பிறப்பிடம் : பார்ஃலேர், பிரான்ஸ்
திருவிழா நாள் : ஜுலை 16
கற்பித்தலும், பகிர்தலும்
கிறிஸ்தவ இரக்கத்தின் பள்ளிகளைத் தோற்றுவித்தவர்
ஜூலி ஃபிரான்காய்ஸ் கேத்தரின் போஸ்டல் என்பவர் வேலாக்னெஸ் என்ற கன்னியர் மடத்தில் கல்வி பயின்று அங்கேயே ஒரு கன்னியாக வாழ வார்த்தைப்பாடு கொடுத்தார். கடவுளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார். தனது 18 ஆவது வயதில், ஒரு பள்ளிக்கூடம் தொடங்குவதற்காக தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஆனால் 1789 ஆம் ஆண்டு, பிரஞ்சு புரட்சி வெடித்தபோது, ஜூலியின் பள்ளி மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது.
இந்த வேளையில், திருச்சபையைக் கண்காணிக்க, சட்டமுறைப்படியாக ஒரு சமயக்குருக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஜுலி அவர்களது அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். மாறாக, மறைந்து பதுங்கியிருந்து, திருச்சபையின் தலைவியாகி, நாடு கடத்தப்பட்ட குருக்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் தந்து தங்க வைத்தார். தனது வீட்டின் படிக்கட்டுகளின் அடியிலுள்ள ஒரு இரகசிய சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி நற்கருணை வழங்க குருக்களுக்கு வசதி செய்து கொடுத்தார். 1801 ஆம் ஆண்டு நெப்போலியன் அரசரோடு திருத்தந்தை செய்துகொண்ட உடன்பாட்டினை அடுத்து ஜூலி திரும்பவும் ஆசிரியை தொழிலுக்குத் திரும்பி வந்து, தனது நகரில் திருச்சபை வேலைகளை தொடர்வதற்கு முடிந்தது.
நிறுவனரும், ஆசிரியையும் :
ஜூலிக்கு 50 வயது ஆனபோது, ஏழைகளுக்கு உதவுவதற்கும், இளையவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் அவர் ஒரு சிறு குழுவை ஏற்படுத்தினார். மேரி மேக்தலின் என்ற பெயரை எடுத்துக்கொண்டு செர்பர்க்கில் அவள் ஒரு தற்காலிகமான பள்ளியை ஆரம்பித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தெருவோரங்களிலிருந்து மீட்கப்பட்ட 200 பெண் குழந்தைகளுக்கு அந்தப் பள்ளியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இது, கன்னியர்களின் இரக்கத்தின் கிறிஸ்துவப் பணி யின் தொடக்கமாகும்.
ஆனால் மேரி-மேக்தலின் மற்றும் அவரோடு பணியாற்றிய சகோதரிகள் வெளியேற்றப்படுவதற்காக கட்டாயப்படுத்தப் பட்டார்கள். மேலும் ஒரு புதிய கன்னியர் மடம் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் வருந்தி உழைத்தார்கள். பாடம் கற்றுக்கொடுக்க போதுமான பணம் சேர்ப்பதற்காக அவர்கள் தையல் கலைஞர்களாகவும், பண்ணைத் தொழிலாளர்களாகவும் பணி செய்தார்கள். ஆனால் அவர்களது நம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றி தந்தது. இறுதியாக அவர்கள் தாமர் வெல்லியில் ஒரு காலியாயிருந்த கன்னியர் மடத்தைக் கண்டுபிடித்து புதுப்பித்து, புதிய புள்ளிகள் திறந்து, 150 கன்னியர்கள் உள்ளடிக்கிய 37 கன்னியர் மடங்களைத் திறந்தனர்.
செபம் :
ஆண்டவரே, போர் மற்றும் வறுமையினால் ஏற்பட்ட தடைகளைக் கடந்து, உமது படிப்பினைகளை, இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்ல மேரி மேக்தலினுக்கு வலிமை தந்தீரே, இன்றைய நமது உலகில், இளம் வயதினருக்கு கற்றுக்கொடுப்பதில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் எழுச்சியூட்டும் உள்ளுணர்வுகளைத் தந்தருளும். வெறுப்பு மனப்பான்மை மற்றும் அக்கறையின்மையினால் அவர்கள் ஊக்கமிழந்து விடாமல், அவர்கள் இதயங்களை கல்வி கற்கும் மகிழ்ச்சிக்கும், உமது ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளும் தன்மைக்கும் திறந்து விடுவார்களாக.
