✠ரோமப் பேரரசின் பேரரசி :
(Empress of the Roman Empire)
✠பிறப்பு : கி.பி. 246/50
ட்ரேபனும், பித்தினியா மற்றும் போண்டஸ்
(Drepanum, Bithynia and Pontus)
✠இறப்பு : கி.பி. 327/30 (வயது 80)
ரோம், டுஸ்கனியா எட் உம்ப்ரியா
(Rome, Tuscania et Umbria)
✠முக்கிய திருத்தலம் :
புனிதர் ஹெலெனா திருத்தலத்திற்கு புனிதர் பேதுரு பேராலயம்
(The shrine to Saint Helena in St. Peter's Basilica)
✠நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 18
புனிதர் ஹெலெனா, ரோமப் பேரரசின் பேரரசியும், பேரரசர் "பெரிய கான்ஸ்டன்டைண்" (Emperor Constantine the Great) அவர்களின் தாயாருமாவார். ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணாக பிறந்த இவர், கி.பி. 293ம் ஆண்டு முதல், 306ம் ஆண்டு வரை ரோமப் பேரரசை ஆண்ட பேரரசர் "கான்ஸ்டன்ஷியஸ் க்ளோரஸ்" (Roman Emperor Constantius Chlorus) என்பவரின் மனைவியானார். பிற்காலத்தில் கி.பி. 306ம் ஆண்டு முதல், 337ம் ஆண்டு வரை அரசாண்ட பேரரசர் "பெரிய கான்ஸ்டன்டைண்" (Emperor Constantine the Great) அவர்களின் தாயாரானார்.
தமது மகன் மீது தாம் கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக, கிறிஸ்தவ வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் இவர் மிக முக்கிய பிரமுகராக கருதப்படுகிறார். அவரது இறுதி ஆண்டுகளில், அவர் சிரியா பாலஸ்தீனம் (Syria Palaestina) மற்றும் ஜெருசலேம் (Jerusalem) ஆகிய நாடுகளுக்கு புனித ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இப்பயண காலத்தில், இவர் உண்மையான சிலுவையை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
ஹெலெனாவின் பிறந்த இடம் உறுதியாக தெரியவில்லை. 6ம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியரான "புரோக்கோபியாஸ்" (Procopius) என்பவரின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ஹெலெனா "பித்தினியா" (Bithynia) மாகாணத்திலுள்ள "ட்ரேபனும்" (Drepanum) நகரில் பிறந்தவராவார். கி.பி. சுமார் 330ம் ஆண்டு, ஹெலெனா மரித்ததன் பின்னர், அவரது மகனும் பேரரசனுமான "பெரிய கான்ஸ்டன்டைண்", ஹெலெனா பிறந்த நகருக்கு "ஹெலனோபொலிஸ்" (Helenopolis) எனும் பெயரை மாற்றியமைத்தார். இதுவே ஹெலெனா பிறந்த நகரம் என்பதற்கான ஆதாரமாகியது. பேரரசர், தமது புதிய தலைநகரான "கான்ஸ்டன்டினோப்பிலைச்" சுற்றிலும் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்தும் முயற்சியிலிருந்தார் என்றும், நகரின் பெயரை மாற்றியமைத்ததற்கான காரணம், தமது தாயை கௌரவிப்பதற்காகவேயொழிய, அவரது பிறந்த நகரை குறிப்பதற்கல்ல என்றும், "பைசான்டைன் பேரரசின்" (Byzantine Empire) கட்டிடக்கலை (architecture) வல்லுனரும், கலை மற்றும் வரலாறு ஆகியவற்றின் பிரிட்டன் அறிஞரான (British scholar) "சிரில் அலெக்சாண்டர் மேங்கோ" (Cyril Mango) என்பவர் வாதிடுகிறார். அத்துடன், பாலஸ்தீனத்திலுள்ள "ஹெலனோபொலிஸ்" (Helenopolis in Palestine) மற்றும் "லிடியா" நாட்டிலுள்ள "ஹெலனோபொலிஸ்" (Helenopolis in Lydia) ஆகிய நகரங்களும், "போன்டஸ்" மறைமாவட்டத்திலுள்ள (Diocese of Pontus) "ஹெலெனோபோன்டஸ்" (Helenopontus) மாகாணமும் அநேகமாக கான்ஸ்டன்டைன் தாயான ஹெலெனாவின் பெயரால் பெயரிடப்பட்டவையாகும்.
