பிறப்பிடம் : லினேர்ஸ், ஸ்பெயின்
திருவிழா நாள் : ஜூலை 27
கற்பித்தலும், பகிர்தலும்
டெரிசியன் நிறுவனத்தை தொடங்கியவர், போரில் உயிர்தியாகம் செய்தவர்
பீட்ரோ பொவிடா காஸ்ட்ரோவெர்டி என்பவர் 1874 ஆம் ஆண்டு லினார் மாநிலத்தில் அன்டலுசியன் நகரில் பிறந்தார். புதிய அறிவுப்பூர்வ போக்கு கொண்ட, பொறுமையுள்ள கத்தோலிக்க குடும்பத்திலிருந்து தோன்றியவர். தனது 15 ஆவது வயதில் ஜாயனிலுள்ள கீழ்மட்ட குருமடத்தில் சேர்ந்தார். மேலும் மறைமாவட்ட ஆயரின் உதவித்தொகை பெற்றபின்னர், காடிக்ஸ் என்னுமிடத்தில் தத்துவ இயலும், மறையியலும் பயின்றார். 1879 ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றபின்னர் சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த நாட்களில் சமூக ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் பொருட்டு, காடிக்ஸின் ஏழை மக்களுக்காக, அவர் அநேக பள்ளிகளையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கினார். விரைவில் அவரது செயல்பாடுகள் பாராட்டப்பெற்றன. கொவடான்கோ பேராலயத்தின் அதிபர் ஆனார். கொவடான்கோவுக்கு வரும் திருப்பயணிகளைக் கவனித்துக் கொண்டார்.
தந்தை பீட்ரோவின் செயல்பாடுகள், அந்தக் கல்வி முறையில் புத்தாக்கக் கருத்துக்களை உருவாக்கின. குருபயிற்சி கல்வியில், ஆசிரியரியலில் கடைசியாகப் பெற்ற வெற்றிகளையும் புகுத்திக்கொள்ள அவர் கவனம் செலுத்தினார். மேலும், அவர் புது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை உருவாக்கும் முயற்சியை ஆதரித்தார். ஒவிடோவில் 1911 ஆம் ஆண்டு நிறுவிய கல்வி கற்பிக்கும் மையமும், ஆசிரியர் பயிற்சி மையமும் அவரது பல்வேறு முயற்சிகளில் அடங்கும். அவர் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பாடத்திட்டம் தயார் செய்தார். புனித அவிலா தெரசாவை காப்பாளராகக் கொண்ட புகழ்வாய்ந்த தெரெசியன் நிறுவனம் 1917 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இவரால் நிறுவப்பட்டது. 1930 ஆண்டளவில் மாட்ரிட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் குருத்துவப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார்.
ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் மூன்டபோது, கம்யூனிசவாதிகளால் தந்தை பெட்ரோ காஸ்ட்ரோவர்டி கைது செய்யப்பட்டு அடுத்தநாளே மக்களின் எதிரி என்று எட்டம் கட்டி கொலை செய்யப்பட்டார்.
1993 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் தந்தை பெட்ரோ பொவிடா காஸ்ட்ரோவெர்டி, திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் அவர்களால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
செபம் :
யாருடைய திறனாய்வுக்கும் அஞ்சாமல் தங்களைச் சுற்றியுள்ள அயலாரின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் உமது திட்டத்தை செயல்படுத்தும் எல்லோருக்காகவும் நாங்கள் உமது தாங்குதலையும் உமது உதவியையும் நாடுகிறோம். அவர்களது வாழ்க்கையின் குறிக்கோளை அடைய, அவர்களது நம்பிக்கை பலமூட்டுவதாக இருப்பதாக. உமது புகழைப் பறைசாற்றும் அவர்களது பணிகள் நிலைத்திருக்கவும் அவர்கள் இடையூறு எதுவும் எதிர்கொள்ளாமல் பணியாற்றவும் நாங்கள் உம்மை வேண்டுகிறோம்.
இவர்களது அடிச்சுவட்டில் :
பீட்ரோ பொவிடோ காஸ்ட்ரோவெர்டி ஒரு தன்னிகரற்ற ஒரு ஆசிரியர். இளைஞர்களுக்காக பள்ளிகளையும் கல்வி நிறுவனங்களையும் ஏற்படுத்த தனியார் பள்ளி நிறுவனங்களோடு ஒத்துழைத்தார். பெண்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அவர் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு அவர்களுக்காக அவர் தெரசா நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். ஆன்மீக முன்னேற்றத்தில் பலன் தரக்கூடியதாகவும், கற்பித்தலில் முன்னேற்றம் காணக்கூடியதாகவும் இந்த பொதுநிலையினரின் நிறுவனம் அமைந்திருந்தது.
