✠ புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் ✠
(Saints Cosmas and Damian)
✠ புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் ✠
(Saints Cosmas and Damian)
"இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணையின் முன் நிற்கக் கண்டேன். வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது" (திவெ 20:12).
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூருகின்ற கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகிய இருவரும் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அரேபியாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் இரட்டையர்கள், இரண்டுபேருமே கைதேர்ந்த மருத்துவர்கள்.
இருவரும் தாங்கள் இருந்த பகுதியில் இருந்த ஏழை எளியவருக்கு, நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையினைச் செய்து வந்தார்கள். இதனால் இவர்கள் இவருடைய பேரும் புகழும் எங்கும் பரவியது.
அந்நாட்களில் உரோமையை டையோக்ளசியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்களிடத்தில் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் நிக்கோமீதியா என்ற அரண்மனை யாரோ ஒருவரால் தீக்கிரையாக்கப்பட்டபோது, அது கிறிஸ்தவர்களால்தான் தீக்கிரையாக்கப்பட்டது என நினைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினான்.
இந்த நேரத்தில் இலவசமாக மருத்துவச் சேவைகளைச் செய்தும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்தும் வாழ்ந்து வந்த கோஸ்மாஸ் மற்றும் தமியானைப் பிடித்து, "நீங்கள் இருவரும் உரோமைக் கடவுளை வணங்கி, அவருக்குத் தூபம் காட்டினால், உயிர் பிழைப்பீர்கள், இல்லையென்றால், கொல்லப்படுவீர்கள்" என்று மிரட்டினான். சகோதர்கள் இருவரும் எதற்கும் பயப்படாமல் மிக உறுதியாக இருந்தார்கள். இதனால் அவன் சகோதரர்கள் இருவரையும் பலவாறாக சித்ரவதை செய்தான். எதிலும் அவர்களுடைய உயிர் போகவே இல்லை, கடைசியில் அவன் அவர்களைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு கோஸ்மாஸ் மற்றும் தமியான் என்ற சகோதரர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட விசுவாசத்திற்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள். அவர்கள் இறந்த ஆண்டு 303.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகியோருடைய நினைவுநாளை கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்டதை, மக்களுக்கு இலவசமாக வழங்குவோம்!
தூய கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகிய இருவரும் இறைவனிடமிருந்து இலவசமாக பெற்ற கொடையினை மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார்கள். அவர்களைப் போன்று நாம், இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற கொடையினை, திறமையினைக் கொண்டு மக்களுக்கு (இலவசமாக) சேவை செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு சேவை செய்யும் மனப்பான்மையே குறைந்துவரும் சூழலில், இலவசமாக யார் சேவை செய்வார்கள்? என கேள்வி எழலாம்.
இந்த இடத்தில், 2017 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, லண்டனில் �சிறந்த மனிதநேய ஆசியர்� என்ற விருதுபெற்ற ஜாக் பிரெகர் என்பவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆசியர் அல்லாத ஒருவர் இந்த விருதினைப் பெறுவது இதுவே முதல்முறை. இப்படி இருக்கும்போது, இவர் இந்த விருதினைப் பெறுகின்ற அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மருத்துவரான ஜாக் பிரெகர், புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் படித்து, மருத்துவராகி கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு மனநிறைவு இல்லை. எனவே ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதிக்குச் சென்று, அங்கு மருத்துவ சேவை செய்யலாம் என்று தீர்மானித்து, அதன்படி மேற்கு வங்கத்திற்கு வந்து, அங்குள்ள சேரிப்பகுதிகளில், மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை செய்யத் தொடங்கினார். இப்படிப்பட்ட பணியை அவர் கடந்த 38 ஆண்டுகளாகச் செய்துவருகின்றார். மக்கள் இவர் செய்துவருகின்ற மருத்துவச் சேவையினைப் பார்த்துவிட்டு இவரை "ஏழைகளின் மருத்துவர்" என்றே அழைத்து வருகின்றனர்.
இப்படி எங்கோ பிறந்து, இங்கே வந்து மருத்துவச் சேவையை செய்யும் ஜாக் பிரெகரின் சேவையைப் பார்த்துவிட்டுத்தான் அவருக்கு "சிறந்த மனிதநேய ஆசியர்" என்ற விருதானது கொடுக்கப்பட்டது.
இலவசமாகப் பெற்றுக்கொண்டதை இலவசமாக மக்களுக்குத் தருகின்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் அவரை கண்டுணரவில்லை. ஆகவே, தூய கோஸ்மாஸ் மற்றும் தமியானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரிடமிருந்து பெற்ற அருளை, கொடையை மற்றவர்களுக்கும் வழங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
✠கர்தினாலாக உயர்த்தப்பட்டது : டிசம்பர் 15, 1958
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope Saint John XXIII)
✠முத்திப்பேறு பட்டம் : அக்டோபர் 19, 2014
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)
✠நினைவுத் திருவிழா : செப்டம்பர் 26
✠பாதுகாவல் :
மிலன் உயர்மறைமாவட்டம் (Archdiocese of Milan)
ஆறாம் பால் "போண்டிஃபிகல்" இன்ஸ்டிடியூட் (Paul VI Pontifical Institute)
இரண்டாம் வத்திக்கான் கவுன்சில் (Second Vatican Council)
ப்ரெஸ்ஸியா மறைமாவட்டம் (Diocese of Brescia)
"கான்செஸியோ" (Concesio)
"மெஜந்தா" (Magenta)
"பதர்னோ டுக்னானோ" (Paderno Dugnano)
திருத்தந்தை ஆறாம் பவுல், கி.பி. 1963ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரையான காலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் 262ம் திருத்தந்தையும், ரோம் ஆயரும் ஆவார். "ஜியோவன்னி பட்டிஸ்டா என்ரிக்கோ அன்டோனியோ மரிய மோன்டினி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்னும் நீண்ட திருமுழுக்கு பெயர் கொண்ட இவர், 1962ம் ஆண்டு, கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை (Second Vatican Council) தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறிஸ்தவ சபையோடும், எதிர் திருச்சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.
