ஆனந்த மழையில் நானிலம் மகிழ

download

0360. ஆனந்த மழையில் நானிலம் மகிழ
மன்னவன் எழுகின்றார் (2)
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ
அவனியை மாற்றிடும் அருட்கடலோ (2)

1. மன்னவனே என்னிதயம் பொன்னடி பதிக்கின்றார்
விண்ணகமே என்னிதயம் அன்புடன் அழைக்கின்றார் (2)
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே
பண்பாடவோ என்றும் கொண்டாடவோ
மலர்கின்ற புது வாழ்விலே இனி சுகமான புது இராகமே-2
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

2. சேற்றினிலே தாமரையாய்த் தேர்ந்தென்னை எடுத்தாரே
காற்றினிலே நறுமணமாய்க் கலந்தெனில் நிறைந்தாரே
எனில் ஒன்றாகினார் நான் நன்றாகினேன்
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன்
மலர்கின்ற புது ... ...