St. Alphonsus De Liguori |
St. Ethelwold |
St. Peter Julian Eymard |
|
|
ஆகஸ்ட் 1 புனித அல்போன்ஸஸ் தி லிகோரி
புனித அல்போன்ஸஸ் தி லிகோரி
பிறந்த இடம் : இத்தாலி
திருவிழா நாள் : ஆகஸ்ட் 1
குணமாக்குதலும், உதவுதலும்
இறையியல் பாதுகாவலர் மற்றும் ஒப்புறவு வழங்குபவரும், இதர பணிகள் புரிபவரும்
அல்போன்ஸஸ் ஒரு கடற்பதை அதிகாரியின் மகனாக 1696 இல் பிறந்தார். அவரது தாயார் ஒரு கடமை பேணும் பெண் ஆவார். ஆனால் அவரது தந்தை கண்டிப்பான மனிதர். தனது மகனைப்பற்றி ஓர் உயர்வான பதவியை அடைவார் என்று எதிர்பார்த்தார். சரியான நேரத்தில் அல்போன்ஸஸ் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக ஆனார். பின்பு ஒருநாள், ஒரு முக்கியமான வழக்கில் அவர் தோல்வி கண்டார். கடவுளிடமிருந்து வந்த ஒரு தாழ்ச்சியான பாடம் என்று அதை உணர்ந்து தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, அல்போன்ஸஸ் ஒரு குருவாக ஆனார்.
தினமும் கிறிஸ்துவ கல்வி போதிக்க, அல்போன்ஸஸ் மக்கள் கூட்டத்தை திரட்டினார். ஆனால் இந்த கடினமாக முயற்சியில் அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், ஸ்கேலா என்னுமிடத்தில் நடைபெற்ற தியானத்தில் அல்போன்ஸஸ் தனது அழைப்பை உணர்ந்தார். அங்குள்ள ஏழை ஆட்டு இடையர்கள் ஆன்மீக வாழ்வை இழந்து திரிவதைக் கண்டார். நேப்பிள்‘க்கு திரும்பி வந்து கிராமப்புற மக்களை ஈடேற்று அதிதூய இரட்சகர் சபையை நிறுவினார்.
ஒரு ஆன்மீகக் குரல் :
தொடர்ந்து மும்முரமாக செபிப்பதிலும், போதிப்பதிலும், எழுதுவதிலும் அல்போன்ஸஸ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தன்னைத்தானே உள்ளாய்வு செய்யும் மனிதராக ஆன்மீகத்திலும், மறையியலிலும் அவர் நிறைய புத்தகங்கள் எழுதினார். அவரது உள் அனுபவமும், அவரது மக்களின் தேவைகளும் அவருடைய ஒழுக்கத் தத்துவயியல் என்ற பெரிய நூலை எழுதத் தூண்டுதலாக அமைந்தன. இன்று அவரது நூல்கள் 72 மொழிகளில் மொழி பெயர்ப்பப்பட்டுள்ளன.
ஆன்மீகத்தில் பின்தங்கிய கோத்தின் புனித அகதா மறைமாவட்டத்தின் ஆயராக, திருத்தந்தை அவர்கள் அல்போன்ஸஸை 1762 இல் நியமித்தார். பொதுநிலையினரையும் மக்களையும் மனம்திருப்பி, சமயப் பரப்புக் குழுக்களை ஏற்படுத்தி ஏழைமக்களுக்கு நல உதவித் திட்டங்களை செயல்படுத்தினார். தனது 79 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டதின் காரணமாக, பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
அவர் தனது தலையைக்கூட தூக்க முடியாத அளவுக்கு அவரது நரம்புத் தளர்ச்சி நோய் கடுமையாக இருந்தது. அவர் படிப்படியாக கண்பார்வையும், கேட்கும் திறனையும் இழந்தார். உணர்வுப்பூர்வமான அல்போன்ஸஸ் தனது முழுவாழ்வையும் கடவுளுக்காக அர்ப்பணித்து, தனது 91 ஆம் வயதில் காலமானார். 1871 ஆம் ஆண்டு அவர், திருச்சபையின் பேரறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்டார்.
