குணப்படுத்தலும், உதவுதலும்
மிலான் நகரின் கிறிஸ்துவ சமூகத்தினரிடையே மேட்டர்னஸ் என்பவர் மரியாதைக்குரிய ஒரு உறுப்பினராவார். 295 ஆம் ஆண்டு அவர் அந்த நகரின் ஆயர் ஆனார். தியோ கிளேசியன் பேரரசரின் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்தும் இறுதிக் காலக்கட்டத்தில் இவரது கண்காணிப்புப் பணி வந்து சேர்ந்தது.
மிலானை உள்ளடக்கிய மேற்குப் பகுதி பேரரசின்படைத்தலைவராக விளங்கிய தியோகிளேசியன் என்பவரின் நெருங்கிய நண்பராகவும் மேக்ஸிமியான் விளங்கினார். ஒரு பெரும் படைத்தலைவராக விளங்கிய மேக்ஸிமியன், ஒரு சராசரி மனநிலை கொண்ட மனிதராகவும் விளங்கினார். கிறிஸ்துவர்களைத் துன்புறுத்துவதில் அவர் குறிப்பாக வலியத்தாக்கும் குணமுடையவர். ஆயராயிருந்த மேட்டர்னஸ், அடிக்கடி கைது செய்யப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளானார். கிறிஸ்தவர்களின் கலவரத்திற்குப் பயந்தோ மரியாதையினிமித்தமோ ஆயருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு தயங்கினார்.
மேக்ஸிமியன், மேட்டர்னஸ் உயிரை எடுக்கவில்லை என்றாலும், அவர் மற்ற கிறிஸ்தவர்களுக்கு மிகக் கொடூரமானவராக இருந்தார். விக்டர் என்னும் ஒரு இளம்வயது படைவீரர் தனது நம்பிக்கையை மாற்றிக்கொள்ள மறுத்து உரோமைக் கடவுளரை வணங்க மறுத்தபோது, பலநாட்கள் உடல் உபாதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மறுபடியும் மேக்சிமியன் முன் கொண்டு வரப்பட்டு இயேசுவை மறுதலிக்க கட்டளையிட்டார். திரும்பவும் அவர் மறுத்தார். பல நாட்கள் துன்புறுத்தப்பட்டபின் அந்த பேரரசரின் தோட்டத்தில் விக்டரின் தலை துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் விக்டரின் உடலை மீட்டு, ஒரு துணியில் சுற்றி, ஒரு சரியான கல்லறையில் அடக்கம் செய்தார்.
நெருக்கடியான நேரத்தில் ஒரு ஆன்மீக ஆலோசகர் :
மேக்ஸிமியனின் ஆட்சி காலத்தில், மேட்டர்னஸ் சபையினர் அதிகமான இன்னல்களை அனுபவித்தாலும், அந்த ஆயர் நம்பிக்கை கொண்டோரின் ஆன்மீகத் தேவைகளை கருத்தில் கொண்டு மனத்திடனுடன் தன்னுடைய அலுவல்களை மேற்கொண்டார். 307 ஆம் ஆண்டளவில் மேட்டர்னஸ் காலமானார்.
செபம் :
அன்புத் தந்தையே, சண்டை சச்சரவுகள் முடிவுக்குவர இதுவே தருணம். எங்களது நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியைத் தாரும். உமது தெய்வீக ஒளியை மங்கலாகச் செய்யும் பகை, வெறுப்பு என்றும் கொடும் காற்றினை அணைத்துவிடச் செய்யும், மேலும் தொடர்ந்து வரும் உமது அன்பினால் அதனை நிரப்பியருளும். பொறாமையினாலும் பயத்தினாலும் மறைக்கப்பட்டிருப்போருடைய கண்களைத் திறந்தருளும். அவர்கள் உமது அமைதியின் உலகைக் காணச்செய்யும். தந்தையே, எங்களை ஒன்று சேர்த்தருளும். பகைமை என்னும் காயங்களினால் பாதிக்கப்பட்ட உமது குழந்தைகளுக்கு குணமளித்தருளும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மேட்டர்னஸ் காலத்திலிருந்து அடுக்கடுக்காக அநேக மக்கள், துன்புறுத்தல்களைத் தாங்கிக் கொண்டு, விடாமுயற்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஜான் லூயிஸ் என்பவரும் ஒருவர். 1950 முதல் 1960 ஆண்டுகளில் அல்பாமாவில் வாழ்ந்து வந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான இவர், இனவேற்றுமை கிறிஸ்துவர்களுக்கிடையே நுழைந்தது எவ்வாறு என்று புரிந்து கொள்ளத் தடுமாறினார்.
தனது 15 ஆம் வயதில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களும் ஓரினமாக ஒற்றுமையுடன் வாழ்வது என்று தனது வாழ்நாளின் குறிக்கோளாக ஆய்வு செய்து வந்தார். 23 ஆவது வயதில் லூயிஸ் மனித உரிமை இயக்கத்தில் பெரிய தலைவர்களுள் ஒருவரானார். கல்லூரியில் பயின்றபோது, மாணவர்களின் அகிம்சை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
ஆப்பிரிக்க - அமெரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமைக்கு பதிவு செய்தல்.
சிற்றுண்டி உணவகங்களிலும், பஸ் டிப்போக்களிலும் சாதிப்பாகுபாடுக்கு எதிராக அமைதியான உள்ளிருப்பு போராட்டங்கள்.
