பிறப்பிடம் : பேக்னோரிக்கியோ, இத்தாலி
திருவிழா நாள் : ஜுலை 15
கற்பித்தலும் பகிர்தலும்
ஆயர், கர்தினால் மற்றும் திருச்சபையின் டாக்டர்
1243 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோது, பிறந்தபோது ஜியோவன்னி டிஃபிடான்ஸா என்று அழைக்கப்பெற்றவர் போனவெஞ்சர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் பாரி‘க்குச் சென்று இறையியல் பயின்று பின்னர் ஒரு ஆசிரியர் ஆனார். 1253 ஆம் ஆண்டு போனவெஞ்சர், பாரிசிலுள்ள போனவெஞ்சர் பள்ளியை தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டார். நான்காண்டுகளுக்குப் பின் அவர் அந்த போனவெஞ்சர் துறவற சபைக்குத் தலைவரானார்.
1257 ஆம் ஆண்டு அந்த சபை சகோதனையைச் சந்தித்தது. எவ்வளவு விரைவாக வளர்ந்ததோ அவ்வளவு விரைவாக வீழ்ச்சியுற்றது. அது துறவிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு பிரிவினர் புனித பிரான்ஸ் போன்று எளிமை வாழ்வை குறிக்கோளாக எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் பிரான்ஸிஸ்கன் உறுப்பினர் உலகியல் வாழ்வின் உறுப்பினராகி இருந்த போதிலும் சபையைத் தோற்றுவித்தவரின் கொள்கைகளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கலாம் என்று கருதினர்.
போனவெஞ்சர் இந்த இரண்டு கொள்கைகளுக்கும் நடுவழியை தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு எளிமையான புனிதமான வாழ்வு வாழ்ந்தார். மேலும் அந்த சபையானது, சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்டு அறிவார்ந்த குறிக்கோளுடன் வாழலாம் என்று வாதிட்டார்.
விருப்பு வெறுப்பற்ற மறையியலாளர் :
போனவெஞ்சர் மதிக்கப்பட்ட மறையியலாளராகவும் மறைஞானியாகவும் இருந்தார். கிறிஸ்தவர்கள், தங்களது நேர்மையான நடத்தையினாலும் செபத்தினாலும் தங்களின் ஆன்மாவை தூயதாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்பினார். செபம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஒரு மெய் மறந்த உறவை ஏற்படுத்தும்.
1265 ஆம் ஆண்டு, யார்க் நகரின் பேராயர் பதவியை நிராகரித்தார். எட்டு வருடங்களுக்குப் பின்னர் அல்பேனோவின் ஆயர்- கார்டினல் பதவியை ஏற்றுக்கொண்டார். பத்தாம் கிரெகரி திருத்தந்தையின் தூதுவர்கள் போனவெஞ்சரிடம் அவரின் பணிநியமன ஆணையை எடுத்துவரும்போது, தனது குருமடத்தின் தட்டுகளையயல்லாம் கழுவி முடிக்குமட்டும் அவர் இயல்பாகவே அவர்களைக் காத்திருக்க வைத்தார்.
உரோமன் மற்றும் கிரேக்க திருச்சபைகளை ஒன்றிணைக்க ஏற்படுத்தப்பட்ட லாயன்ஸ் கவுன்சிலில் 1274 ஆம் ஆண்டு பணியாற்றினார். மறுபடியும் மாறுபட்ட கருத்துள்ள மறையியலாளரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, போன்வெஞ்சர் மேலும் பாடுபட்டு ஜூலை 15 ஆம் நாள் லாயன்ஸ் நகரில் உயிர் துறந்தார்.
