பிறப்பிடம் : கொரினால்டோ, இத்தாலி
நினைவு நாள் : ஜூலை 6
அமைதியைத் தேடி
மாதாவின் குழந்தைகள், இளையோர், கற்பழிக்கப்பட்டோர், ஏனையோரின் காதுகாவலி.
இத்தாலியில் வயல்வெளி தொழிலாளரான ஒருவரின் ஐந்து குழந்தைகளில் ஒருவராக மரியா கொரட்டி 1890 ஆம் ஆண்டு பிறந்தார். வீட்டிலேயே வேலைக்குத் தேவைப்பட்டதால், மரியா பள்ளிக்குச் செல்லஇயலவில்லை. இதனால் எழுதப் படிக்கத் தெரியவில்லை. மன உறுதி மற்றும் ஈடுபாடு மிகுந்த குழந்தையான இவருக்கு புதுநன்மை வாங்குவதற்கு முன்பாக மறைக்கல்வி கற்பதற்கு பெரும்பாடாக இருந்தது.
ஒருநாள் பிற்பகல் வேளையில், அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் வயலில் வேலைக்குச் சென்றிருந்தபோது, தனது குழந்தைத் தங்கையைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே தங்கியிருந்தார். சகோதரன் போன்று மதிக்கத்தக்க 19 வயதுள்ள பக்கத்து வீட்டு இளஞன் அலெக்ஸாண்டர் இவரது வீட்டிற்கு வந்து காம இச்சையோடு மரியாவை நெருங்கினார். மரிய இணங்க மறுத்தபோது, அவளை மேற்கொண்டு கழுத்தைப் பிடித்து நெறித்தார். மூச்சு திணறியபோது, அவன் செய்ய நினைப்பது தவறு என்றும், தனது கற்பை இழப்பதற்குப் பதிலாக அவள் தனது உயிரை இழக்கத் தயாராக இருப்பதாகவும் மரியா அவனிடம் கூறினார். வெறிகொண்டு, அலெக்ஸாண்டர் மரியாவை பலமுறை கத்தியால் குத்தினார். சாவின் விளிம்பில் அவளைத் தரையில் தள்ளிவிட்டு ஓடிவிட்டார். மரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மரியா தன்னைத் தாக்கியவரை மன்னித்து விட்டதாகக் கூறி கடைசியாக நற்கருணை வாங்கினார். அவரது தாயார் உடனிருக்க மரியா அமைதியாக மரித்தார்.
மன்னிப்பின் வல்லமை :
அலெக்ஸாண்டர் சிறையில் அடைக்கப்பட்டாலும், மனம் வருந்த மறுத்தார். பெண் ஒருவர் அவருக்கு காட்சி ஒன்றில் தோன்றி லீலி மலர்களை அவருக்கு வழங்கினார். ஒவ்வொரு லீலி மலரையும் அவர் வாங்கியவுடன், அது ஒரு ஒளிச்சுடராக மாறியது.
மரியா தன்னை மன்னித்து விட்டதாக இந்தக் காட்சி மூலம் தெரிவிக்கிறார் என்பதாகக் கருதி, அலெக்ஸாண்டர் ஒரு திருந்திய கைதியாக மாறினார். தனது தண்டனைக் காலமான 30 ஆண்டு சிறைக்காவல் 27 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு விடுதலையானார். விடுதலையான பின்னர் மரியாவின் தாயாரிடம் மன்னிப்பு கோரினார். 1950 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பயஸ் மரியாவை புனிதராக திருநிலைப்படுத்தியபோது அவர் உரோமையில் இருந்தார்.
