திருவிழா நாள் : ஜுலை 29 (முன்னதாக) கற்பித்தலும் பகிர்தலும்
யோவான் எழுதிய நற்செய்தியின்படி, லாசர‘ம் அவரது இரு சகோதரர்களாகிய மார்த்தாவும் மரியாவும் எருசலேமிலிருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள பெத்தானியாவில் வசித்து வந்தனர். அவர்கள் இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் மேலும் அவரை முழுவதும் நம்பினார்கள்.
அதனால், லாசரஸ் நோய்வாய்ப்பட்டபோது, மார்த்தாவும், மேரியும், இயேசுவால் உதவமுடியும் என்று நம்பி இயேசுவுக்கு தகவல் சொல்லி அனுப்பினார்கள். ஆனால் இயேசு பெத்தானியாவுக்கு திரும்புமுன் லாசரஸ் இறந்து விட்டார். சம்ப்ரதாய முறைப்படி, துக்கம் கொண்டிருந்த சகோதரிகள் லாசரஸின் உடலை துணியில் சுற்றி ஒரு குகைக்கல்லறையில் அடக்கம் செய்தனர். இறுதியாக இயேசு வந்தபோது, மார்த்தா அவரை சந்தித்தார். லாசர் உண்மையிலேயே கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவான் என்று அவர் அவளிடம் கூறினார். மேரியும் மற்றும் துக்கம் விசாரிக்க வந்தவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இயேசுவின் வல்லமையை உணர்ந்திருந்தனர். இயேசு அங்கு இருந்திருந்தால் லாசரஸ் இறந்திருக்கமாட்டான் என்று உணர்ந்தார்கள். ஆனால், இயேசுவின் வல்லமை, அவர்கள் நினைத்ததைவிட அதிகமானது என்வதை விரைவிலேயே அறியவிருந்தார்கள்.
உயிர்ப்பின் புதுமை :
அவர்கள் கல்லறையை அடைந்ததும், கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றுமாறு இயேசு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் கடவுளிடம் வேண்டி, லாசரஸ் வெளியே வா என்று உரக்கக் கத்தினார். சில நொடிகளில், லாசரஸ் துணிகள் சுற்றியிருந்தபடியே வெளியே நடந்து வந்தார். இந்த புதுமை பற்றிய செய்தி விரைவாகப் பரவியது. மேலும் இயேசுவின் வல்லமையைக் கண்டு அதிகாரிகள் பயந்தனர்.
பாரம்பரிய செய்திப்படி, லாசர‘ம் அவரது சகோதரிகளும் ஒரு படகில், சைப்ரஸ் நாட்டுக்கு, எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு லாசரஸ், ஆயராக நியமிக்கப்பட்டார். மற்றுமொரு மரபுவழிக்கதைப்படி அந்த படகு காவூலைச் சென்றடைந்தது. அங்கு லாசரஸ், மார்சில்லஸின் ஆயரானார். அங்கு அதிகமான மக்களை மனம் திருப்பினார். உரோமை உயிர்த்தியாகிகளின் பட்டியிலிலிருந்து லாசரஸ் பெயர் நீக்கப்பட்டாலும், இயேசுவை நம்புவோருக்கு, அவர் வாக்களித்த விண்ணக வாழ்வை நமக்கு நினைவூட்டுகிறது.
செபம் :
வல்லமையுள்ள தந்தையே, சிலுவையில் உமது மகனின் மரணத்தால், எங்களுக்கு சாவிலிருந்து விடுதலை தந்தீர். இறந்த அவர் அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர் பெற்றெழுந்ததினால், கல்லறை எங்களுக்கு ஒரு புனித இடமாகவும், நித்திய வாழ்வுக்கு வழியாகவும் மாற்றித்தந்தீர். இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, இறந்து அவரோடு அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழும் நம்பிக்கை கொண்ட அனைவருக்காகவும் வேண்டுகிறோம். இறந்தோர் மற்றும் வாழ்வோரின் கடவுளே, இவ்வுலகில் உம்மில் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்து மரித்தோர் மறு விண்ணக மகிழ்வில் உம்மை எக்காலமும் போற்றிப் புகழ்வார்களாக, கடவுளாகிய கிறிஸ்து வழியாக வேண்டுகிறோம். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
இயேசு செய்த புதுமையினால், லாசர‘க்கு இரண்டாம் முறையாக வாழ்வு கிட்டியது. இன்று, லாரன்ஸ் நகரில் டாம் பெத்திட் சகோதரர் தொடங்கிய, வீட்டுத்துறவு மடம், உள்ளூர் மக்களுக்கு, முடிந்தவரை இரண்டாம் முறை உதவித்தளமாக விளங்குகிறது. கல்கத்தாவில் அன்னை தெரசாவுடன் சகோதரர் பெத்திட் பணிசெய்தபோது அவர் தனது இல்லம் திரும்பியதும், வறுமையில் வாடுவோருக்கு உதவி செய்யுமாறு ஆலோசனை கூறினார். எனவே 1983 ஆம் ஆண்டு புதிய இங்கிலாந்தின் மிக ஏழ்மையான பகுதியில் ஒரு தங்கும் விடுதியை திறந்தார். அது லாசரஸ் வீட்டு சமய குருமடம் என்று விரிவாக்கப்பட்டு கீழ்க்கண்ட சேவைகளை அளித்து வருகிறது,
குடும்பத்தினருக்கும் தனி நபருக்கும் தற்காலிகமாக பத்திரமாக தங்குவதற்கு தங்குமிடம்.
