ஜுலை 23 வணக்கத்திற்குரிய மெர்சிடஸ் பிராட் வை பிராட்
வணக்கத்திற்குரிய மெர்சிடஸ் பிராட் வை பிராட்
பிறப்பிடம் : பார்சிலோனா
திருவிழா நாள் : ஜூலை 23
தடைகளைக் கடந்து
ஒரு மறைசாட்சி
பார்சிலோனாவில் ஒரு எளிய பக்தியுள்ள குடும்பத்தில் 1880 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள் மரியா மெர்சிடஸ் பிறந்தார். ஐந்துபேர் உடன் பிறந்தோர். அதில் இரண்டு பேர் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். இயேசுவின் புனித தெரசா சபையினர் நடத்திய பள்ளியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் விடுதியில் தங்கி பயின்று வந்தார். ஆனால் அங்கு பணம் கட்ட இயலாமல் அங்கிருந்து செல்ல நேர்ந்தது. அவரது பெற்றோர் இறந்த பின்னர், அவள் பள்ளியில் தங்கி படிப்பையும் சாமர்த்தியமாக சமாளித்து வீட்டையும் நிர்வகித்து சகோதரர்களையும் வளர்த்து வந்தார். அவர்களுக்கு தேவையான பண உதவியும் செய்து ஆன்மீக ஆறுதலையும் தந்தார். ஹென்றி டி ஓஸோ தொடங்கிய இயேசுவின் புனித தெரேசா மற்றும் மேரியின் மகளிர் சபையில் அவர் சேர்ந்தார். பணிக்குச் செல்லும் ஏழைகளின் குழந்தைகளுக்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுத்தந்தார்.
அவளுடைய அந்தக் குழந்தைகள் வளர்ந்தபோது, அவர்களே தங்களைக் கவனித்துக்கொள்ள முடிந்தபோது, மெர்சிடஸ் இறுதியாக தனது வாழ்வின் கனவுகளை நிறைவேற்றி வைத்தார். 1904 ஆம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் மடத்தில் பயிற்சிக்காலம் முடிந்தபின் அவள் இறையியல் வார்த்தைப்பாடு கொடுத்தார். இளையோருக்குக் கல்வி கற்பித்தலிலும் அவர்களை வளர்ப்பதில் அவர் எப்போதும் ஈடுபாடும் கொண்டு விளங்கினார். இயேசு ஒரு நல்லாசிரியர் என்ற பத்திரிக்கையின் முன்னேற்றத்திற்கும் அவள் அரும்பணியாற்றி வந்தார்.
தந்தையே, அவர்களை மன்னியும் :
1936 ஆம் ஆண்டு, ஸ்பெயினில் உள்நாட்டு கலகம் மூண்டபோது, மரிய மெர்சிடஸ் அவளது நண்பர்கள் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தார். ஜுலை 24 ஆம் கம்யூனிச படையினரால் அவளுடன் சேர்ந்த சகோதரிகள் மற்றும் குருக்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு வரப்பட்டு சாவு நிறைவேற்றும் படையின் முன்னர் நிறுத்தப்பட்டனர். சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு பல மணிப்பொழுது வேதனைக்கு ஆளானார். தன்னை கொடுமைக்குள்ளானவர்களுக்காக செபித்துக் கொண்டே அவர்களை மன்னித்தார். விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தையே என்ற இயேசு கற்பித்த செபமே அவரது இறுதி செபம் ஆயிற்று. அருகில் சென்ற போர்வீரன் ஒருவள் அவளைக் கொன்றான். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் அவள் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.
செபம் :
உம்மைத் துன்புறுத்தியவர்களை உமது திருத்தந்தைக்கு அன்போடு ஒப்புக்கொடுத்த ஆண்டவராகிய இயேசுவே, மன்னிப்புக்கு ஒரு நல்ல உதாரணமாக நீர் விளங்குகின்றீர். அண்மையிலுள்ளோரை உண்மையாக நேசிக்க வழி செய்யும். உமது சட்டத்தை கடைப்பிடிக்க உமது அருளும் முன்னுதாரணமும் எங்களுக்கு உதவி செய்யட்டும். எங்களுக்காக வாழ்ந்து எந்நாளும் ஆட்சி செய்கின்றவரே, ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மெர்சிடஸ் பிராட் ஒய் பிராட், மனதளவில் காயப்படுத்தப்பட்டாலும் பலமணி நேரமாக, அவரை துன்புறுத்தியவர்களுக்காக மன்னிப்பு வேண்டினீர். விவிலிய நற்செய்தியின்படி, மன்னிக்கும் மனம், வாழ்வின் ஒரு முக்கியமான கட்டளையும் இயேசுவின் மீது நமது அன்பையும் நமது பணிவையும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவும் விளங்குகிறது. புனித பவுல் உரைப்பதாவது (எபே 4 : 26). சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தனியட்டும். ஒரு நாளுக்கேனும் உன்னுடைய இதயத்தில் கோபத்தைக் கொண்டிருக்காதே. கோபம் உன்னை ஆட்கொண்டு உனது அருகிலுள்ள சகோதரனை வெறுப்படையச் செய்யக்கூடாது.
மன்னிப்பது ஒரு பலவீனம் என்று அடிக்கடி நினைக்கிறோம். என்னை மன்னிப்பாயாக, என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறோம். இதைப்பற்றி சிந்திப்போம். ஒவ்வொரு நாளும் மன்னிப்பதற்கு தயாராயிருக்கிறோமா அல்லது பிறர் நம்மை மனம் நோகச் செய்யும்போது அல்லது வேறு கருத்தை வெளியிடும்போது கோபம் கொண்டு அவரை எதிர்க்கிறோமா, உனது கையை நீட்டி சமாதானம் செய்து கொள்கிறோமா, கருத்து வேறுபட்டாலும் அவர்களை பொறுத்துக் கொள்கிறோமா, இது அடிக்கடி கடினமான செயலாகும். ஏனெனில், அது உன்னையே அறிந்து கொள்ள அவசியமாகிறது. உன்னுடைய செயல்களை சீர்தூக்கிப் பார்த்து கீழ்க்கண்ட கேள்வியை கேட்கச் செய்கிறது.
நான் உண்மையிலேயே அடுத்தவரை நேசிப்பவராகவும், மன்னிப்பவராகவும் இருக்கின்றேனா!
லி.ஜெ. ஜோசப்
|