St. John Plessington |
St. Macrina The Younger |
St. Symmachus |
|
|
ஜுலை 19 புனித ஜாண் பிளசிங்டன்
புனித ஜாண் பிளசிங்டன்
பிறப்பிடம் : லங்காயர், இங்கிலாந்து
திருவிழா : ஜூலை 19
வீரம் வெளிப்படுதல்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் 40 புனித தியாகிகளில் ஒருவர்
1637 ஆம் ஆண்டளவில் ஜாண் பிறந்தபொழுது, கத்தோலிக்கர் மற்றும் புரோட்டாஸ்டான்டினரிடையே உறவுகள் விரிசலடைந்தன. அவருடைய தந்தை உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் (இணைந்தவர்). ஆதலால் இங்கிலாந்து சர்ச்சின் வழிபாட்டில் கலந்துகொள்ள மறுத்தவர். இங்கிலாந்தின் ஸ்காரிஸ்பிரிக் ஹால் என்னுமிடத்தில் இயேசு சபை குருக்களால் தனியாக படிக்க வைக்கப்பட்டு, பின்னர் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்பெயின் நாட்டில் குருத்துவத்துக்கு பயிற்சி பெற்று 1662 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டு, ஒரு மறைபரப்பாளராக ஜாண் இங்கிலாந்து திரும்பி, மறைமுகமாக மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பெண்கள் கூட்டமைப்பில் இணைந்தார். முதலில் அவர் ஹோலிவெல் என்னுமிடத்தில் தங்கி வில்லியம்ஸ் அல்லது ஜாண் ஸ்காரிஸ்பிரிக் இவர்கள் மறுபெயரில் பணியாற்றினார். 1670 இல் அவர் செஸ்டர் என்னுமிடத்திற்கு குடிபெயர்ந்தார். மேசி என்னும் குடும்பத்து குழந்தைகளுக்கு அவர் ஒரு தனிப்பயிற்சி ஆசிரியராக இருந்தார். மறைமுகமாக கத்தோலிக்க சமூகத்துக்குத் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
தொடர்ந்து செயலாற்றியவர் :
1660 முதல் 1670 வரையுள்ள காலத்தில் ஜாண் தனது மக்களுக்கு அமைதியான முறையில் சேவை புரிந்து வந்தார். ஆனால் 1679 ஆம் ஆண்டு அங்குள்ள அரசியல் சூழல் ஒரு துரதிட்டமான நிலையை அடைந்தது.
இயேசு சபையிலிருந்து விலக்கப்பட்ட, ஒரு மனச்சோர்வுடைய தொடக்க நிலை மடத்துறவி டைட்டஸ் ஓக்ஸ் என்பவர், பழிவாங்குவதற்கு ஒரு தருணத்தை தேர்ந்தெடுத்தார். இயேசு சபையினர், புரோடஸ்டாண்ட் அரசரைக் கொல்வதற்கு சதித்திட்டம் போடுகின்றனர் என்று சில முக்கிய புரோடஸ்டாண்ட் பிரமுகர்களிடம் ஓக்ஸ் வெளிப்படுத்தினார். போப்பை கொல்லும் இந்த சதித்திட்ட வதந்தி வேகமாகப் பரவி, கத்தோலிக்கருக்கு எதிரான ஒரு கிளர்ச்சி உருவானது. ஜாண் கைதாகி, ஒன்பது வாரங்களாக ஜெஸ்டர் கேசில் என்னுமிடத்தில் சிறையிலடைக்கப்பட்டார். அரசெதிர்ப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, ஜாண் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது கடைசி தருணங்களில், அவர் அரசருக்கு பிரமாணிக்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் தான் ஒரு குருவானவர் என்பதற்காகவே கொலை செய்யப்படுகிறார் என்று தெரியப்படுத்தினார். 1970 ஆம் ஆண்டு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் நாற்பது மறைபரப்பு உயிர்த் தியாகிகளில் ஒருவராக ஜாணும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
செபம் :
தந்தையே, ஒவ்வொரு இடங்களில் வாழும் குருவானவர்களுக்காக நாங்கள் செபம் ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் சொந்த இடங்களில் வாழும் நம்பிக்கையுள்ள மக்களுக்கு மறைபணியாற்றினாலும் சரி அல்லது உலகம் சுற்றி உமது நற்செய்தியை போதித்தாலும் சரி. அவர்கள் செய்யும் தியாகங்கள், எதிர்கொள்ளும் அறைகூவல் ஆகியவற்றிற்கு அவர்களுக்கு வீரமும் வலிமையும் தந்தருளும். அவர்களது பணியில் தொடர்ந்து ஈடுபட உறுதிதாரும். துக்கத்தில் ஆறுதல் தாரும், ஆபத்துக்களிலிருந்து காத்தருளும். அருளால் நிரப்பியருளும், உமது அன்பின் எப்போதும் நிலைத்திருக்க கிருபை செய்யும்.
