ஆறுதல் நாடிச்செல்
குடும்பம் அமைப்பவர்களுக்கும், குழந்தை பெறும் பெண்களுக்கும் கனடா நாட்டு மக்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாவலி
கன்னிமரியாவின் தாயாரும் இயேசுவின் பாட்டியுமான இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அன்னாள் என்று அழைக்கப்பட்டார். சரித்திரபூர்வமான பதிவுகள் இல்லாததினால் பாரம்பரியம் வழியாகவே அவரது பெயரும் மற்ற விவரங்களும் நமக்கு தெரிய வருகின்றன.
அன்னாள் கலிலேயாவில் வாழ்ந்ததாகவும், யூதா குலத்தில் பிறந்தவராகவும் சொல்லப்படுகிறது. ஜோக்கிம் என்ற தனது கணவரை மணந்தபோது, தனது முதல் குழந்தையை கடவுளின் பணிக்கு அர்ப்பணிப்பதாக அன்னாள் உறுதி ஏற்றாள். ஆனால் பல ஆண்டுகளாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க இயலவில்லை.
இறுதியாக, குழந்தையில்லாமல் இருப்பதால் ஏமாற்றமும் இகழ்ச்சியும் அடைந்து ஜோக்கிம் ஜெப தவம் செய்தவற்காக தனது உதவியாளçர்கள் சிலருடன் பாலை நிலத்திற்குச் சென்றார். ஜோக்கிம் எங்கிருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் தெரியாமல் தனியாக இருந்த அன்னாள் கவலையோடும் எதிர்பார்ப்போடும் ஐந்து மாதங்கள் மெதுவாகக் கடந்தன.
ஒரு வானதூதரின் குறுக்கீடு :
கடைசியாக ஒரு வானதூதர் அன்னாளுக்குத் தோன்றி, கடவுள் அவரது வேண்டுதலை கேட்டருளினார் என்றும் உலகில் மற்றவரைப்போல அவரும் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார் என்றும் கூறினார் ஜோக்கிம் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருக்காக நகரின் தங்கத்தடுப்பு என்னும் நுழைவாயிலில் காத்திருக்க வேண்டும் என்றும் வானதூதர் அவருக்கு செய்தி சொன்னார். இந்த வானதூதரின் குறுக்கீட்டினாலும் அவரின் செய்தியினாலும் அன்னாள் மிகுந்த பயத்திற்குள்ளானாள். என்றாலும், அவள் கீழ்ப்படிந்து, தனது கணவரின் வருகைக்காக காத்திருக்க விரைந்து சென்றாள். ஜோக்கிம் வந்து சேர்ந்தபோது, வானதூதர் அவருக்கும் தோன்றி அறிவித்திருந்ததனால் அவர் ஏற்கனவே அந்த மகிழ்ச்சி தரும் செய்தியை வரப்போகும் குழந்தையை அறிந்திருந்தார்.
அந்த வானதூதர் சொல்லியதுபோல்,அன்னாள் ஒரு மகளைப் பெற்றெடுத்தார். மேலும் அவர்கள் அவளுக்கு மேரி என்று பெயரிட்டனர். அன்னாளும் ஜோக்கிமும் எருசலேமுக்குப் பயணித்து, குழந்தை மூன்று வயதாகியிருக்கும்போது, மேரியை கோவில் பணிகளுக்கு அர்ப்பணித்தனர். குழந்தை மேரி நடந்து சென்று தனியாகவே கோவில் படிகளில் பயமின்றி ஏறி உள்ளே சென்றாள். இந்த அர்ப்பணிப்பின் வழியாக, அன்னாள் ஜோக்கிமை மணந்தபோது கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றினாள்.