இப்போது ஆண்களும், பெண்களும் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருள்ளும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தங்களது அன்றாட வாழ்க்கையில் அவர்கள் ஏழ்மை, கற்பு மற்றும் கடவுளுக்குக் கீழ்படிதல் ஆகிய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழ்கிறார்கள். இந்த வழிகளில் எந்த நிலையிலும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை அடைய விரும்பாமல், வாழமுடியும் என்று நிரூபிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானவற்றை மட்டும் அடைய முயற்சிக்கிறார்கள். அவர்கள், மற்ற மக்களைப் போல அவர்களது தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தங்களையே கடவுளுக்கு அர்ப்பணம் செய்வதன் மூலம், அவர்கள் மக்களுக்கு சேவைபுரிவதில் தங்களையே அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அவர்கள் புதிய மனமாற்றத்திற்கு வழிகாட்டுகிறார்கள்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 27
ஓரித்தின் தூய கிளெமென்ட்
ஓரித்தின் தூய கிளெமென்ட்
பிறப்பிடம் : மாசிதோனியா
திருவிழா நாள் : ஜூலை 27
மாசிதோனியாவின் பாதுகாவலர், பல்கேரியாவின் ஏழு திருத்தூதர்களில் ஒருவர்
தத்துவஞானி கான்ஸ்ட்டாடைன் (தூய சிரில்) மற்றும் மாராவியாவின் உயர் ஆயர் மெத்தோடியஸின் சிடராக இருந்தவர் கிளெமென்ட் என்பவர். அவரது ஆன்மீக குரு மெத்தோடியலின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மானியர்களின் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க தனியூப் நகரின் குறுக்கே கடந்து, கிளெமென்ட், பல்கேரியா போய்ச் சேர்ந்தார். பல்கேரியாவின் அரசர் முதல்போரிஸ் என்பவர் தனத நாட்டு மக்களின்,அரசு மதமாக, கிறிஸ்துவத்தை சமீபத்தில்தான் அறிவித்திருந்தார். மேலும் கிளமெண்ட், நகூம், அஞ்சலெரியஸ், சபா மற்றும் கோராஸ் என்ற உயர்ஆயரின் சீடர்களையும் அனுமதித்திருந்தார். மெத்தோடியஸ் மற்றும் சிரில் இவர்களுடன், இந்த சீடர்களும் சேர்த்து மொத்தம் பல்கேரியாவின் ஏழு சீடர்களும் சிறப்பு செய்யப்பட்டார்கள்.
போரிஸ் அரசர், உரோம் மற்றும் கிரீஸ் நாட்டுடன் தொடர்பில்லாத, சிலாவிக் திருச்சபையை விரைந்து நிறுவ, கிளெனென்ட்டை தெரிவு செய்தார். கிறிஸ்தவ பகுதிகளான ஒக்ரித் மற்றும் டிவோல் நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு, மாசிதோனியாவிலுள்ள சால்விக் குரு பயிற்சி இல்லத்திற்கு ஆசிரியராகவும், சமயப் பரப்பாளராகவும் கிளெமென்ட் பணியாற்றினார்.
பல்கலைக் கழகத்தை நிறுவியவர் :
ஓரித்தில், கிளெமென்த்தும் குருத்துவத்தில் சகோதரரான நகூமும் சால்விக் நாகரீகம் மற்றும் கிறிஸ்துவ படிப்பு சம்பந்தமான முதல் சால்விக் பல்கலைக் கழகத்தை நிறுவினர். ஓரித்தில் படித்த மாணவர்கள் வரலாறு, சட்டம், தத்துவஇயல் மற்றும் மருத்துவம் படித்தனர். மேலும் கல்வி மற்றும் மதம் சார்ந்த புத்தகங்களை சால்வோனிக் மொழியில் மொழிபெயர்க்க, அர்ப்பணிப்பு உணர்வுடன், பலமணி நேரங்களை செலவிட்டனர். கிளெமென்ட் பல்கலைக்கழக ஆசிரியராகவும் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்தபோது 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை அங்கு பெற்றனர். பெரும்பாலானோர் படிப்பாளர்களாகவும், பாடகர்களாகவும், குருமாணவர்களாகவும், குருக்களாகவும் ஆயினர்.