இவர்களது அடிச்சுவட்டில் :
17 ஆவது நூற்றாண்டு காலத்தில் ஜாண், இங்கிலாந்தில் கத்தோலிக்கத்தை உயிரோட்டமுள்ளதாக்கிய பொழுது, பொறுமையின்மை மேலோங்கியிருந்தது. இந்த 21 ஆவது நூற்றாண்டிலும் பொறுமையின்மை நம்மை பதுங்குமிடமாக மாற்றுகிறது. ஆனால் எரிக் குருவெல் அதனை மாற்றுவதற்கு சில முறைகளைக் கடைப்பிடித்தார்.
1990 ன் நடுவில், எரின் என்பவர் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் உள்ள வில்சன் உயர்நிலைப்பள்ளியில் புதிய ஆசிரியராக இருந்தார். ஒருநாள், அவரது வகுப்பறையில் இன வேற்றுமையைத் தூண்டும் ஒரு குறிப்பு மாணவர்களிடையே பரப்பப்படுவதை அவர் கண்டுபிடித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் இனப்படுகொலைகளுக்கு காரணமாகிவிடும் என்று மாணவர்களுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் அதைப்புரிந்துகொள்ளவில்லை. எனவே எரின் கீழ்க்கண்ட இரண்டு புத்தகங்களை அவர்களது பாடத்திட்டத்தில் புகுத்தினார்.
அன்னி ஃபிராங், ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு.
ஸ்லாடாவின் நாட்குறிப்பு, சரஜிவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை அவரது மாணவர்கள் அந்த புத்தகங்களைப் படித்தபோது, அவர்கள் தங்களது நாட்குறிப்பைப் பார்த்து, இதுபோன்ற சகிப்புத்தன்மை இல்லாத உணர்வுகள் எப்படி தங்களது வாழ்வை பாதிக்கிறது என்பதை உணரத் தொடங்கினார்கள். அவர்களது பார்வை மாறத்தொடங்கியது. 1960 ஆண்டளவில் ஏற்பட்ட மனித உரிமை எழுச்சியாளர்களின் நினைவாக அவர்கள் தங்களை விடுதலை எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்.
