பிறப்பிடம் : நர்சியா, இத்தாலி
நினைவு நாள் : ஜூலை 11
ஆறுதல் தேடி
மேற்கத்திய குருமட வாழ்வியல் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாவலர்
480 ஆண்டளவில் பெனதிக்த் பிறந்தபோது, உரோமைப் பேரரசு பிளவுபட்டுக் கிடந்தது. சிறுவனாயிருந்தபோது, போரின் தாக்கம் தெரிந்திராத உரோம் நகரில் அவர் படித்து வந்தார். உடன் பயின்ற மாணவர்கள், படிப்பை விட, குடி, கேளிக்கையாட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது வாழ்க்கைக்கு மிகுந்த பொருள் உண்டு என்று நம்பினார்.
அவர் குடும்பத்தைத் துறந்து, பள்ளியை விட்டு, துறவு வாழ்க்கை மேற்கொள்வதற்காக பியாகோ என்ற ஊரில் ஒரு குகையில் துறவியாக வாழச் சென்றார். மிருகங்களின் தோலையே ஆடையாக அணிந்து கொண்டு, வெறுமையான மலைநாடுகளில், மூன்று ஆண்டுகள் ஜெபத்திலும், திருநூல்களைக் கற்பதிலும் செலவிட்டார். அங்கு ஒவ்வொரு நாளும், நண்பரான ஒரு துறவி அவருக்கு ஒரு கயிற்றின் வழியாக இறக்கி ரொட்டியுணவு வழங்கி வந்தார். பெனதிக்தின் மீது மதிப்பு மரியாதை அதிகமாகி, ஒருநாள் அங்குள்ள துறவிகள் தங்களின் துறவு மடத்திற்கு அதிபராக இருக்குமாறு வேண்டினர். அவரது கடுமையான ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க முடியாமல் அவர்கள் கிளந்தெழுந்து, அவருக்கு விம் கொடுத்து கொல்ல முயன்றனர். அவர், அந்த விம் கலந்த திராட்சை இரசத்தை ஆசீர்வதித்தபோது, அந்தக் கிண்ணம் உடைந்து சிதறியது. இவரது உயிரும் காப்பாற்றப்பட்டது என்று பாரம்பரியம் கூறுகிறது.
பெனதிக்தைப் பார்த்து, கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, எல்லா நிலைகளிளுமிருந்தும் மக்கள் கூடியபோது, ஒரு பகிரும் சமூகமாக அவர்களை ஒன்றிணைக்க முடிவு செய்தார். விரைவில், பெனதிக்த் 12 குருமடங்களைத் தோற்றுவித்தார். 527 ஆம் ஆண்டு மோந்தி கேசினோ நகருக்குச் சென்று பெனதிக்தன் சபையை நிறுவினார்.
மேற்கத்திய துறவு மடங்களை உருவாக்கியவர் :
ஒரு சராசரியான வாழ்வுக்கு, மக்களுக்கு கல்வியும், வேலையும் அவசியம் என்பதை உணர்ந்தார். புகழ்மிக்க தூய பெனதிக்தின் ஒழுங்கு முறைகள் என்ற நூலை எழுதினார். அதுவே மேற்கத்திற ஐரோப்பாவில் துறவியருக்கு நடைமுறை விதிகளாக விளங்கியது. ஜெபிப்பது, திருமறை நூல்களை விளக்கி விவாதிப்பது, மற்றும் உடல் உழைப்புப் பணிகள் செய்வதில் தினமும் ஈடுபட்டனர். பெனதிக்தின் மகிழ்ச்சி நிறைந்த சகோதரத்துவ துறவு வாழ்வு, குழப்பமான ஐரோப்பாவில், நெறிமுறையான வாழ்வுக்கு வழிகாட்டியது. மேலும் அவரது வாழ்வியல் இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது.