உணவுப்பொருள் விற்பனைக் கூடம், சூப் அடுக்களையும் சூப் வண்டியும்.
இன்சூரன்ஸ் இல்லாத மக்களுக்கு இலவச பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ கிளினிக்.
புகுமுக பள்ளிப்படிப்பு மற்றும் இளைஞர் கல்விக்கூடம். பொதுமக்களோடு சேர்ந்து வாழவும், வறுமையைப் போக்கி வாழவும், லாசரஸ் வீடு அமைப்பு உதவுகிறது.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 29
த்ரோயேஸின் புனித லூபஸ்
த்ரோயேஸின் புனித லூபஸ்
பிறப்பிடம் : தூல், பிரான்ஸ்
திருவிழா நாள் : ஜூலை 29 குணமளிப்பவரும், உதவுபவரும்
த்ரோயேஸின் ஆயர்
உரோமை பேரரசில் கிறிஸ்துவம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த த்ரோயேசின் லூபஸ் என்பவர் கிறிஸ்துவுக்கான அர்ப்பணிப்பு அவரது வாழ்நாள் முழுவதும் அதிகரித்துக்கொண்டே சென்றது. திருச்சபையின் தீவிரப் போதகர் ஹிலேரியின் சகோதரியை மணமுடித்து, பின்னர் லூபஸும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் சம்மதித்து பிரிந்து சென்றனர். தனது நிலங்களை விற்று, பணத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து, லெரின்ஸ் குருமடத்தில் லூபஸ், ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். அவருக்கு, ஆன்மீக பரிசளிப்பு விரைவிலேயே கிடைக்கப்பெற்று, தனது 45 ஆவது வயதில், த்ரோபேசின் ஆயராக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
தனது மேலான பதவியைத் தொடர்ந்து வந்த ஆடம்பரத்தை அவர் விலக்கினார். 429 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிகழ்ந்த முதல் இரண்டு மத முரண்பாடு விவாதங்களில் பங்கேற்க, இவர் ஜெர்மன‘க்கு உதவியாக செல்வதற்கு முன்குறிக்கப்பட்டார். அவர்களது போதனைகளில் நிறைய புதுமைகள் நிகழ்ந்தன. அந்த தீவு நாடு தற்காலிகமாக கிறிஸ்துவ நம்பிக்கையில் திரும்பவும் கொண்டுவரப்பெற்றது.
ஆபத்தின் பிடியில் :
பிரான்ஸ் திரும்பிய பின்னர், அந்தப் பகுதிகளைப் பிடித்துக்கொண்ட அட்டில்லா ஹன் என்ற பயங்கரமான படையினரை எதிர்கொண்டார். பிற சமய படைத்தலைவரை எதிர்கொண்டு, அந்த மாநிலத்தை விட்டு விட்டுச் செல்லுமாறு அவரைச் சமரசம் செய்தார். அட்டாலியா அந்த ஆயரை கைதியாக பிடித்து வைத்தார். ஆனால் அந்த ஹன்ஸ் இனத்தவர் போரில் தோற்கடிக்கப்பட்டபோது த்ரோயேசின் மக்கள் அட்டில்லா தப்பியோடுவதற்கு லூபஸ் உதவியதாக அவன்மீது குற்றம் சமத்தினார்கள். அவமதிப்புக்குள்ளான அந்த திருச்சபைக்குரு காட்டில் ஒரு துறவியாக வாழ நேர்ந்தது.
