒரு சமயம் அன்னை மரியா அந்தப் பெண்ணுக்குத் தோன்றி, “நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா ஏற்கனவே வந்துவிட்டார்; உனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறக்கும். அவர்களில் ஒருவன் திருச்சபையில் பிதாபிதாவாகவும், மற்றவன் கார்மேல் சபையில் சேர்ந்து பின்னாளில் மறைசாட்சியாகவும் உயிர் துறப்பான்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.
இந்தக் காட்சிக்குப் பிறகு அந்தப் பெண்ணும் அவளுடைய கணவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். ஓரிரு ஆண்டுகள் கழித்து, மரியா அந்தப் பெண்மணிக்குச் சொன்னது போன்று, அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ஆஞ்சலோ. ஆஞ்சலோ வளரும்போதே இறை அச்சத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கி வந்தார். கிரேக்கம், லத்தின், ஹீப்ரு போன்று மொழிகளிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். இப்படி நாட்கள் மிகவும் சந்தோசமாகப் போய்கொண்டிருந்த தருணத்தில், ஆஞ்சலோவின் பெற்றோர் இறந்து போனார்கள்.
ஆஞ்சலோவிற்கு பதினெட்டு வயது நடக்கும்போது அவர் கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்தார். அங்கு அவர் மிகவும் முன்மாதிரியான துறவியாக வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவர் இயேசு அவருக்கு முன்பாகத் தோன்றி, “ஆஞ்சலோ! நீ உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்று, அங்கு நற்செய்தி அறிவி” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். அப்போது ஆஞ்சலோவோ வேறெதுவும் யோசிக்காமல் உடனே சிசிலிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகிற வழியில் இருந்த பலேர்மோ என்ற இடத்தில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, 200 க்கு மேற்ப்பட்டவர்களையும் மனம் திருப்பினார். தொடர்ந்து அவர் லாகத்தா என்னும் இடத்திலும் நற்செய்தியை அறிவித்து பலரை மனம் திருப்பினார்.
லாகத்தா என்ற இடத்தில் அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருக்கும்போது தவறான முறையில் வாழ்ந்துவந்த பெரேங்கினுஸ் என்பவனைக் குறித்துக் கேள்விப்பட்டார். உடனே அவர் பெரேங்கினுசிடம் சென்று அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டினார். இதனால் அவன் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவனாய் நினைத்தான். அவன் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். எனவே, அவன் அதற்கான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் ஆஞ்சலோ மக்களுக்கு முன்பாகப் போதித்துக் கொண்டிருக்கும்போது பெரேங்கினுசின் ஆட்களில் ஒருவன், கூட்டத்திற்குள் புகுந்து ஆஞ்சலோவை வெட்டிக் கொன்றுபோட்டான். அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக, தன்னைக் கொல்லவந்தவனை மனதார மன்னித்துவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய பெரேங்கினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
தீமை செய்தவருக்கு நன்மை
தூய ஆஞ்சலோவின் வாழ்வின் வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் தன்னைக் கொல்லவந்தவனையும் மன்னித்து, அவனுக்காக ஜெபித்தார் என்று அறிந்துகொள்கின்றோம். இவ்வாறு அவர் தீமை செய்வதவருக்கும் நன்மை செய்பவராக, பகைவரை மன்னிப்பவராக விளங்கினார். தூய ஆஞ்சலோவைப் போன்று நம்மால் தீமை செய்வதவர்களை மன்னிக்க முடிகின்றதா? அவர்களுக்கு தீமைக்குப் பதிலாக நன்மை செய்ய முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஹிட்லரின் வதைமுகாமில் சிலகாலம் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, வெளியே வந்தவர் மார்டின் நிமொல்லர் என்பவர். பின்னாளில் அவர் பெரிய பிரபலமானார். அவர் வதை முகாமிலிருந்து வெளியே வந்தவுடன் சொன்ன செய்தி, “கடவுள் தன்னை பகைப்போருக்கும் ஏன் நம்மைப் பகைப்போருக்கும்கூட நன்மை அன்றி, தீமை செய்வது இல்லை” என்பதாகும். இவ்வார்த்தைகள் சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கடவுள் தனக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மை செய்வாரே அன்றி, தீமை செய்வதில்லை” எனவே நாம் அவரைப் போன்று தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
ஆகவே, தூய ஆஞ்சலோவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தீமை செய்வோருக்கும் நன்மை செய்வோம், ஆண்டவரின் நற்செய்தியை வல்லமையோடு எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.