செபம் :
எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, ஒவ்வொரு உயிரினங்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் பாம்புகளுக்கும் பறவைகளுக்கும் மீன் இனங்களுக்கும் வழிமரபை உண்டாக்குபவரே, அவை அனைத்தும் தங்களது ஈற்றுக்களின் பேரில் அகமகிழ்ந்து கொண்டாடுகின்றன. உமது அருளுடைமை என்னும் அன்பளிப்பிலிருந்து நீர் என்னை விலக்கினாலும், ஆண்டவரே, நீர் எனது உள்ளத்தை அறிந்திருக்கிறீர். எனது திருமண வாழ்வின் தொடக்கத்திலிருந்து, ஆண்டவரே நீர் எனக்கு ஒரு மகனோ மகளோ அளித்தீர் என்றால் அவர்களை உமது ஆலயத்தின் திருச்சந்நிதியில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
இவர்களது அடிச்சுவட்டில் :
மேரிக்கு ஒரு நல்ல தாயாக அன்னாள் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. விவிலிய கலைப்பாடங்களை மேரி வாசிக்க அன்னாள் கற்றுக்கொடுத்தார். குழந்தைகளோடு சேர்ந்து படிப்பது அவர்களுக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாகும். அவர்கள் புத்தகங்களை பாராட்டக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல ஆனால் அதிமுக்கியமாக, ஒரு இளைஞரின் சிதறாத நெருக்கமான கவனத்திலிருந்தும் அவர்கள் பயனடைகிறார்கள்.
உங்களுக்கு உங்கள் குழந்தைகள் இல்லையயன்றால், உங்கள் அருகாமையிலுள்ளவர் அல்லது உறவினர் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முன் வாருங்கள். பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளும் பொது நூலகங்களும், அருகிலுள்ள சமூகத்திலிருந்து ஒரு பழக்கமான ஆசிரியரை அமர்த்திக் கொள்கிறார்கள். மேலும் கவனத்தில் கொள்க :
ஒரு வழக்கமான படிக்கும் நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனதை இலகுவாக்கும் ஒரு செயல்பாடு - வாசிப்பு ஒரு குழந்தைக்குத் தூங்கச் செல்லுமுன், மனதை ஆறுதல் படுத்தும்.
உற்சாம் தரும் செயல் ஒன்றை தெரிவு செய்யுங்கள். குழந்தைகள் புத்தகத்திலிருந்து படிக்க வேண்டுமென்று அவசியமில்லை. உற்சாகமூட்டும் படங்கள் நிறைந்த பத்திரிக்கை ஒன்று, ஒரு நல்ல விவாதப் பொருளாக அமையலாம். குழந்தைகள் இயற்கையாக, புதிதாகக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். மேலும் அந்தப் படங்களைப் பற்றி விளக்கிச் சொல்லக் கேட்பார்கள்.
தகுந்த இடைவெளியுடன், அவர்கள் படிக்கும் பகுதியில், அடிக்கடி கேள்விகள் கேட்டு உற்சாகப்படுத்துங்கள்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 26
வணக்கத்திற்குரிய டைட்டஸ் பிரான்ட்ஸ்மா
வணக்கத்திற்குரிய டைட்டஸ் பிரான்ட்ஸ்மா
பிறப்பிடம் : ஓஜிக்லூஸ்டர், நெதர்லாந்து
திருவிழா நாள் : ஜூலை 26
அமைதியை ஏற்படுத்துபவர்
ஒரு மறைசாட்சி
ஒரு டச்சு விவசாயக் குடும்பத்தில் 1881 ஆம் ஆண்டு, அன்னோ சோயர்ட் பிரான்ட்ஸ்மா பிறந்தார். அந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான குடிமக்கள் கால்வானியர்கள் ஆவர். இந்த சூழலில் அன்னோ குடும்பத்தின் பல தலைமுறைகளாக கத்தோலிக்க பாரம்பரியத்தை தழுவியர்கள். அவரது மூன்று சகோதரிகள் அருள் சகோதரிகளானார்கள். மேலும், அன்னோ பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் சிறப்புற்று விளங்கினார். அதனால் அவரது பெற்றோர் அவருடைய கல்விக்காக அதிகம் செலவு செய்யவில்லை. அவர் பல மொழிகளில் திறமை பெற்றிருந்தார். ஆனால் மொழிகள் அல்லாமல், தத்துவஇயல் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். தனது 28 ஆவது வயதில் அவர் டாக்டர் பட்டம் பெற ஆய்வறிக்கை சமர்ப்பித்தார். விரைவில் கார்மலைட் குருமடத்தில் சேர்ந்தார்.