அதிகமான புகழ் :
அவரது பணிவும் பொறுமையும் அவரது சபையினரின் இதயங்களை மீண்டும் வென்றெடுத்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது அலுவலகத்திற்குத் திரும்பினார். அங்கு தனது இறுதிநாட்கள் வரை உறுதியுடன் பணியாற்றி 94 ஆம் வயதில் காலமானார். தந்தையர்களின் தந்தையாகவும், ஆயர்களின் ஆயராகவும் நினைவு கூறப்படுகிறார். காவூலின் குருமடத் தலைவராகவும், நல்லொழுக்கத்தின் சான்றாகவும், உண்மையின் தூணாகவும், கடவுளின் நண்பராகவும், பரிந்துரைளாயராகவும் அவர் நினைவு கூறப்படுகிறார்.
செபம் :
ஓ, பரம தந்தையே, எங்களது இதயங்களை அமைதி எனும் நெருப்பினால் பற்றி எரியச்செய்யும். பிறருடைய வேதனைகளை புரிந்து கொள்ள அருள்புரியும். இந்த உலகத்திற்கு அமைதியும் ஒத்திசைவும் கொண்டுவர நாங்கள் ஒவ்வொரவரும் முடிந்ததை செய்வதற்கு அருள்புரிய வேண்டுகிறோம். எங்கள் இதயங்களிலும் மனதிலும் வேதனைப்படுபவர்களை நினைத்து ஜெபிக்கிறோம்.
இவர்களது அடிச்சுவட்டில் :
வெறுக்கப்பட்ட அட்டில்லா த ஹன் என்பவருக்கு அமைதியைக் கொண்டு வர லூபஸ் என்பவர் எடுத்த முயற்சி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதே பாணியில் கவுண்ட் ஹான்ஸ் வோன் ஸ்போனக் என்பவரின் தந்தை, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை எதிர்த்ததால், தனது அரசியல் பேராண்மை அமைச்சர் பதவியை அமைதிக்காக துறந்தார். 2000 ஆம் ஆண்டில் வோன் ஸ்போனெக் என்பவர் 30 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகளில் பணியாற்றியவரும், பலகாலம் ஈராக்கில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர், ஈராக்கின் மக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நியாயமில்லாத தடுப்பு நடவடிக்கைகளை எதிர்த்து தனது பதவியைத் துறந்தார். வான் ஸ்போனக்கின் கூற்றுப்படி,
1990 லிருந்து நடைபெற்ற குவைத்துக்கு எதிரான போரினால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை சரிவர செயல்படவில்லை.
அந்த பொருளாதாரத் தடை ஏழைகளுக்கு மட்டுமே தீங்கு விளைவித்தன.
அந்த பொருளாதாரத் தடைக்குப் பின்னர் குழந்தைகள் இறப்பு விகிதம் பெரிதும் அதிகரித்தது.
அந்த பொருளாதாரத் தடையினால் ஈராக்கின் வேலையில்லா திண்டாட்டம் 60 சதவீதமாக உயர்ந்தது.
கொள்ளை இலாபம் சம்பாதிப்பவர்களும், சதாம் ஹூசேனின் ஆதரவாளர்களும்தான் அந்த பொருளாதாரத் தடையினால் பயனடைந்தவர்கள்.
2000 ஆவது ஆண்டில் வான்ஸ்போநெக், கவென்டரி கத்தீட்ரல் அமைதி பரிசு பெற்றார்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 29
புனித ஓலாஃப்
புனித ஓலாஃப்
தலைவராக இருந்து
நார்வேயின் பாதுகாவலர்
ஓலாஃப் என்பவர் நார்வேயிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியே வைக்கிங் என்ற கடற்கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்தபோது வளர் இளம் பருவத்தினராய் இருந்தார். இங்கிலாந்திலும் பால்டிக்ஸிலும் போரில் ஈடுபட்டார். ஆனால் நார்மாந்தி என்னுமிடத்தில் இருந்தபோது, அவர் கிறிஸ்துவ மதத்தில் ஈர்க்கப்பட்டு, திருமுழுக்குப் பெற்றார். எட்டு ஆண்டு கடற்கொள்ளை வாழ்வுக்குப் பின், தனது தந்தையின் நிலங்களை உரிமையாக்கவும், தந்தைக்குப் பின் வாரிசாக கோமான் பதவியேற்கவும் 1015 ஆம் ஆண்டில் நார்வேக்குத் திரும்பினார். விரைவிலேயே சுவீடன் மற்றும் டென்மார்க் நாட்டவரை துரத்திவிட்டு, கோமான் பதவியைக் கைப்பற்றி, நார்வே நாட்டின் அரசரானார்.
