Bl. Ceslaus St. Margaret of Antioch St. Apollinaris

ஜுலை 20

புனித அப்போலினாரிஸ் (St.Apollinaris)

mary

புனித அப்போலினாரிஸ் (St.Apollinaris)

இவர் துருக்கி நாட்டில் பிரிஜியா(Brijiya) மாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்ப பெரும்பாடுபட்டார். இதனால் அந்நாட்டு அரசன் மார்க்ஸ் அவுரேலியஸ்(Markus Aurelias)என்பவரால் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ஆயர் தன்னுடைய செபத்தால் அரசனை வென்றார். ஆயரின் சொல்படி நடந்த அரசன், திருச்சபைக்காக பல உதவிகளை செய்தான். அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தான்.

மார்க்ஸ் நாளடைவில் "கிறிஸ்துவர்களின் நண்பன்" என்ற பெயரை பெற்றான். அப்போலினாரிஸிடமிருந்து, பல விசுவாச போதனைகளை கற்றுக் கொண்டான். ஆயர் மன்னனின் மனதை கவர்ந்து விசுவாசத்தை அம்மண்ணில் நிலைநாட்டியதால் "வீரம் கொண்ட விசுவாச தந்தை" என்ற பெயரை பெற்றார். கிறிஸ்துவர்களின் முன்னேற்றத்திற்காக ஆயருக்கு, அரசர் உதவியதால் , அரசனின் எதிரிகளால் ஆயர் தாக்கப்பட்டார். அரசன் நிறைவேற்றிய சட்டங்கள் பல கிறிஸ்துவர்களுக்கு சாதகமாக இருந்ததால் அரசனும் அவமானத்திற்குள்ளாக்கப்பட்டான். இந்நிலையில் எழுந்த போராட்டங்களில், ஆயர் அப்போலினாரிஸ் எதிரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துருக்கி நாட்டில், 2 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயர்களில் "சிறந்தவர்" என்ற பெயர் பெற்றார்.

image