St. Aidan St. Joseph Of Arimathea St. Nicodemus St. Raymund Nonnatus

ஆகஸ்டு 31

✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠

mary

✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠(St. Joseph of Arimathea)

 

✠இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர் :
(Secret Disciple of Jesus)

✠பிறப்பு : கி.மு. முதலாம் நூற்றாண்டு

✠இறப்பு : ----
பழைய எருசலேம் நகரிலுள்ள "தூய செபுல்ச்ர்", சிரியாக் மரபுவழி சிற்றாலயம்
(Syriac orthodox Chapel in Holy Sepulchre)

✠நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31

✠பாதுகாவல் : நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது.
மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது.
யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது.

இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்துவிடம் (Pilate) அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதி செய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.

"நிக்கதேம்" (Nicodemus) துணையோடு "கொல்கொதாவில்" (Golgotha) இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருட்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.

ஆகஸ்டு 31

✠ புனிதர் நிக்கதேம் ✠(St. Nicodemus)

mary

✠ புனிதர் நிக்கதேம் ✠(St. Nicodemus)

 

✠கிறிஸ்துவின் பாதுகாவலன் :
(Defender of Christ)

✠பிறப்பு : கி.மு. முதலாம் நூற்றாண்டு

✠இறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு
யூதேயா (Judea)

✠நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31

✠பாதுகாவல் : ஆர்வமுள்ளவர்களின் (Curious)

புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு "பரிசேயரும்" (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார்.

இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்:

முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21)
இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் "ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டு இவர் பரிந்து பேசியதாக கூறுகின்றது. (யோவான் 7: 50-51)

இறுதியாக, அரிமத்தியா யோசேப்புவுக்கு (Joseph of Arimathea) இயேசுவின் உடலை அடக்கம் செய்ய இவர் உதவியதாக கூறுகின்றது. (யோவான் 19:39-42)

இவர் முதலில் இயேசுவை இரவில் சந்தித்து உரையாடிய பகுதியில் உள்ள விவிலிய வரிகள் மிகவும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக யோவான் 3:16 நற்செய்தியின் சுறுகம் என அழைக்கப்படுகின்றது. மேலும் பல கிறிஸ்தவ பிரிவுகளில் மீள்பிறப்புக் கொள்கை (Born again) இவ்வுரையாடலிலிருந்தே பெறப்படுகின்றது.

4ம் நூற்றாண்டின் மையத்தில் எழுதப்பட்ட திருமுறையினை சாராத "நிக்கதேம் நற்செய்தி" (Gospel of Nicodemus) என்னும் நூல் இவரால் எழுதப்பட்டதாக கூறுகின்றது. ஆயினும் இது பின்னாட்களில் எழுதப்பட்ட போலி என்பது அறிஞர் கருத்து.

கிறிஸ்தவ மரபுப்படி இவர் 1ம் நூற்றாண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்பர்.

image