893 ஆம் ஆண்டளவில் சிமியோன் என்னும் போரிஸின் மகனும் வாரிசுமான சிமியோன் என்பவரால் கிளெமென்ட் உயர் ஆயராக நியமிக்கப்பட்டார். மாசிதோனியா முழுவதும் சால்விக் திருச்சபையை விரிவுபடுத்தி நிறுவுவதில் கிளெமென்ட், தனது புதிய பொறுப்பில் தொடர்ந்து ஈடுபட்டார். 916 ஆம் ஆண்டு கிளெமென்ட் உயிர்நீத்தபோது, ஒக்ரித் ஆற்றின் கரையோரம் அவர் கட்டியயழுப்பிய தேவாலயத்தில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நாள் வரையில், அவரது திருப்பண்டம் (திருஉடலின் பகுதிகள்) அற்புதமான குணமளிக்கும் ஆற்றல் கொண்டு விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.
செபம் :
கடவுளுடைய நம்பிக்கைக்கு எங்களை உண்மையுடன் அழைத்துச் செல்கிறீர். உமது அரும் செயல்களால், நீர் மாட்சிமைப்படுத்தப்படுகிறீர், எப்போதும் நேர்மையான ஆசீர்வாதமான விண்ணக வாழ்வுக்கு வழிநடத்துகிறீர். உம்மை உண்மையிலேயே பின்பற்றும் மக்களுக்கு உமது அரும்செயல்களினால் மகிழ்வுறச் செய்கிறீர். எப்போதும் முன்னுதாரணமாகவும், இருளின் ஒளியாகவும், மகிமையாகவும் விளங்குகிறீர். இதனால்தான், புனிதரான தூய கிளெமெந்துவே, நாங்கள் உம்மைக் கொண்டாடுகிறோம். உமது பெயரால் நாங்கள் செபிக்கிறோம். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
கிளெமென்ட் தோற்றுவித்த இளமைக்கால ஐரோப்பிய திருச்சபை பல மனித குல அமைப்பக்களான இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான, பன்னாட்டு அனுப்புதல் நிறுவனம் (றீeஐd ணூஐமிerஐழிமிஷ்லிஐழியி னிஷ்விவிஷ்லிஐ) தொலைகிழக்கு நற்செய்தி பணிக்குழு என்று அழைக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 1981 இல் இந்த நிறுவனத்தின் பெயரை, தங்களது உலகளாவிய மையப்பணிகளை எதிரொலிக்கும் வகையில் மாற்றியமைத்தார்கள். இன்று, 20 நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட சமையப் பரப்பாளவர்கள், திருச்சபை இல்லாத இடங்களில் திருச்சபையை ஏற்படுத்தவும், இருக்கின்ற இடங்களில், சேவையாற்றவும் இந்த நிறுவனத்தில் சேர்ந்து உழைத்து வருகிறார்கள். பல்கேரியாவில் பன்னாட்டு அனுப்புதல் நிறுவனத்தின் செயல்பாடுகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்குவனவாகும்.
ஏழைக் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகள்.
பல்கேரியாவின் விவிலிய அகாதமிக்கு பொருளாதார மற்றும் கற்பித்தல் உதவிகள்.
ஆயர்கள் மற்றும் நம்பிக்கை நற்செயல்கள் பயிற்சி.
புதியதாக ஆலயங்க், சபைகள் ஏற்படுத்துதல்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 27
தூய பேன்டாலியோன்
தூய பேன்டாலியோன்
சுகம் தருபவரும், உதவுபவரும்
14 தூய உதவியாளருள் ஒருவர் மற்றும் மருத்துவர், செவிலியரின் பாதுகாவலர்
பேன்டாலியோன் (அல்லது பேன்டிலிமோன், இரக்கம் மிகுந்தவர்)
துறவு மேற்கொண்ட தந்தைக்கும் கிறிஸ்து தாய்க்கும் மகனாவார். அவரது தாயார் இபூலா கிறிஸ்துவ நம்பிக்கைபற்றி அவருக்குக் கற்றுக்கொடுத்தார் அந்த அறிவுசார் இளைஞர் மருத்துவம் பயின்று கலிரியஸ் பேரரசன் போன்ற மதிப்பு வாய்ந்த மனிதர்களுக்கும் மருத்துவராகத் திகழ்ந்தார். சில ஆண்டுகளுக்குப்பின், அவரது தந்தையின் மறைவுக்குப் பின்னர், பேன்டாலியோன் ஒரு பெரிய சொத்துக்கு உரிமையாளரானார்.