இவர்களது அடிச்சுவட்டில் :
பயன்தரும் பண்பான வாழ்க்கையைப் பெறுவதற்காக, மேரி மேக்தலின் ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டினார். உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த முயற்சியில் பெரும்பாலானோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக, பொலிவியா நாட்டில் கொசாபாம்பாவிலுள்ள குயிசுவா இனம் நான்சி அரிஸ்பி என்பவர், மேரிநால் கன்னியர் சபை அவரது உதவிக்கு வந்தது ஒரு அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. அவர்கள் கோசாபாம்பாவில் வந்து கன்னியர் மடம் நிறுவியபோது,
எளிய கோச்சா இந்தியர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார்.
கைவேலைப்பாட்டுடன் துணிகள் நெய்து விற்பனை செய்ய ஃபோர்ட்ராமா என்ற சமூக அமைப்பை உருவாக்கினார். அந்த நேரத்தில், நான்சியின் குடும்பம் ஒரு பாழடைந்த குடிலில் வசித்து வந்தது. ஆனால் அவரது விதவைத் தாயார் எபிஃபான்யா பின்னலாடை தயார் செய்ய பழகி இருந்ததால், மற்ற இந்தியர்களுக்கு அதனைக் கற்றுக்கொடுக்க, போர்ட்ராமா அவரை அமர்த்திக்கொண்டார். அங்குள்ள கன்னியர் நடத்தும் பள்ளியில் நான்சி கல்வி பயின்றார். மேலும் 1990 ஆம் ஆண்டில், ஒரு குடும்பத்துடன் தங்கியிருந்து ஆங்கிலம் கற்பதற்காக கன்னியர் மடம் ஏற்பாடு செய்தது. ஒரு வருடம் கழித்து நான்சி பொலிவியா திரும்பினார். மேலும் ஃபோர்ராமாவில் தலைவியானார். அந்தப் பணியில் மொழி பெயர்ப்பாளராகவும் உதவினார். நான்சியைப் போன்று எண்ணற்ற இளைஞர்கள் இறைத்தொண்டில் ஈடுபட வரவேண்டுமென்று ஜெபியுங்கள்.
லி. ஜே. ஜோசப்
ஜுலை 16
தூய கார்மேல் அன்னை (ஜூலை 16)
தூய கார்மேல் அன்னை (ஜூலை 16)
நிகழ்வு
பாலஸ்தீன நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மத்தியத் தரைக்கடலுக்கு அருகே உள்ள மலைதான் கார்மேல் மலையாகும்.
ஒருசமயம் இம்மலையில் இறைவாக்கினர் எலியா இஸ்ரேயலை ஆண்ட மன்னர் ஆகாப்பிடம் “உன்னிடம் பாகால் தெய்வத்தின் பொய்வாக்கினர்கள் நானூற்றைம்பது பேர் இருக்கிறார்களே, அவர்கள் எல்லோரையும் வரவழை. பாகாலின் சார்பாக அவர்கள் எல்லோரும் நிற்கட்டும். என் கடவுளின் சார்பாக நான் மட்டும் நிற்கிறேன். ஒரு காளையை வெட்டி பலிபீடத்தில் வைப்போம். ஆனால் நெருப்பு வைக்கக்கூடாது. யாருடைய பலியை வானத்து நெருப்பு இறங்கி வந்து எடுத்துக் கொள்கிறதோ, அது தான் உண்மையான கடவுள் சம்மதமா?” என சவால் விட்டார். அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். உடனே பாகாலின் இறைவாக்கினர்கள் எல்லோரும் அங்கு வந்தார்கள். அவர்கள் அதிகாலையிலேயே ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஒரு காளையை வெட்டி அதன் மீது வைத்துவிட்டு பாகாலை அழைக்க ஆரம்பித்தார்கள். “பாகாலே வாரும், நெருப்பை அனுப்பி பதிலைத் தாரும்” நண்பகல் வரை அழைத்தும் பாகால் ஒரு பதிலும் தரவில்லை. எனவே மக்கள் எல்லோரும் அந்தப் பலிபீடத்தைச் சுற்றி பாட்டுப் பாடி ஆட்டம் போட ஆரம்பித்தார்கள்.
எலியா அவர்களை நோக்கி “இன்னும் கொஞ்சம் சத்தமாய்க் கத்துங்கள். பாவம் பாகால், அவன் உறங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது ஒதுக்குப் புறமாக போயிருக்கலாம், இன்னும் கத்துங்கள்” என்று கிண்டல் செய்தார். அவர்கள் “பாகாலே பதில் தாரும்” என்று தொடர்ந்து கத்தினார்கள். ஆனால் பாகால் பதில் ஏதும் சொல்லவில்லை.
