பிறப்பிடம் : பிரின்டிசி, இத்தாலி
திருவிழா : ஜூலை 21
ஒரு தலைவனாக
திருச்சபையின் மருத்துவர்
1559 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் நாள், ஒரு பணக்கார பெற்றோருக்கு, இத்தாலியிலுள்ள கடற்கரை துறைமுகமான நேபிள்ஸ் நகரிலிருந்து அதிக தொலைவிலில்லாத ஒரு ஊரில் ஜிலியோ சீசா ருஸோ என்பவர் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோதே அவருடைய பெற்றோர் காலமாயினர். இதனால் குருவாக இருந்த அவரது மாமாவுடன் வசிக்கத் தொடங்கினார். 16 வயது ஆனபோது, எளிமையை குறிக்கோளாகக் கொண்ட பிரான்ஸிஸ்கன் சபையின் ஒரு கிளையான கப்புச்சின் சபையில் ஒரு இளங்குருவாகச் சேர்ந்து லாரன்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
பழங்கால மற்றும் இக்கால மொழிகளில் புலமைபெற்று விளங்கினார். விவிலியத்தை அதன் மூலமொழியில் கற்று, அதில் சரளமாகப் போதிக்க புலமை பெற்றார்.
லாரன்ஸ், எபிரேய மொழியில் புலமை பெற்று விளங்கியதை அறிந்த 8 ஆவது கிளெமென்ட் திருத்தந்தை, யூதர்களை மனந்திருப்பும் பணியில் இவரை ஈடுபடுத்தினார்.
கடின உழைப்பாளியான தனி மதகுரு :
ரடால்ஃப் 2 எனும் பேரரசர், லாரன்ஸின் தலைமைத்துவ திறமைகளை கண்டுணர்ந்து, துருக்கி படைகளின் பயமுறுத்துதலை முறியடிக்க, ஜெர்மனி நாட்டின் இளவரசர்களை ஒருங்கிணைக்குமாறு லாரன்ஸைக் கேட்டுக்கொண்டார். லாரன்ஸ் ஜெர்மானிய கூட்டுப் படைகளின் தலைவரானார். மேலும் சிலுவையை உயர்த்திப் பிடித்தவாறு, போரில் வீரர்களை முன்னின்று வழிநடத்தினார். அந்த படையயடுப்பில், அவரது பங்களிப்பு, ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுத்தந்ததாகக் கருதப்படுகிறது.
லாரன்ஸ் தனது 59 ஆவது வயதில், அமைதியான ஜெப வாழ்வுக்காக ஓய்வு பெற்றார். ஆனால் ஒரு வருடத்திற்குப் பின், அவர் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டார். மேலும் நேப்பிள்ஸ் நாட்டில், தொந்தரவு கொடுக்கத் தொடங்கும் ஸ்பானிய தூதரை மாற்றுவதற்கு பிலிப் அரசரை சம்மதிக்கச் செய்ய, ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். லாரன்ஸ் அதில் வெற்றி கண்டார். ஆனால் திரும்பும் வழியில் உயிர் நீத்தார்.
அவர் ஒரு நாட்டின் தூதராகவும், தனிமத குருவாகவும் இருந்தாலும், லாரன்‘க்கு விவிலிய படிப்பிலும், போதிப்பதிலுமே அதிக நாட்டம் இருந்தது. அவர் ஒன்பது தொகுப்புகள் கொண்ட விவிலிய போதனைப் பொழிவும் விளக்கவுரைகளையும் வெளியிட்டார். அவரது விவிலிய பாண்டித்துவத்தை கருத்தில் கொண்டு 23 ஆம் யோவான் திருத்தந்தை, 1959 ஆம் ஆண்டு அவரை திருச்சபையின் தத்துவஇயல் ஞானியாக அறிவித்தார்.