மனித உரிமை சரித்திரப் பாடங்கள் விலைமதிப்பற்றவை, நம்பிக்கையாக இந்தப் பாடங்களும் நமது நம்பிக்கையும் முக்கிய இந்தத் தவறுகள் திரும்பவும் நிகழாவண்ணம் இருக்க நமக்கு உதவுகின்றன. |
ஜுலை 19 புனித மக்ரீனா
இளையவரான புனித மக்ரீனா
பிறப்பிடம் : கப்பதோசியாவின் கசாரியா
திருவிழா : ஜூலை 19
கற்பித்தலும், பகிர்தலும்
போந்தஸ் மடத்தின் அதிபர்
கசாரியா நாட்டில் 330 ஆம் ஆண்டளவில், புகழ்பெற்ற குடும்பத்தில் பத்து பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தவர் மக்ரீனா என்பவர். இவரது தாயார் எமிலியா என்பவர் இவருக்கு திருமறைநூல் வாசிப்பதிலும் வீட்டுப்பணிகளை மேற்கொள்வதிலும் பயிற்றுவித்திருந்தார். இவரது 12 ஆம் வயதில் மக்ரீனா வுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்க முன், மணஉறுதி செய்யப்பட்ட மணமகன் இறந்து விட்டார். பொருத்தமான வேறு ஒருவரை மணமுடிக்க மணமில்லாமல் அவர் தனது வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்தார். மேலும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் பாடம் கற்பித்து வந்தார். தனித்துவம் மிக்க இந்த கிறிஸ்துவக் குடும்பத்திற்க மக்ரீனா ஆன்மீகத் தலைவியாகத் திகழ்ந்தார். இவரது பாட்டியார் மற்றும் இவரது பெற்றோர் புனிதர்களாய் அறிவிக்கப்பட்டதுபோல, செல்வாக்கு மிக்க ஆயர்களாக விளங்கிய இவரது சகோதரர்கள் பேசில், கிரகோரி மற்றும் பீட்டர் ஆகியோர் பின்னர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். மக்ரீனாவின் தந்தை இறந்தபோது, தனது தாயாரும் மக்ரீனா போந்தஸ் என்னுமிடத்தில் உள்ள இவரது தோட்டம் உள்ளடங்கிய வீட்டில் குடியேறினார். இவர்களுடன் வேறு ஏழைப்பெண்களும் தங்கியிருந்தனர். மக்ரீனா அவர்களுக்கு உணவு உடைகள் வழங்கி ஆதரித்து வந்தார்.
ஒரு எழுச்சியூட்டும் வாழ்வு :
எமிலியா இறந்தபின்னர் மக்ரீனா பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது குடும்பச் சொத்தில் மிச்சமிருந்ததை விற்று, விற்ற பணத்தை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். அவரது குடிவாழ்வுக் குழுமம் அவரது குடும்பமாகத் திகழ்ந்தது. அங்கு ஜெபம், தியானம், கடுந்தவம் மட்டுமே வாழ்வாக இருந்தது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று அவர்கள் மக்ரீனாவை அவரது சகோதரர் பேசில் உட்பட முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். பேசில் பிற்காலத்தில் கிழக்குப் பகுதி குருமடத்தை நிறுவினார்.
மக்ரீனா இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவருக்குப் போர்த்துவதற்குக் கூட ஆடையின்றி ஏழ்மை நிலையிலிருந்தார். என்றாலும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். அவரது சகோதரர் கிராகரிக்கு உற்சாகம் தந்தது. தன்னுடைய இளமைப் பருவத்தில், தாழ்ச்சியைக் கற்றுக்கொடுத்த தனது மூத்த சகோதரிக்கு இறுதி வேளையில் இந்த சகோதரர் ஆறுதல் வழங்கினார். அவர் பிற்காலத்தில், மக்ரீனாவின் வாழ்க்கை என்ற நூலை எழுதினார். அதில் அவரின் அர்ப்பண ஆசிரியர் வாழ்வு பற்றிக் குறிப்பிட்டார். மேலும், அந்தக் குடும்பம் கிறிஸ்துவ வரலாற்றில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பற்றியும் எழுதியிருக்கிறார். ஏற்கனவே இதே பெயரில் புனிதர் ஒருவர் இருந்ததால், இவர் இளையவரான புனித மக்ரீனா என்று அழைக்கப்படுகிறார்.
செபம் :
ஞானத்தின் மீதுள்ள பற்றினால், என்னுடைய மனம் சிறகடித்துப் பறக்க சிறகுகள் கடனாகத் தந்தீர், மேலும் உலகின் இன்ப நலன்களை மெய்யறிவோடு தவிர்த்திட வைத்தீர். உண்மையான தத்துவ இயலின் இருப்பிடமாகவும் மேலும் உமது கடுந்துறவு வாழ்வினாலும், மீட்பரின் மகத்தான மணப்பெண் ஆனீர். அழுவோர்க்கு ஆறுதல் தருபவராகவும், பரிந்து பேசுபவராகவும் இருக்கின்றீர். கடவுளின் அருள்பெற்ற மக்ரீனாவே, மகிழ்ந்து கொண்டாடு.