அப்போது எலியா அவர்களை எல்லோரையும் அழைத்தார். “வாருங்கள், பாகாலின் பிரதிநிதிகளே வாருங்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள். பாவம். ஆடிப் பாடி களைத்திருக்கிறீர்கள். இப்போது நான் செய்வதைக் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு எலியா இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிப்பிடும் விதமாக பன்னிரண்டு கற்களைக் கொண்டு ஒரு பலிபீடத்தைக் கட்டினார். அந்த பலிபீடத்தைச் சுற்றிலும் வாய்க்கால் வெட்டினார். பின் பலிபீடத்தின் மீது ஒரு காளையை வெட்டி வைத்தார். காளையின் மீது பன்னிரண்டு குடம் தண்ணீர் ஊற்றினார். பலிக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தபின் அவர் கடவுளை நோக்கி, “கடவுளே!, இதோ உமது பலிப்பொருள். நீரே உண்மையான கடவுள் என்பதை இம் மக்களுக்குக் காட்டும்” என்றார். உடனே வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து எலியாவின் பலிபீடத்தில் விழுந்தது. காளையும், விறகுகளும் கொழுந்து விட்டெரிந்தன. வாய்க்கால் நீர் வற்றிப் போய்விட்டது.
இதைக் கண்ட மக்கள் அனைவரும் “ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்” என்று கத்திக் கொண்டே தரையில் விழுந்து வணங்கினார்கள். பாகாலின் போலி இறைவாக்கினர்கள் பயந்து நடுங்கி ஓடினார்கள். மக்கள் அவர்களைத் துரத்திப் பிடித்து எலியாவிடம் ஒப்படைக்க, எலியா அவர்கள் நானூற்று ஐம்பதுபேரையும் கொன்று ஓடையில் வீசினார். அதன் பின் அவர் மன்னனை அழைத்து, “இப்போதாவது நீ உண்மையான கடவுளை உணர்ந்து கொள், இன்று முதல் நாட்டின் பஞ்சம் விலகும். மழை பெய்யும்” என்றார். மன்னன் அவ்விடம் விட்டு அரண்மனையை அடையும் முன் பெருமழை நாட்டை குளிர்வித்தது (1 அரசர்கள் 18)
எலியா இறைவாக்கினர் போலி இறைவாக்கினர்களை வெற்றிகொண்ட கார்மேல் மலையில், அவருடைய சீடர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களே பின்னாளில் ‘கார்மலைட்ஸ்’ என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் 1245 ஆம் ஆண்டு, அங்கு ஏற்பட்ட முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின் இங்கிலாந்துக்கு மாறிப்போனார்கள்.
வரலாற்றுப் பின்னணி
முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின்னால் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த கார்மேல் சபைத் துறவிகளின் தலைவராகப் பொறுப்பேற்றவர் சைமன் ஸ்டோக் என்பவர். இவர் சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட தருணத்தில் 1251 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள், சைமன் ஸ்டோக் மரியன்னைக்கு முன்பாக வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது மரியன்னை அவருக்குக் காட்சிகொடுத்து, அவரைத் தேற்றினார். அது மட்டுமல்லாமல் கரு நிறத்தில் இருந்த உத்தரிக்கத்தைக் கொடுத்து, “இதை அணிந்துகொள், இதை அணிந்துகொள்வோரை இடர்களிலிருந்தும், நரக தண்டனையிலிருந்தும் காப்பாற்றி அமைதி தருவேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.
அதன்பிறகு சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவி, உத்தரியம் அறிந்துகொள்கிற வழக்கத்தை சபைத் துறவிகளிடத்தில் கொண்டுவந்தார், அது இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து, பொதுமக்களும் அணிந்துகொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
கார்மேல் அன்னை அல்லது உத்தரிக்க அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
அன்னையின் பாதுகாப்பும் அன்னையின் வழி நடப்பதும்
அன்னையானவள் சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவியிடம் காட்சியின்போது சொன்னது, “உத்தரிக்கத்தை யாராரெல்லாம் அணிந்திருக்கிறார்களே, அவர்கள் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றப் படுவார்கள்” என்பதுதான். நாம் உத்தரிக்கத்தை அணியும்போது அன்னையின் பாதுகாவலைப் பெறுகிறோம். அதே நேரத்தில் நாம் அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின் படி வாழ அழைக்கப்டுகின்றோம்.
மரியன்னை கிறிஸ்தவ வாழ்விற்கு முன்மாதிரி. அவள் தாழ்ச்சிக்கு, பிறரன்புக்கு, கீழ்படிதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். ஆகவே, நாம் அன்னையைப் போன்று தாழ்ச்சியில், பிறரன்பில், கீழ்ப்படிதலில் வளரும்போது அன்னையின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம், அதே நேரத்தில் அவளது பாதுகாவளைப் பெறுகின்றவர்கள் ஆகின்றோம்.
எனவே, இந்த நாளில் நாம் அன்னையின் வழி நடக்க முயற்சிப்போம், அன்னையின் பாதுகாப்பையும் அரவணைப்பையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம்.