செபம் :
அன்புத்தந்தையே இறைவா, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ, நான் அதனை முழுமையாகச் செய்ய முயற்சிப்பேன். உம்முடைய அருள்பொழிவை நான் ஒரு பெரும் சொத்தாக மதிக்கிறேன். மேலும் உமக்கெதிராகக் குற்றம் செய்யாமல் இருக்க நான் உம்மை வேண்டுகிறேன். அருள் நிறைந்தவரான தந்தையே நான் எனது வாழ்வின் மேன்மையில் இருக்கவும், உமக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கும் தொண்டு செய்யவும் எனக்குக் கற்பித்தருளும். உமது கொடைகளுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இவர்களது அடிச்சுவட்டில் :
லாரன்ஸைப் போன்று திருநூல்களைக் கற்பதற்கு நிறைய அறிஞர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கின்றனர். 1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதும் அட்லாண்டாவைத் தலைமையிடமாகவும் கொண்ட விவிலிய இலக்கிய சபை, உலக முழுவதும் உள்ள 8000 விவிலிய மற்றும் மறையியல் அறிஞர்கள் ஒன்று கூடும் இடமாகத் திகழ்கிறது. தலைப்புகள் பலவகைப்பட்டதும் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கிறதும் ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விவிலிய புத்தகங்களும், உரையாடல் பகுதிகளும்.
விவிலியம் சார்ந்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களும் செய்திகளும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மத்திய தரை உலகப்பகுதியிலுள்ள மக்களுக்கும் வள ஆதாரம் தருவது.
புண்ணிய பூமியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விவிலிய பகுதிகளுக்கு பொருள் காணுதல்.
கடவுளுடைய உலகை அதிகமாகப் புரிந்து கொள்ள உதவுபவர்களுக்காக ஜெபித்தலும்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 21
J}a
புனித பிராக்ஸிதெஸ்
பிறப்பிடம் : உரோம்
திருவிழா : ஜூலை 21
குணமாக்குதலும், உதவுதலும்
மறைசாட்சி
திருச்சபையின் மரபுப்படி, பிராக்ஸிதெஸ் என்பவர் பூடென்ஸ் எனும் ரோமன் செனட்டரின் மகளாவார். திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் இவர்களால் பூடென்ஸ் மனம் மாற்றம் பெற்றவர். இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் அந்தோனியஸ் பயஸ் ஆட்சி செய்தபோது பிராக்ஸிதெ‘ம் இவரது சகோதரி புடென்´யானாவும் இவர்களது தந்தை புடென்‘டன் வாழ்ந்து வந்தனர். உரோமை சாம்ராஜ்யத்தில் அந்தக்காலம் அமைதியும் செழுமையுமாய் இருந்தபோது, கிறிஸ்தவர்கள் அடிக்கடி பகைமையோடு நடத்தப்பட்டார்கள். மத சகிப்புத்தன்மை இல்லா உரோமையர்களிடமிருந்து தப்பிக்க, கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையை இரகசியமாக பின்பற்றினார்கள். வழக்கமாக தனியார் வீடுகளில் கூடினார்கள். இதில் பூடென்ஸ் வீடும் அடங்கும். கிறிஸ்தவர் என்று அறியப்பட்டால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் மேலும் பலர் கொலை செய்யப்படுவார்கள். 16 வயது நிரம்பிய பிராக்ஸிதெஸ் சகோதரியின் கதியும் அதுவாயிற்று. பிரிசில்லாவின் அடிநிலக் கல்லறையில், சலேரியன் முறைப்படி, இவரும் அடக்கம் செய்யப்பட்டார். பிராக்ஸிதஸ் சிறிதும் தீங்குறாமல் இருந்தார். ஜெபத்திலும் ஒறுத்தலிலும் முழுமையாக ஈடுபட்ட இவர் பிறருக்கு உதவியும் செய்து வந்தார்.
ஏழைகளின் துன்பத்தைப் போக்கவும், வளரும் திருச்சபைக்கு உதவவும் தனது செல்வத்தைப் பயன்படுத்தினார். ஆபத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு தனது இல்லத்தில் இடமளித்து மறைத்து வைத்து அவர்களைக் காப்பாற்றினார். சிறையிலிருப்பவர்களுக்கு ஆறுதல் வழங்கியும், மறைசாட்சிகளாக உயிர்நீத்தவர்களை அடக்கம் செய்தும் உதவினார்.