இவர்களது அடிச்சுவட்டில் :
தனது சகோதரர் சகோதரிகளுக்கு மக்ரீனா கற்றுக்கொணடத்த நேர்மறையான பாடங்கள், அவர்களது வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றும், இளம் வயதினரிடம் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி வரும், பலதரப்பட்ட மக்கள் பலர் உள்ளனர்.
பராபு, விஸ்க் என்னுமிடத்தில் அல்பெர்மன் என்பவர் ஒரு பள்ளி பேருந்தின் ஓட்டநராக இருந்தார். குழந்தைகள் அதிலும், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட பிள்ளைகள், குறைந்த வருமானம் உள்ள குடும்பத்துப் பிள்ளைகளுக்கு எவ்வளவு உதவிகள் தேவைப்படுகின்றன என்று தெரிந்து கொண்டார். அதனால், அவர் ஒரு பாடப்பயிற்சி செயல் திட்டத்தை தொடங்கி, ஒவ்வொரு குழந்தையும் நூல்நிலையத்திற்கு ஒழுங்காக சென்று கற்குமாறு ஏற்பாடு செய்தார். மேலும் பல வழிகளில் உதவிகள் செய்தார்.
பள்ளிக்காக, தனமாகக் கிடைத்த பழைய எழுது மேசைகளை குழந்தைகள் வீட்டுப்பாடம் கற்பதற்காக, தயார் செய்து கொடுத்தார்.
குழந்தைகளின் வீடுகளுக்கு நூலகத்திலுள்ள புத்தகங்களை எடுத்துக் கொடுத்து உதவி செய்தார்.
குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுக்கொடுத்தார். அருகிலுள்ள பூங்காக்களிலும் இயற்கை சூழலிலும் அறிவியல் விளையாட்டுக்களைப் பயிலச் செய்தார்.
இப்போது ஓய்வு பெற்று விட்டாலும், அருகிலுள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதும், ஆசிரியர்களுக்கு உதவுவதிலும் நேரத்தை செலவிடுகிறார். பல ஆண்டுகளாக, 100 குழந்தைகளுக்கு மேலாக உதவுவதில் அவரது பங்களிப்பு அங்குள்ள மக்களுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது.
|
ஜுலை 19 புனித சிமாக்கஸ்
புனித சிமாக்கஸ்
பிறப்பிடம் : சார்டினியா, இத்தாலி
ஒரு தலைவராக:
ஐந்தாம் நுற்றாண்டில் சார்டினிய தீவினில் சிம்மக்கஸ் பிறந்தார். புற சமயத்தைச் சார்ந்தவரான இவர், உரோமையில் திருமுழுக்குப் பெற்றார். பின்னர் அங்கே உரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பெருவாரியான சமயக் குருமார்கள், இரண்டாம் அனஸ்தாசியாஸ் திருத்தந்தையைத் தொடர்ந்து, இவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். என்றாலும், அதே நாளில் பிரிவினை சகோதார்கள் லாரன்ஸ் என்ற தூய பிராக்ஸிதஸ் பெரிய குருவை திருத்தந்தையாகத் தேர்தெடுத்தனர். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர, இந்த இரண்டு எதிர் வாரிசுகளும் இராவன்னாவின் தியோடோரிக் அரசரிடம் முறையிடடனர். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் பெரும்பான்மை பெற்றிருந்ததாலும் சிம்மாகஸை அராச தியோடோரிக் தேர்ந்தெடுத்தார்.
சிம்மாக்ஸ் உடனே உரோமையில்ஒரு குருமார் பேரவைவைக் கூட்டி, ஒரு திருத்தந்தை அவருடைய வாரிசை தெரிவு செய்யவில்லையென்றால், புதிய திருத்தந்தை குருக்களின் பேரவை தெரிவு செய்யும். மேலும் கோபமடைந்த லாரன்ஸின் ஆதரவாளர்கள் புதிய திருத்தந்தையை ஒழுக்கக்கேடு முதலான குற்றச்சாட்டுகளால் அவமதித்தனர்.