செபம் :
என் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவே, நான் உம்மை போற்றுகிறேன். இந்த நாளில் நீர் எமக்குத் தந்த அனைத்து அருளிரக்கத்திற்காகவும் நன்றி கூறுகிறேன். இந்த இரவின் ஒவ்வொரு மணித்துளிகளையும், எனது தூக்கத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இந்த முடிவோடும், அன்னை மரியாளின் ஒளியிலும் நான் உமது தூய இதயத்தின் அருகில் என்னை சமர்ப்பிக்கிறேன். உமது தூய வானதூதர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு என்னை அமைதியில் வைத்திருப்பார்களாக, மேலும் உமது ஆசீர் என்மேல் தங்குவதாக. ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
ஏழைகளுக்கும் கைவிடப்பட்டோருக்கும் கடவுளுடைய வார்த்தையைப் பரப்புவதற்காக அல்போன்ஸஸ் மீட்பர் சபையை ஏற்படுத்தினார். இன்று உலகம் முழுவதும் ஏறத்தாள 7,000 மீட்பர் சபைகள் உள்ளன. தேயிலைத் தோட்டங்களில் வேலைக்காகக் குடியேறியவர்கள் நடுவில் எட்டு கோடைகாலங்களில் வடகலிபோர்னியாவில் பின்புற சாலைகளில் குடியேறிய வேலையாட்களை நல்வழிப்படுத்த ஜெரோம் சவார்ரியாவும் ஜோஸ் வே‘ம் பயணம் செய்தார்கள். அந்த இரண்டு குருக்களும் சேர்ந்து,
விருப்பமுள்ள மக்களுக்கு திருமுழுக்கு, ஒப்புறவு, நற்கருணை அருட்சாதனங்கள் பெறுவதற்கு மறைக்கல்வி வழங்கினார்கள். குடியேறிய மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றினார்கள்.
அங்குள்ள தல பங்குகளில் அவர்களுக்கு உடைகள் வழங்க ஏற்பாடு செய்தனர்.
விவிலிய கல்வி கற்க, அந்த சிறுவர்களை அருகிலுள்ள கோவில் மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
சில வேளைகளில் அந்த குடியேறிய மக்களின் வறுமை, விநோதமான பிரச்சனைகளை உருவாக்கின. உதாரணமாக, ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளுக்கும் திருமுழுக்கு கொடுக்க மறுத்தார். ஏனெனில், குழந்தைகளுக்கு திருமுழுக்கு உடைகள் வாங்குவதற்கு வசதியில்லை. தாராளமாக உதவும் நன்கொடையாளர்கள் மூலமாக அந்தக் குழந்தைகளுக்கு உடைகள் வழங்க குருக்கள் ஏற்பாடு செய்தனர். அந்த தந்தைக்கும் மனவருத்தமில்லாமல் இதைச் செய்தனர். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், எப்படி உதவுவது என்று அறியவும் ழழழ.redeதுஸ்ரீமி.லிrஆ என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.
லி.ஜெ. ஜோசப்
|
ஆகஸ்ட் 1 புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட்
புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட்
பிறந்த இடம் : லா முரி இசேர், பிரான்ஸ்
திருவிழா நாள் : ஆகஸ்ட் 1
தலைவராக இருத்தல்
அதிவந்திக்கத்தக்க திருவருட்சாதன குருக்களின் சபை நிறுவுனர்
கிருனோபிள் அருகில் உள்ள சிறிய கிராமத்தில் பிரன்ஞ் புரட்சியின் தொடக்கத்தில் பீட்டர் ஜூலின் ஐமார்ட் என்பவர் பிறந்தார். மதவாத எதிர்ப்பு நிலவிய அந்த காலத்தில், அவர் ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை. என்றாலும், பீட்டர் ஜூலியன் குருமடத்தில் சேர முயற்சி செய்தார். துரதிட்டவசமாக, நோய் அவரைத் தடுத்து நிறுத்தியது. அவர் பிடிவாதமாக இருந்தார். முடிவில் 1834 ஆம் ஆண்டு அவர் ஒரு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
அன்னை மரியாவின் மீது தொடர்ந்த பக்தியின் காரணமாக மரியாயின் சபையில் 1839 ஆம் ஆண்டில் சேர்ந்து ஒரு திறமை மிக்க போதகராகவும், பொது நிலையினர் சபையை உருவாக்கும் ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைப்பாளராகவும் கடின உழைப்பாளியாகிய ஒரு ஆசிரியராகவும் திகழ்ந்தார். பீட்டர் ஜூலியன் விரைவில் வணக்கத்திற்குரிய நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவின் மீது அளவு கடந்த அன்பு பாராட்டினார். அந்த பக்தி இயேசுவின் திருவுடல் மீது நிலையான ஆராதனை மற்றும் அளவு கடந்த ஈடுபாட்டுக்கும் இடையில் மூழ்கித் தவித்தார்.