இவரது சொத்துக்களும், இவரது மருத்துவர் என்ற புகழும் நீதிமன்றத்தின் கவர்ச்சியும் சேர்ந்து, திருச்சபைக்கு எதிராக இவரை கிளர்ந்தெளச் செய்தது என்றாலும், ஹெர்மோலோஸ் என்ற குருவின் பொறுமையான வழிகாட்டுதலினால் பேன்டாலியோன் திரும்பவும் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் திருச்சபைக்குத் திரும்பினார். தனது செல்வங்களையயல்லாம் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளித்தார். மேலும் அவரது பணித்திட்டம் உடல் நோயை மட்டும் குணமாக்குவது அல்லாமல் ஆன்ம ஈடேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் பேரரசர் கலிரியஸ் இறந்தார். பின்னர் டயோகிளி´யன் என்ற பேரரசர் அவரது அரசாட்சியில் திரும்பவும் கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினார். பேன்டாலியோனின் மருத்துவத்தின் புகழ் நீதித்துறையிலுள்ளவர்களுக்கு பொறாமையாக இருந்தது. ஆனால் அவர் விரைவில் கிறிஸ்தவர் என்பதை மறுதலித்தார். அந்த பேரரசர், பேன்டாலியோன் புறமத பொய்க்கடவுளுக்கு பலிசெலுத்த வேண்டுமென்று வற்புறுத்தினான். ஆனால் பக்தியுள்ள அந்தக் கிறிஸ்தவர் அதை ஏற்க மறுத்தார்.
ஒரு பிடிவாதமான நிலை :
மாறாக, பேன்டாலியோன் ஒரு முடக்குவாதமுற்ற மனிதரைக் கொண்டு வந்து, அவரைக் குணமாக்குமாறு புறமதக் குருக்களுக்கு சவால் விடுத்தார். அவர்களது செபங்கள் பலனளிக்காதபோது, விண்ணகத் தந்தையிடம் பேன்டாலியோன் வேண்டிக்கொண்டபோது, அந்த மனிதர் உடனடியாக நலம் பெற்றார். அந்த குருக்கள் வெறி கொண்டனர். இதனால் பேரரசர், கிறிஸ்துவ மருத்துவரின் தலையை வெட்ட கட்டாயப்படுத்தப்பட்டார். அவரது நினைவு நாளின்போது, பேன்டாலியோனின் உறைந்த ரத்தம் புட்டிகளினுள் திரவமாக மாறிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது.
செபம் :
தந்தையே, தூய பேன்டாலியோனுக்கு, அவரது அருகில் உள்ளவர்களுக்கு நற்செயல்கள் புரிய அவருக்குள்ளவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க உதவியவரே, மேலும் அவரை நோயாளிகளைக் குணமாக்கும் பாதுகாவலராக நியமித்தவரே, எங்களது இரக்கச் செயல்களால் எங்கள் நற்பண்புகளை வெளிக்காட்ட எங்களுக்கு உதவியருளும். உமது அடியாரின் வேண்டுதலைக் கேட்டு, எங்களை நோயினின்று காப்பாற்றும். ஆனால், நோய் எங்களை வருத்த உமது திருவுளமானால், அவற்றை பொறுமையுடன் தாங்கிக்கொள்ள உமது அருளை எங்களுக்குத் தாரும். மேலும் அது எங்கள் ஆன்ம ஈடேற்றத்திற்கு அது உதவியாக அமையட்டும்.
இவர்களது அடிச்சுவட்டில் :
உலகில் மருத்துவ விஞ்ஞானம் அதிகம் இல்லாத காலத்தில், பேன்டாலியோன் ஒரு குணமளிப்பவராக விளங்கினார். இன்றும் கூட ஆப்பிரிக்காவின் சகாராப் பகுதியில் போதிய மருத்துவ கவனிப்பு இல்லாமல், ஏழைகள் துன்புறுகின்றனர். கிராமப்புற ஆப்பிரிக்காவின் மருத்துவ உதவி திட்டத்தைச் செல்படுத்தும் மக்கள் அதனை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
இலாப நோக்கம் இல்லாமல் கிராமப்புற ஆப்பிரிக்க மருத்துவ உதவித்திட்டம், மற்ற அமைப்புக்களோடு சேர்ந்து, மறக்கப்பட்ட மக்களுக்காக தரமான மருந்து வகைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். மலேரியா, காலரா, டைஃபாய்ட் காய்ச்சல், அம்மை நோய் முதலிய தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற அவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்கிறார்கள். அறியாமையின் காரணமாக, குணப்படுத்தக்கூடிய நோய்களான வயிற்றுவலி இறப்பிற்குக் காரணமாகிவிடுகிறது. னிபுயூபு திட்டம் கீழ்க்கண்ட மருத்துவத்திற்கு உதவுகிறது.