செபம் :
ஓ, என் இனிய அரசரான இயேசுவே, உமது அன்பரான மகிழ்ச்சியூட்டும் சுகமளிக்கும் காயங்களால் எனது உள்மன ஆன்மா ஏங்குகின்றன. உண்மைçயான, அமைதியான மற்றும் தூய அப்போஸ்தலிக்க நன்மைத்தனம் பெற்றுக்கொள்ளச் செய்தருளும். என் இதயம் மறுபடியும் உமக்காக ஏங்கி உம்மை உணவாகப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும். இத்தகையோரை வானதூதர்கள் சந்திக்க விரும்புவார்கள். எனது உள்மன ஆன்மா உம்முடைய இனிமையான நினைவுகளினால் நிறைந்திருப்பதாக. ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
புனித பிரான்ஸிசுக்கும் அவரது படிப்பினைகளுக்கம் போனவெஞ்சர் தன்னை அர்ப்பணித்திருந்தார். பிரான்ஸிஸ்கன் சபையின் தலைவராக, சபையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளையும், திருச்சபையின் உட்பிளவுகளைச் சரிசெய்யவும் வேண்டிய அரிதான பணிகளை அவர் உணர்ந்திருந்தார்.
ஆன்மீக செயல்பாடுகளில், ஒற்றுமை என்பது அவ்வளவு எளிதல்ல. அரசியல் மற்றும் மறையியல் வேறுபாடுகள் கிறிஸ்தவ சமூகத்தை பலவிதமான பிரிவினை சபைகளாக மாற்றியிருந்தன. ஆனால் தற்போதைய காலங்களில் பல கிறிஸ்தவர்கள் பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் இணைந்திருக்கின்றன. 1950 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ சபைகளிடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க, திருச்சபையின் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. இன்று இந்த திருச்சபையின் தேசிய கூட்டமைப்பிலுள்ள 36 உறுப்பினர் சபைகளின் பணிகள் வருமாறு :
இன வேறுபாடு, வறுமை மற்றும் அநீதியை எதிர்த்துப் பேராடுவது.
கிறிஸ்தவ கல்வியை மேம்படுத்துவது
பொதுவான வாழ்வியல் தத்துவங்களில் வாதிடுவது
கிறிஸ்துவை முன்னடையாளமாகக் கொண்டு வாழ்வதுதான் பொதுவான குறியீடு, அதிமுக்கியமானது என்பதை அந்த கூட்டமைப்பு உணர்ந்துள்ளது.
ஜுலை 15
தூய எடித்
போல்ஸ்வொர்த்தின் தூய எடித்
பிறப்பிடம் : இங்கிலாந்து
நினைவு நாள் : ஜூலை 15
தன்னிகரில்லா தலைவி
910 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்தின் ஆங்கிலோ சாக்ஸன் அரச குடும்பத்தில் எடித் என்பவர் பிறந்தார். ஒரு பாரம்பரியத்தின்படி, அவருக்கு 15 வயது ஆனபோது அவரது சகோதரர் அதெல்ஸ்டன் அரசர், இங்கிலாந்தின் வடபகுதியிலுள்ள நார்தும்பிரியா அரசனுடன் பேசி எடித்துக்கு நார்தும்பிரியா இளவரசர் சிட்ரிக்கை மணமுடிக்க ஏற்பாடு செய்தார்.
சிட்ரிக், வைக்கிங் என்ற புறஇனத்தைச் சார்ந்தவர். ஆனால் எடித் மீது கொண்ட காதலினால் அவர் மதம் மாறினார். என்றாலும் சிட்ரிக் பின்னர் இந்த மதத்தைத் துறந்தார் என்று சிலர் நம்புகின்றனர். எடித்தின் ஆன்மீக ஈடுபாட்டினால், நார்தும்பிரியா முழுவதும் கிறிஸ்துவமதம் பரவ உதவியாயிருந்தது. சிட்ரிக் இறந்துவிட்டபோது போல்ஸ்போர்த்திலுள்ள பெனதிக்தன் பெண்கள் குருமடத்தில் எடித் போய்ச்சேர்ந்தார். நாளடைவில் அவர் அந்த கன்னியர் குருமடத்தின் தலைவியானார். அவர் அங்குள்ள கன்னியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டு அன்பு செய்யப்படலானார். எடித் இறந்தபின்னர் அவரது கல்லறை கிறிஸ்தவர்களுக்கு ஒரு புகழ்வாய்ந்த நினைவிடமாக திகழ்ந்தது. இவரது பரிந்துரையால் அதிகமான புதுமைகள் நிகழ்ந்தன என மக்கள் செய்தி பரப்பினர்.
