✠மறைவல்லுநர், ரைனின் இறைவாக்கினர் :
(Doctor of the Church, Sibyl of the Rhine)
✠பிறப்பு : கி.பி. 1098
பெர்மெர்சீம் வோர் டெர் யோகே
(Bermersheim vor der H�he, County Palatine of the Rhine, Holy Roman Empire)
✠இறப்பு : செப்டம்பர் 17, 1179 (வயது 81)
ரைன் ஆற்றுக்கரை பிங்கென்
(Bingen am Rhein, County Palatine of the Rhine, Holy Roman Empire)
✠முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 26, 1326
திருத்தந்தை இருபத்திஇரண்டாம் ஜான்
(Pope John XXII)
✠புனிதர் பட்டம் : மே 10, 2012
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)
✠முக்கிய திருத்தலங்கள் :
ஐபிங்கென் மட ஆலயம்
(Eibingen Abbey, Germany)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர் 17
புனிதர் ஹில்டெகார்ட், ஓர் எழுத்தாளரும், இறை இசையமைப்பாளரும், மெய்யியலாளரும், கிறிஸ்தவ உள்ளுணர்வாளரும், இறைக்காட்சியாளரும், ஜெர்மனிய கன்னியர் மடத்தின் தலைவியாக இருந்தவரும், பன்முக திறனாளரும் ஆவார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் பெண் இறைவாக்கினர் என்று அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.
கி.பி. 1136ம் ஆண்டில் சக கன்னியர்களால் ஆதீனத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹில்டெகார்ட் 1150ம் ஆண்டு, ரூபரட்சுபெர்க்கில் ஓர் மடத்தையும் 1165ம் ஆண்டு, ஐபிங்கெனில் ஓர் மடத்தையும் நிறுவினார். இவரது ஆக்கமான ஓர்டோ விர்சுதும் (Ordo Virtutum) கிறிஸ்தவ சமய நாடகங்களுக்கு ஓர் முன்னோடியாகும். சமயவியல், தாவரவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது படைப்புகளில் கடிதங்கள், சமயப் பாடல்கள், கவிதைகள் மற்றும் நாடகங்களும் அடங்கும். சிறு சித்தரிப்புகளையும் மேற்பார்வையிட்டுள்ளார்.
கி.பி. 1098ம் ஆண்டு, ஜெர்மனியின் உயர்குலத்தில் பணக்காரக் குடும்பத்தில் ஹில்டெகார்ட் பிறந்தார். தனது 8வது வயதில் பெனடிக்ட் சபை துறவு மடத்துக்குக் கல்வி பயிலச் சென்றார். 18வது வயதில் அக்கன்னியர் மடத்திலேயே சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். 20 ஆண்டுகள் கழித்து 1136ம் ஆண்டில் துறவு மடத்தின் தலைவியானார். அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகள் இறைக் காட்சிகளைக் கண்டார் என்பர். 1140ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டுவரை அக்காட்சிகளைப் படங்களோடும் விளக்கங்களோடும் எழுதி வைத்துள்ளார். இதற்கிடையில் இக்காட்சிகள் உண்மையானதா எனக் கண்டறிவதற்கு திருத்தந்தை மூன்றாம் யூஜின் ஒரு விசாரணைக் குழுவை அனுப்பினார். இக்காட்சிகள் உண்மையானவை என அக்குழு திருத்தந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
ஹில்டெகார்ட், தெற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பாரிஸ் எனப் பல இடங்களுக்குப் பயணம் செய்து மறை போதித்து வந்தார். இவரது மறையுரைகளைக் கேட்டவர் அனைவரும் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டனர். எழுத்துவடிவிலும் மறையுரைகளைத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஹில்டெகார்ட் தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் துன்பம் அனுபவித்தார். திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இளம் கிறிஸ்தவர் ஒருவர் இறந்தபோது அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி அடக்கச் சடங்கை நிறைவேற்றினார். இதனால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இந்தக் கிறிஸ்தவர் மரணப்படுக்கையில் தனது தவறுகளுக்காக வருந்தி திருவருட்சாதனங்களையும் பெற்றார் என்பது இவர் தரப்பு வாதம். இதனால் இவரது கன்னியர் இல்லம் விலக்கி வைக்கப்பட்டது. இதனைக் கடுமையாய் எதிர்த்தார் ஹில்டெகார்ட். பின்னர் இவ்விலக்கு நீக்கப்பட்டது. 1179ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் தேதி தனது 81வது வயதில் இவர் இறந்தார்.