செபம் :
தந்தையே, உம்மைப் புரிந்து கொள்வதிலும், ஆழ்ந்து உய்த்துணர்வதிலும் உம்மைப் புகழ்வதிலும், உமது நன்மைத்தனத்தில் எனக்கு நுண்ணறிவைத் தந்தருளும். உம்மைத் தேடி கண்டுணரவும், உம்மைப் புரிந்து கொள்ளும் ஞானத்தைப் பெறவும், உம்மை உணர்ந்து கொள்ளவும், உமது அன்பினால் ஆற்றல் தந்தருளும். உம்மைப் பற்றியே, சிந்திக்கும் இதயத்தையும், கேட்கும் செவிகளையும் பார்க்கும் விழிகளையும், பேசும் நாவினையும் உமது அருளினால் தந்தருளும். உமக்கு விருப்பமானவற்றையே உரையாடவும், உமக்காகவே காத்திருக்க பொறுமையையும், உம்மைக் கண்டுணர விடா முயற்சியையும் உமது இரக்கத்தினால் என்மீது பொழிந்தருளும். முழுமையான, பக்தியுள்ள உடனிருப்பையும் தந்தருளும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
சுபியாகோவின் மலைஉச்சி குகையில் தனிமை கொடுமையாக இருந்திருக்கும். 14 நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருக்கும்படியான ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு சபையை நிறுவுவதற்கு பெனதிக்தின் நெடுங்காலத் தவமும் ஜெபமும் ஆழ்ந்த ஈடுபாடும் உதவியாயிருந்தன.
இன்றைய உலகில், பணி நிறைவு காலமும் பொறுப்புக்களும் நெருக்கடியான கால அட்டவணையை கொடுத்திருப்பதால், அமைதியாகக் கழிப்பதற்கான நேரங்களையும் நாம் ஒதுக்கீடு செய்ய வேண்டியதாயிருக்கிறது. உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைகளைக் கேட்பதற்கு, மனம் மற்றும் உள்ளம் திறந்த அமைதியான நேரங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. உங்களது ஆன்மாவைப் பிரதிபலித்து புதுப்பிக்கக் கூடிய தியானத்தில் சில நாட்கள் செலவிடுவதைக் கருத்தில் கொள்வோமாக.
திருமண வார்த்தைப்பாடு புதுப்பிக்கப்பட்டு நம்பிக்கைகளைப் பரிமாறிக்கொள்ளும் தம்பதியருக்கு கொடுக்கப்படும் தியானம்.
குழுக்களுக்கு அளிக்கப்படும் தியானம், புதிதாக ஓய்வு பெறும் மக்கள், இளைஞர் நண்பர்கள் குழு, அல்லது இடறுவதற்கு வாய்ப்புள்ள இளம் வயதினர்.
தவக்காலத்தில் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் தியானங்கள்.
உயிருள்ள நீரினால் தூய்மை பெறும் கத்தோலிக்க தியான மையங்கள் போன்ற நிறுவனங்கள் தனியார் தியானங்கள் கொடுக்கின்றன.
லி. ஜெ. ஜோசப்
ஜுலை 11
புனித ஓல்கா
புனித ஓல்கா
திருவிழா : ஜூலை 11
ஒரு தலைவராக இருத்தல்
மனந்திரும்புவோர் மற்றும் கைம்பெண்களின் புனிதை
882 ஆம் ஆண்டு நார்ஸ்மென் இனத்தவர் கீவ் நகரைக் கைப்பற்றியபோது, அங்குள்ள கிறிஸ்துவ சமூகம் அழிக்கப்பட்டது. மேலும் இகோர் இளவரசர், புதிய இரஸிய நாட்டின் ஆட்சியாளர் ஆனார். அவரும் ஹெல்கா என்ற மறுபெயர் கொண்ட அவரது மனைவியான ஓல்காவும் மத நம்பிக்கையற்றவர்களாக இருந்தனர். இதன்பின்னர் 945 ஆம் ஆண்டு இகோர் கொலை செய்யப்பட்டார். ஓல்கா அரசியானார். மனக்கசப்பு நிறைந்த நிலையில் அவரைக் கொலை செய்தவர்களையும், கொலை செய்ய உதவியாயிருந்த அவரது நண்பர்களையும் அரசி கொன்றொழித்தார்.
941 ஆம் ஆண்டு, இகார் அரசர் கான்ஸ்டாண்டி நோபிளைத் தாக்கியபோது, நட்பு முறிவுற்று பிரிந்து சென்று பைசான்டைன் என்ற குழுவினருடன் தற்போது நட்பு பாராட்ட வேண்டியது நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் என்பதை இளவரசி ஓல்கா உணர்ந்திருந்தார். 954 ஆம் ஆண்டு, இளவரசி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், காண்ஸ்டான்டிநோபிள் நகரில் பைசான்டைன் பேரரசர் ஓல்கா இளவரசியை வரவேற்றார். மேலும் திருமுழுக்குப் பெற்று, ஹெலினா என்ற பெயருடன் கிறிஸ்தவராக மாறினார்.
