வீரத்தைக் கண்டடைதல்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் 40 மறைசாட்சிகளில் ஒருவர்
1630 ஆம் ஆண்டளவில் ஜான் லாய்ட் என்பவர் செளத் வேல்ஸில் பிறந்தார். இளைருVக இருந்தபோதே குருத்துவத்தில் ஈர்க்கப்பட்டு, ஸ்பெயின் நாட்டில் வல்லடோலிட் குருமடத்தில் சேருவதற்கு ஜாண் தனது வீட்டை விட்டுச் சென்றார். 1653 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மறுவருடமே அவர் தனது சொந்த நாட்டுக்கு ஒரு மறைபரப்பாளராகத் திரும்பி வந்தார்.
அடுத்த இருபது ஆண்டுகள், ஜாண் தனது நாட்டிலுள்ள வேல்ஸ் கத்தோலிக்கர்களுக்கு சேவை புரிந்து வந்தார். அந்தக் காலக்கட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வாழ்ந்த கத்தோலிக்கர்கள் அங்குள்ள புரோடஸ்டான்ட் அரசினால் துன்புறுத்தப்பட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொல்வதற்கு கத்தோலிக்கர்கள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக பொய்யான வதந்திகளைக் கிளப்பி விட்டு, 1678 ஆம் ஆண்டளவில் அவர்கள் மீது தாக்குதல்களின் தீவிரம் அதிகப்படுத்தப்பட்டது. ஜாணை கைது செய்வதற்கு குறி வைத்து அவரது தலைக்கு விலை வைக்கப்பட்டது. திருப்பலி நிறைவேற்றுவது ஒரு சட்ட விரோதமான குற்றம் என்றிருந்த அந்த காலக்கட்டத்தில், அவரது உண்மையுள்ள பங்கு உறுப்பினர்கள், அவர் இரகசியமாக திருப்பலி நிறைவேற்றுவதை வெளிப்படுத்த மறுத்தார்கள்.
குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டவர் :
1678 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜாண் கைது செய்யப்பட்டு, வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மே மாதத்தில் அவரது வழக்கு தொடங்கியது. ஆனால் அந்த அதிகாரிகளுக்கு அவர் மீது குற்றம் சுமத்த போதிய சாட்சிகள் கிடைக்காததால், அவர்கள் விரக்தி அடைந்தனர்.
கடைசியாக வேறு வழியில்லாமல், ஜாணுக்கு எதிராக குற்றப்பழி சுமத்த, இரண்டு பெண்களுக்கு கையூட்டு கொடுத்து அழைத்து வந்தனர். அந்த அப்பாவி பெண்கள் அவருடைய திருப்பலியில் கலந்து கொண்டதாகப் பொய் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து ஜாண் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கத் தண்டனை பெற்றார்.
இறுதிவரை நம்பிக்கை உள்ளவர் :
மரணத்தின் நாள் வந்தபோது, ஜாண் இயேசுவின் வார்த்தைகளைக் கூறினார். நீதியின் பொருட்டு துன்புறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணக அரசு அவர்களுக்குரியதே (மத் 5 : 10), 1929 இல் ஜாண், வணக்கத்திற்குரியவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் 1970 இல் திருத்தந்தை 6 ஆம் பவுலினால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் 40 மறைசாட்சிகளுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.
செபம் :
விண்ணகத் தந்தையே, கிறிஸ்துவின் வார்த்தையையும், ஆவியையும், கடைசிவரை பின்பற்றும் அருளினை ஜானுக்கு நீர் அளித்தீர். உமது அன்புக்குரிய புனிதரின் வேண்டுதலினால் உமது பெயரைப் போற்றவும், எப்பொழுதும் உமக்கு சேவை புரியவும் எனக்கு பலம் தாரும், அதே வேளையில், தேவையிலிருக்கும் அருகிலுள்ள எனது சகோதரருக்கு உதவி புரியவும் வரம் தாரும். இவையயல்லாம் வல்லவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டுகிறேன். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
கட்டுக்கடங்காத மத வேற்றுமையினால் மட்டுமே ஜாணின் சாவு நிகழ்ந்தது. துரதிஷ்டவசமாக சூடான் நாட்டினைப் போன்று கிறிஸ்துவை எதிர்க்கும் அரசுகளினால் இன்றும் பல கிறிஸ்தவர்கள் கொடுமைக்குள்ளாகின்றனர்.