பதவிக்காக போராட்டம்:
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் சிம்மாக்கஸ் புனித பீட்டர் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தார். இன்னுமொரு போப்பாண்டவர் பேரவை கூடும் வரைக்கும், அந்த அரசருக்கு வேறொறு தற்காலிக போப்பாணவரைத் நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. 502ஆம் ஆண்டு, நீண்ட விவாதத்திற்குப் பின்னர், சிம்மாக்கஸ் தவறுசெய்யவில்லையென்று குருக்கள் பேறவை விடுவித்தது என்றாலும் இந்தக் குழப்பம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடித்தது அவரது எதிரிகளால் புரட்சி ஏற்படும் சூழலில், சிம்மாக்கஸ் புனித பீட்டர் ஆலயத்தில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியாக 506ஆம் ஆண்டு, சிமாக்கஸ் குற்றமற்றவர் என்று அந்த அரசர் ஒப்புக்கொண்டு அவரைத் திரும்பவும் திருத்தந்தையாக நியமரித்தார்.
சிம்மாகஸ் தொடர்ந்து திருத்தந்தபுறுத்தப்பட்ட கத்தோலிக்கருக்கும், சொத்துக்களை இழந்த சிறைக் கைதிகளுக்கும் அவர் இழப்பீடுகள் வழங்கினார். உரோமில் பழுதடைந்த ஆலயங்களை சீர்படுத்தினார். அகதிகளுக்கு உறைவிடம் அமைத்துக்கொடுத்தார். 514ஆம் ஆண்டு உயிர்நீத்தார். உரோமில் பீட்டர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
செபம்:
அன்புள்ள ஆண்டவரேஈ இந்த உலகின் அநீதிகள் என்னைச் சூழ்ந்துள்ள நிலையில், எனது நம்பிக்கையையும் மனஉறுதியையும் நிலைநிறுத்கத்ககொள்ள திடன் அளித்தருளும். என்னை தடைகள் வந்தாலும் உமது நிறைந்த அருளால், நான் உமது திட்டத்தை நிறைவேற்றுவேன. எனது ஆன்ம பலத்தை அதிகரிக்க நீர் எமது ஆழ மனதில் தங்கியிருந்து உமது மாண்பை வெளிப்படுத்தும்.
அவர்களது அடிச்சுவடில்:
எதிர்ப்புகள் பலவற்றை எதிர்கொண்டாலும், சமமாகஸ் தேவையிலிருப்போருக்கு உதவிகள் செய்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, உலகில் நோயுற்றிருப்போருக்கு உதவிகள் செய்யவேண்டிய அவசியத்தை ஜெர்ரி பிரோ என்பவர் உணர்நதார். பொம்மைக் கடை ஒன்றில் வேலைசெய்தால், வெனிசுலாவுக்கு அடிக்கடி அவர் செல்ல வேண்டியதாயிருந்தது. அங்குள்ள உறுமை நிலையைக் கண்டு அவர் நடு நடுக்கினர். ஒரு பயணத்தின்போது எட்வின் கார்சியா என்ற ஒரு இளம் மருத்துவரை சந்தித்தார். இவர் மருத்துவ கருவிகள், மருந்துகள் அதிகம் இல்லாத மருத்துவக்கூடம் வைத்திருந்தார். பணஉதவி மட்டும் செய்யாமல் 1995ஆம் ஆண்டு ஜெர்ரி ஒரு மருத்துவ பள்ளியில் இணைந்து, மனித உரிமை மருத்துவ இடர் காப்புதவி என்ற தன்னார்வ உதவி மையத்தை ஏற்படுத்தி பின்தங்கிய நாடுகளில் மருத்துவ சேவையாற்றினார்.
rpe;jid: c
nrgk;: k |
|