மருத்துவ இல்லங்கள்
உணவும் உடைகளும்
சுத்தமான, பருகக்கூடிய தண்ணீர்
சுகாதார படிப்பறிவு
மருத்துவமனைகளுக்கு மின் வசதிகள்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 27
✠ புனிதர் முதலாம் இன்னசெண்ட் ✠
(St. Innocent I)
✠ புனிதர் முதலாம் இன்னசெண்ட் ✠
(St. Innocent I)
40ம் திருத்தந்தை:
(40th Pope)
பிறப்பு: தெரியவில்லை
அல்பானோ, ரோமன் பேரரசு
(Albano, Roman Empire)
இறப்பு: மார்ச் 12, 417
ரோம், ரோமன் பேரரசு
(Rome, Roman Empire)
நினைவுத் திருநாள்: ஜூலை 28
திருத்தந்தை புனிதர் முதலாம் இன்னசெண்ட் (Pope Saint Innocent I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும், திருத்தந்தையாகவும், கி.பி. 401ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாள்முதல், கி.பி. 407ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாள்வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 40ஆம் திருத்தந்தை ஆவார்.
வரலாற்றுக் குறிப்புகள்:
திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட், திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் "முதலாம் அனஸ்தாசியஸ்" (Pope Anastasius I) ஆவார். அனஸ்தாசியஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்குப் பிறந்த மகனே இன்னசெண்ட். இவ்வாறு, முதன்முறையாக, தந்தையைத் தொடர்ந்து அவருடைய மகன் திருத்தந்தை பதவி ஏற்ற நிகழ்ச்சி நடந்தது.
திருத்தந்தை தம் அதிகாரத்தை நிலைநாட்டுதல்:
முதலாம் இன்னசெண்ட் பதவி ஏற்ற நாட்களில் வடக்கிலிருந்து ஐரோப்பிய ஜெர்மானிய இனக் குழுக்கள் பல மேற்கு உரோமைப் பேரரசின்மீது படையெடுத்து வந்தன. அப்பின்னணியில் இன்னசெண்ட் தம்முடைய அதிகாரத்தை அதிகமாக வலியுறுத்தினார்.
தமக்கு முன்னால் திருத்தந்தை சிரீசியஸ் (384-399) செய்தது போலவே, இன்னசெண்டும் அதிகாரத் தோரணையோடு ஆணை ஏடுகள் பிறப்பித்தார். திருச்சபை முழுவதும் (குறிப்பாக மேலைத் திருச்சபை) பின்பற்றுவதற்காக அவர் வழிமுறைகள் அளித்தார். குறிப்பாக,
♦ உரோமையில் நிலவிய வழக்கப்படியே நற்கருணை மன்றாட்டின் அமைப்பு இருக்க வேண்டும்;
♦ ஒப்புரவு அருட்சாதனம், நோயில் பூசுதல், உறுதிப்பூசுதல் பற்றிய வழிமுறைகள்;
♦ திருவிவிலியத்தைச் சேராதவை என்று சில நூல்களை ஒதுக்கியது.
இவ்வாறு வழிமுறைகள் அளித்ததோடு, இன்னசெண்ட் திருச்சபை முழுவதும் "முக்கிய காரியங்களைப் பொறுத்தமட்டில்" உரோமையைக் கலந்து ஆலோசித்தபின்னரே செயல்பட வேண்டும் என்று அறிக்கையிட்டார்.