அவளது நம்பிக்கையை அறிவித்தல் :
ஓல்கா தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியபின், கிறிஸ்துவ மதத்தை மக்களுக்குப் போதிக்க முயற்சி செய்தார். தம்முடைய மக்களை கிறிஸ்துவ மதத்தில் பயிற்சி தந்து கற்றுக்கொள்ள, 959 ஆம் ஆண்டு ஓட்டோ பேரரசரிடம், மறைபரப்பு பணியாளர்களை அனுப்புமாறு வேண்டினார். ஆனால் 961 ஆம் ஆண்டு, மாக்டிபர்க்கின் அடால்பெர்ட் தலைமையில் மறைபணியாளர்கள் வந்து சேர்ந்தபோது, மதத்தை ஏற்றுக்காள்ளாத ஓல்காவின் மகன் சுவயடோஸ்லாவ் அந்த அரசாட்சியில் அமர்ந்ததால், அதிகமான மறைரப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
ஓல்கா ஓய்வு பெற்ற பின்னரும், தமது மறைபரப்புப் பணியைத் தொடர்ந்தார். கேவ் நகர் உட்பட பல நகரங்களில் ஆலயங்கள் கட்டி எழுப்பினார். 969 ஆம் ஆண்டு அவர் இறந்தபோது, தனது தாயாரின் மத நம்பிக்கையை மதித்து, சுவயாட்சுலாவ், அவருக்கு கிறிஸ்துவ அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தார்.
தனது நாட்டை கிறிஸ்துவ மயமாக்க முடியவில்லையயன்றாலும் ஓல்கா விதையை விதைத்துச் சென்றார். அவரது பேரன் விளாதிமிர், ஒருநாள் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார்.
செபம் :
கடவுளே, உமது ஊழியர்களாகிய ஓல்கா மற்றும் அவரது பேரன் விளாடிமிரை அழைத்து, பூவுலகில் முடிசூடி, அவர்களை உமது விண்ணக அரசிற்கு உரிமையாக்க, உமது திருச்சபையை உயர்த்தவும், உமது மக்களை நேசிக்கவும் செய்தீரே, அவர்களை நினைவு கூறும் நாங்கள் இந்த நாளில், நல்ல பணிகளில், பயன்தர உழைக்குமாறும் மகிமை நிறைந்த அந்த புனிதர்களின் மணிமுடியை கண்டு உயரவும் அருள்தாரும். என்றென்றும் உம்மோடு ஒன்றித்து வாழும் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவோடும், தூய ஆவியாரோடும் எங்களுக்கு இரக்கம் காட்டும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
கடவுளுடைய வார்த்தை மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று ஓல்கா முயற்சி செய்தார். உலகளாவிய திறந்த கதவுகள் என்ற நிறுவனம் இவரது பணிகளை ரஷ்யாவிலும் மற்ற நாடுகளிலும் தொடர்ந்து செய்து வந்தது. 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, திறந்த கதவுகள் நிறுவனம், கடவுள் தனது உடலுடன் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்க, கதவுகள் திறந்திருக்கின்றன என்று நம்பி தன்னார்வ உழைப்பாளர்களை சச்சரவுகள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், சீனா மற்றும் கொலம்பியா நாடுகளுக்கு அனுப்பி வைத்தன. இந்த நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தது.
வெளிப்படையாக கிறிஸ்துவைப் பின்பற்ற அனுமதிக்கப்படாதவர்களுக்கு, விவிலியம் மற்றும் கிறிஸ்தவ புத்தகங்களை விநியோகித்தல்.
கிறிஸ்துவைத் தழுவ நினைத்து தண்டனைக்கு உட்பட்ட மக்களுக்கு, பயிற்சிகள், உதவிகள், செய்து பக்கபலமாய் இருத்தல்.
எங்கெல்லாம் கிறிஸ்துவுக்காக வேதனை அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கு உதவ, விடுதலை பெற்ற நாடுகளில் உள்ளவர்கள் உதவ கோருவது.
இந்த நிறுவனம் தொடங்கிய நாள் முதல் திறந்த கதவுகள் நிறுவன தூதர்களும், கல்வியாளர்களும், அடுத்தவருக்கு உதவ, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது முன்வந்தனர். அவர்களது முயற்சியினால், இந்த நிறுவனம் தற்போது 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவையாற்றி வருகின்றன.