செபம் :
தூய மரிய கொரெட்டி, பதினோராம் வயதிலேயே, தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய உயிரையே இழக்கத் துணிந்தார். முடிவில்லா நிலைவாழ்வைத் தரும் பாதையை விட்டு விலகி பயணிக்கும் மகிழ்வில்லா மனித குலம் மீது இரக்கத்தோடு கண்ணோக்கும். இயேசுவைப் புண்படுத்தும் எதையும் செய்யாமலிருக்க எங்கள் எல்லோருக்கும் குறிப்பாக இளையோருக்கும் மனத்திடனையும் ஒழுக்கத்தையும் கற்பித்தருளும். பாவத்தின் கனாகனம் புரிந்து கொள்ளவும், அதனால் இவ்வுலகில் ஒரு தூய வாழ்வு வாழவும், விண்ணுலகில் நிலையான மகிழ்ச்சி பெறவும் செய்தருளும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மரிய கொரெட்டி தனது கற்பைக் காப்பாற்றிக்கொள்ள போராடியதும், தன்னைத் தாக்கியவனை மன்னித்ததும், தனது புது நன்மைக்காக தயாரிக்கும்போது கற்றுக்கொண்ட ஞான ஒழுக்கம் பற்றிய அவரது புரிதலைத் தெளிவாக்குகிறது. தன்னைத் தாக்கியவரை மன்னித்ததால், அவர் அமைதியாக இறக்க முடிந்தது. அவளது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால், அவளது எதிரி தனது வாழ்வை திருத்திக் கொள்ள முடிந்தது.
1981 ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், தன்னை துப்பாக்கியால் சுட்ட இளைஞனை சிறைச்சாலையில் சென்று சந்தித்தது, இன்றைய சூழலில் இயேசு போதித்த மன்னிப்புக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நம்முடைய உறவினர், நண்பர்கள், உடன் உழைப்பாளர் இவர்களிடையே நாம் இத்தகைய மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோமாக. இந்த அறிவுரைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்வோம்.
யாரையாவது நீங்கள் புண்படுத்தியதாக உணர்ந்தால் உடனே அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். கடவுளுடைய உதவியால் நீங்கள் ஒரு வருந்தும் சூழலை குணமளிக்கும் சூழலாக மாற்ற முடியும்.
குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஒருவரைத் தீர்ப்பிடாமல், அவரது நற்குணங்களை காண முயற்சிக்க வேண்டும்.
உண்மையாகவும், தாராளமாகவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 6
தூய பல்லாதியஸ்
தூய பல்லாதியஸ்
நினைவு நாள் : ஜூலை 6 தடைகளைத் தகர்த்தவர்,
அயர்லாந்தின் முதல் ஆயர்
பல்லாதியஸின் இளமைக்கால வாழ்க்கை, தெரியாத ஒரு புதிராக இருக்கிறது. இங்கிலாந்து பாரம்பரியம், அவர் பிரிட்டனில் பிறந்தார் என்று கூறுகிறது. ஆனால் அவர் காவுலில் ஒரு கண்ணியமான குடும்பத்தில் தோன்றினார் என்று மற்ற ஆதாரங்கள் எடுத்துரைக்கின்றன. நான்காம் நூற்றாண்டு காலத்தில், கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டிருந்ததால், அவரது முன்னோர்கள் காவுலிலிருந்து விரட்டப்பட்டு, பிரிட்டனில் குடியேறியிருக்கலாம் என்பதும் சாத்தியமானதாகத் தெரிகிறது. அவரது பாரம்பரியம் எப்படியிருந்தாலும், ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்லாதியஸ் உரோமையில் ஒரு குருவானவராக இருந்திருக்கலாம். பிறப்பு வழி பாவம் (ஜென்மப்பாவம்) என்ற கொள்கையை மறுதலித்த பெலிஜியனிஸம் என்ற தப்பறைக் கொள்கையை எதிர்த்து திருச்சபை போராடியபோது, பல்லாதியஸ் பிரிட்டனில் கிறிஸ்துவம் பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார். பிரிட்டனின் தலத்திருச்சபையில் இந்த ஆபத்தான அச்சுறுத்தலைச் சமாளிக்க, ஆக்ஸேரின் ஆயரை அங்கு அனுப்ப, பல்லாதியஸ், செலஸ்டைன் திருத்தந்தையின் அனுமதி பெற்றார்.