இஸ்லாமிய மத கொடுமைக்கு உள்ளானவர் அபுக் அஜிங் என்னும் பெண்மணி. அபுக் 14 வயதாயிருந்தபோது, இஸ்லாமிய போர்வீரர்கள் அவளது கிராமத்தை முற்றுகையிட்டனர். அவளது நண்பர்களும் உறவினர்களும் தப்பிக்க முடிந்தபோது, அபுக் தப்பிக்க முடியவில்லை. அவள் கிறிஸ்துவ நம்பிக்கையைத் துறந்து இஸ்லாம் மதத்தை தழுவுமாறு கட்டாயப்படுத்தினர். அதற்கு அபுக் மறுத்தபோது, அவர்கள் அவரை பலவிதமாகத் துன்புறுத்தினார்கள். அவள் இன்னும் அந்த தாக்குதலின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு கடுமையான உடல் வேதனை, குறிப்பாக அவளது முதுகுப்புறம். அவள் உணர்ச்சிவயப்பட்டு எப்பொழுதும் பயத்துடன் இருக்கிறாள். ஜாண் லாயிட்டைப் போன்று, உடல் துன்பத்தை தாங்கிக்கொண்டு தனது நம்பிக்கையில் உறுதியாய் இருந்தார்.
பரிதாபமாக, மற்ற சூடானிய கிறிஸ்தவர்களும் இதேபோன்று உபாதைக்கு உள்ளாயினர். அபுக்கின் நிலைமை உலகில் இதுபோன்று நிகழ்வுகளை வெளியிடும் மறைசாட்சியின் குரல் என்ற பத்திரிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் அவர்களது முயற்சிகளை அறிய கனினியில் ழழழ.ஸ்ரீerவிeஉற்மிஷ்லிஐ.உலிது என்ற முகவரியில் காண்கவும். அவர்கள் உதவி செய்ய முயற்சிக்கும் மக்களுக்காக ஜெபிப்போம்.
நற்செய்தி நூலில் குறிப்பிட்டபடி, மேரி மெக்தலின் இயேசுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய சீடராவார். இவர்களுடைய நட்பு மேரியிடமிருந்த பசாசை இயேசு விரட்டியபோது தொடங்கியது. அவரால் ஈர்க்கப்பட்டு, மேரி இயேசுவோடும், 12 திருத்தூதரோடும் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டே கிராமங்களுக்கெல்லாம் பயணம் செய்தார்.
இயேசுவோடு இறுதிவரை உடனிருந்தவர்களில் மேரியும் ஒருவராவர். அவர் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டபோது அவர் அழுது கொண்டே இருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் கல்லறைக்குத் திரும்ப சென்றபோது கல்லறை காலியாக இருப்பதைக் கண்டார். இயேசு வாக்களித்ததுபோல், உயிர்த்தெழுந்துவிட்டார் என்று வானதூதர் அறிவிக்கும் வரைக்கும், மேரி மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்தார். சில நிமிடங்களுக்குப் பின்னர், இயேசு, மேரிக்கு ஆறுதல் கூறினார். மேலும் இயேசுவின் மற்ற சீடர்களுக்கு அவரது உயிர்ப்பு பற்றி அறிவிக்குமாறு மேரியை அனுப்பினார்.
