பிறப்பிடம் : ஜெர்மனி
நினைவு நாள் : ஜூலை 2
அமைதியை நிலைநாட்ட பாம்பெர்க்கின் ஆயர் மற்றும் வெறிநாய்கடி நோய் குணமாக்குபவர்
ஏறத்தாள 1062 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்த உயர்குடி மகனான ஓட்டோ என்பவர் கல்வி பயின்று இளம் வயதிலேயே ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். போலந்து நாட்டின் விலாடிஸ்லா மாநிலத்தின் குருநில மன்னருக்கு சில ஆண்டுகள் ஆன்ம ஆலோசகராக இருந்தபின்னர் 4 ஆம் ஹென்றி அரசரின் கீழ் 11 ஆண்டுகள் அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.
இதற்கிடையில், ஆயர்களை நியமனம் செய்வதில், யாருக்கு அதிகாரம் உண்டு என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருச்சபையில் பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், கையூட்டு பெறுதல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டன. இதைச் சரிசெய்ய நினைத்த திருத்தந்தை (போப்) ஆயர்களை திருநிலைப்படுத்தும் அதிகாரம் தனக்கு மட்டுமே உண்டு என்று அறிவித்தார். ஆனால் ஹென்றி அரசர் இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தார். அவர் ஒரு எதிர் திருத்தந்தையை ஏற்படுத்தி ஓட்டோவை பாம்பெர்க்கின் ஆயராக நியமித்தார்.
ஓட்டோ ஆயர், ஹென்றி அரசருக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும், திருச்சபைக்கும் பற்றுறுதி உள்ளவராக இருந்து வந்தார். இது இவரை ஒரு தர்மசங்கடமான மற்றும் ஆபத்தான நிலைக்குத் தள்ளியது.
அறிவார்ந்த பேச்சுவார்த்தை :
பல ஆண்டுகளாக ஹென்றிக்கும் திருத்தந்தைக்கும் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நிகழ்த்தினார். இருதரப்பினரும் இவரது நேர்மையையும் அடக்கத்தையும் மதித்தனர். மேலும் தன்னுடைய மறைமாவட்டத்திற்காக உழைப்பதிலும், ஆலயங்கள் கட்டுவதிலும், கல்வி மேம்பாட்டுக்காகவும், சபைகள் நிறுவுவதிலும் தமது மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் உழைத்தார்.
1124 ஆம் ஆண்டு, போலிஸ்லாஸ் 3 என்ற போலந்தின் சிற்றரசரின் வேண்டுதல்படி, தன்னுடன் சில குருக்களை அழைத்துக் கொண்டு பொமிரானியாவுக்கு ஓட்டோ பயணமானார். அவரது உறுதியான ஆனால் கண்ணியமான நடைமுறைகளும், ஊக்கமூட்டும் மறையுரைகளும் ஒரே ஆண்டில் ஏறத்தாள 20,000 பேர் மனம் மாற்றம் பெறக் காரணமாயிருந்தன. மேலும் இவர் 11 ஆலயங்களை நிறுவினார்.
கடவுளுக்கும் தமது மக்களுக்கும் சேவைபுரியும் ஒரு உண்மையான ஊழியரான ஓட்டோ, தனது மறைமாவட்டத்தில் தம் இறுதிநாட்களை செலவிட்டார். போமிரேனியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்பட்ட இவர் 1189 ஆம் ஆண்டு புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவரது அடிச்சுவற்றில் :
பொதுவான அமைதியை நிலைநாட்டுவதற்கும், திருச்சபைக்கு பற்றுறுதியையும் அரசருக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்துவதற்கும் ஓட்டோ ஒரு நடுநிலையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று.
இன்றைய நாட்களில் அமைதியை நிலைநாட்டுவது ஒரு உணர்ச்சி பூர்வமான கடின வேலையாகும்.
ஆங்சானின் மகள் ஆங்சான் சூயுகிஇ என்பவர் பர்மாவின் விடுதலை வீரர், 1947 ஆம் ஆண்டு நாட்டு விடுதலைக்காக உயிர் நீத்தவர். 1988 ஆம் ஆண்டு ஒரு கொடூரமான இராணுவ ஆட்சியை எதிர்த்து விடுதலைக்காக போரிட்டபோது, சூயுகிஇ குடியரசுக் கட்சிக்கு தலைமை ஏற்று, போராடும் கட்சிகளை ஒன்றுபடுத்தி சமாதானம் செய்து வைத்தார்.
காந்தியும் சூயூசிஇவின் தந்தையும் இவரைக் கவர்ந்தனர்.
அஹிம்சை மீது ஈடுபாடு
மனித உரிமை மீது அçசாத நம்பிக்கை
தலைமைப் பண்பு ஒரு கடமை என்பதை உணர்வது
இவனது கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும், அரசு அந்த வெற்றியை நிராகரித்தது.
சூயுகிஇ நாட்டை விட்டு வெளியேற மறுத்தார். ஆறு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1991 இல் அமைதிக்கான நோபர் பரிசு பெற்றபோது அவரது மகன் அதைப்பெற வேண்டியதாயிற்று.
உண்மையான தலைவராக மாறுவதற்கு நாம் முக்கிய பொறுப்புக்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்னும் கருத்தை ஆங்சான் சூயுகிஇ நினைவுறுத்துகிறார்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 2
புனிதர்கள் புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன்
புனிதர்கள் புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் நினைவு நாள் : ஜூலை 2
துணிவை நாடி
பண்டைகால மறைசாட்சிகள்
முதலாம் நூற்றாண்டில், திருத்தூதர்கள் ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவுக்குள் மனம் மாற்றினார்கள். அவர்களின் பெரும்பாலோர் சாதாரண மக்கள். இவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிந்து அவரைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டனர். புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியனின் வாழ்க்கைக் கதைகள் அவர்கள் ஆழமான, தகர்க்க முடியாத நம்பிக்கையை நமக்கு எடுத்துச் சொல்கின்றன.