நிலையான பாதுகாப்பு :
எடித் மறைந்து ஒரு நூற்றாண்டு ஆன பின்னரும், எடித்தின் ஈர்ப்பு மக்களிடையே உணரப்பட்டது. எடித்தின் துறவு மடத்திலிருந்து அவர்களை வெளியேற்ற முயன்றபோது, எடித் அவர்களின் உதவிக்கு வந்து தடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
பாரம்பரியப்படி, வில்லியம் என்னும் வெற்றிவீரர், அந்த கன்னியர் மடத்தைச் சுற்றியுள்ள நிலங்களை ராபர்ட் தே மர்மியான் கொடுத்துவிட்டதாகவும், அவர் அங்கிருந்த கன்னியர்களை அந்த மடத்தை விட்டு வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்குப்பின், ராபர்ட் ஒருநாள் படுக்கையிலிருந்தபோது எடித் அவர்முன் தோன்றி, அந்தக் கன்னியரை போல்ஸ்வொர்த்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இல்லாவிட்டால், ராபர்ட் ஒரு கொடிய சாவை எதிர்கொள்வார் என்று எடித் வாக்குரைத்தார். அடுத்தநாள் ராபர்ட் அந்தக் கன்னியரை திரும்பவும் போல்ஸ்வெர்த்துக்கு அழைத்து வந்தார். எடித்தின் தீர்க்கமான நடவடிக்கைகள் காரணமாக அந்த கன்னியர் மடம் நூற்றாண்டுகள் காலமாக நிலைத்திருந்தது.
செபம் :
இறைவா, எல்லாம் வல்ல தந்தையே, அரசர்க்கெல்லாம் அரசரே, ஆள்வோர்க்கெல்லாம் தலைவரே, எங்களுக்கு முன்னால் தலைவர்களாயிருக்கிற எல்லோருக்கும், நாட்டை ஆள்கின்றவர்கள், நீதியரசர்கள், படித்த அறிஞர்கள், பொருள்வளம் பெற்றோர் எல்லோரையும் சட்டத்தின் வழியில் அன்பினால் நிரப்பியருளும். நேர்மையானதும், உயிர் அளிக்கின்ற மனிதர்களுமாகிய இவர்கள் உலகின் உப்பாக விளங்குவதற்கும் உமது அருமையான நேர்மையான பரிசுகளாக விளங்குவதற்கும் அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டுகிறோம். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
கன்னியர் மடத்தலைவியாகிய எடித்துக்கு தலைவிக்குரிய பண்புகளான அர்ப்பணிப்பு, அறிவுக்கூர்மை, தலைமைத்துவப் பண்புகள் நிறைந்திருந்தன. இந்த பண்புகளைக் கொண்டிருக்கும் தலைவர்கள், அரசியல் என்றாலும் மதச் சபைகளானாலும், சமூகக் குழுக்களானாலும் மரியாதையையும், பற்றுறுதியையும் கொண்டிருப்பர். எடித் அவர்களைப் போன்று அரசியல் மற்றும் ஆன்மீக தலைமைத்துவம் கொண்ட வேறுசில பெண்மணிகளின் பட்டியல் இதோ,
19 ஆம் நூற்றாண்டில் மனநல மருத்துவ மனைகளிலும் சிறைச்சாலைகளிலும் வசதிகள் மேம்பட பாடுபட்ட டோரோதியா திக்ஸ் என்பவர்
செரோக்கி நாட்டின் முதன்மைத் தலைவியாக பணிபுரிந்த முதல் பெண் தலைவி வில்மா மேன்கில்லர்
1991 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசியாவில் மியான்மர் நாட்டுக்கு தனது உறுதியான புத்தமத நம்பிக்கையாளர்களால் குடியாட்சி கொண்டுவந்த நோபல் அமைதிப் பரிசு பெற்ற ஆங் சான் சு கியி.
