St. Edward The Confessor St. Gerald of Aurillac

அக்டோபர் 13

புனித ஆரிலேக் ஜெரால்டு

mary

புனித ஆரிலேக் ஜெரால்டு
St. Gerald of Aurillac

நினைவுத்திருநாள்: அக்டோபர் 13
பிறப்பு : 855, அரிலேக், பிரான்ஸ்
இறப்பு : 13 அக்டோபர் 909, செனெசாக் Cenezac, பிரான்ஸ்
பாதுகாவல்: ஊனமுற்றோர், தனிமையில் வாழ்வோர்
இவர் ஓர் செல்வந்தராக வாழ்ந்துள்ளார் என்றும், துறவியாகாமலே, துறவியைப் போலவே தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இவரது முகத்தில் பெரிய முகப்பரு ஒன்று காணப்பட்டது. நாளடைவில் அம்முகப்பருவால் அவர் பார்வையை இழந்தார். இவர் ஏழைகளின் மேல் இரக்கமும், கருணையும் கொண்டு வாழ்ந்தார். குருவாக வேண்டுமென்று மிகவும் ஆசைக்கொண்டார். ஆனால் தன் உடல்குறை காரணமாக அவ்வாசை நிறைவேறாமல் போனது. ஜெரால்டு தனது நில புலன்களை விற்று, அவற்றை திருத்தந்தையிடம் கொடுத்து, ஏழை மக்களுக்கு உதவும்படியாக கூறினார். விசுவாசம் ஒன்றே போதுமென்று இறை நம்பிக்கையில் தன் வாழ்வை வாழ்ந்தார். தனிப்பட்ட முறையில் இறைப்பணியை செய்தார்.
சிறப்பான முறையில் மறைப்பணியை ஆற்றினார். கற்பு என்ற வார்த்தைப்பாட்டை தானாகவே எடுத்துக்கொண்டார். திருமண வாழ்வில் ஈடுபடாமல், துறவி போலவே வாழ்ந்து மடங்களை நிறுவினார். அம்மடங்களில் இடைவிடாமல் வழிபாடு வைத்தும், ஆராதனை வைத்தும் செபித்தார். நாளடைவில் இவரின் மடமானது யாத்திரை தளமாக மாறியது. அதில் பெற்ற பணங்களைக் கொண்டு உரோம் நகர திருச்சபைக்கு உதவினார். பிறகு திருத்தந்தையின் ஒப்புதல் பெற்று தனது மடத்தை மதச்சார்பற்ற சபையாக (Secular) மாற்றினார். பலர் இம்மடத்தில் சேரவே, பல நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் வாழ்நாள் முழுவதுமே பக்தியையும், நேர்மையையும் தன்னகத்தே கொண்டு வாழ்ந்தார்.

செபம்:
என்றும் வாழ்பவரே! சாதி மதம் இனம் கடந்து பணிபுரியும் மதச்சார்பற்ற துறவற சபையினரை வழிநடத்தும். இவர்களை காணும் மக்கள் அத்துறவிகள் உம்மைக் காண வரம் அருளும். உம்மீது நம்பிக்கையின்றி வாழும் மக்களை உம்பால் ஈர்ந்து, நம்பிக்கையில் வளரவும், வாழவும் உறுதிப்படுத்தியருளும்.

 

image