மாறுபட்ட பாரம்பரியம் :
கிழக்கத்திய பாரம்பரியப்பட, மேரி மெக்தலின் பின்னர் திருத்தூதர் யோவானோடும், மரியாவோடும் எபேசுக்குச் சென்றார். மேரி மெக்தலின் அங்கு இறந்ததாகக் கருதப்படுகிறார். மேலும் அவரது உடல் கான்ஸ்தான்டி நோபிளில் வைத்து நூற்றாண்டுகளாக வணங்கப்பட்டது. மேரி, யோவானை மணந்து கொண்டார் என்பது ஒரு பாரம்பரியம் ஆகும்.
மேரி மெக்தலின், மார்த்தா, லாசரஸ் மற்றும் சிலர், துடுப்பில்லாத ஒரு படகில் ஏறி பாலஸ்தீனம் சென்றடைந்ததாக மேற்கத்திய பாரம்பரியம் கூறுகிறது. அவர்கள், இறுதியாக தெற்கு பிரான்ஸ் நாட்டு கடற்கரைக்கு படகில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேரியும் மற்றவர்களும் பிரான்ஸ் நாட்டில் நற்செய்தியைப் பறைசாற்றி அங்கு கிறிஸ்துவ மதம் பரவுவதற்கு மூலாதாரமான பணிகளை மேற்கொண்டனர்.
இவரது வாழ்க்கையின் மகத்தும் :
மேற்கத்திய நாடுகளில் எட்டாவது நூற்றாண்டிலிருந்து மேரி மெக்தலினின் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் இவரது பெயரில் இரண்டு கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு இவர் பெயர் விளங்கச் செய்துள்ளனர்.
செபம் :
தந்தையே, உமது மகனின் மகிழ்ச்சியான உயிர்ப்புச் செய்தி மேரி மெக்தலினுக்கு வழங்கப்பட்டது. அவரது செபங்களினாலும் முன் மாதிரிகையினாலும், கிறிஸ்துவை எங்களது வாழும் கடவுளாக அறிக்கையிடவும், ஒருநாள் அவரை மகிமையோடு நேரில் காணவும் செய்தருளும். அவர் உம்மோடும் தூய ஆவியோடும் ஒன்றித்து ஒரே கடவுளாக என்றென்றும் வாழ்கிறார்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மேரி மெக்தலின் தனது இதயத்தில் கடவுளை வரவேற்றார். மேலும் இயேசுவின் வழியாக அவரது வாழ்க்கையைத் தொடுவதற்கு அனுமதித்தார். அவர் இயேசுவை நேசித்தார். மேலும் அவரை முழுமையாக பின்பற்றினார். அவருக்கு பணி செய்வதின் மூலமும் இயேசுவின் உயிர்ப்பு நற்செய்தியை அறிவிப்பதின் மூலமும் அவர் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இயேசு கற்றுக்கொடுத்தபடி வாழ்ந்து நாமும் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த முடியும். ஒருவர் மற்றவரை நேசிப்பதின் மூலமும், எவ்வாறு பிறர் நம்மை நடத்த வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறே நாமும் பிறரை நடத்தி இயேசுவின் இந்தப் பொன்மொழியை செயல்படுத்துவோம்.
பிறரை மதிப்போம். வீண் பேச்சி பேசாமலும், பிறரை வஞ்சிக்காமலும் பொய் பேசாமலும் இருப்போம்.
உன்னை நேசிக்கச் செய்கிறவர்களை மன்னித்து விடு, மனவெறுப்புக் காட்டாதே.
நேர்மறையான எண்ணம் கொண்டிரு. பொறுமையாயிரு. பிறரைப் புரிந்துகொள், குறிப்பாக கடினமான சூழலில் தாராளமாயிரு. உனது பணத்தை கொடுப்பதில் மட்டுமல்லாது உனது நேரத்தையும் சக்தியையும் உனது கவனிப்பையும் கொடுப்பதிலும்.
உனது பெற்றோருக்கும், வாழக்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் செவிகொடு. தூரத்தில் வாழும் குடும்பத்தார் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிரு.
உனக்கு அன்பு காட்டுவதற்கு பிறரை அனுமதி. உனக்குத் தேவைப்படும்போது உதவி கேட்கத் தயங்காதே.