பேரரசர் "கான்ஸ்டன்டைண்", தமது தாயாருக்கு ரோம ஏகாதிபத்திய கௌரவமான (Roman imperial honorific), "அகஸ்டா இம்பெராட்ரிக்ஸ்" (Augusta Imperatrix) எனும் உயர் கௌரவத்தை அளித்திருந்தார். அத்துடன், யூத - கிறிஸ்தவ பாரம்பரியத்தின் (Judeo-Christian tradition) நினைவுச்சின்னங்களை கண்டுபிடிப்பதற்காக அரச கருவூலத்திலிருந்து வரம்பற்ற செலவு செய்யும் அதிகாரத்தை வழங்கியிருந்தார். கி.பி. 326-28ம் ஆண்டு காலத்தில், ஹெலெனா பாலஸ்தீனத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்கு (Holy Places in Palestine) புனித பயணம் மேற்கொண்டார்.
கி.பி. 260/265 � 339/340ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்த கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியரும், பாலஸ்தீனத்துக்கும் மற்ற கிழக்கு மாகாணங்களுக்கும் ஹெலெனாவின் புனித யாத்திரை விவரங்களை பதிவு செய்தவருமான "யூசேபிசியஸ்" (Eusebius of Caesarea) கூற்றின்படி, பெத்தலஹெமிலுள்ள கிறிஸ்துவின் பிறப்பு ஆலயமான, "நேட்டிவிட்டி ஆலயம்" (Church of the Nativity, Bethlehem) மற்றும் "ஒலிவ மலையின்" (Mount of Olives) மேலுள்ள கிறிஸ்துவின் விண்ணேற்பு ஆலயமான "எளியோனா ஆலயம்" (Church of Eleona) ஆகிய இரண்டினதும் கட்டுமானப் பணிகள் மற்றும் அழகு படுத்துதல் ஆகிய பணிகளின் பொறுப்புகளை ஹெலெனா ஏற்றிருந்தார். சினாயின் (Sinai) எரியும் புதரை (Burning Bush) அடையாளம் காண்பதற்காக, எகிப்தில் (Egypt) ஒரு தேவாலயத்தை கட்டியெழுப்ப ஹெலெனா கட்டளையிட்டதாக உள்ளூர் நிறுவன புராணக்கதைகள் கூறுகிறது. கி.பி. 330ம் ஆண்டின் "சினாய்" தீபகற்பத்திலுள்ள (Sinai Peninsula) "கேதரின் துறவு மடாலயத்திலுள்ள" (Saint Catherine's Monastery) சிற்றாலயம், "ஹெலெனா சிற்றாலயம்" (Chapel of Saint Helen) என்றே அழைக்கப்படுகிறது.