தங்களது தளரா நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படுவோரின் பாதுகாப்புக்காக மன்றாடுவோமாக.
லி. ஜெ. ஜோசப்
ஜுலை 11
தூய பிளேசிதஸ்
தூய பிளேசிதஸ்
திருவிழா : ஜூலை 11
கற்பித்தல் மற்றும் பகிர்தல்
மறைசாட்சி
எட்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில், பிளேசிதஸ் ஒரு செல்வந்தரான வழக்கறிஞர். அவருக்கு நிறைய நிலங்கள் இருந்தன. பிரான்ஸ் நாட்டில் லக்சுயில் குருமடத்தில், சிகிஸ்பெர்த் என்ற பிரெஞ்சு குரு இவருக்கு நண்பராகவும், உதவுபவராகவும் இருந்தார். சுவிட்சர்லாந்திலுள்ள திசெந்திஸ் நகரில் ஒரு குருமடம் நிறுவ, சிகிஸ்பெர்த் நினைத்தபோது பிளேசிதஸ் அதற்கு வேண்டிய நிலத்தை இனாமாக வழங்கினார். சிகிஸ்பெர்த்தின் சீடர்களுக்கு, இந்தக் குருமடம் ஒரு கூடுமிடமாக அமைந்தது. இந்த சிறு குருமடம் ஒரு பெரிய குருமடமாக வளர்ச்சி பெரும் நிலையில், தனது ஆட்சி பீடத்தில் பிரான்சிஷ் ஆதிக்கம் இருத்தலாகாது என்று அந்த நாட்டு அரசன் அனுமதி மறுத்தான். சுமார் 720 ஆம் ஆண்டு குருமடம் அமைய வேண்டிய அவசியத்தை பிளேசிதஸ் எடுத்துரைத்தபோது, அவரைக் கொலை செய்து அந்த எதிர்ப்பை அடக்கினான். சிகிஸ்பெர்த்தும் சிறிது காலத்தில் இறந்தார். 750 ஆம் ஆண்டளவில், பிளேசிதஸ் கொலையுண்ட இடத்தில் ஒரு பெரிய குருமடம் அமைக்கப்பட்டது.
ஒரு நிலைத்து நிற்கும் சமூகம் :
இவர்களின் மறைவுக்குப் பின்னர், பிளேசித‘ம், சிகிஸ்பெர்த்தும் மக்கள் ஆதரிக்கும் ஓர் இயக்கத்தின் தலைவர்களானார்கள். அவர்களது எஞ்சியிருந்த உடல் தூய மார்ட்டின் ஆலயத்தில் ஒரு புதிய கல்லறையில் வைப்பதற்காக வழங்கப்பட்டது. கல்லறையைச் சுற்றி, கம்பிகிலாள வேலி, மக்கள் எளிதாக வந்து வணங்கிச் செல்லவும், அர்ச்சிப்பு பொருட்களை வைத்து எடுத்துச் செல்லவும் வசதியாக அமைக்கப்பட்டிருந்தது.
940 ஆம் ஆண்டு, சராசென் தீவிரவாதிகளிடமிருந்து, இந்தத் திருவுடல்களைப் பாதுகாக்க, அந்த குருக்கள் அந்த உடல்களை சூரிச்சுக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் இவர்களின் நம்பிக்கையாளர்கள் மேலும் பரவலாயினர். இந்தத் திருப்பண்டங்கள் 1498 ஆம் ஆண்டு திரும்பக் கண்டெடுக்கப்பட்டன. ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரெஞ்சு நாட்டினர் படையயடுப்பின்போது இவை முற்றிலும் அழிந்து போயின. பிளேசிதஸ் கொலையுண்ட இடத்தில் கட்டப்பட்ட பொதிக்தைன் குருமடம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
செபம் :
கிறிஸ்துவில் எனக்கு ஊக்கம் கிடைத்ததால், அன்பின் அமைதி கிடைத்தால் ஆவியின் உடனிருப்பு கிடைத்தால், பரிவும் இரக்கமும் கிடைத்தால் ஒரே மனதோடு, ஒரே அன்போடு உள்ளத்தில் இணைந்து ஒன்றையே எண்ணும் எண்ணத்தோடு எனது மகிழ்ச்சி நிறைவுறுவதாக அதே எண்ணத்தோடு, அதே அன்போடு ஒன்றையே சிந்தித்து இதயத்தில் இணைவோமாக. வீண் புகழ்ச்சிக்காகவோ, தன்னலத்திற்காகவோ எதையும் செய்யாமல், மாறாக உன்னைவிட மற்றவர்களை அதிக முக்கியமானவர்களாகக் கருதி, ஒவ்வொருவரும் தனது நலனை கருத்தில் கொள்ளாமல், ஆனால் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக என்று நினைப்போமாக.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் (பிலி 2 : 1 4).