அன்னோ சோஜார்ட் பிரான்ட்ஸ்மா, டைட்டஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டு, நிஜ்மிகன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அவர் ஆராய்ச்சி மேற்கொண்டு திருச்சபை சட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மேலும் வேலை தேடுவோர்க்கு உதவி செய்தார். தன்னை படிக்க வைத்து நல்வழியில் வளர்த்தெடுத்த பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருந்தார். அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
பொதுவுடைமை எதிர்ப்புக்கு சவாலானவர் :
நாசி கழகத்தினர் ஜெர்மனியில் ஆட்சியைப் பிடித்தபோது, யூதர்கள் துன்புறுத்தப்படுவது தொடங்கியது. டைட்டஸ் தந்தையவர்கள், இனவாரியான மக்களைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் ஒருவராயிருந்தார் அவர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து, நல்ல கத்தோலிக்கர் இனப்பாகுபாடு பார்க்கக் கூடாது என்று போதித்து வந்தார். அவரது நடவடிக்கைகள் ஜெர்மானியர்களால் கண்காணிக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டில், நாசிக்கன் நெதர்லாந்தை கைப்பற்றியபோது, çட்டஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அமெர்ஸ்போர்ட் தண்டனை பாசறையில் வதைக்கப்பட்டார். அடுத்து அவர் தாட்சுவுக்கு அனுப்பப்பட்டார். எண்ணற்ற நேரங்களில் உதைக்கப்பட்டும், மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டும் 1942 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
செபம் ;
ஆண்டவரே, ஒவ்வொரு நாளும், எங்களது பக்தியையும், பணிவையும் உறுதிப்படுத்த, உமது விருப்பம் நிறைவேறுக என்று மன்றாடுகிறோம். எங்களது நம்பிக்கையையும், எண்ணங்களையும் தகர்க்கும் பயத்திலிருந்து எங்களைக் காப்பாற்றும். நீர் அனுமதிக்கும் வாழ்வின் சோதனைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்ள பலம் தாரும். ஆபத்துக்களின் நடுவிலே துணிவு பெற நாங்கள் மன்றாடுகிறோம்.
இவர்களது அடிச்சுவட்டில் :
வணக்கத்திற்குரிய டைட்டஸ் பிரான்ட்ஸ்மா, எல்லா மக்களும் சமம் என்னும் கொள்கையை நிலைநிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தார். இனப்பாகுபாட்டை எதிர்த்து நின்றார். இரண்டாம் உலகப்போர் முடிந்து 50 வருடங்கள் ஆனபிறகும், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான பொல்லாங்கு முடிவுக்கு வரவில்லை. அதனாலேயே இரண்டு மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியிருந்தது.
கிறிஸ்தவர்களின் போலிஷ் கவுன்சிலும், யூதர்களும் இது குறித்து பேசுகிறார்கள். சகிப்புத்தன்மை மற்றும் ஒரே மாதிரியான வாதங்களை விலக்கவும் முயற்சிக்கிறார்கள். கத்தோலிக்க மறையிலிருந்து குருக்களும், ஐக்கிய யூத இனத்து உறுப்பினர்களும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். முற்சாய்வை தடுக்கவும் இந்த கவுன்சில் வருடம் ஒருமுறை கத்தோலிக்க திருச்சபையில், யூத இன நாள் அனுமதிக்கப்பட்டு வார்சா கெட்டோ நினைவிடத்தில் செபக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
போலந்து நாட்டு கிறிஸ்தவர்களும், யூதர்களும் ஒவ்வொரு ஆண்டும், சமரச தலைவர் என்ற பரிசினை வழங்குகிறார்கள். இந்த முறையில் இரண்டு மதத்தினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ போலந்து நாட்டுக்கு வெளியே உள்ள ஒருவரை தேர்வு செய்து மேன்மைப்படுத்துகிறார்கள்.