அவரது புரட்சிகரமான கடந்தகால வாழ்க்கையை விலக்கி ஓலாஃப், நார்வேக்கு அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வந்தார். அவர் பழைய நம்பிக்கையையும் பழக்க வழக்கங்களையும் ஒழித்து விட்டு, புதிய சட்டதிட்டங்களை நேர்மையுடன் கடைபிடிக்க வழிசெய்தார். மேலும் புறவினத்துக் கோவில்களை அழித்து, பதிலாக கிறிஸ்துவ ஆலயங்களைக் கட்டி எழுப்பினார். தனது நாட்டை ஒன்றுபடுத்த எண்ணி, மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற இங்கிலாந்திலிருந்து மதகுருமாரை வரவழைத்தார்.
புரட்சியாளர் :
அவரது நல்ல எண்ணங்களுக்கு மாறாக, பிற சமயத்தவரை அழிப்பதற்கு தனது மக்களிடையே கிறிஸ்துவத்தை ஏற்படுத்தவும் ஓலஃப் அடிக்கடி தனது பலத்தைப் பயன்படுத்தினார். அவரது இந்த செயலானது, மக்களிடையே குறிப்பாக அவரது மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத பிரபுக்களிடையே, பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியது. 1029 ஆம் ஆண்டு அவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். மேலும், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அரசர் கனியூட் உதவியுடன் நார்வேயிலிருந்து ஓலாஃபை விரட்டியடித்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தனது நாட்டை மீட்பதற்கு வீரமுடன் போர்புரிந்தார். ஆனால் ஒரு வீரத்தியாகியாகி உயிர் துறந்தார்.
ஒரு தேசிய வீரன் :
அவரது மரணத்தைத் தொடர்ந்து புதுமைகள் பேசப்பட்டன. மேலும் அவரது உடல், ட்ரோன்தீம் நகரிலுள்ள தியோத்திரைத்தலமான நிதாரஸ் பேராலயத்தில் பொதிந்து வைக்கப்பட்டது. அவரது புகழ் இங்கிலாந்து வரை பரவியது. அவர் பெயரில் 40 பழமையான ஆலயங்கள் அங்கு அர்ச்சிக்கப்பட்டு அவருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
செபம் :
பரம தந்தையே, உலகின் நாடுகள் அனைத்தையும் ஆட்சி செய்கின்றவரே, பதவியிலிருப்போரின் மனங்களையும் இதயங்களையும் ஆட்சி செய்ய நாங்கள் உம்மை வேண்டுகிறோம். ஆபத்துக் காலங்களிலும், குழப்பமான சூழ்நிலைகளிலும் உமது ஞானம் அவர்களை வழிநடத்தட்டும். உண்மையும் நீதியும் அவர்களது அனைத்து முடிவுகளிலும் நிலைத்திருக்கட்டும். அவர்கள் உமது ஆலோசனைகளுக்கு செவிமடுத்து நற்செயல்களாலும், இரக்கம் மிகுந்த அன்பினாலும் வாழ மனித இனத்திற்கு அமைதியை நிலைநாட்ட முயற்சிகளை இயேசு கிறிஸ்துவின் அருளால் மேற்கொள்வார்களாக. ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
ஓலாஃப், ஒரு இராணுவ தளபதியாக இருந்தாலும், நார்வே நாட்டில் கிறிஸ்துவ மதத்தின் அமைதி தத்துவத்தை புகுத்தினார். 1997 ஆம் ஆண்டில் காலின் போவெல் என்ற புகழ்வாய்ந்த அமெரிக்க தளபதி இதேபோன்ற கொள்கை தத்துவங்கள் அடங்கிய, அமெரிக்காவின் வாக்குறுதி என்ற நிறுவனத்தை நிறுவினார்.
பாரம்பரிய ஒத்துழைப்பு அமைப்புகள் இல்லாதது, நமது பெரும்பாலான இளைஞரிடையே ஒரு ஆரோக்கியமான, நம்பிக்கையுள்ள வெற்றிகரமான வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று போவெல் நம்புகிறார். அமெரிக்காவின் வாக்குறுதி என்ற அமைப்பு நகராட்சிகள் அரசுத்துறைகள் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட மக்கள் குழுக்கள் ஆகியவற்றிற்கு கீழ்க்காணும் ஒன்று அல்லது அதிகமான இந்த ஐந்து சவால்களை எதிர்கொள்ள தயாராகின்றன,
இளைஞர்களின் மீது அக்கறை.