பேரரசர்கள், திருத்தந்தையர்கள், ஆயர்கள், அருள்சகோதரிகள் மற்றும் உயர்குலப் பிரபுக்களுக்கு எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள், ஒரு நாடகம் உட்பட 72 பாடல்கள், ஏழு புத்தகங்கள் உட்பட ஹில்டெகார்ட் எழுதியவை இன்றும் உள்ளன. இவர் எழுதிய இசைக் குறிப்புகள் இக்காலத்திலும் வாசிக்கக்கூடிய வடிவில் உள்ளன. இவரது எழுத்துக்களில் அறிவியல், கலை, மதம் ஆகிய அனைத்துத் துறைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரையும் இறைவனின் சாயலாகப் பார்த்த இவர், சமூகநீதிக்காவும், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காவும் அயராது உழைத்தார். 12ம் நூற்றாண்டில் திருச்சபையில் பெரும் மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் வித்திட்டவர் இவர் என நம்பப்படுகின்றது.
இவருக்கு முறையான புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை எனினும் இவரின் பெயர் புனிதர்கள் பட்டியலில் இருந்தது. இவரின் புனிதர் பட்ட நிலையில் இருந்த குழப்பத்தை நீக்க, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 2012ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாளன்று, இவரின் பக்தியை அதிகாரப்பூர்வமான ஒன்றாக அறிவித்தார். 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் நாளன்று, இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அறிவித்தார்.
செப்டம்பர் 17
J}a
t
rpe;jid: c
nrgk;: k
செப்டம்பர் 17
✠ புனிதர் இராபர்ட் பெல்லார்மின் ✠
✠ புனிதர் இராபர்ட் பெல்லார்மின் ✠(St. Robert Bellarmine)
✠ஆயர், ஒப்புரவாளர், மறைவல்லுநர் :
(Bishop, Confessor and Doctor of the Church)
✠பிறப்பு : அக்டோபர் 4, 1542
மோன்ட்டெபுல்சியானோ, இத்தாலி
(Montepulciano, Italy)
✠இறப்பு : செப்டம்பர் 17, 1621 (வயது 78)
ரோம் நகரம், இத்தாலி
(Rome, Italy)
✠அருளாளர் பட்டம் : மே 13, 1923
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)
✠புனிதர் பட்டம் : ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
(Pope Pius XI)
✠முக்கிய திருத்தலங்கள் :
புனித இஞ்ஞாசியார் ஆலயம், ரோம் நகரம், இத்தாலி
(Chiesa di Sant'Ignazio, Rome, Italy)
✠திருவிழா : செப்டம்பர் 17
✠பாதுகாவல் :
பெல்லார்மின் பல்கலைக்கழகம் (Bellarmine University); பெல்லார்மின் ஆயத்த பள்ளி (Bellarmine Preparatory School); ஃபேர்பீல்ட் பல்கலைக்கழகம் (Fairfield University); திருச்சபை அதிகாரிகள் (Canonists); திருச்சபை சட்ட வழக்குரைஞர்கள் (Canon lawyers); வேதியர்கள்; சின்சினாடி உயர் மறைமாவட்டம் (Archdiocese of Cincinnati), ஆயர் இராபர்ட் பேரோன் (Bishop Robert Barron)
புனிதர் ராபர்ட் பெல்லார்மின், ஒரு இத்தாலிய இயேசு சபைத் துறவியும் (Jesuit), கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலும் (Cardinal) ஆவார். இவர் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களுல் ஒருவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI), 1930ம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டமளித்தார். அடுத்தவருடமே இவர் திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவிக்கப்பட்டார். இவரின் நினைவுத் திருவிழா நாள் 17 செப்டம்பர் ஆகும்.
இறையியல் பேராசிரியரான இவர், பின்னர் ரோமன் கல்லூரியின் (Roman College) அதிபராகவும் பணியாற்றினார். 1602ம் ஆண்டு, "கபுவா" (Capua) உயர்மறைமாவட்ட்டத்தின் பேராயராகவும் (Archbishop) பொறுப்பேற்றார். வடக்கு இத்தாலியின் "ட்ரென்ட்" மற்றும் போலோக்னா" (Trento and Bologna) ஆகிய இடங்களில் நடந்த கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய மாநாடுகளில் ஒன்றான "ட்ரென்ட் மாநாட்டில்" (Council of Trent) எடுக்கப்பட்ட சீர்திருத்த தீர்மானங்களை ஆதரித்தார்.
இத்தாலியின் "மோன்ட்டெபுல்சியானோ" (Montepulciano) எனும் நகரில், உன்னத பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த பெல்லார்மினுடைய தந்தை "வின்சென்ஸோ பெல்லார்மினோ" (Vincenzo Bellarmino) ஆவார். இவரது தாயார், திருத்தந்தை "இரண்டாம் மார்செல்லஸ்" (Pope Marcellus II) அவர்களின் சகோதரியான "சின்ஸியா செர்வினி" (Cinzia Cervini) ஆவார்.
