ஜுலை 20
தூய மார்கரெட்
அந்தியோக்கின் தூய மார்கரெட்
பிறப்பிடம் : ஆசியா மைனரில் உள்ள அந்தியோக்
திருவிழா : ஜூலை 20
வீரம் மிகுந்தவர்
பேறுகால பெண்கள், செவிலியர் மற்றும் சார்ந்தவர்கள்
மார்கரெட் அல்லது மரினா என்று பொதுவாக அழைக்கப்பட்டவர். தற்போதைய துருக்கி அப்போதைய ஆசியா மைனர் நாட்டில் பிறந்தார். மார்கரெட்டின் தாயார், பரசவத்தின்போது காலமானார். புறசமயியான அவருடைந தந்தை, ஈடுபாடுள்ள ஒரு செவிலியரிடம் அவரை வளர்ப்பதற்கு ஒப்படைத்தார். மேலோட்டமாக, அந்த செவிலி ஒரு ஈடுபாடுள்ள கிறிஸ்தவர் என்பது அவருக்குத் தெரியாது. மார்கரெட்டை கிறிஸ்தவராக வளர்ப்பார் என்பது அவருக்கு எந்த வகையிலும் தெரியாது. மார்கரெட் கிறிஸ்தவராக மாறியபோது அவரது தந்தை அவரை விலக்கியதால், அந்த செவிலி அவரை தத்தெடுத்துக்கொண்டார். மார்கரெட் வளர்ந்தபோது, ஒரு அழகான இளமையான பெண்ணாக வளர்ந்து, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு உரோமை சிற்றரசன் கண்களில் பட்டார். அவர் இவளைக் கவர முற்பட்டதனால், அவளை கிறிஸ்தவராக ஏற்றுக்கொள்ளாமல், உரோமை கடவுள்களுக்கு பலிசெலுத்தக் கட்டாயப்படுத்தினார். அவள் மறுதலித்ததனால் அவளை கைது செய்து சிறையிலடைத்தார்.
புதுமைகளின் நாயகி :
பாரம்பரிய நூல்களின்படி, அவள் சிறையில் அடைபட்டிருந்தபோது, மார்கரெட் பசாசின் நேரடித் தாக்குதலுக்கு ஆளானார். பசாசு, தன்னை ஒரு அரக்கனாகக் காண்பித்து அவளை முழுவதுமாக விழுங்கியது. மார்கரெட் அணிந்திருந்த ஒரு சிலுவை அந்த அரக்கனின் வயிற்றை குத்தித் துன்புறுத்தியதால், அவன் அவளை வெளித்தள்ளினான். இந்தப் புதுமையினால், குழந்தைபெறும் தாய்மார்களுக்கு அவள் பாதுகாவலியாக கருதப்பட்டாள்.
பின்னர், மார்கரெட்டின் சிறைத்தலைவர்கள், அவளை நெருப்பு வைத்து எரிக்க முயன்றனர். ஆனால் அவளது செபத்தினால் அந்த நெருப்பு சுவாலை அவளை தீண்டாமல், அவளைக் காப்பாற்றியது. பின்னர் அவளை கொதிக்கும் எண்ணெய் கொப்பறையில் இறக்கினர். ஆனால் எந்தத் தீங்கும் நேரிடாமல் வெளியில் வந்தாள். இப்போது, சந்தேகமில்லாமல் அந்தப் பெண்ணின் சக்தியை உணர்ந்தார்கள். அந்தச் சிற்றரசர் உடனே அவளைச் சிறைச்சேதம் (தலையைக் கொய்ய) செய்ய உத்தரவிட்டார்.
மார்கரெட் பிற்காலத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் என்பவருக்கு காட்சி தந்ததாக பாரம்பரியம் கூறுகிறது. 14 பரிசுத்த உதவியாளர்களில் அவரும் ஒருவராக வணங்கப்படுகிறார். சித்திரங்களில் அவள் ஒரு ஆடு மேய்ப்பவளாக அல்லது விலங்கிடப்பட்ட ஒரு அரக்கனை இழுத்துச் செல்பவளாக அல்லது எரியும் எண்ணெய் கொப்பறை அருகே நிற்பவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
செபம் :
வல்லமையுள்ள இறைவா, ஒடுக்கப்படுபவர்களுக்காக ஜெபிக்கிறோம். உம்முடைய குரலைக் கேட்டு, உம்முடைய அருளையும் இரக்கத்தையும் வேண்டும் இதயங்களையும் மனங்களையும் உடைய தலைவர்களை உருவாக்கிட நாங்கள் இதயப்பூர்வமாக வேண்டுகிறோம். அவர்கள் விரைவிலேயே உமது ஒளியைக் காணவும், உமதுஅன்பை உணரவும் செய்தருளும். வல்லமையுள்ள உமது பெயரினால் நாங்கள் வேண்டுகிறோம். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மார்கரெட்டைப் போலவே, தனது விருப்பம் போல் மதநம்பிக்கை கொண்டிருக்க உரிமையை நிலைநாட்டியவர் இன்னொரு பெண்மணி ஆன்னி ஹட்சின்சன் (1591 1643). 1634 ஆம் ஆண்டு ஆன்னியும் அவரது குடும்பத்தாரும் இங்கிலாந்திலுள்ள மஸாசுசெட்ஸ் பே காலனிக்கு வந்தனர். தூய்மைவாதிகளான அவர்கள், மக்கள் கடவுளுடன் மட்டும்தான் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பினார்கள்.
பைபிள் செய்திகளுக்கு இசைந்து நடத்தல்.
ஒரு மத போதகர் உதவியினால்,
ஆன்னி அதனை ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் கடவுளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று உறுதியாக சொன்னாள். தூய ஆவியின் அனுபவத்தினால் உண்மையான கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றாள்.
ஞாயிறு மறையுரையையும் விவிலிய படிப்பினைகளையும் விவாதிக்க, தனது இல்லத்தில் ஆன்னி கூட்டம் நடத்தத் தொடங்கினார். அவரை பின்பற்றும் மக்கள் கூட்டம் பெருகியபோது, அந்த மக்கள் தலைவர்கள், அவரது அடிப்படை மதவாத நம்பிக்கைகள் முரண்சமயக் கருத்துக்களுக்காக அவர் மீது வழக்கு தொடுத்தனர். அவர் குற்றவாளி எனத் தீர்ப்பிடப்பட்டு 1636 ஆம் ஆண்டு ஆன்னியும் அவரது குடும்பமும் மாஸாசுசெட்டிக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் ரோதி தீவுக்கும் பின்னர் நியூயார்க்கிலுள்ள ஆம்ஸ்டர்டேமுக்கும் குடிபெயர்ந்தனர். இங்கே இந்தியர்களால் கொலை செய்யப்பட்டார். சமயப் போதனைகளின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் பட்டியலில் ஒருவராக நினைவு கூறப்படுகிறார். |