உண்மையான சிலுவையும் புனித கல்லறை தேவாலயமும்:
பாரம்பரியங்களின்படி, பல்வேறு புனித பொருட்களையும், அற்புத பொருட்களின் மிச்சங்களையும் கண்டெடுத்த ஹெலெனா, உண்மையான சிலுவையையும் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சி தொடங்க ஒரு தளம் தேர்வு செய்து தோண்டியதில், இங்கே மூன்று வெவ்வேறு சிலுவைகள் மீட்கப்பட வழிவகுத்தது. இதில் உண்மையான சிலுவை (True Cross) எது என்பதை கண்டுபிடிக்க செய்த முயற்சிகள் வீணாயின. பின்னர், ஜெருசலேமின் ஆயர் "மகாரியஸ்" (Bishop Macarius of Jerusalem) என்பவர் மூலம், நகரின் வெளியே, மரண தருவாயிலிருந்த பெண் ஒருவரை அழைத்து வந்தார்கள். அந்த பெண்ணை மூன்று சிலுவைகளையும் ஒவ்வொன்றாக தொடச் செய்தனர். முதல் சிலுவையையும் இரண்டாம் சிலுவையையும் தொடும்போது ஒன்றும் நேரவில்லை. ஆனால், மூன்றாம் சிலுவையை தொட்டதும் அற்புதமாக, அந்த பெண் எழுந்து குணமானார். ஆகவே, சாகும் தருவாயிலிருந்த பெண் தொட்டதும் குணமான காரணத்தால், அந்த சிலுவையே உண்மையான சிலுவை என்று ஹெலெனா அறிவித்தார். உண்மையான சிலுவை (True Cross) கண்டெடுக்கப்பட்ட இடத்தில் "புனித கல்லறை தேவாலயம்" (Church of the Holy Sepulchre) கட்ட பேரரசன் கான்ஸ்டன்டைன் உத்தரவிட்டார்.
கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்று ஆசிரியரான "சோஸோமென்" (Sozomen) மற்றும் "அந்தியோக்கியா பள்ளியின்" (School of Antioch) செல்வாக்குள்ள இறையியலாளரும், பண்டைய சிரியாவின் (Ancient Syria) ஆயருமான, "தியோடோரெட்" (Theodoret) ஆகியோரின் கூற்றின்படி, சிலுவையில் அறையப்பட்ட ஆணிகள் (Nails of the Crucifixion) ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்டன என்றும், அவற்றின் அற்புத சக்தி தமது மகனுக்கு உதவ வேண்டுமென்பதற்காக அவற்றிலொன்றை தமது மகனின் தலைக் கவசத்திலும், மற்றொன்றை அவரது குதிரையின் கடிவாலத்திலும் வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆண்டவர் கிறிஸ்து இயேசு, சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்னர், அவர் அணிந்திருந்த கோடுகளற்ற புனித அங்கியை (Holy Tunic), எருசலேம் பயணத்தின்போது முயன்று வாங்கிய ஹெலெனா, அதனை ஜெர்மனியிலுள்ள (Germany) "ட்ரையர்" (Trier) நகருக்கு அனுப்பினார்.
பிற இடங்களில் கட்டப்பட்டிருந்த தேவாலயங்களும் ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்டன.
புனிதர் ஹெலெனாவால் கண்டுபிடிக்கப்பட்ட பல நினைவுச் சின்னங்கள் இப்போது "சைப்ரஸ்" (Cyprus) தீவில் உள்ளன.
கி.பி. 327ம் ஆண்டு, எருசலேம் மற்றும் கிழக்கு பிராந்தியங்களை விட்டு ரோம் சென்ற ஹெலெனா, தாம் தமது அரண்மனையில், தமது தனிப்பட்ட சிற்றாலயத்தில் சேமித்து வைத்திருந்த, உண்மையான சிலுவை மற்றும் புனித பொருட்களின் மிச்சங்களில் பெரும்பாலானவற்றையும் எடுத்துச் சென்றார். மீதமுள்ளவற்றை இன்னமும் அவரது அரண்மனையில் காணலாம். அவரது அரண்மனை, பின்னாளில் எருசலேமிலுள்ள "புனித திருச்சிலுவை பேராலயமாக" (Basilica of the Holy Cross in Jerusalem) மாற்றியமைக்கப்பட்டது. இது நூற்றாண்டுகளாக தேவாலயத்துடன் இணைக்கப்பட்ட மடாலயத்தின் சிஸ்டர்சியன் (Cistercian) துறவிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஏறத்தாழ கி.பி. 330ம் ஆண்டு மரித்த ஹெலெனா, ரோம் நகரிலுள்ள "மௌசோலியம்" (Mausoleum of Helena) எனும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இக்கல்லறை, இவரது மகனும் பேரரசனுமான முதலாம் கான்ஸ்டண்டைனால் தமக்காக கட்டப்பட்டது. ஆனால், அதில் அவரது தாயாரான புனிதர் ஹெலெனா அடக்கம் செய்யப்பட்டார்.