தலைமைத்துவம் பல வழிகளில் நிரூபிக்கப்படலாம், நீ ஒரு கழக உறுப்பினர், அல்லது ஒரு சமூக கூட்டத்தில் தன்னார்வ உழைப்பாளர் அல்லது தனது நன்னடத்தையால் பிறருக்கு மாதிரியாயிருக்கும் மற்றும் ஒழுங்காக கோவிலுக்குச் செல்லும் ஒரு குடும்பத் தலைவன் / தலைவி, நாம் கிறிஸ்துவ வாழ்வு வாழ சான்றாக விளங்கலாம்.
ஜுலை 15
புனித விளாlட்மிர்
புனித விளாlட்மிர்
பிறப்பிடம் : ரஷ்யா
நினைவு நாள் : ஜூலை 15
திறமையான தலைவர்
ரஷ்யாவின் திருத்தூதர்
பெரிய குறுநில மன்னன் சியாடோஸ்லாவின் தவறான உறவில் உதித்த விளாதிமிர் சுமார் 960 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வோல்கா அரசனின் பேரன், கிறிஸ்துவ மதத்திற்கு மனம்மாற்றம் பெற்றவர், பிற்காலத்தில் புனிதரானவர். சியாடோஸ்லாவ் இறந்த பின்னர், விளாதிமிர் தனது மூத்த சகோதரனிடம் சண்டையிட்டு, ஸ்காண்டிநேவியாவுக்கு ஓடிப்போனார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், கீவ் மற்றும் நவகோராடு நகர்களைக் கைப்பற்ற, ஒரு படையுடன் திரும்பினார். மேலும் ரஷ்யாவின் ஒரே ஆட்சியாளராக ஆனார். விளாதிமிர் ஒரு வீரமான தலைவர், பிற இனத்துக் கடவுள்களை ஆதரித்தவர். கான்ஸ்டான்டிநோபிள் அரசர் இரண்டாம் பேசில் தன்னிடம் போர்ப்படை உதவி கேட்டபோது, இவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர்களிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பாசிலின் சகோதரியை திருமணம் செய்து கொடுக்க விளாமிதிர் வற்புறுத்தினார். அதற்குப் பதிலாக விளாதிமிர் ஒரு கிறிஸ்தவராக மாறவேண்டும் என பேசில் வற்புறுத்தினார். தனது ஐந்து மனைவியரையும் பல வைப்பாட்டியரையும் விட்டுவிட்டு விளாதிமிர் திருமுழுக்குப் பெற்று பின்னர் அனி இளவரசியை மணந்தார்.
ஆர்வமுள்ள மனமாற்றக்காரர் :
விளாதிமிர் தனது புதிய மதத்தை மிகவும் உண்மையானதாக எடுத்துக்கொண்டு, ரஷ்யாவை மனமாற்றம் பெறச்செய்ய தொடங்கினார். ஒரு இராணுவத் தலைவரின் நம்பிக்கையைப் பெற்று, கீவ் மற்றும் நவகோராட் நகர்களின் மக்களை மனம்மாற்றம் செய்ய ஆணையிட்டார். பழைய பொய்த்தெய்வங்களின் சிலைகளை தீக்கிரையாக்கினார். மேலும் புதிய தேவாலயங்களையும் மடங்களையும் கட்டியயழுப்பினார். ஏழைகளுக்கு தாராளமாகக் கொடுத்து உதவினார். தன்னுடைய மக்களுக்கு கல்வி அறிவு புகட்ட வந்த கிரேக்க மற்றும் ஜெர்மானிய குருக்களை வெகுவாக ஆதரித்தார்.