கீழைத் திருச்சபை மீது அதிகாரம் செலுத்தல்:
♪ "காண்ஸ்டாண்டிநோபிள்" (Constantinople) மறைமுதுவராக இருந்தவர் "கிறிசோஸ்தோம் யோவான்" (John Chrysostom). அவரை எதிர்த்தவர்கள் அவரைப் பதவியிறக்கம் செய்து நாடுகடத்தினர் (கி.பி. 404). அப்போது திருத்தந்தை இன்னசெண்ட் கிறிசோஸ்தோமுக்கு ஆதரவாக ஒரு மடல் அனுப்பினார். கிறிசோஸ்தோமின் இடத்தைப் பிடித்துக்கொண்டவரை ஏற்க மறுத்ததோடு, கட்சி சார்பற்ற ஒரு சங்கம் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், கீழை உரோமைப் பேரரசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
♪ திருத்தந்தையின் தூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. கிறிசோஸ்தோமும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இறந்தார். இதனால் வெறுப்புற்ற இன்னசெண்ட், கிறிசோஸ்தோமை எதிர்த்த ஆயர்களைச் சபைநீக்கம் செய்தார். இன்னசெண்ட இறந்ததற்குப் பின்னரே கீழைத் திருச்சபைக்கும் மேலைத் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
♪ எருசலேமில் (Jerusalem) புனித ஜெரோமின் (St. Jerom) துறவு இல்லம் குண்டர்களால் தாக்கப்பட்டது என்ற செய்தி திருத்தந்தைக்கு 416ம் ஆண்டு தெரியவந்தது. உடனேயே இன்னசெண்ட் ஜெரோமுக்குக் கடிதம் எழுதி, வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் எருசலேம் ஆயரின் ஆளுகையில் அந்தத் தாக்குதல் நடந்ததால் அந்த ஆயரை இன்னசெண்ட் கடிந்துகொண்டார்.
வட ஆப்பிரிக்க திருச்சபையில் இன்னசெண்டின் அதிகாரம்:
திருத்தந்தை இன்னசெண்ட் வட ஆப்பிரிக்காவில் தோன்றி விரிவடைந்த பெலாஜிய தப்பறைக் கொள்கையைக் (Pelagian controversy) கண்டித்தார். அக்கொள்கைப்படி, மனிதர்கள் கடவுளின் உதவி இன்றியே தமது சொந்த முயற்சியால் மீட்பு அடைய முடியும். இத்தப்பறைக் கொள்கை "கார்த்தேஜ்" (Carthage) மற்றும் மிலேவிஸ் என்னும் இரு சங்கங்களால் ஏற்கனவே கண்டனம் செய்யப்பட்டிருந்தது.
ஐந்து ஆப்பிரிக்க ஆயர்கள் இன்னசெண்டை அணுகி, அவரும் பெலாஜிய தப்பறையைக் கண்டனம் செய்யக் கேட்டார்கள். அந்த ஆயர்களுள் புனித அகுஸ்தீனும் (St. Augustine) ஒருவர் ஆவார். இன்னசெண்ட அந்த ஆயர்களுக்கு எழுதிய பதிலில், அவர்கள் பெலாஜியுஸ் பற்றிய சர்ச்சை குறித்து அவரை அணுகியதற்கு அவர்களைப் பாராட்டுகிறார்.
திருச்சபையின் தலைமை:
முதலாம் இன்னசெண்ட், திருச்சபை முழுவதற்கும் காணக்கூடிய தலைவராக இருப்பவர் உரோமை ஆயரே என்னும் கருத்தை மிகவும் வலியுறுத்தினார். உரோமை ஆயர்தான் ஆயர்கள் அனைவருக்கும் தலைவர் என்று அவர் தெளிவாகக் கூறினார். இதற்கு முன் உரோமை ஆயர்கள் தங்கள் அதிகாரத்தை இவ்வளவு ஊக்கத்தோடு எடுத்துரைக்கவில்லை.
உரோமை முற்றுகையிடப்படல்:
முதலாம் இன்னசெண்டின் ஆட்சியின் நடுக்காலத்தில் விசிகோத்து இனத் தலைவன் "முதலாம் அலாரிக்" (Alaric I) உரோமையை முற்றுகையிட்டார். இதனால் நகர் முழுவதும் பட்டினியால் வாடிற்று. ஓர் அமைதி ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக இன்னசெண்ட் கி.பி. 410ம் ஆண்டு, ரவேன்னா நகரில் பேரரசன் ஹோனோரியசைப் பார்க்கச் சென்றார். ஒப்பந்தம் ஏற்படவில்லை. அப்போது, அலாரிக் 410 ஆகத்து 24ஆம் நாள் உரோமையைத் தாக்கிச் சூறையாடினார்.
இதன் காரணமாக, இன்னசெண்ட் கி.பி. 412ம் ஆண்டுதான் உரோமை திரும்பினார்.
இறப்பும் நினைவுத் திருவிழாவும்:
திருத்தந்தை முதலாம் இன்னசெண்ட் கி.பி. 417ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமையில் துறைமுகச் சாலைக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
முதலாம் இன்னசெண்டின் திருவிழா சூலை 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.