வணக்கத்திற்குரிய நற்கருணை :
பீட்டர் ஜூலியன் பக்தி வளர்ந்தபோது, அவர் மேரியின் 3 ஆம் நிலை துறவறத்தாருக்கு நற்கருணை ஆராதனை ஒழுங்குகளை எழுத முயற்சித்தார். ஆனால் அத்தகைய ஒழுங்குகள் அந்த சபையின் நோக்கத்தை சிதறடித்து விடும் என்று அறிவுறுத்தப்பட்டார். அதனால் அதற்கு பதிலாக, மிக ஆசீர்பெற்ற அருட்சாதன சபை என்றும் சபையை நிறுவினார். (ஆசிபெற்ற அருட்சாதன குருக்கள்) பொது நிலையினரிடையே வணக்கத்துக்குரிய நற்கருணை அருட்சாதனத்தின் மீது அன்பை அதிகப்படுத்துவதும், அவர்களோடு இçண்து பணியாற்றுவதும் அதன் தலையாய நோக்கமாகும். 1856 ஆம் ஆண்டு இரண்டு குருக்களோடு ஒரு வீட்டில் தொடங்கப்பட்ட சபை, ஆனால் 1862 ல் அந்த சபை மூன்று இல்லங்களையும் ஒரு குருமடத்தையும் கொண்டு வளர்ந்தது.
பீட்டர் ஜூலியன், வணக்கத்திற்குரிய நற்கருணை அருட்சாதன தொண்டர்களையும் தொடர்ந்து ஆராதனையில் ஈடுபட்ட கன்னியர் குழுவையும் ஏற்படுத்தினார். இந்த இரண்டு சபைகளும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விரைவாகப் பரவியது. 1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நாளன்று பீட்டர் ஜூலியன் மிகுபக்தியுடைய ஒரு கருத்துக்காக வெற்றி வீரராக மரணம் அடைந்தார்.
செபம் :
கிறிஸ்துவின் ஆன்மாவே, என்னை இரட்சியும். இயேசுவின் திருவுடலே என்னைக் காப்பாற்றும். இயேசுவின் இரத்தமே என்னைக் கிழர்ந்தெழச் செய்யும். இயேசுவின் மீது வழிந்தோடும் தண்ணீரே என்னைக் கழுவியருளும். இயேசுவின் பாடுகள், என்னைத் திடப்படுத்தட்டும். ஓ, நல்ல இயேசுவே எனக்கு செவிசாயும். உமது காயங்களுக்குள்ளே என்னை மறைத்துக்கொள்ளும்.
