St. Clelia Barbieri |
St. Henry II |
St. Silas |
|
|
ஜுலை 13 புனித கிளேலியா பார்பியேரி
புனித கிளேலியா பார்பியேரி
பிறப்பிடம் : புத்ரி டி ஜியோவள்ளி, இத்தாலி
திருவிழா நாள் : ஜூலை 13
தடைகளைத் தாண்டியவர்
துறவி மடம் நிறுவியவர்
இத்தாலிய தீபகற்பத்தின் வட பகுதியில் புத்ரி டி சான் ஜியோவன்னி என்னுமிடத்தில் கிளலியா பார்பேரி 1847 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். அவரது குடும்பத்தின் தாழ்ந்த சமுதாய மற்றும் ஏழ்மை நிலையின் காரணமாக, அவர் கல்வி கற்பிக்கப்படவில்லை. அவரது மதப்பற்றின் பொருட்டும் அதில் ஈடுபாடு காரணமாகவும் அவர் குறிப்பிடப்பட்டு பேசப்பட்டார். மேலும், நற்கருணை மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். எளிய கிராமத்துப் பெண்ணான அவருக்கு, திருச்சபையின் இடையூறுகள் பற்றி ஆழ்ந்த நுண்ணறிவு இருந்தது. உலகில் அவசரத் தேவையிலிருக்கும் மக்களுடன், அன்பின் அடிப்படையில், உயிரோட்டமுள்ள பிணைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். பங்குத்தந்தை கெய்டானோ குடி என்பவரது ஆன்மீக வழிகாட்டுதல், அவருக்கு கிடைத்தது. கடவுளுக்கு தங்களையே அர்ப்பணித்த மக்களையும் அவர்களின் உறவினர்களையும் தொடர்புபடுத்தும் உறவை ஏற்படுத்தவும், அவர் விரும்பினார். இதனால்தான் அவர் கிறிஸ்தவ கோட்பாடுகளைப் பின்பற்றும் தொழிலாளர் இயக்கத்தில் இணைந்தார். என்றாலும், இந்த அவரது திருத்தூதுப்பணி, அவரிடமுள்ள அளவிட முடியாத திருத்தூதுப் பணி ஆவலைத் தீர்த்துவிட முடியவில்லை. சில காலங்களுக்குப் பின், சில நண்பர்களோடு சேர்ந்து அவர், ஒரு பெண் துறவிகள் மடம் நிறுவுவதற்கு முடிவு செய்தார். போதிய கல்வியறிவும், வாழ்க்கை அனுபவமும் இல்லாத 21 வயதே ஆன அவருக்கு இது முடியாத ஒரு பணியாகத் தென்பட்டது.
இருந்த போதிலும், குழந்தைகள், வயோதிகர், நோயுற்றோர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் இவர்கள் மீது கொண்ட மேலான ஈடுபாட்டினாலும், சேவை மனப்பான்மையினாலும் உந்தப்பட்டு, கிளலிலியர் அவரது எதிரப்பாளர்களையும் தாண்டி, பெண் துறவி மடம் நிறுவினார். மிகுந்த ஈடுபாடு கொண்ட சுறுசுறுப்பான இந்த பெண்கள் குழு முழுமையாகப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் 1870 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள், இந்த மடத்தின் ஸ்தாபவர் துறவி எலும்புறுக்கி நோயினால் காலமானார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, போலோனா நகரில் துறருறும் அன்னை சபை கன்னியர் மடம் நிறுவப்பட்டது.
1968 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் கிளேலியா அர்ச்சிக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் புனிதையாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
செபம் :
நற்கருணையில் உம்மை உட்கொண்டு, தங்கள் உள்ளங்களில் பலம் பெறும் ஆன்மாக்களுக்கு புனித கிளேலியா பார்பேரி தனது குறைந்த வாழ்நாட்களில், உமக்கு பல சான்றுகளாகத் திகழ்ந்தார். உமக்காக உயிர்த்தியாகம் செய்த புனிதர்களின் பலனைப் பெற்று, அவர்களைப் பின்பற்றி உமது திருவுணவுப் பந்தியில் நெருக்கமாகப் பங்குபெற அருள்தாரும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
1989 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் பவுல் கூறியது, புனிதைப் பட்டம் வழங்கும் இந்த புனிதமான விழாவில், ஒரு எளிமையான, பாதிப்படையக்கூடிய ஒரு படைப்பு. உலகு சார்ந்த பொருள் மற்றும் சமூக ஆடம்பரம் இல்லாத ஆனால் ஞானத்தில் வலிமை பெற்று, கடவுள் வெளிப்படும் செபத்தில் தன்னையே ஈடுபடுத்திய ஒருவரை கடவுள் அளித்திருக்கிறார். கிளிலியா பார்பேரி, திருச்சபையின் வரலாற்றில், இளம் வயதிலேயே கன்னியர் சபை நிறுவியவராகத் திகழ்கிறார். அவர் இறந்தபோது அவருக்கு 23 வயதே ஆகியிருந்தது. அவர் இந்த பூமியில் சில காலமே வாழ்ந்தார். ஆனால் தனது நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினார். அவரது உடல் நோய் தீவிரமடைந்தபோது, அவர் சோர்வடையவோ, விரக்தியடையவோ இல்லை. அவரது இறப்புக்கு முன், தன் உடன் உழைத்த சகோதரிகளுக்கு ஆறுதல் கூறி, அவர்கள் பணியைத் தொடர்வதற்கு உற்சாகமளித்தார்.