பாதுகாப்பான இடங்கள்.
ஆரோக்கியமான தொடக்கம்.
சந்தைப்படுத்தப்படக்கூடிய வேலைத் திறமைகள்.
பிறருக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்புகள்
தங்களது சமூகத்தில் இந்த ஐந்த சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்துள்ளனர்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 29
புனித பிரயோக்கின் புனித வில்லியம்
புனித பிரயோக்கின் புனித வில்லியம்
பிறப்பிடம் : பிரான்சிலுள்ள செயின்ட் ஆல்பன்
திருவிழா நாள் : ஜூலை 29 உதவுபவரும், குணமளிப்பவரும்
புனித பிரயோக்கின் ஆயர்
வில்லியம்மின் இளமைக்கால வாழ்வு பற்றி ஒருசில குறிப்புகள் மட்டுமே தெரியவருகின்றன. பிரான்ஸ் நாட்டில், பிரிட்டானியின் புனித அல்பான் பங்கில் 1180 ஆம் ஆண்டளவில் ஒரு புகழ்மிக்க குடும்பத்தில் அவர் பிறந்தார். புனித பிரயோக்கின் ஆயர் ஜோஸ்லின் என்பவரிடம் வில்லியம் தனது மதம் சார்ந்த பயிற்சியைப் பெற்றார். அந்த ஆயரே அவருக்கு உதவிக்குருவாகவும், மத போதகராகவும் திருநிலைப்படுத்தினார். கடவுள்மீது அதிகம் பக்தி கொண்டிருந்ததாலும் தேவைப்படுவோருக்கு தாராளமாக உதவியதாலும், சில நாட்களில் அவர் மற்றவரை தம்மிடம் ஈர்த்துக்கொண்டார்.
1220 ஆம் ஆண்டளவில், செயின் பிரயோக்கின் ஆயராக அமர்த்தப்பட்டார். அவரது பதவிக்காலத்தில், தனது நிலையையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய சொந்த ஆதாரங்களைக் கொண்டும் ஏழைகளுக்கு உதவினார். பிறரிடம் கடன் வாங்கி ஏழைகளுக்கு உணவளித்தார். மெத்தைக்குப் பதிலாக மரப்பலகையின் மேல் படுத்துறங்குவது போன்ற எளிய முறைகளையும் கடைப்பிடித்தார். ஆனால் வில்லியம் ஒரு தனித்துவம் மிக்க எளிமையான மனிதர். தனது மத நம்பிக்கையின் பொருட்டு, தன்னுடைய தியாக வாழ்வை பிறர் அறியாதவண்ணம் பார்த்துக்கொண்டார்.
அரசியல் முரண்பாடு :
அவர் ஆயராக இருந்தபோது, திருச்சபைக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்திக்கொண்டிருந்த பீட்டர் மொகிளர்க் என்னும் உள்ளூர் கோமகனுடன் சண்டையிட்டுக் கொண்டார். மொகிளார்க் திருச்சபைக்குருமார் தொகுதியை அழித்து, தனது அரசியல் ஆட்சியை விரிவுபடுத்த எண்ணினார். ஆனால் வில்லியம் அவரது இந்த முயற்சியை கடுமையாக எதிர்த்தார். அதனால் 1228 ஆம் ஆண்டு மொகிளார்க் போய்ட்டியர்ஸ் என்னுமிடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள நோய்வாய்ப்பட்டிருந்த ஆயருக்கு உதவி புரிந்தார்.
பிரிட்டான் புனிதர்களில் ஒருவர் :
1230 ஆம் ஆண்டு வில்லியம் நாடு திரும்பினார். நான்கு ஆண்டுகளுக்குப்பின் உயிர் நீத்தார். அங்குள்ள பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 1247 ஆம் ஆண்டு புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார். அடுத்த ஆண்டு அவரது கல்லறயைத் தோண்டியபோது, அவரது உடல் அழியாது அப்படியே இருந்தது. அவரது திருப்பண்டம் 18 ஆவது நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. துரதிட்டவசமாக, பிரஞ்சுப் புரட்சியின்போது எரித்து அழிக்கப்பட்டது.