இவர்களது அடிச்சுவட்டில் :
குருமடம் கட்டுவதற்காக, தனக்குச் சொந்தமான நிலத்தை, பிளேசிதஸ் விட்டுக்கொடுத்தார். பென்ஹேம் கார்டன் கிளப் உறுப்பினர்கள் தங்களது பொதுப்பணி இல்லத்தை அதிகமாகக் கண்காணித்து, அவர்கள் ஒவ்வொரு முறையும் அதனை ஒருபடி முன்னேற்ற உறுதிபூண்டுள்ளார்கள்.
வீட்டு வேலை செய்பவர்கள், ஓய்வு பெற்ற பெண் உறுப்பினர்கள், கடன் உள்ள தங்களது நகரை மீட்பதற்கு பேக்கரி பண்டங்கள் விற்பதிலும், பிங்கோ விளையாட்டுக்கள் நடத்துவதிலும், பீன் இரவுணவு வழங்குவதின் மூலமாகவும் பணம் திரட்டுகிறார்கள். அவர்கள் ஆதாய ஆக்கத் தொழில் செய்வதிலும், சுற்றுலா மகிழ்விருந்து ஏற்பாடு செய்வதிலும் பணம் சேர்க்கிறார்கள். அவர்களில் சிலர் மாநகராட்சி உறுப்பினர்களாகவும், ஒருவர் மேயராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
1991 இல் தொடங்கிய, 25 உறுப்பினர்களைக் கொண்ட பென்கேம் கார்டன் கிளப் செயல்பாடுகள் ஆவண :
நகருக்காக, ஒரு தீயணைப்பு ஊர்தியும், இரண்டு காவல் பணி கார்களும் வாங்க உதவியிருக்கின்றனர்.
ஒரு புதிய பூங்கா அமைப்பதற்கும், இன்னுமொரு பூங்காவை சீரமைப்பதற்கும் நிதி திரட்டி அளித்துள்ளனர்.
30,000 டாலர் மதிப்புள்ள கென்டுகி சுரங்க அருங்காட்சியகம் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.
தங்களது திறமைகளைப் பகிர்ந்து கொள்வதிலும், தங்களது நேரத்தை மற்றவர்களுக்காக செலவிடுவதும் தங்களுடைய சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பெண்கள் முன்னுதாரணமாயிருக்கிறார்கள்.
லி. ஜெ. ஜோசப்
ஜுலை 11
புனித சிகிஸ்பெர்த்
புனித சிகிஸ்பெர்த்
நினைவு நாள் : ஜூலை 11
ஆறுதல் தேடி
குருமடத் தலைவர்
அநேகமாக, ஃபிரான்ங்க் மரபு வழி எனக் கருதப்படும் சிகிஸ்பெர்த், இன்றைய நாளின் கிழக்கு பிரான்ஸில் உள்ள லக்சுயில் என்னும் நவீன குருமடத்தில் துறவியாக தனது இறைப்பணி வாழ்வைத் தொடங்கினார். ரெய்ன் பள்ளத்தாக்கில் மறைப்பணியாற்ற நினைத்து மேற்கண்ட குருமடத்தை விட்டுச் சென்று சுவிட்சர்லாந்துக்குப் பயணம் சென்றார். அங்கு டிஸ்யஸன்திஸ் என்னும் இடத்தில் ஒரு சிறிய துறவி மடம் நிறுவினார். தனது நாட்டு எல்லைக்குள் ஃபிரான்ங் இன ஆதிக்கம் இருக்கவே கூடாது என்று கருதிய அந்த நாட்டு இளவரசன் அந்த துறவி மடம் அமைந்ததை எதிர்த்தார். என்றாலும், சிகிஸ்பெர்த் தனது சிறு அமைப்பை நிறுவுவதைத் தடுக்க, அவர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இளவரசருக்கு மிகவும் நெருக்கமானவரும், அரசரின் நன்மதிப்பைப் பெற்றவருமான பிளேசிதஸ் என்பவர் சிகிஸ்பெர்த்துடன் இணைந்து அவருக்கு உதவலானார். சிகிஸ்பெர்த்தின் தனிப்பட்ட இந்தக் கூட்டம் பரவியபோது, துறவி மடத்தின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
நிலைத்திருக்கும் துறவுக் கூட்டம் :
இந்த துறவு மடத்தின் வளர்ச்சி, இளவரசரின் பயத்தை அதிகரிச்கச் செய்தது. இந்தத் திருக்கூட்டத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அவர் பிளேசிதஸைக் கொன்றார். சிறிது காலத்தில், இரகசிய சூழல்களில் சிகிஸ்பெர்த்தும் இறந்தார். நம்பிக்கையில் வேரூன்றி இருந்த இரு சகோதரர்களின் மறைவு, இளவரசர் எதிர்பார்த்த விளைவுக்கு எதிர்மறையாக அமைந்தது.