துன்புறும் மாதா சபையின் சிறிய சகோதரிகள் சபை தனது சேவையை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகிறது. உறுப்பினர் எண்ணிக்கையும் அவர்களுக்கு உதவுபவர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டின் எல்லா பகுதிகளிலும், இந்தியாவிலும், டான்செனியாவிலும் இந்த சபை செயல்பட்டு வருகிறது. புனித கிளேலியாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, ஏழைகள், நோயுற்றோர், கைவிடப்பட்டோர், வாழ்வில் நம்பிக்கை இழந்தோர் ஆகியோருக்காக இந்த சபையின் சகோதரிகள் தொடர்ந்து பணிவுடன் சேவையாற்றி வருகிறார்கள்.
லி. ஜே. ஜோசப்
|
ஜுலை 13 புனித இரண்டாம் ஹென்றி
புனித இரண்டாம் ஹென்றி
பிறப்பிடம் : அல்பாக், பவாரியா
திருவிழா நாள் : ஜூலை 13
தன்னிகரில்லா தலைவர்
தூயதிரு நேர்ச்சியாளர்களின் பாதுகாவலர், ஊனமுற்ற மக்கள், குழந்தைப்பேறில்லா மக்கள் மற்றும் அரசர்களின் பாதுகாவலர்
கிசேலாவின் பர்கந்தி நகரைச் சேர்ந்த ஹென்றி சிற்றரசன், அங்குள்ள ஹில்தே´ம் என்னும் பேராலயப் பள்ளியில் சேர்க்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் திருச்சபைக்காக உழைக்க, பதிவு செய்யப்பட்டார். 995 ஆம் ஆண்டு அவரது தந்தையைத் தொடர்ந்து, சிற்றரசராக பணியேற்றதினால், அவரது குருத்துவ அருள்பொழிவு தடைப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹென்றியின் சித்தப்பா, மூன்றாம் ஓட்டோ அரசர் காலமானதும், ஹென்றி ஜெர்மனியின் அரசரானார். புனிதமான உரோமை பேரரசு முழுவதும் ஆண்டு வந்த ஹென்றியின் அரசாட்சி, இதற்கு உரிமை கொண்டாடிய சில சிற்றரசர்களால் எதிர்க்கப்பட்டது. மேலும் அவர்கள் ஐரியாவின் அர்டீன் என்பவரை தன்னிச்சையான அரசராக ஏற்றுக்கொண்டார்கள். 1004 ஆம் ஆண்டு, தன்னை எதிர்ப்போரை அடக்குவதற்காக, அவரது படையினருடன் ஹென்றி அரசர் ஆல்ப்ஸ் சிகரத்தைக் கடந்து சென்றனர். மிலான் பேராயர் அவர்களால் இத்தாலியின் அரசராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1014 ஆம் ஆண்டு தன்னை புனிதமான உரோமை அரசராகவும் எட்டாம் பெனதிக்து திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்பட்டார்.
நல்ல அரசர் ஹென்றி :
அவரது சிறுவயது கல்வியினால், ஹென்றி திருச்சபையின் தனித்தன்மையை மதித்தார். பாப்பரசரின் தன்னிகரில்லா மேன்மையையும் அங்கீகரித்தார். இரக்கமும் அறிவுத்திறனும் கொண்ட ஆட்சியாளராகிய இவரும் இவரது மனைவியர் திருமதி குனிகுண்டாவும் கிறிஸ்து அரசர் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டனர். திருச்சபையின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த கொண்டிருந்த ஆவலைப்போன்று தனது அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொள்ள ஹென்றி அதிகம் தூண்டப்பட்டார்.
1021 ஆம் ஆண்டில் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹென்றி, மான்டி கேசினோ என்னுமிடத்தில், பெனதிக்துவிடம் உருக்கமாக வேண்டுதல் செய்தபோது, உடனடியாக தீராத நோயிலிருந்து விடுபட்டார். என்றாலும் கால் ஊனமடைந்தார். பின்னர், தான் ஒரு துறவியாக வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அவரது நற்பணிகளைத் தொடர்வதற்கு அரசராக தொடர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டார். குனிகுண்டாவை மணந்ததில் அவருக்கு மகப்பேறு கிடைக்கவில்லை. அவரது இறப்புடன் சாக்ஸன் சாம்ராஜ்யம் முடிவுற்றது.