1560ம் ஆண்டு, ரோம் நகரிலிருந்த இயேசு சபையின் புகுமுக துறவியாக இணைந்தார். மூன்று வருடங்கள் அங்கிருந்த அவர், வடமேற்கு இத்தாலிய பிராந்தியமான "பியேட்மான்ட்" (Piedmont) எனுமிடத்தின் "மாண்டவி" (Mondov�) எனுமிடத்திலுள்ள இயேசுசபை இல்லத்திற்கு கிரேக்கம் கற்க சென்றார். அங்கிருக்கையில், இயேசுசபையின் பிராந்திய தலைவரான (Provincial Superior) ஃபிரான்செஸ்கோ அடர்னோ" (Francesco Adorno) அவர்களின் கவனத்திற்கு ஈர்க்கப்பட்டு, "பதுவை பல்கலை" (University of Padua) சென்றார்.
பதுவை நகரில் முறையாக இறையியல் கற்ற பெல்லார்மின், 1569ம் ஆண்டு, கல்வியை பூர்த்தி செய்வதற்காக "ஃபிலாண்டேர்ஸ்" (Flanders) நகரிலுள்ள "லியூவேன்" பல்கலைக்கு (University of Leuven) அனுப்பப்பட்டார். அங்கேயே குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், பேராசிரியராகவும் மறைபோதகராகவும் புகழ் பெற்றார். ஏழு வருடங்கள் அங்கேயே வசித்த அவர், தமது பலவீனமான உடல்நிலை காரணமாக, 1576ம் ஆண்டு இத்தாலி பயணித்தார். அங்கேயே தங்கிய இவர், திருத்தந்தை "பதின்மூன்றாம் கிரகொரியால்" (Pope Gregory XIII) புதிய ரோமன் கல்லூரியில் (New Roman College) இறையியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
பெல்லார்மின், 1589ம் ஆண்டுவரை இறையியல் பேராசிரியராக பணியாற்றினார். அதே வருடம், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் "மூன்றாம் ஹென்றி" (Henry III of France) கொலை செய்யப்பட்டார். திருத்தந்தை "ஐந்தாம் சிக்ஸ்டஸ்" (Pope Sixtus V) இத்தாலிய கர்தினால் "என்ரிகோ சேடனி" (Enrico Caetani) என்பவரை, ஃபிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க அதிகார சபையுடன் (Catholic League of France) திருத்தந்தையின் தூதராக பேச்சுவார்த்தை நடத்த, பாரிஸ் அனுப்பினார். அவருடன் பேச்சுவார்த்தையில் துணையாக இறையியல் அறிஞராக பெல்லார்மின் தேர்வு செய்யப்பட்டார். அவர், ஃபிரான்ஸ் நாட்டின் அரசன் நான்காம் ஹென்றியின் (Henry of Navarre) முற்றுகையின்போது அங்கே இருந்தார்.
பெல்லார்மின் 1592ம் ஆண்டு "ரோமன் கல்லூரியின்" (Roman College) அதிபராக நியமிக்கப்பட்டார். 1598ம் ஆண்டு, "ஆயர்களின் ஆய்வாளராக" (Examiner of Bishops) நியமிக்கப்பட்டார். 1599ம் ஆண்டு, கர்தினாலாக நியமிக்கப்பட்டார். அவர் கர்தினாலாக நியமிக்கப்பட்டதும், திருத்தந்தை "எட்டாம் கிளமென்ட்" (Pope Clement VIII) அவரை கர்தினால் விசாரணை குழுவின் நீதிபதிகளுள் ஒருவராக (Cardinal Inquisitor) நியமித்தார். இக்குழு, கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கொள்கை மற்றும் நடவடிக்கையில் (Heresy) ஈடுபடுவோரை விசாரிப்பதற்காக நிறுவப்பட்டதாகும்.
1602ம் ஆண்டு "கபுவா" (Capua) உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட பெல்லார்மின், பன்மைத்துவம் (Pluralism) மற்றும் தமது மறைமாவட்டங்களுக்குள் வசிக்காத ஆயர்களுக்கெதிராக எழுதினர்.
வயதான பெல்லார்மின், ரோம் நகரின் "தூய அந்திரேயா இயேசுசபை கல்லூரியில்" (Jesuit college of St. Andrew) ஓய்வு பெற்றார். 78 வயதான பெல்லார்மின், 1621ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 17ம் தேதி மரித்தார்.