துறவியைப் பின்பற்றும் சீடர்கள் எண்ணிக்கையில் பெருகி, 750 ஆம் ஆண்டு, பிளேசிதஸ் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு துறவு மடம் நிறுவப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் அது பெனதிக்தின் குருமடமாகி இன்றளவும் நிலைத்திருக்கிறது.
சிகிஸ்பெர்த் மற்றும் பிளேசிதஸின் உடல்கள் புனித மார்டின் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டன. ஆனால், எதிரிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க 940 ஆம் ஆண்டு சூரிச் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டன. 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பெரும் பகுதியானவை அழிக்கப்பட்டன.
செபம் :
எங்களது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக, உழைத்து உயிர்த்தியாகம் செய்த ஆண்கள் பெண்கள் அனைவருக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம். இதைப்போலவே இந்தக் குழந்தைகள் பெரியவர்களாகும்போது தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பணிகளில் உணர்வூட்டி உறுதியளித்து வளரச் செய்த உதவியருளும். தங்களின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு தேவையான அறிவையும், ஞானத்தையும், பொறுமையையும் தந்தருளும். மேலும் உமது அருளின் உதவியினால் ஒவ்வொரு குழந்தையும் பெற்ற ஆற்றலை வெளிக்கொண்டு வரச்செய்தருளும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
ஒரு சிறிய தனிமையான குருமடத்தை திசெந்திஸ் நகரில் நிறுவ நினைத்த சிகிஸ்பெர்த்துக்கு, திசெந்திஸ் குருமடத்தில் படிப்பதற்காக பயணம் மேற்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வியப்பைத் தந்தது. தனது மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்க்க அவர் நடவடிக்கை எடுத்தார். உலகளவில் நூற்றுக்கணக்கான தேவாலயம் சார்ந்த பள்ளிகளில் இதே ஈடுபாட்டோடு இயங்கி வருகின்றன. குழந்தைகளின் உள்ளங்களில் ஆன்மீக அடிப்படையை வளர்க்கும், ஒரு பங்கில் இயங்கி வரும், மெடிசன் நகர் புனித வின்சென்ட் மறைசாட்சியின் பள்ளி அவற்றில் ஒன்றாகும். கத்தோலிக்கப் பள்ளிகள் கத்தோலிக்க ஆலயங்கள் போன்று இன்றியமையாதது என்று கருதிய தந்தை மேக்குவைத் 1848 ஆம் ஆண்டு இந்தப் பள்ளியைத் தொடங்கினார். இந்தப் பள்ளியின் குறிக்கோள்கள் ஆவண :
கடவுளோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த குழந்தைகளுக்கு உதவுதல்.
பொதுவாழ்வு மற்றும் ஆலயப் பணி வாழ்வில் வளர்ச்சி பெற உதவும் ஒரு சமூகத்தை உருவாக்குவது.
எல்லா திறமைகளும் கடவுளிடமிருந்தே வருகின்றன என்றும் கடவுளின் உடனிறுப்பு படிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் உணர்ந்து கொள்வது, கத்தோலிக்கப் பள்ளிகளின் உள்நோக்கமாக இருக்க வேண்டும். கடவுளின் அன்போடு கல்வியில் சாதித்தல் என்பதே அவர்களின் குறிக்கோளாக அமைய வேண்டும்.