செபம் :
அன்புத்தந்தையே இறைவா, துன்புறுவோருக்காக நாங்கள் உம்மிடம் வருகிறோம். அவர்களது துன்ப துயரங்களைத் தாங்கிக்கொள்ள அவர்களுக்கு திடமளிக்க உம்மை வேண்டுகிறோம். அவர்களை நேசித்து அவர்களைத் தாங்கிக் கொள்ள மனமுள்ள மக்களால் சூழப்பட்டிருக்கச் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக நிறைவேற்றித்தாரும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
துன்பங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் விடுதலைபெற, உடல் ஊனமுற்ற மக்களுக்கு பாதுகாவலரான புனித ஹென்றியிடம் மக்கள் வேண்டுகின்றனர். நம்பிக்கையின் தேர் என்றழைக்கப்படும் இக்காலத்திய ஒரு நிறுவனம் உடல் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்து வருகின்றது.
1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த நிறுவனம் உடல் ஊனமுற்று முடங்கிக் கிடக்கும், நம்பிக்கை தளர்ந்த மக்களுக்கு இந்த நற்செயல் பணிக்கு தங்களையே ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பெரியோராவர்.
இந்த உலகில் 180 இலட்சம் மக்கள் படுத்த படுக்கையாகி இருக்கிறார்கள்.
உலகின் கிழக்குப் பகுதியிலும், முன்னேற்றமில்லாத மூன்றாம்தர நாடுகளிலும் சக்கர நாற்காலி ஒரு விலையுயர்ந்த பொருளாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் நல்வாய்ப்பு அமைப்புகள் விசிறி எறிந்த சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்த்து திரும்பவும் பயன்படுத்தலாம். எங்கே நம்பிக்கை உள்ளதோ அங்கே வெற்றியுள்ளது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு நல்வாய்ப்பு நிறுவனம், வேண்டாமென்று எறியப்பட்ட சக்கர நாற்காலிகளை தென் ஆப்பிரிக்காவில் ஒரு மருத்துவமனையில் படுக்கையை விட்டு இறங்காத ஒரு 9 வயது பெண் குழந்தை முதன் முறையாக ஒரு சக்கர நாற்காலியினை இலவசமாகப் பெற்றது.
நம்பிக்கையின் நாற்காலிகள் இதுபோன்று உதவியவர்களை நினைவில் கொள்கிறது, உலகம் மறந்தாலும் கூட.
லி. ஜே. ஜோசப் |
ஜுலை 13 புனித சீலா
புனித சீலா
திருவிழா நாள் : ஜூலை 13
தடைகளைக் கடந்து
இளமை மறைப்பணியாளர்
திருத்தூதர் பணிகள் நூல் அதிகாரம் 15 ல் முதலில் குறிப்பிட்டதுபோல், மனம் மாறிய கொரிந்து நகர பிற இனத்து கிறிஸ்தவர்களுக்காக அனுக்கப்பட்ட றைத்தூதுவர் சீலா என்பவர். அவரது இளமைப்பருவ வாழ்க்கைக் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் பின்னால் எழுதப்பட்ட குறிப்புகள், சீலா ஒரு உரோமைக் குடீமகன் என்றும் ஒரு இறைவாக்கினர் என்றும் எருசலேம் ஆலயத்தின் ஒரு முன்னோடி என்றும் குறிப்பிடுகின்றன.
சீலா, பவுலின் நண்பராகவும் உடனிருப்பவராகவும் இருந்தார். கடவுளின் வார்த்தையை பரப்புவதில் இந்த இருவரும் ஒரு அலாதியான உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர். உண்மையிலேயே அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து பணியாற்றினர். கிரீஸ் நாடு மற்றும் இன்றைய காலத்தில் துருக்கி என்று அழைக்கப்படும் ஆசியா மைனர் பகுதிக்கு மறைபரப்புப் பணிக்காக தன்னுடன் வருவதற்கு பவுல் சீலாவைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் பிலிப்பு நாட்டில் பவுலுக்கும் சீலாவுக்கும் நட்பில் இடையூறு ஏற்பட்டது. குறிசொல்லும் அடிமைப்பெண் ஒருவரிடமிருந்து தீய ஆவியை விரட்டியதால், அந்த பெண்ணின் உரிமையாளர் இவர்கள் மீதும் இவர்களது அதிசயிக்கத்தக்க வல்லமை மீதும் சந்தேகம் கொண்டு, அந்த நகரிலுள்ள தலைவர்களிடம் இவர்களை ஒப்புவித்தார். சீலாவும் பவுலும் மக்கள் நடுவில் கசையால் அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அவர்களது உள்ளக் கிளர்ச்சி சிதைவுறாமல் இருந்தது.