40 முறை கசையடி பட்டது, சிறை சென்றது, இழிவுபடுத்தப்பட்டது போன்ற இன்னல்கள் அனுபவித்தது, அவர் வேறு எளிதான வழிகளைத் தெரிந்து கொண்டிருக்கலாம். இன்று மனித உரிமை போராட்டங்களின் வீரமுள்ள தலைவராகக் கருதப்படுகிறார். ஒற்றுமையான, அன்பின் அடிப்படையிலான அமெரிக்காவை உருவாக்குவதற்கு வழிவகைகளைத் தேடிச் செல்கிறார்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 18
புனிதர் ஃபிரடெரிக் ✠
புனிதர் ஃபிரடெரிக் ✠(St. Frederick of Utrecht)
உட்ரெச்ட் ஆயர் :
(Bishop of Utrecht)
பிறப்பு : கி.பி. 780
ஃபிரீஸ்லேண்ட்
(Friesland)
இறப்பு : ஜூலை 18, 838
உட்ரெச்ட்
(Utrecht)
நினைவுத் திருநாள் : ஜூலை 18
பாதுகாவல் : காது கேளாதோர்
புனிதர் ஃபிரடெரிக், கி.பி. 815/816 முதல் 834/838 வரை உட்ரெச்ட் ஆயராக (Bishop of Utrecht) சேவை செய்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்கம் (Roman Catholic Church) மற்றும் கிழக்கு மரபுவழி (Eastern Orthodox Church) திருச்சபைகள் இவரை புனிதராக ஏற்கின்றன.
கி.பி. சுமார் 780ம் ஆண்டு, நெதர்லாந்து (Netherlands) நாட்டின் வடக்கிலுள்ள பிராந்தியமான ஃபிரீஸ்லேண்ட்ல் (Friesland) பிறந்த இவர், ஃபிரிசியன் அரசனான ராட்பௌட் (Frisian King Radboud) என்பவரது பேரனாவார்.
தமது இளம் வயதில் உட்ரெச்ட் (Utrecht) நகரில் கல்வி கற்ற இவருக்கு, ஆயர் ரிக்ஃபிரைட் (Bishop Ricfried) உள்ளிட்ட மறைப்பணியாளர்கள் கல்வி கற்பித்தனர். அவரது படிப்பு முடிந்தபின் அவர் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், மறைமாவட்டத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மீதமுள்ள பாகன் இனத்தவர்களை (Heathens) கிறிஸ்தவர்களாக மனம் மாற்றுவதற்கான பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மறைமாவட்டத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் இப்பணியைச் செய்தார். இவர், ஸீலேண்ட் (Dutch province of Zeeland) எனும் டச்சுப் பிராந்தியத்தின் வால்ச்சரன் (Walcheren) எனும் முன்னாள் தீவில் மறைபோதகம் செய்ததாக தகவல்கள் உள்ளன. அத்துடன், புனிதர் ஓடல்ஃபஸ் (St. Odulfus) என்பவருடன் இணைந்து ஸ்டாவோரேன் (Stavoren) நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மறைபோதகம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
உட்ரெச்ட் (Utrecht) மறைமாவட்ட ஆயர் ரிக்ஃபிரைட் (Bishop Ricfried) கி.பி. 815/816ம் ஆண்டு மரித்ததும், ஃபிரடெரிக் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது பக்தி மற்றும் அறிவாற்றலுக்காக அறியப்பட்டார். அவர், ஃபிரான்கிஷ் பெனடிக்டைன் (Frankish Benedictine monk) துறவியும், ஜெர்மனி நாட்டின் மெய்ன்ஸ் உயர்மரைமாவட்ட பேராயருமான ரபானஸ் மௌரஸ் (Rabanus Maurus) என்பவருடன் கடித தொடர்பு வைத்திருந்தார். 829ம் ஆண்டு, மெயின்ஸ் (Mainz) நகரில் நடந்த ஆலோசனை சபையில் அவரது அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலையும் அவர் பாராட்டினார்.
ஃப்ரெட்ரிக் எப்படி மரித்தார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்பது மட்டும் நிரூபிக்கப்பட்டது; ஆனால், யாரால் கொலை செய்யப்பட்டார், கொலைக்கான காரணம் ஆகியனபற்றி தெளிவான தகவல் இல்லை. கி.பி. 838ம் ஆண்டு, ஜூலை மாதம், 18ம் நாளன்று, திருப்பலி நிறைவேற்றிவிட்டு வருகையில் இரண்டு பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்று புராணம் கூறுகிறது.
கி.பி. 11 மற்றும் 12ம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் ஆயர் ஓபெர்ட் (Bishop Otbert of Liège) (பாஸியோ ஃப்ரெடிசி) மற்றும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் வில்லியம் (William of Malmesbury) ஆகியோரின் கூற்றுப்படி, கொலைகாரர்களை ஏற்பாடு செய்து ஏவி விட்டது, பேரரசி ஜூடித் (Empress Judith) என்கிறது. காரணம், பேரரசியின் ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையை ஃபிரடெரிக் தொடர்ந்து விமர்சித்து வந்ததே ஆகும்.
கொலை செய்யப்பட்ட ஃபிரடெரிக், உட்ரெச்ட் (Utrecht) நகரின் தூய சல்வேடார் ஆலயத்தில் (St. Salvator's Church) அடக்கம் செய்யப்பட்டார். இவர், காது கேளாதோரின் பாதுகாவலர் ஆவார்.