அயர்லாந்தின் முதல் ஆயர் :
இரண்டாண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை செலஸ்டின் அவர்களால் அயர்லாந்தின் முதல் ஆயராக திருப்பொழிவு பெற்று, இறைவார்த்தையை போதிக்க அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அயர்லாந்தின் கடற்கரை ஊர்களில் கிறிஸ்துவம் பரவியிருந்தாலும், அது அங்கு வேரூன்ற, இப்போது ஒரு அழுத்தமான தலைவர் தேவைப்பட்டது. ஆர்க்லோவ் நகரில் பல்லோடியஸ் வந்திறங்கியபோது, அந்த மாவட்ட தலைமை அதிகாரியிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தார். நல்ல வேளையாக மற்றவர்கள் அதிக வரவேற்பளித்ததால், பலர் மனம் திரும்பி கிறிஸ்துவ பறையைப் பின்பற்ற காரணமாயிருந்தார். மூன்று தேவலாயங்களையும் கட்டினார்.
அவரது பின்வருவோர் :
பல்லாதியஸ், அயர்லாந்தில் பலகாலம் தங்கவில்லை. சில தகவலின்படி ஒருவேளை உரோமைக்குச் செல்லாம் என்ற எண்ணத்தில் அவர் ஸ்காட்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். 432 ஆம் ஆண்டு அவர் இறைவனடி சேர்ந்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், பல்லாதியஸின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பாத்ரிக் என்பவர் வந்து சேர்ந்து அயர்லாந்து நாட்டு மக்களுக்கு இறைவார்த்தைகளை தொடர்ந்து வழங்கி வந்தார்.
செபம் :
தந்தையே, உம்முடைய வார்த்தைகளை அறிவிக்க, நீர் பல்லாதியஸை அனுப்பினீர். ஆனால், முதலில் அயர்லாந்து மக்கள் அவருக்கு செவிசாய்க்க மனமில்லாமல் இருந்தனர். உம்முடைய தூய ஆவியின் குணமளிக்கும் வல்லமையை நம்ப மறுக்கும் என்னைச் சுற்றியுள்ள மக்கள் மீதும் அதே மறுப்பை உணர்கிறேன். அவர்கள் மீது பொறுமை கொண்டு, எந்தவித நிபந்தனையுமின்றி அவர்களை நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும். எனக்குத் தரப்பட்டதையும், கட்டாயமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதையும் வேறுபடுத்தி புரிந்து கொள்ளச் செய்யும். மக்கள் உம்மை தங்களது இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வரைக்கும், நான் அன்புடனும், பொறுமையுடனும் காத்திருக்க அருள் புரியும். ஆமென்.
அவர்களது அடிச்சுவட்டில் :
ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளாத ஐரிஷ் மக்களிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தார். இந்த நவநாகரீக உலகில், தங்களுக்கு எதிர்ப்பு இருந்தபோதும் தற்காலிக மறைபரப்பாளர்கள் தொடர்ந்து அருமையான மறைப்பணி மேற்கொள்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் குறைவாகவே வாழும் மொசாம்பிக் மாநிலத்தில் பெம்பா நகரில் மொசெட்டா புக்கர் ப்ரெளன் என்பவர் உடல்நல மருத்துவராகவும், மறைப்பணி ஆற்றுபவராகவும் வாழ்ந்து வந்தார். சில மெத்தாடிஸ்ட் சபையினர் உதவியுடன் இவர் 2000 ஆவது ஆண்டின் இளவேனிற் காலத்தில் கீழ்க்கண்ட திட்டப்பணிகளில் ஈடுபட்டார்.
மக்கள் நல மருத்தவப் பணி தொடங்குதல்.
புதை குண்டுகளை அகற்றுதல்.
மருத்துவமனைகளைத் திருத்தி அமைத்தல்.
இழந்த கை, கால் உறுப்புகளை பொருத்தும் உறுப்பு மருத்துவம் ரொசெட்டா போன்று ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவை மறைபரப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆப்பிரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் இந்த மக்களின் வாழ்வையும், உடல் நலத்தையும் மேட்படுத்த உதவுகின்றனர். உங்களது தல திருச்சபையில் இந்த மறைபரப்பாளர்களுக்கு உதவிட முன்வந்து உலகில் நம்பிக்கை வளரச் செய்வீர்களாக.