செபம் :
அன்பான ஆண்டவரே, ஆட்சியாளர்களுடன் ஏற்பட்ட போராட்டங்களில், உமது உண்மையுள்ள ஊழியன் வில்லியம்ஸ் தனது மனசாட்சியின்படி நடந்து கொண்டார். அவரது வாழ்வில் அவர் கிறிஸ்துவ அருளிரக்கம் மற்றும் மதிப்பீடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார். எளிதானதோ அல்லது கடினமானதோ நான் எதிர்கொள்ளும் வாழ்வின் சோதனைகளில், உமது அன்பும், உமது உரே மகனின் போதனைகளும் என்னில் அதே பலத்தையும் தந்தருள வேண்டுமென்று வேண்டுகிறேன். உமது திருவுளம் நிறைவேற்ற எப்போதும் துணிவைத் தந்தருளும். ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
வில்லியம் தனது கொள்கைக்கு எப்போதும் உண்மையாக இருந்தார். மேலும் பிரிட்டானி கோமகனுடன் எதிர்த்து செயல்பட்டார். இடைக்காலத்தில் அவரது நாடுகடத்தப்பட்ட தண்டனையானது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. இந்தக் காலத்திலும் தனது அரசுக்கு எதிராக குறைகூறுபவர்களை, நாடு கடத்துவது அவர்களது ஆற்றலை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களில் அரசு ஈடுபடுகிறது.
உதாரணத்திற்கு, முந்தைய சோவியத் யூனியன் அருகில் கம்யூனிஸ்டுகள், அன்ட்ரி சக்காரோவ் என்ற எதிர்ப்பாளரை அமைதிப்படுத்த இந்த முறையைக் கையாண்டனர். சோவியத் ஹைட்ரஜன் பாம் தந்தையயன்று அழைக்கப்பட்ட சக்கோராவ் ஒரு சோவியத் பெளதிகளாரை, குடியரசின் ஆதரவாளராகவும், மனித உரிமைக் காப்பாளராகவும் மாற்றினார். அணுஆயுத எதிர்ப்புக்காக அவரது பேச்சுக்களும், எழுத்துக்களும் 1975 ஆம் ஆண்டு அமைதிக்காக நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. மேலும் சக்கோராவ்,
சோவியத் எதிர்ப்பாளர்களின் கைது நடவடிக்கையையும், வழக்குகளையும் எதிர்த்தார்.
சோவியத் யூனியனில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டருக்கு எழுதினார்.
1980 இல் சோவியத் அரசு சக்கோராவை கோர்கி நகருக்கு நாடு கடத்தி வீட்டுக்காவலில் வைத்தது. அவர் 1986 இல் சாவதற்கு மூன்று ஆண்டுகள் முன்பாக விடுவிக்கப்பட்டார். வீரத்திற்கு உதாரணமாக இந்த இரண்டு மனிதர்களும் முடிவைப்பற்றி கவலைப்படாமல் தங்களது கொள்கையில் பிடிப்புள்ளவர்களாக விளங்கினார்.
லி.ஜெ. ஜோசப்
ஜுலை 29
J}a
தூய மார்த்தா (ஜூலை 29)
நிகழ்வு
கலாத்தியா என்ற பகுதியில் லேவியத்தான் என்ற உயிரினம் இருந்தது. அதன் பாதி உடல் விலங்கு போலவும், மீதி உடல் மீனைப் போன்றும் இருந்தது. ஒரு குதிரையையும் விடவும் அது பெரியதாக இருந்தது. இவ்வுயிரினம் அவ்வழியாகப் போவோர் வருவோர் எல்லாரையும் பிடித்து சாப்பிட்டு வந்தது. கடல்வழியாகப் போவோரையும் அது அவ்வாறே துன்புறுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள். எனவே அவர்கள் மார்த்தாவிடம் வந்து, தங்களை அந்தக் கொடிய மிருகத்திடமிருந்து காப்பாற்றுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். மார்த்தாவும் அவ்வுயிரினம் வாழ்ந்து வந்த டரஸ்கான் (Tarascon) பகுதிக்குச் சென்று, சிலுவையின் துணையுடன் அதனைக் கொன்று வீழ்த்தினார். அதனால் மக்கள் பெருமகிழ்ச்சி பேரானந்தம் அடைந்தார்கள்.