2014ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் நாள் அன்று, வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள், இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். இவரின் நினைவுத் திருவிழா நாள், இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 26 ஆகும்.
திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்பு :
குருத்துவப் பட்டம் பெற்றதும் தந்தை "மோன்டினி" (Montini) வத்திக்கான் நகரத்தின் வெளியுறவுத் துறையில் 1922ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது மோன்டினியும், (Domenico Tardini) "டோமினிக்கோ டர்டினி" என்னும் மற்றொரு குருவும் அன்று ஆட்சியிலிருந்த திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் என்பவருக்கு மிக நெருக்கமான உடனுழைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். பன்னிரண்டாம் பயஸ், மோன்டினியை மிலான் நகரத்தின் பேராயராக உயர்த்தினார். வழக்கமாக, மிலான் உயர் மறைமாவட்டத்தின் ஆயர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவதுண்டு. ஆனால் பன்னிரண்டாம் பயசின் ஆட்சிக்காலம் முழுவதும் மோன்டினி கர்தினாலாக நியமிக்கப்படவில்லை. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இறந்தபின்னர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் யோவான் பேராயர் மோன்டினியை 1958ல் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். 1962ல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இறந்ததும் கர்தினால் மோன்டினி அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது.
பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்:
கர்தினால் மோன்டினி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் "பவுல்" என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார். கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அயராது உழைத்த புனிதர் பவுலைப் போல, தாமும் கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அழைக்கப்பட்டதாகப் புதிய திருத்தந்தை உணர்ந்ததால் "பவுல்" என்னும் பெயரைத் தமதாக்கிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே அவர் எடுத்த முக்கியமான முடிவு, அவரது முன்னோடியாகிய இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தாம் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவித்ததுதான்.
1965ம் ஆண்டு, பொதுச்சங்கம் நிறைவுற்றதும் அச்சங்கம் எடுத்த முடிவுகளையும், பரிந்துரைத்த கருத்துகளையும், செயல்படுத்தும் பெரும் பொறுப்பு ஆறாம் பவுல் கைகளில் சேர்ந்தது. பொதுச்சங்கம் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் யாவை என்று வரையறுப்பதில் கருத்துவேறுபாடுகள் எழுந்த பின்னணியில் ஆறாம் பவுல் தீவிரப் போக்குகளைத் தவிர்த்து நடுநிலை நின்று செயல்பட்டார்.
அன்னை மரியாள் மீது பக்தி:
ஆறாம் பவுல், அன்னை மரியாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலங்களை அவர் சென்று சந்தித்து, அங்கு பல முறை உரையாற்றினார். அன்னை மரியாளைப் பற்றிச் சுற்றுமடல்கள் எழுதினார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன், மிலான் நகரின் ஆயராக இருந்த புனித அம்புரோசு என்பவரைப் போல, ஆறாம் பவுலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மரியாளைத் "திருச்சபையின் தாய்" என்னும் சிறப்புப் பெயரால் அழைத்து பெருமைப்படுத்தினார்.
உலக மக்களோடு உரையாடல்:
ஆறாம் பவுல் உலக மக்களோடும், கத்தோலிக்கரல்லாத பிற கிறிஸ்தவர்களோடும், பிற சமயத்தவரோடும், ஏன், கடவுள் நம்பிக்கையற்றவர்களோடு கூட உரையாடலில் ஈடுபட முன்வந்தார். அவருடைய அணுகுமுறை எந்த மனிதரையும் விலக்கிவைக்கவில்லை. துன்பத்தில் உழல்கின்ற மனித இனத்திற்குப் பணிசெய்யும் எளிய ஊழியனாகக் கடவுள் தம்மைத் தேர்ந்தெடுத்ததாக அவர் உணர்ந்தார். எனவே "மூன்றாம் உலகம்" (Third World) என்று அழைக்கப்பட்ட ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குச் செல்வம் படைத்த நாடுகள் மனமுவந்து உதவிட வேண்டும் என்று அவர் அடிக்கடி கோரிக்கை விடுத்தார். செயற்கை முறைகளைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்வது அறநெறிக்கு மாறானது என்று திருத்தந்தை 1968ம் ஆண்டு, தாம் எழுதிய "மானிட உயிர்" (Humanae Vitae) என்னும் சுற்றுமடலில் போதித்தார். அது மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆயினும் கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் அப்போதனைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
உலக நாடுகளில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்:
ஆறாம் பவுல் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலம் அரசியல், கலாச்சாரம், சமூக உறவுகள் ஆகிய பல துறைகளிலும் பெரிய மாற்றங்களைச் சந்தித்த காலம் ஆகும். 1960களில் வெடித்த மாணவர் போராட்டம், வியட்நாம் போருக்கு எதிர்ப்பு, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கு நடுவே கத்தோலிக்க திருச்சபையின் போதனையை எடுத்துரைத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஆறாம் பவுல் ஆற்ற வேண்டியிருந்தது.
மரணம் :
திருத்தந்தை ஆறாம் பவுல் 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் நாள், இயேசு கிறிஸ்து தோற்றம் மாறிய திருவிழாவன்று மரித்தார். அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டன.