இவர்களது அடிச்சுவட்டில் :
ஆண்டவரே உம்மை ஆராதிக்க, எண்ணற்ற வழிகள் உள்ளன. பீட்டர் ஜூலியன், மகிமைக்குரிய நற்கருணை அருட்சாதன வணக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மிஸிஸிப்பிலைச் சேர்ந்த பிரான்ஸிஸ்கன் சபை சகோதரி தியா போமேன், ஆப்ரிகன் அமெரிக்கன் உறவை மேம்படுத்த, கத்தோலிக்க கோட்பாடுகளை அவர்களது பண்பாட்டோடு இணைத்து ஒற்றுமைக்கு வழிவகுத்தார். பெண்களுக்கு கத்தோலிக்க இயக்கத்தில் ஒரு பெரிய பங்கேற்பை ஏற்படுத்தினார். சகோதரி தியா இவ்வாறு நம்பினார் :
ஆப்ரிகன் - அமெரிக்கன் ஆன்மீக மரபுகளுக்கு, இடமளிப்பது மட்டுமல்லாமல், ஆனால் அப்படி இடமளித்த பின்னர் இந்த மரபுகள் திருச்சபையில் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
பெண்களும் கடவுளின் வார்த்தைகளை பிறருக்கு எடுத்துச் செல்வர். கடவுளுடைய வார்த்தையை அதாவது கிறிஸ்துவை எடுத்துச் செல்வதற்கு எங்களை அழைத்திருக்கிறார். அது உண்மை, அது மீட்பு. மேலும் நாம் அந்த வார்த்தையை அன்பிலும் நம்பிக்கையிலும் பொறுமையுடனும் ஜெப உணர்வுடனும் விடா முயற்சியுடனும் எடுத்துச்சொன்னால், அது வேரூன்றி பலன் தரும்.
இறைவனை வழிபடி சிறந்த வழியைத் தேடுவது ஒரு பயனுள்ள தனித்துவப் பயணமாகும். அந்தப் பயணத்திற்கு தேர்ந்துகொள்ளும் பாதை எவ்வாறாக இருந்தாலும் அந்தப் பயணம் பயனுள்ளதாகவும், பலனுள்ளதாகவும் அமையும்.
லி.ஜெ. ஜோசப்
|
ஆகஸ்ட் 1 புனித எதல்வோல்ட்
புனித எதல்வோல்ட்
பிறந்த இடம் : வின்செஸ்டர், இங்கிலாந்து
திருவிழா நாள் : ஆகஸ்ட் 1
தடைகளைக் கடந்து
வின்செஸ்டர் ஆயர்
பலவகையான திறமைகளும், ஈடுபாடுகளும் கொண்டவர் எதர்வோல்ட். அவர் ஒரு சமையற்காரர், கொத்தனார், மணி செய்பவர், ஆர்மோனியம் செய்பவர், பாடகர், நாடக நடிகர், கலை நிபுணர், கட்டிட வல்லுநர், அறிவாளி மேலும் இங்கிலாந்தின் அதிமுக்கியமான பகுதியின் ஆயருமாக இருந்தார். அதல்ஸ்டன் அரசரின் அரசவைவில் வளர்க்கப்பட்டு, வின்செஸ்டர் ஆயர் பால்ட் ஆல்ஃபேஜ் பயின்று எதல்வோர்ட் வளர்க்கப்பட்டார். டன்ஸ்டன் என்ற உடன் பயிலும் மாணவருடன் எதல்வோல்டை ஆல்ஃபேஜ் படிப்படியாக குருவாக ஆக்கினார். இந்த இருவரும் எதல்வோல்ட் அதிபராக இருந்த கிளாஸ்டோன்பர்ரி குருமடத்தில் சேர்நதனர்.
954 இல் அவர் அபிங்டன் மடத்தின் அதிபரானார். இந்த மடம், நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தேனியர்களால் முற்றுகையிடப்பட்டு தகர்க்கப்பட்ட, நூற்றுக்கணக்கான துறவு மடங்களில் ஒன்றாகும். அபிங்டனை பழைய நிலைக்கு கொண்டு வந்த ஒரு துறவி குளுனிக்கு அனுப்பி அங்குள்ள சட்டதிட்டங்களை அறிந்து வந்து அவற்றை இந்த மடத்தில் கடைப்பிடிக்க செய்ய ஏற்பாடு செய்தார். பிறகு 963 இல் வின்செஸ்டரின் ஆயராக எதல்வோல்ட் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஒரு தீர்க்கமான சீர்திருத்தவாதி :
எதல்வோல்ட் ஆயராக இருந்தபோது, பேராலயத்தின் செயல்பாடுகளை சீரமைத்தார். துறவிகளின் சமயம் சாராத பொது ஒழுங்குகளை மாற்றியமைத்தார். இதன் மூலம் முற்றிலும் ஆங்கில முறை பேராலய குருமட ஒழுங்குமுறைகளை தனித்துவம்மிக்கதாக அமல்படுத்தினார். கண்டிப்பான பெனதிக்தியன் ஒழுங்குமுறைகளை அமல்படுத்தி தேனியர்களால் முன்பு அழிக்கப்பட்ட தொடர்ச்சியான குருமடங்களையும் கன்னியர் மடங்களையும் புதுப்பித்து கட்டி எழுப்பினார்.