பிந்திய ஆண்டுகளில் விளாதிமிரின் அழிவுக்காலம் தொடங்கியது. அனிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் கிறிஸ்துவ மறைசாட்சிகளாக இறந்தாலும், முந்திய திருமணத்தின் மனைவியருக்குப் பிறந்த இரண்டு மகன்கள் இவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். மூத்த மகனை எதிர்கொள்ள நவகோராட் பயணித்தபோது நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இறக்கும் தருவாயில், அவரது அனைத்து உடைமைகளையும் தனது நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பைசாந்தியன் சபையோடு விளாதிமிருக்கு இருந்த நெருக்கமான உறவினால், ரஷ்யாவில் கிறிஸ்தவம் வளர்ச்சி பெற முக்கிய காரணமாயிருந்தது.
செபம் :
இரக்கத்தின் ஊற்றாகிய தந்தையே, நான் உமது ஒப்பற்ற வல்லமையை ஏற்றுக்கொள்கிறேன். கடந்த காலத்தில் நான் விரயமாக்கிய நாட்களை நினைக்கும்போது, இந்த எனது பேரிழப்பை சரிசெய்து ஒரு நொடியில் அதனை இலாபமாக மாற்றித்தர முடியும், என் ஆண்டவரே நான் நம்புகிறேன். தாழ்நிலையில் இருக்கும் நான், உம்மால் எல்லாம் கூடும் என்று நான் திண்ணமாக நம்புகிறேன். உமது அருளை எமக்களித்து, இப்பொழுதும் எப்பொழுதும் நான் இழந்த நேரத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளச் செய்தருளும். உமது முன்பாக திருமண ஆடையில் மகிழ்வுடன் தோன்றச் செய்தருளும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
விளாதிமிர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியபோது தனது மக்களுக்கு இறைவனுடைய வார்த்தைகளைக் கொண்டு செல்ல முடிவு செய்து தனது காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையை விட்டொழித்தார். 1990 ஆம் ஆண்டு, ஒரு பயணத்தின்போது, வாழ்க்கையில் விரக்தியுற்ற தன்னை ஒரு திறன்வாய்ந்த குணமளிப்பவராக மாற்றியதை திருமதி. நார்மா ஹோட்டலிங் நினைவு கூறுகிறார். பல ஆண்டுகளாக போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி, கலிபோர்னியா சான் பிரான்ஸிஸ்கோவில் வீடில்லாத ஒரு விபச்சாரியாக வாழ்ந்த நார்மா தன்னையே தெருக்களிலிருந்து மீட்டு, அவள் ஒரு டிடாக்ஸ் நிகழ்வு நடத்திக் காட்டினார்.
சான்ஃபிரான்ஸிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உடல்நலப்படிப்பில் ஒரு பட்டம் வாங்கினார். ஆனால் தன்னையே காப்பாற்றிக் கொள்வது மட்டும் போதாது. 1995 ஆம் ஆண்டு அவள் பூமியை சுரண்டுவதை எதிர்த்தல் என்ற ஒரு நிறுவனத்தை (றீபுறூசி) ஏற்படுத்தி விபச்சாரிகளுக்கு மாற்று வழிகாட்டி அவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் சென்றார். றீபுறூசி நிறுவனம் உடல்நலம் பேணுதல், இதயக்கோளாறு மற்றும் மயக்கநிலை தொடர்புடைய நோய்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்குகிறது. இதனுடைய மருத்துவக்குழு இந்தத்துறையில் நன்கு பயிற்சி பெற்றவர்கள், அனுபவம் மிக்கவர்கள். குணம் பெற்ற இவர்கள் இப்போது மற்றவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, நலம் பெற உதவுகிறார்கள்.