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் விழாக்கொண்டாடும் மார்த்தா பெத்தானியாவைச் சேர்ந்தவர். இவரோடு உடன் பிறந்தவர்கள்தான் இயேசு அதிகமாக அன்பு செய்த லாசர் (யோவா 11:5), மற்றும் மரியா. மார்த்தா எப்போதுமே கடின உழைப்பாளியாக, உதவும் நல்ல உள்ளத்தினராக விளங்கினார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. விவிலியத்தில் இவர் சில பகுதிகளில் இடம்பெற்றாலும், அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கும்போது மார்த்தா எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
விவிலியத்தில் மார்த்தா இடம்பெறும் முதல் பகுதி லூக்கா நற்செய்தி 10: 38-42. இங்கே அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவுக்கு பணிவிடை செய்யவேண்டும், அவரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு உதவி செய்ய வராத தன்னுடைய சகோதரியான மரியாவின் மீது குறைபட்டுக் கொள்கிறார். இதைக் கண்ணுற்ற இயேசு மார்த்தாவிடம், “மார்த்தா, மார்த்தா!, நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே, மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்கிறார் (லூக் 10:41- 42). இங்கே மார்த்தா வீட்டில் மூத்தவள் என்பதாலும், தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் இயேசுவுக்கு சிறப்பானதொரு விருந்துகொடுக்கவேண்டும் என்ற ரீதியில் பரபரப்பாக அலைகின்றார்.
மார்த்தா இடம்பெறும் இரண்டாவது பகுதி யோவான் நற்செய்தி 11: 21 -27 ஆகும். இப்பகுதி மார்த்தா ஆண்டவர் இயேசுவிடத்தில் எத்தகைய நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. லாசர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வருகின்ற இயேசுவிடம் மார்த்தா, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார். இயேசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் கேட்கமுடியும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மார்த்தா கேட்டதற்கு இயேசு, “உயிர்த்தெழுதலும் வாழும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று சொல்லி மிகப்பெரிய மறை உண்மையை வெளிப்படுத்துகிறார். அப்போதுதான் மார்த்தா, “நீரே மெசியா! நீரே இறைமகன்!, நீரே உலகிற்கு வரவிருந்தவர்” என்று தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுக்கிறார். ஏறக்குறைய இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்து, அவரைப் பற்றி அறிந்துகொண்ட பேதுருவின் அறிக்கையை (மத் 16:16) ஒத்ததாக இருக்கின்றது மார்த்தாவின் அறிக்கை.
மார்த்தா இடம்பெறும் மூன்றாவது பகுதி யோவான் நற்செய்தி 12:2 ஆகும். இப்பகுதியில் மார்த்தா தன்னுடைய சகோதரன் இலாசரை உயிர்பித்த இயேசுவுக்கும் அவரோடு இருந்த அவருடைய சீடர்களுக்கும் விருந்து படைக்கின்றார். இயேசு இங்கே மார்த்தா தருகின்ற விருந்தை அன்போடு ஏற்றுக்கொள்கிறார், அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மார்த்தா எப்போதும் தன்னுடைய வீட்டை நாடிவோரை வல்லவராக, நல்லவராக விளங்கினார் என்பதைத்தான் இப்பகுதியானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
விவிலியம் மட்டுமல்லாது திருச்சபையின் மரபுகளும் மார்த்தாவைப் பற்றி ஒருசில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, சினம்கொண்ட யூதர்கள் லாசர், மார்த்தா மற்றும் அவருடைய சகோதரி மரியா ஆகிய மூவரையும் ஒரு படகில் கட்டி வைத்து, அதில் துடுப்பு எதுவும் வைக்காமல், கடலில் அனுப்பி விட்டனர். ஆனால் அவர்கள் மூவரும் இறைவனுடைய அருளால் உயிர்தப்பி, பிரான்சு நாட்டில் உள்ள மர்செல்லஸ் என்ற இடத்தில் தரையிறங்கினார். அங்கே லாசர் ஆயராகவும், அவருடைய சகோதரி மரியா ஒரு குகைக்குச் சென்று தனியாக இறைவனிடம் வேண்டி தன்னுடைய வாழ்நாளைக் கழித்ததாகும், மார்த்தா ட்ரஸ்கான் என்ற இடத்தில் பெண்களுக்கான் ஒரு துறவற சபையை நிறுவி, அங்கேயே தன்னுடைய இறுதி நாட்களைச் செலவிட்டதாகும் அறிந்துகொள்கிறோம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இறைவனுக்கு மட்டுமே முதலிடம்
மார்த்தா தன்னுடைய இல்லத்திற்கு வந்த இயேசுவுக்கு சிறப்பாக விருந்து உபசரிக்கவேண்டும் என்பதற்காக பரபரப்பாக அலைகின்றார். அதனால் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வாழ்வுதரும் வார்த்தைகளைக் கேட்க மறந்துவிடுகின்றார். இன்றைக்கு நாமும் கூட, மார்த்தாவைப் போன்று இறைவனுக்கு முக்கியத்துவம் தராமல், உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வாழ்ந்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு நம்மிடம் சொல்கிறார், “தேவையானது ஒன்றே, அதுதான் அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவது” (மத் 6:33).