அவர் புதிதாகக் கட்டி எழுப்பிய வின்செஸ்டர் பேராலயத்திற்கு எதல்வோல்ட் ஒரு மிகப்பெரிய ஆர்மோனியப் பெட்டி உருவாக்கினார். அது 400 குழல்களையும், 36 துருத்திகளையும் உள்ளடக்கி, ஒரே நேரத்தில் இரண்டு பேர் இசைக்கும்படியான கருவியாக திகழ்ந்தது. முதன்முறையாக, பாடகற்குழுவுக்காக ஆங்கில முறையிலான பலவொலி தன்மை கொண்ட ஆர்மோனியம் தயார் செய்தார். மேலும் அவரது கோவில் கோபுரங்களுக்காக ஆலய மணிகள் தயாரிக்க ஒரு தொழிற்கூடத்தை ஏற்படுத்தினார்.
இதற்கு மேலும், லத்தின் மொழி தெரியாத பொதுநிலையினரின் பயன்பாட்டுக்காக இலத்தின் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யும் ஒரு மொழிக்கல்வி கல்விக்கூடத்தையும் ஏற்படுத்தினார். அவரது மடத்துத் துறவிகள் எழுதிய கையயழுத்துப் பிரதிகளை எளிதாகப் படிக்க ஒரு தனிப்பட்ட ஒளிவிளக்கை வடிவமைத்தார். அது ஐரோப்பா நாடு முழுவதும் பிரபலமானது.
செபம் :
ஓ, தந்தையே போரினால் பாதிக்கப்பட்ட அவரது நாட்டுக்கு திருச்சபையின் வழிமுறைகளை மீட்டெடுப்பதற்கு புனித எதல்வோல்ட் தன்னையே அர்ப்பணித்தார். அவரது வார்த்தைகளை எப்பொழுதும் மனதில் பதிப்போம். இறந்தோரை உயிர்ப்பிப்பது உமது பணி, ஓ இயேசுவே எங்களது வாழ்க்கையில் அல்லது எங்களது நாட்டில், அல்லது துன்பம் சூழ்ந்த எங்கள் உலகில் நாங்கள் திக்கற்றவர்களாய் உணரும்போது புனித எதல்வோல்ட் காண்பித்ததுபோல், அழிவிலிருந்து வாழ்வு வந்தது. ஆமென்.
இவர்களது அடிச்சுவட்டில் :
வின்செஸ்டர் பேராலயத்தில், அவர் அந்த பெரிய ஆர்கனை வடிவமைத்து உருவாக்கியபோது, எதல்வோல்ட் ஒரு மகத்தான பொறியியல் சாதனை புரிந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் நியூயார்க் நகரிலுள்ள தெய்வீக மகத்துவமுள்ள புனித ஜாண் கோதிக்கலை பேராலயத்தில் இன்றுமொரு பெரிய ஆர்கன் நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஏலோலியன் - ஸ்கின்னர் தலைசிறந்த படைப்பு 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 8035 குழல்களுடன் கூடிய இந்த ஆர்கன் உலகிலேயே சக்திவாய்ந்த ஆர்கன்களில் ஒன்றாகும். டோராத்தி பாப்படகோஸ் என்ற ஆர்கன் வாசிப்பவர் ஒரு புதியதான இசைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து பணம் திரட்டி, இந்த ஆர்கனை புதுப்பிக்க வழிசெய்தார்.
ஒரு குழல் தத்தெடுங்கள், ஒரு உறுப்பு தானம் செய்பவராக மாறுங்கள் என்ற பிரச்சாரம் தனிநபரும், மாநகராட்சிகளும் தேவையான இரண்டு மில்லியன் டால்களை வழங்க வழிவகுத்தது.
பாப்படகோஸ் - ன் சி.டி. விற்பனைத் தொகை இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ கொண்டாட்டங்களில் இசை ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
லி.ஜெ. ஜோசப் |
|