வீரத்தின் நினைவிடங்கள் :
பிராக்ஸிதெஸ் இறந்தபோது, அவரது தந்தை மற்றும் சகோதரியின் கல்லறை அருகில் அடக்கம் செய்யப்பட்டார். நான்காம் நூற்றாண்டில் இரண்டு ஆலயங்கள் கட்டப்பட்டன. ஒன்று அவரது இல்லத்தின் மேலும், மற்றொன்று அவரது தந்தையின் இல்லத்தின் மீதும் இந்த ஆலயங்கள் சாந்தா பிராஸிதெ மற்றும் சாந்தா புதென்சியானா உரோமிலுள்ள பழமையான ஆலயங்கள். பிராக்ஸிதெஸ் மற்றும் அவரின் சகோதரி புதன்ஸியானா இவர்களின் பெயர்கள் திருச்சபையின் நாட்குறிப்பேட்டில் (காலண்டரில்) இல்லை என்றாலும் அவர்களது வீரமிக்க உண்மைக் கதைகள் இன்னும் இன்றும் நம்பிக்கையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.
செபம் :
அன்புத் தந்தையே, பிறரது வெறுப்புக்கு ஆளான ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இந்த செபத்தை ஏறெடுக்கிறோம். அவர்களைத் துன்புறுத்தியவர்களின் இதயங்களுக்கு ஒளியையும் ஞானத்தையும் தந்தருளும். துன்புறுவோரை பாதுகாப்பதற்கு உதவிய மக்களுக்கு போதிய வீரத்தைத் தாரும். மேலும் உமது ஆறுதலையும் அவர்களது வேதனை தீரவும் உதவும். எங்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த இயேசு கிறிஸ்துவின் வழியாக நாங்கள் கெஞ்சிக் கேட்கிறோம். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
சரித்திரத்தில், யாருடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றனவோ அவர்களுக்காக பிராக்ஸிதஸ் போன்ற மக்கள் துன்பங்களை ஏற்று போராடுகிறார்கள். பிரான்ஸ் நாட்டில், நாசிக்கன் ஆக்ரமிப்பின்போது, ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்தந்தை ஜாக்குவஸ் தி ஜூஸஸ் என்பவர் இதேபோன்று, ஜெர்மனியில் யூதர்களுக்கும், இளையோருக்கும் கட்டாய கடின வேலைகள் கொடுக்கப்பட்டபோது, அவர்களுக்கு உறைவிடம் தந்து உதவி செய்தார். 1943 ஆம் ஆண்டு தந்தை ஜாக்குவஸ் செய்தவையாவண:
மூன்று யூத மாணவர்களை மாற்றுப் பெயரில் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.
நான்காவது சிறுவனை பள்ளியில் ஒரு வேலைக்காரனாக அமர்த்திக் கொண்டார்.
பிரபலமான யூத தாவயஇயல் பேராசிரியர் லூசியன் வீல் என்பவர் பள்ளியில் ஆசிரியராக பதிவு செய்து கொண்டார்.
ஒரு வருடத்திற்குப் பின்னர், கெஸ்டபோ படையினர் கார்மெலைட் துறவியையும் அவரது மூன்று யூத மாணவர்களையும் சிறைப்பிடித்து, வீல் குடும்பத்தாரையும் கைது செய்தனர். வீல்ஸ் குடும்பத்தினரும் மாணவர்களும் பின்னர் ஆஸ்விட்ஸ் என்னும் இடத்திற்கு கப்பலில் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் உயிர்நீத்தனர். தந்தை ஜாக்குவ‘ம் சிறையிலடைக்கப்பட்டாலும், அவர் போர் முடியுமட்டும் வாழ்ந்து பின்னர் எலும்புறுக்கி நோயினால் பாதிக்கப்பட்டு சில வாரங்கள் கழிந்து இறந்து போனார்.
1987 ஆம் ஆண்டு லூயிஸ் மல்லே என்னும் பிரஞ்சு திரைப்பட தயாரிப்பாளர், தனது முன்னாள் தலைமை ஆசிரியர் ஆரிவாயர் லே என்பான்ட்ஸ் என்பவரின் வலிமையைப் பாராட்டினார்.