நாம் இறைவனுக்கு நம்முடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் தந்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருத்தந்தை மூன்றாம் யூஜின் திருத்தந்தையாக இருந்தபோது, அவருக்கு ஆன்ம குருவாக இருந்தவர் பெர்னார்டு என்பவர். ஒருசமயம் திருத்தந்தை மூன்றாம் யூஜின் தன்னுடைய ஆன்ம குருவிடம், “திருச்சபையின் அன்றாட அலுவல்களுக்கு இடையே எனக்கு இறைவனிடம் ஜெபிப்பதற்கு நேரமே இல்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கு அவர், “உமது ஞான வாழ்வுக்கு முதலிடம் கொடுத்து, ஜெபத்தில் முழுமையாக கருத்தூன்றி நிற்காவிடில், திருச்சபையில் உம் அலுவல்கள் எல்லாம் நீர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் உம்மை நரகத்திற்கே இட்டுச் செல்லும். இது எச்சரிக்கை” என்றார்.
திருத்தந்தை அவர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் என்னுடைய அலுவல்களுக்கு மத்தியில் எனக்கு ஜெபிப்பதற்கு நேரமே இல்லை என சாக்குப்போக்குச் சொல்கிறோம். ஆனால் இறைவனோடு இணைந்திராத வாழக்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம் என நாம் புரிந்துகொண்ட வாழவேண்டும்.
இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்தல்
மார்த்தா ஆண்டவர் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இயேசுவை மெசியா, இறைமகன், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் என்ற நம்பிக்கை அறிக்கை செய்கிறார், அதுமட்டுமல்லாமல் அவர் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்று சொல்லி, இயேசுவிடம் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மார்த்தாவைப் போன்று நாம் (இறைவனிடம்) அசைக்க நம்பிக்கையோடு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நம்புகிறவருக்கு எல்லாம் கூடும்” என்று (மாற் 9:23), ஆகவே, நாம் நம்பிக்கையோடு இருக்கும்போது எல்லாம் நலமாகும் என்பதே உண்மை.
ஒருசமயம் இளைஞன் ஒருவன் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் தீர்வதற்கு ஆலோசனை வேண்டி, பக்கத்து ஊரில் இருந்த மகானைச் சந்திக்கச் சென்றான். ஆனால் அவன் அங்கு சென்றபோது, அந்த மகானைச் சந்திப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பதைக் கண்டு மலைத்துப் போய் நின்றான். ‘இத்தனை மக்களுக்கு மத்தியில் நான் எப்படி இந்த மகானைச் சந்திப்பது என்று ஏமாற்றத்தோடு நின்றான்.
அப்போது அந்த இளைஞனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர், “தம்பி! இன்று என்னால் இந்த மகானைச் சந்திக்க முடியும், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீ நம்பு. அது நடக்கும்” என்றார். பெரியவரின் வார்த்தைகளைக் கேட்டு அந்த இளைஞன் மகானை எப்படியாவது இன்றைக்கு சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினான். அவன் நம்பிய சில மணித்துளிகளிலேயே மகான் அந்த இளைஞன் தன்னிடம் வருமாறு அழைத்தார். அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. “இத்தனை ஜனத்திரளுக்கு மத்தியில் அவர் எப்படி என்னை அழைத்தார்?” என்று வியப்பு மேலிட பெரியவரிடம் கேட்டான். அதற்கு அவர், “நீ அவரைச் சந்திக்க முடியாது என நினைத்தாய், அது போன்றே நடந்தது. பிறகு நீ அவரைச் சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினாய். நீ நம்பியது போலவே நடந்தேறியது” என்றார். ஆம். நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும். ஆகவே, நாமும் தூய மார்த்தாவைப் போன்று நம்பிக்கையோடு வாழ்வோம்.
விருந்தோம்பலில் சிறந்து விளங்குதல்
மார்த்தா எப்போதும் விருந்து உபசரிப்பில் சிறந்து விளங்கினாள். இயேசு தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் அவர் அவருக்கு சிறப்பாக உணவு வழங்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அதனால்தான் என்னவோ இன்றைக்கு நாம் அவருடைய விழாவைக் கொண்டாடுகின்றோம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்திற்கு வந்த மூன்று வானதூதர்களுக்கு சிறப்பான ஒரு விருந்து படைத்தார். அதனால் மகிழ்ந்த வானதூதர்கள் மூவரும் ஆபிரகாம் தம்பதியினருக்கு அவர்களுடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார்கள். நாமும் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.
ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.