ஆகஸ்டு 18
J}a
புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ குருசாகா
(St. Luis Alberto Hurtado Cruchaga, Jesuit)
பிறப்பு
22 ஜனவரி 1901
சிலி (Chile)
இறப்பு
18 ஆகஸ்டு 1952
சிலி (Chile)
முத்திபேறுபட்டம்: 16 அக்டோபர் 1994 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
புனிதர்பட்டம்: 23 அக்டோபர் 2005 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
தந்தை: ஆல்பர்ட் ஹூர்டாடோ லரைன் (Alberto Hurtado Larrain)
தாய்: அன்னா குருசாகா டி ஹூர்டாடோ(Ana Cruchaga de Hurtado)
சகோதரன்: மிகுவேல்(Miguel)
இவர் மிகவும் வறுமையான ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தங்குவதற்கென்று சிறிய வீடுகூட இல்லாமல், எந்தவித அடிப்படை வசதியுமே இல்லாமல் வாழ்ந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமையில் வளர்ந்தார். இதனைக்கண்ட இயேசு சபை குரு ஒருவர். இவரின் குடும்பத்திற்கு உதவி செய்தார். அக்குருவின் உதவியினால் ஆல்பர்ட் கல்வி பயின்றார். அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வளர்ந்த ஆல்பர்ட் தினமும் திருப்பலியில் பங்கெடுத்தார். தனது பங்குத் தந்தையின் வழிநடத்துதலின்படி, தன் வாழ்வை அமைத்தார். தான் ஓர் குருவாக வேண்டுமென்ற ஆசையை பங்குத்தந்தையிடம் தெரிவித்தார். அவரையே தன் ஆன்மகுருவாகவும் தேர்ந்தெடுத்தார். தான் படிக்கும்போதும் விடுமுறை நாட்களிலும் தன் ஊரை சுற்றியுள்ள குடிசைகளையும் சந்தித்து, மக்களை தேற்றியும் ஆறுதல்படுத்தியும் வந்தார்.
இவர் 1920 ஆம் ஆண்டு படைவீரராக சேர்ந்தார். 3 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தபின் மீண்டும் கல்லூரியில் சென்று படித்தார். தன் படிப்பை முடித்தபின் இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் பயிற்சியை முடித்தபின் 1933 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று குருவானார். குருவான பிறகு சாண்டியாகோ என்ற நகரில், கல்லூரியில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஆசிரியர் பணியை ஆற்றியதோடு பல ஏழைமாணவர்களுக்கு உதவிகள் செய்து, அவர்களின் வீடுகளை சந்தித்து, வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். பின்னர், "எல் ஹோகார் டே கிறிஸ்டோ” (L Hogar de Christo) என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு கருணை இல்லம் தொடங்கினார்.
எப்போதும் அவர் சமூக சிந்தனைகளை கொண்டு செயல்பட்டார். சமுதாயத்தை பற்றியும், ஏழைகளை பற்றியும் சில நூல்களை எழுதியுள்ளார். ஏழைகளின் நண்பரான ஆல்பர்ட் புற்றுநோயால் தாக்கப்பட்டு காலமானார். நோயால் தாக்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும்வரை பொறுமையோடும், மகிழ்வோடும் தன் நோயை ஏற்றுக்கொண்டார். இவர் இறந்தாலும் ஏழைகளின் மனங்களில் உயிருடன் வாழ்ந்தார்.
செபம்:
ஏழைகளின் நண்பனே! யாம் வாழும் இவ்வுலகில் எங்களைவிட எத்தனையோ பேர் சொத்து, சுகமின்றி, தேவையான அடிப்படை வசதியின்றி வாழ்கின்றனர். ஏழை மக்களை எங்களின் நண்பர்களாக ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, வழிகாட்டிட, உம் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.