மரபுவழிக் கதைகளின்படி, உரோமை நகரில் நீரோ மன்னன் ஆண்ட காலத்தில் மெமர்டைன் சிறைச்சாலையில், புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் என்பவர்கள் உரோமைக் காவலர்களாக இருந்தனர். உரோமையர்கள் பழங்கால கிறிஸ்தவர்களை துன்புறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் மெமர்டைன் சிறைச்சாலை குற்றவாளிகளாலும் கிறிஸ்துவர்களாலும் நிரம்பியிருந்தது. அக்காலத்தில், பழங்கால கிறிஸ்துவர்களுடன் தொடர்புடைய மக்களைப்போல, புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் கைதிகளைக் காவல் காக்கும்போது இயேசுவைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டு அவர்கள் கிறிஸ்துவை முழுமையாக நம்பினார்கள்.
சிறைச்சாலையில் திருமுழுக்குப் பெறுதல் :
திருத்தூதர் பேதுரு, திருத்தூதர் பவுலுடன் மெமர்டைன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, இவர்களுக்கும் மனம் திரும்பிய மற்ற கைதிகளுக்கும் திருத்தூதர் பேதுரு திருமுழுக்குக் கொடுத்தார். சிறைக்காவலர் தலைவர் புரோசிஸஸ் மற்றும் மார்ட்டினியன் மனம் மாறியதை அறிந்து, அவர் அவர்களிடம் இயேசுவை மறுதலித்து, ஜூபிடர் என்றும் வேற்று தெய்வச்சிலையை வணங்குமாறு கட்டாயப்படுத்தினான். பதிலாக அவர்கள் உண்மையிலேயே தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறி சிலையின் மீது துப்பினார்கள்.
சிறையில் அடைக்கப்பட்டு, மறைசாட்சியாக உயிர்விடுதல் :
சிறைச்சாலை தலைவன், புரோசிஸ‘ம் மார்ட்டினியனும் இவர்களது நம்பிக்கையைக் கண்டு, அவர்களை சித்ரவதை செய்து அவர்கள் காவல்களுக்கு அதே சிறைச்சாலையில் அவர்களை அடைத்து வைத்தான். சில நாட்களுக்குப்பின், திருத்தூதர் பேதுருவும் பவுலும் அடைந்த மரணத்தீர்ப்பை இவர்களும் பெற்று கொலை செய்யப்பட்டார்கள்.
இவர்களின் அடிச்சுவட்டில் :
இயேசுவைப் பற்றி அறிந்து புரோசிஸ‘ம் மார்ட்டினியனும் மனம் மாறியதைத் தொடர்ந்து மெமரிடன் சிறைச்சாலையில் மேலும் பல குற்றவாளிகள் மனம் மாறினர். இன்னும் இயேசுவின் நற்செய்தியால் சிறைச்சாலைச் சந்திப்பு பல சிறைக்கைதிகளுக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
1997 இல் சிறைச்சாலை நற்செய்தி பணியில் பயிற்சி பெற்ற நார்மன்லாங் என்னும் அருள்தந்தை பென்சில்வேனியாவில், பைக் கவுன்டி ஜெயிலில் அருள்பணியாளராக பொறுப்பேற்றார். அங்கு உள்ளிருப்பு பயிற்சி பெறுவோர் தோல்வியையே சந்திப்பதாக உணர்கிறார்கள் என்பதை அவர் கண்டறிந்தார். கடவுளுடைய மன்னிப்பைப் பற்றி போதித்து, அருள்தந்தை லாங் அவர்கள், உள்ளிருப்போர் அவர்களது குற்றங்களுக்கு பொறுப்பேற்று, மனந்திருந்தி, கிறிஸ்து எதிர்காலத்துக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் என்பதை அறிந்து கொள்ள பயிற்சி அளித்தார்.
பைக்கவுன்ட்டி ஜெயில் கீழ்க்கண்ட சேவையாற்றியது :
திருவிவிலியக் கல்வி மற்றும் ஆலய சேவைகள்
மது மற்றும் போதைப்பழக்கம் உள்ளவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்
அங்குள்ள சிறைக்கைதிகள் விடுதலைக்கு முன்னும் பின்னும் அருள்தந்தை வழியாக விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்குதல்
பைக்கவுன்டி சிறையில் பயிற்சி பெறும் உள்ளிருப்பு கைதிகளின் மறுசீரமைப்பு 10 விழுக்காடுக்கும் குறைவாகும்.
இதுவே தேசிய அளவில் 80 விழுக்காடு ஆகும். இந்த மகத்தான வெற்றி விழுக்காடு, இயேசுவை நம்புவோருக்கு கிடைக்கும் வெற்றியாகும்.
ஜெபம் :
அன்பு தெய்வமே, எனது வாழ்க்கையை முறையாகக் கழிக்க அருள்தாரும். எனது மரண வேளை வரும்போது, என் உடலில் வலி, வருத்தம் ஏற்பட்டாலும், எனது ஆன்மா ஆறுதல் பெறட்டும். உமது இரக்கத்தினால், உறுதியான நம்பிக்கை கொண்டு உம்மிடம் முழுமையான அன்பு கொண்டு, உலகின்மீது நல்மனம் கொண்டு, உமது அருள்கொடைகளால் ஆசிபெற்று உம்மை வந்தடைவேனாக.