சிறையில் புகழ்ச்சி :
ஒருநாள் இரவு, சீலாவும் பவுலும் பாடிக்கொண்டும் செபித்துக்கொண்டும் இருந்தபோது ஒரு பூமி அதிர்ச்சி ஏற்பட்டு சிறைச்சாலையை அதிரச்செய்து சிறைக்கதவுகளை திறந்து விட்டது. இவர்களது விலங்குகளையும் உடைத்தெறிந்தது. தன்னுடைய சிறைக்கைதிகள் தப்பியோடி இருப்பர் என்று கருதி, பயந்து, தண்டனையிலிருந்து தப்புவதற்காக, சிறைக்காவலர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் சீலாவும் பவுலும் இன்னும் உள்ளே இருப்பதை அறிந்து, அவர்களது உண்மைத் தன்மையைக் கண்டு அதிசயித்து, அவர்கள் விடுதலை பெற என்ன செய்யவேண்டுமென்று கேட்டார். சீலாவையும் பவுலையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களது காயங்களுக்கு சிகிச்சை அளித்தார். பிறகு, அவர் மனம்மாறி திருமுழுக்குப் பெற்றார். சீலாவும் பவுலும் உரோமைக் குடிமக்கள் என்பதால் மறுநாள் அவர்கள் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர். விரைவில் அந்த இரு மறைப்பணியாளர்களும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பின்னர், சீலா பிரோயாவில் திமொத்திக்கு உதவியாகத் தங்கி இருந்தார்.
சீலா, பவுல் எழுதிய திருமுகங்களில் குறிப்பிடப்படுகிறார். பின்னர் விவிலிய வரலாற்றிலிருந்து மறைந்து விடுகிறார். கொரிந்து நகரின் முதல் ஆயர் சீலா என்றும் மாசிதோனியாவில் இவர் இறந்தார் என்றும் பாரம்பரியம் எடுத்துரைக்கிறது.
செபம் :
வல்லவரும் என்றும் வாழ்பவருமான இறைவா, இறைவார்த்தையை பயமின்றியும் வெளிப்படையாகவும் போதித்த உமது அடியார் சீலாவுக்காக நன்றி கூறுகின்றோம். என்னுடைய வாழ்வின் துன்பங்களை ஏற்றுக்கொள்ள பலம் தாரும். நம்பிக்கையின் வல்லமையையும், உண்மையின் பலத்தையும் உணர்ந்து கொள்ள உதவி செய்யும். உம்முடைய நன்மைத்தனத்திற்கு, குறிப்பாக சோதனை வேளைகளில், நான் உமக்கு சாட்சியாக விளங்கச் செய்தருளும். கடவுளுக்கே நன்றி.
இவர்களது அடிச்சுவட்டில் :
எளிதில் நம்பிக்கையை இழந்து விடுவதற்கு, சிறைச்சாலை ஓர் இடமாக இருந்தாலும், சிலர் நம்பிக்கையோடு வாழ்ந்திருக்கிறார்கள். வேறு சிலர் அந்த நேரத்தில் தங்கள் வாழ்வை திரும்ப ஆய்வு செய்து, இயேசுவை அதன் மூலம் அறிந்து, அவர் மூலம் மன்னிப்பு பெற்று, தங்கள் வாழ்வை திருத்தி அமைத்திருக்கிறார்கள்.
சான்றாக :
1967 இல் ரீபன் கார்டர் என்பவர் கொலைக்குற்றவாளியாகத் தீர்ப்பிடப்பட்டு ஆயுள் காலத்திற்கும் சிறையிலடைக்கப்பட்டார். அவரது குற்றமின்மையை எடுத்துச் சொல்லி ரீபன் தனது சுயசரிதையை சிறையிலிருந்து வெளியிட்டார். 1974 ஆம் ஆண்டு அது வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கைச் சரிதை சமூக ஆர்வர்கள் உண்மைக்கு சான்றுரைப்பவர்கள் கவனத்தை ஈர்த்தது. 1988 ஆம் ஆண்டு அவர் மீதிருந்த குற்றப்பழி நீக்கப்பட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வாட்டர் கேட் ஊழலில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளர் ஏழு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். சிறைச்சாலை நண்பர்கள் மறைப்பணி குழாம் அமைத்து சேவை புரிந்தார். இந்த மத, இன, மொழி சாராத அமைப்பு சிறைக்கைதிகள், குற்றவியல் பலியாட்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் ஆறுதலாக உள்ளனர்.
லி. ஜே. ஜோசப்
|
|