நவம்பர் 26
மறைப்பணியாளர் லியோனார்டு
மறைப்பணியாளர் லியோனார்டு, போர்டோ மவுரிஷியோ நகர்
Leonhard von Porto Maurizio OFM
பிறப்பு
20 டிசம்பர் 1676,
போர்டோ மவுரிஷியோ, இத்தாலி
இறப்பு 26 நவம்பர் 1751,
உரோம்
முத்திபேறுபட்டம்: 26 நவம்பர் 1796
புனிதர்பட்டம்: 29 ஜூன் 1867, திருத்தந்தை 9 ஆம் பயஸ்
மறைப்பணியாளர்களின் பாதுகாவலராக: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல்: மறைப்பணியாளர்கள்
இவர் இத்தாலி நாட்டின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் தான் குருப்பட்டம் பெற்றபின் மறைப்பரப்பு பணியாளராக செயல்பட்டார். பயணங்கள் பல மேற்கொண்டு, ஊர் ஊராக சென்று மறையுரையாற்றினார். இவரின் மறையுரையால் பலர் கவர்ந்து, இவரை தொடர்ந்தனர். அனைத்து வித மக்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். இயேசுவின் நற்செய்தியை மிக எளிய முறையில் அறிவித்தார்.
இவர் 1697 ஆம் ஆண்டு புனித பிரான்சு அசிசியின் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அன்னை மரியாளுக்கு வணக்கத்தையும், சிலுவைப்பாதை வழிபாடுகளையும், எளிமையான முறையில் வழிநடத்தி அனைத்து மக்களையும் இறையுணர்வை கொண்டு வாழ செய்தார். இவர் இத்தாலியில் மட்டுமே 600 முறை சிலுவைப்பாதையை வழிநடத்தியுள்ளார். இவர் மருத்துவப்படிப்பையும் தத்துவயியலையும் கற்றிருந்தபோதும் கூட எளிமையாக வாழ்ந்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்தார்.
செபம்:
இயேசுவே இதயத்தின் ஒளிவிளக்கே! உம் வார்த்தைகளை நாங்கள் நாளும் படிக்கவும் வாசிப்பதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை காட்டும் வழியில் சென்று, உம்மில் எம் வாழ்வை செம்மையாக்கி, சீர்படுத்தி வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று தூய ஆவியின் வழியாக புனித லியோனார்டின் பரிந்துரையை பெற உதவியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |