![]() ![]() ![]() ![]() ![]() |
![]() |
ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா திருவிழிப்பு (சனிக்கிழமை இரவு) புனித சனியன்று திருச்சபை ஆண்டவருடைய கல்லறையருகில் அவருடைய பாடுகளையும் மரணத்தையும் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றது. பீடம் வெறுமையாயிருக்கிறது. திருப்பலி ஒப்புக்கொடுப்பதில்லை. திருவிழிப்புக்குப்பின் பாஸ்கா மகிழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இம்மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும். திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கலாம். தொன்றுதொட்டே இவ்விரவு ஆண்டவருடைய வருகைக்காகத் திருவிழிப்புக் காக்கும் இரவாக இருந்து வந்துள்ளது (யாத் 12:42): அன்று இறைமக்கள் நற்செய்தியின் அறிவுரைப்படி (லூக் 12:35 முதல் காண்க) எரியும் விளக்குளுடன் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்றிருப்பார்கள். இவ்வாறு, அவர் வந்ததும், அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்ந்துவார். இத்திருவிழிப்பைக் கொண்டாடும் முறையாவது: (அ) திருஒளி வழிபாடு (முதற்பகுதி) (ஆ) இறைவாக்கு வழிபாடு (இரண்டாம் பகுதி): இறைவன் தொடக்கத்திலிருந்தே தம் மக்களிடையில் புரிந்துள்ள ஆற்றல்மிகு செயல்களைத் திருச்சபை சிந்தித்து. அவர் தந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ள முனைகிறது. (இ) திருமுழுக்கு வழிபாடு (மூன்றாம் பகுதி): உயிர்ப்பு விழா இதற்குள் நெருங்கி வர, திருச்சபையின் புது உறுப்பினர் திருமுழுக்கால் புதுப் பிறப்பு அடைவர். (ஈ) நற்கருணை வழிபாடு (நானகாம் பகுதி): இறுதியாக, ஆண்டவர் தம் இறப்பாலும் உயிர்ப்பாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்துக்குத் திருச்சபை அழைக்கப்;;படுகின்றது. பாஸ்காத் திருவிழிப்பு விழா முழுவதும் இரவில் கொண்டாடப்படும்: எனவே, அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது, ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும். இவ்விரவுத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும். ஆது ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் பாஸ்கா ஞாயிறு திருப்பலியாகும். இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், இரண்டாவது பாஸ்காத் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய குரு மீண்டும் தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ இரண்டாவது பாஸ்காத் திருப்பலியை நிறைவேற்றலாம். குருவும் திருத்தொண்டரும் வெண்ணிறத் திருப்பலி உடைகளை அணிவர். திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வேண்டும். முதற் பகுதி -திருவிழிப்பின் ஆடம்பரத் தொடக்கம் : திருஒளி வழிபாடு தீயையும் திரியையும் மந்திரித்தல் கோயில் விளக்குகள் எல்லாம் அனைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்கு வெளியே வசதியான இடத்தில் தீ தயாராயிருக்கும். இறைமக்கள் அங்கே கூடியிருப்பார். குரு பணியாளர்களோடு அங்கு வருவார். பணியாளர் ஒருவர் பாஸ்காத் திரியைக் கொண்டுவருவார். கோயிலுக்கு வெளியே தீயைப் பற்றவைக்க முடியாதெனில், கீழே எண் 13இல் உள்ளப்படி சடங்கை நடத்தலாம். குரு வழக்கம்போல் இறைமக்களை வாழ்த்தி, கீழுள்ளவாறு அல்லது அதுப்போன்று சுருக்கமாகத் திருவிழிப்பைப்பற்றி அறிவுரை கூறுவார். அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்து மிகவும் புனிதமான இந்த இரவில் திருச்சபை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை ஒன்றுகூடிவந்து விழித்திருந்து மன்றாட அழைக்கின்றது. இவ்வாறு நாம் ஆண்டவருடைய பாஸ்காவை நினைவு கூர்த்து, இறைவாக்கைக் கேட்டு, அவர் இறந்து உயிர்த் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாடி, அவர் சாவின்மீது கொண்ட வெற்றியில் நாமும் பங்கு கொண்டு, அவரோடு இறைவனில் வாழ்வோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றோம். பின் தீயை ஆசீர்வதிக்கிறார்: செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, உலகின் ஒளியாகிய உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக, எல். ஆமென் பாஸ்காத் திரி பற்றவைக்கப்படுகிறது. பாஸ்காத் திரியின் மாண்பையும் உட்பொருளையும் சில வெளி அடையாளங்களால் விளக்குவது மக்களின் அறிவுத் திறனுக்குப் பொருத்தமாயிருக்கும் எனக் கண்டால் சடங்கை இவ்வாறு நடத்தலாம்: தீயை மந்திரித்தபின் பீடத்துணைவர் அல்லது பணியாளரில் ஒருவர் பாஸ்காத் திரியைக் குருவிடம் கொண்டுவர, குரு அதில் எழுத்தாணிகொண்டு சிலுவை அடையாளத்தை வரைவார்: பின் சிலுவைக்குமேல் "அ" என்னும் எழுத்தையும், சிலுவைக்குக்கீழே "ன" என்னும் எழுத்தையும், சிலுவையின் நான்கு கோணங்களில், நிகழும் ஆண்டின் நான்கு எண்களையும் எழுதுவார். அப்பொழுது அவர் சொல்வதாவது: 1. கிறிஸ்து நேற்றும் இன்றும் (சிலுவையின் நேர்கோட்டை வரைகிறார்); 2. முதலும் முடிவும் (குறுக்குக் கோட்டை வரைகிறார்); 3. அகரமும் (நேர்கோட்டிற்குமேல் "அ" என்ற எழுத்தை எழுதுகிறார்); 4. னகரமும் (நேர்க்கோட்டிற்குக்கீழே "ன" என்ற எழுத்தை எழுதுகிறார்); 5. காலங்கள் அவருடையன (நிகழ் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப்புற மேற்கோணத்தில் எழுதுகிறார்); 6. யுகங்களும் அவருடையன (இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப்புற மேற்கோணத்தில் எழுதுகிறார்); 7. மாட்சியும் ஆட்சியும் அவருக்கே (மூன்றாம் எண்ணைச் சிலுவையின் இடப்புறக் கீழ்க்கோணத்தில் எழுதுகிறார்); 8. என்றென்றும் எக்காலமுமே, ஆமென் (நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப்புறக் கீழ்க்கோணத்தில் எழுதுகிறார்). சிலுவை அடையாளத்தையும் குறிகளையும் இவ்வாறு திரியின்மீது வரைந்தபின் அதில் ஐந்து சாம்பிரானி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்வதாவது:
1. தம்முடைய தூய 2. மகிமையான காயங்கால் 3. ஆண்டவராகிய கிறிஸ்து 4. நம்மைக் கண்காணித்து 5. பேணிக்காப்பாராக. ஆமென் குரு புதுத் தீயிலிருந்து திரியைப் பற்றவைத்துச் சொல்வதாவது: மகிமையுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி, அக இருளகற்றி, அருளொளி தருவதாக. இடத்தின் வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு. மேற்சொன்ன சடங்குகளில் அனைத்தையும் அல்லது சிலவற்றை மட்டும் பயன்படுத்தலாம். மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற வேறு சடங்குகளைப் பயன்படுத்த ஆயர்குழு பணிக்கலாம். பவனி பின் திருத்தொண்டர் அல்லது அவரில்லாதபோது குரு, பாஸ்காத் திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டு, பாடுவார்: பாஸ்கா புகழுரை: கிறிஸ்துவின் ஒளி இதோ! ஆயர் குழு இதைவிடப் பொருள்மிக்க ஆர்ப்பரிப்பைக் குறிப்பிடலாம். கிறிஸ்துவின் ஒளி இதோ! அனைவரும் தத்தம் திரிகளைப் பாஸ்காத் திரியிலிருந்து பற்றவைத்துக்கொண்டு, பவனியாகச் செல்வர். கிறிஸ்துவின் ஒளி இதோ! கோயில் விளக்குள் ஏற்றப்படுகின்றன. பாஸ்காப் புகழுரை பீடத்தை அடைந்ததும் குரு தம் இருக்கைக்குச் செல்வார். திருத்தொண்டர் பீடமுற்றத்தின் நடுவில் அல்லது வாசகமேடை அருகில் அமைக்கப்பட்ட தண்டின்மீது பாஸ்காத் திரியைவைப்பார்; பின்பு, தூபத்தைப் பயன்படுத்தினால், திருப்பலியில் நற்செய்திக்குமுன் நடப்பதுபோல, தூபக்கலத்தில் சாம்பராணி இடப்பட்டபின், அவர் குருவிடம் ஆசி பெறுவார்; குரு அமைந்த குரலில் பின்வருமாறு சொல்லி ஆசியளிப்பார்: ஆண்டவர் உமது உள்ளத்திலும் நாவிலும் இருப்பாராக: இவ்வாறு நீர் அவரது பாஸ்காப் புகழுரையைத் தகுந்தவகையில் எடுத்துரைப்பீராக: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. திருத்தொண்டர் அல்லாதவர் பாஸ்காப் புகழுரையைப் பாடினால் இந்த ஆசியுரை விடப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லாதபோது குரு, வசதிபோலப் புத்தகத்திற்கும் திரிக்கும் தூபம்காட்டி, வாசகமேடையில் நின்றுகொண்டு பாஸ்காப் புகழுரையைப் பாடுவார். அப்பொழுது அனைவரும் எரியும் திரி பிடித்துக்கொண்டு எழுந்து நிற்பர். தேவையானால், திருத்தொண்;டர் பட்டம் பெறாத பாடகர் ஒருவர் பாஸ்காப் புகழுரையைப் பாடலாம்: அப்படியானால் "எனவே, இத்திருவிளக்கின்" என்னும் சொற்களிலிருந்து ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்னும் இத்திருவிளக்கின்" என்னும் வாழ்த்துரை உட்பட்ட பகுதியை விட்டுவிடவேண்டும். பாஸ்காப் புகழுரையின் குறகிய பாடத்தையும் பாடலாம், பாஸ்காப் புகழுரையில் இடையிடையே மக்களின் ஆர்ப்பரிப்பு சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள ஆயர்குழு ஏற்பாடு செய்யலாம். பாஸ்காப் புகழுரை: வானகத் தூதர் அணி மகிழ்வதாக் இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக. (எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச் சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே, முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. முன். இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள். முன். நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம். கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும், கிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,
ஆகவே, தூய தந்தையே, இப்புனிதமான இரவில் நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும் எல். ஆமென் இரண்டாம் பகுதி - இறைவாக்கு வழிபாடு திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும், புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் இடம் பெறுகின்றன. மக்களின் பொது நன்மைக்குத் தேவையானால், பழைய ஏற்பாட்டு வாசகங்களைக் குறைக்கலாம்; ஆனால் இறைவாக்கு வாசகம் இத்திருவிழிப்பின் மிக முக்கியமான பகுதி என்பதை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது வாசிக்கவேண்டும்: மிகவும் முக்கியமான காரணங்களுக்காக இதை இரண்டாக்கலாம். ஆனால் யாத்திராகமம் 14ஆம் அதிகாரத்தை ஒருபோதும் விட்டுவிடலாகாது. அனைவரும் திரிகளை அணைத்துவிட்டு அமர்ந்திருப்பர். வாசகங்களைத் தொடங்குமுன் குரு கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று மக்களுக்கு அறிவுரை கூறுவார்: அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, இத்திருவிழிப்பைச் சிறப்புடன் தொடங்கிய நாம், அமைந்த உள்ளத்தோடு இறைவாக்கினைக் கேட்போமாக: கடந்த காலங்களில் கடவுள் தம் மக்களை எவ்வாறு வழிநடத்திக் காத்து வந்தார் என்றும், இறுதியாகத் தம் திருமகனை நம் மீட்பராக அனுப்பினார் என்றும் சிந்திப்போமாக. மேலும், இறைவன் பாஸ்கா வழியாக ஆற்றிய மீட்புப் பணியை முழுமையாக்கிட வேண்டுவோமாக. பின்னர் வாசகங்கள் தொடரும் வாசகர் வாசகமேடைக்குச் சென்று முதல் வாசகத்தை அறிக்கையிடுவார். அடுத்து சங்கீத முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் சங்கீத அடிகளைப் பாட, இறைமக்கள் பதிலுரையைப் பாடுவார்கள். அது முடிந்தபின் எல்லாரும் எழுந்து நிற்க, குரு செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்று சொல்லி அழைப்பார்: அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபித்தபின், குரு சபை மன்றாட்டைச் சொல்லுவார். பதிலுரைச் சங்கீதத்திற்குப் பதிலாக மௌன செபம் இடம் பெறலாம். அப்படியானால் செபிப்போமாக என்னும் அழைப்புக்குப்பின் மௌனம் தேவையில்லை. முதல் வாசகம்: படைப்பு: தொடக்க நூல் 1:1-2:2 தொடக்க நூலிலிருந்து வாசகம்: தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 104:1-2, 5-6, 10, 12, 13-14, 24-25 பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும்; அசைவுறாது. பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்; உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
வாசகத்திற்குப் பின் மன்றாட்டு: செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய படைப்புகளையெல்லாம் எல். ஆமென். அல்லது (மனித படைப்பைக் குறித்து) செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, மனிதரை வியத்தகு முறையில் படைத்து, அதிலும் வயித்தகு முறையில் மீட்டருளினீர்: எல். ஆமென் -------------------------------------- இரண்டாம் வாசகம்: ஆபிரகாமின் பலி: தொடக்க நூல் 22:1-18 இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார். பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, "அப்பா!" என, அவர், "என்ன? மகனே!" என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" "என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ";ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார். இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: திருப்பாடல் 16:5,8 9-10, 11 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. வாசகத்திற்குப் பின் மன்றாட்டு: செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, விசுவாசிகளின் உன்னத தந்தையே, எல். ஆமென். ---------------------------------- மூன்றாம் வாசகம்: செங்கடலைக் கடந்து செல்லல்: யாத் 14:15-15:1 ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிiவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, "நானே ஆண்டவர்" என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார். இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர். ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.
தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18 ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். போரில் வல்லவர் ஆண்டவர்; "ஆண்டவர்" என்பது அவர் பெயராம். ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். வாசகத்திற்குப் பின் மன்றாட்டு: செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, எல். ஆமென் அல்லது செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, புதிய உடன்படிக்கையின் ஒளியில் முற்காலத்தில் நிகழ்ந்த அருஞ்செயல்களைத் தெளிவுபடுத்துகின்றீர். எல். ஆமென். --------------- நான்காம் வாசகம்: புதிய எருசலேம். எசாயா 54:5-14 இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்;போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது. இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி. தியானப் பாடல்: திருப்பாடல் 30:2,4 5-6, 11-12 பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர். ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எல். ஆமென். ----------------------- ஐந்தாம் வாசகம்: அனைவருக்கும் மீட்பு இலவசமாக அருளப்படுகிறது: இசை 55:1-11 இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம் தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி. தியானப் பாடல்: எசாயா 12:2-3, 4, 4-6 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எல். ஆமென். ------------------- ஆறாம் வாசகம்: ஞானத்தின் ஊற்று: பாரூயஅp;க் 3:9-15, 32-38, 4:1-4 பாரூயஅp;க்கு நூலிலிருந்து வாசகம் இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களொடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்? ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, "இதோ, உள்ளோம்" என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர், மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம், அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர். யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட, உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம். இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி. தியானப் பாடல்: திருப்பாடல் 19:7, 8, 9, 10 பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, பல்வேறு இனத்தாரை அழைத்துச் சேர்ப்பதால் உமது திருச்சபை எப்பொழுதும் வளரச் செய்கின்றீர்: எல். ஆமென் ------------------ ஏழாம் வாசகம்: புதிய உள்ளம், புதிய மனப்பாங்கு: எசேக் 36:16-28 இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது; மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுகு;குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி. தியானப் பாடல்: திருப்பாடல் 42:3, 5 பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்;
செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்றும் குன்றா ஒளியும் ஆற்றலுமாகிய இறiவா, எல். ஆமென். அல்லது செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டுமென்று எல். ஆமென் ------------------------ பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்க்குரிய பதிலுரைப்பாடலும் செபமும் முடிந்தபின், பீடத்தில் திரிகள் பற்றவைக்கப்படும் குரு உன்னதங்களிலே என்னும் கீதத்தை தொடங்க, எல்லாரும் தொடர்ந்து பாடுவர். அப்பொழுது அந்தந்த இடத்தின் வழக்கப்படி மணிகள் ஒலிக்கும். கீதம் முடிந்தபின் குரு வழக்கம்போல சபை மன்றாட்டைச் சொல்வார்:
செபிப்போமாக (மன்றாடுவோமாக) இறைவா, புனிதமிக்க இந்த இரவை எங்கள் ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் மகிமையால் ஒளிபெறச் செய்கின்றீர். எல். ஆமென். பின்பு வாசகர் திருமுகத்திலிருந்து வாசிப்பார் உரோமையர் 6:3-13 அப்போஸ்தலரான புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுதக்திலிருந்து வாசகம் திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி. அதன்பின் அனைவரும் எழுந்து நிற்க, குரு ஆடம்பரமாக அல்லேலூயா எனப் பாடுவார்; மக்கள் எல்லாரும் அதை எடுத்துப்பாடுவார்கள். பின் சங்கீத முதல்வர் அல்லது ஒரு பாடகர் சங்கீதத்தின் அடிகளைப் பாட, எல்லாரும் அல்லேலூயா எனப் பல்லவி பாடுவர், தேவையானால் சங்கீத முதல்வரே அல்லேலூயா எனத் தொடங்கலாம். நற்செய்திக்கு எரியும் திரிகளைப் பயன்படுத்துவதில்லை. தூபம் காட்டலாம்.
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! நற்செய்தி : மத்தேயு 28:1-10 ஆண்டவர் உங்களோடு இருப்பாராக புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் - ஆண்டவரே உமக்கு மகிமை ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார். அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார். இது கிறிஸ்துவின் நற்செய்தி - கிறிஸ்துவே உம்மை புகழ்கின்றோம் நற்செய்திக்குப்பின் மறையுரை ஆற்றப்படும். பின் திருமுழுக்கு வழிபாடு தொடரும். மூன்றாம் பகுதி - திருமுழுக்கு வழிபாடு திருமுழுக்கு வழிபாடு இறைமக்கள் எல்லாரும் எளிதாகப் பார்க்கக்கூடிய இடத்தில் திருமுழுக்குத் தொட்டி இருந்தால், குரு பணியாளரோடு அங்குச் செல்வார்; இல்லையெனில் தண்ணீர்ப் பாத்திரம் ஒன்று பீட முற்றத்தில் வைக்கப்படும். திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்: அன்புக்குரியவர்களே, நம் சகோதரர் (சகோதரி)களுக்கு, மகிழ்ச்சிமிக்க நம்பிக்கை உண்டாக நாம் ஒன்றிணைந்து நம் மன்றாட்டினால் துணைபுரிவோம்: திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லை: ஆனால் திருமுழுக்குத் தொட்டியை மந்திரிக் வேண்டியிருந்தால்: அன்புக்குரியவர்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருள் இத்தொட்டியின்மீது இறங்கக் கெஞ்சி மன்றாடுவோம். இரு பாடகர் மன்றாட்டு மாலை பாட (பாஸ்காக் காலமானதால்) அனைவரும் எழுந்துநின்று பதில் பாடுவர். திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போகவேண்டுமானால். பவனியின்போது மன்றாட்டு மாலை பாடப்படும்; அப்படியானால், திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்குமுன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்காத் திரி கொண்டுபோகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானத்தாய் தந்தையருடன் செல்வர்: இறுதியாகக் குருவும் பணியாகும் செல்வர். நீரை மந்திரிக்குமுன் அறிவுரை வழங்கப்படும். திருமழுக்குக் கொடுத்தவோர தொட்டி மந்திரித்தலோ இல்லையென்றால், மன்றாட்டு மாலையை விட்டுவிட்டுத் தீர்த்தம் மந்திரிக்கப்படும் (எண் 45). புனிதர் சிலரின் பெயரை, சிறப்பாகக் கோயிலின் பாதுகாவலர், நாட்டின் பாதுகாவலர், திருமுழுக்குப் பெறுவோரின் பெயர்கொண்ட புனிதர் ஆகியோரின் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக்கொள்ளலாம்.
புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்: தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால் திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்: உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையுமாறு, இந்த நீருற்றை உமது அருளினால் கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும் - கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும். திருமுழுக்குப் பெறுவோர் அங்கிருந்தால், குரு கைகுவித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எல். ஆமென். திருமுழக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்: குரு கை குவித்துப் பின்வரும் செபத்தைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகிறார்: இறைவா, கண்ணுக்குப் புலப்படாத வல்லமையால் திருவருட்சாதனங்கள் பயனளிக்க குரு வசதிக்கேற்ப பாஸ்காத் திரியை ஒருமுறை அல்லது மும்முறை தண்ணீரில் இறங்கிச் சொல்வதாவது: இறைவா, இந்தத் தொட்டியிலுள்ள தண்ணீர் முழவதிம் தூய ஆவியின் வல்லமை உம் திருமகன் வழியாக இறங்குவதாக. திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது: இவ்வாறு, திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் சாவுக்குள் அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழ வேண்டுமென்று எல். ஆமென் பின் தண்ணீரிலிருந்து திரி அகற்றப்படும். அப்பொழுது மக்கள் கீPழுள்ளவாறு அல்லது வேறு பொருத்தமானவாறு ஆர்ப்பரிப்பர். நீரூயஅp;ற்றுகளே, ஆண்டவரைப் போற்றுங்கள், என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள். திருமுழுக்குப் பெறவிருப்போர் ஒவ்வொருவராகச் சாத்தானைத் துறந்து, விசுவாச அறிக்கை செய்தபின் திருமுழுக்குப் பெறுவர். தண்ணீருக்கு ஆசியளித்தல் (தீர்த்தம் மந்திரிப்பு) திருமுழுக்கு அளித்தலோ, தொட்டி மந்திரித்தலோ நடைபெறவில்லையென்றால். குரு கீழுள்ள செபத்தைச் சொல்லித் தீர்த்தத் தண்ணீருக்கு ஆசி அளிப்பார்: அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே, எல். ஆமென். திருமுழுக்கு வாக்குறதிகளைப் புதுப்பித்தல்: திருமுழுக்கும் (உறுதிப் பூசுதலும்) முடிந்தபின் அல்லது அது இல்லையெனில் தண்ணீருக்கு ஆசி வழங்கியபின் அனைவரும் எழுந்து நின்று. எரியும் திரிகளைப் பிடித்துக்கொண்டு, தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பார். குரு கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று சிற்றுரையாற்றுவார். அன்புச் சகோதரர் சகோதரிகளே, குரு: எல்லாத் தீமைகளின் மொத்த உருவாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா? குரு: தீமைக்குத் துணைபோகின்ற மனநிலையையும் செயல்களையும் விட்டுவிடுகிறீர்களா? குரு: தீமையினால் விளையும் தன்னலத்தையும் ஆணவத்தையும் விட்டுவிடுகிறீர்களா? அல்லது குரு: கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமையுடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா? குரு: பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தாதிருக்க, நீங்கள் தீமையின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா? குரு: பாவத்திற்குக் காரணமும் ஊற்றுமான தன்னலத்தையும், சாதி உணர்வையும், மொழி, இன, மத வெறிகளையும் விட்டுவிடுகிறீர்களா? தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் குழு நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் குரு தொடர்ந்து: குரு: வானமும் வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா? குரு: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா? குரு: தூய ஆவியையும், புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதரின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும் விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா? குரு முடிவுரையாகச் சொல்வது: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் நம் பாவங்களை மன்னித்து, நீரினாலும் தூய ஆவியாலும், எல். ஆமென். 47. குரு மக்கள்மீது மந்திரித்த தண்ணீர் தெளிப்பார்: அப்போது அனைவரும் பாடுவதாவது பல்லவி: தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர் ----- ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர் இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப அல்லது திருமுழுக்கைப்பற்றிய வேறு பாடல் பாடலாம். அதே வேளையில் புதுக் கிறிஸ்துவர் இறைமக்களோடு சென்று அமர்வர். நான்காம் பகுதி - நற்கருணை வழிபாடு குரு பீடத்திற்கு வந்து வழ்க்கம்போல நற்கருணை வழிபாட்டைத் தொடங்குவார். புதுக்கிறிஸ்தவர் அப்பமும் இரசமும் காணிக்கைப் பவனியில் கொண்டுவருவது சிறப்பு. (குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது) (குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.) (குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது) (குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.) (கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)
காணிக்கைமீது மன்றாட்டு: இறைவா, உம் மக்களாகிய நாங்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களோடு எங்கள் வேண்டுதல்களையும் ஏற்றருளும். பாஸ்காத் தொடக்கவுரை ஐ (... இந்த இரவிலும்...),முதல் (உரோமை) நற்கருணை மன்றாட்டில், புனிதர் அனைவருடனும், ஆகவே இறைவா, உம் ஊழியராகிய என்னும் செபங்களை இவ்விழாவுக்குரிய மாற்றங்களுடன் சொல்லவும். நற்கருணை மன்றாட்டு ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும், ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று, பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர் வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா.
நற்கருணை மன்றாட்டு 4 குரு : தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்: ஏனெனில், நீர் மாண்புமிக்கவர். உமது ஞானமும் பேரன்பும் விளங்க, அனைத்தையும் செய்தருளினீர். மனிதர் எங்களை உமது சாயலாகப் படைத்து, படைத்தவராகிய உமக்கே நாங்கள் பணிபுரியவும், படைப்புகளை எல்லாம் ஆண்டு நடத்தவும், உலகம் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் ஒப்படைத்தீர். கீழ்படியாமல் நாங்கள் உமது நட்புறவை இழந்தபோதிலும், நீர் எங்களை சாவின் அழிவுக்கு விட்டு விட வில்லை. ஏனெனில், தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர். மேலும், எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளப் பன்முறை முன் வந்தீர், மீட்பினை எதிர்பார்க்க இறைவாக்கினா வழியாக எங்களுக்கு கற்பித்தீர் தூயவரான தந்தையே, காலம் நிறைவுற்ற போது, உமது ஒரே பேறான திருமகனை மீட்பராக அனுப்பும் அளவுக்கு, நீர் எங்களை அன்பு செய்தீர். அவர் தூய ஆவியால் கன்னிமரியாளிடம் உடலெடுத்து, மனிதராகப் பிறந்து, பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களைப் போல வாழ்ந்தார். ஏழைகளுக்கு ஈடேற்றம், சிறைப்பட்டோர்க்கு விடுதலை, துயருற்றோருக்கு மகிழ்ச்சி என்று நற்செய்தி கூறினார், உமது திட்டத்தை நிறைவேற்ற, தம்மைத் தாமே சாவுக்குக் கையளித்தார், இறந்தோரிடமிருந்து உயிர்த் தெழுந்து, சாவையழித்து புதுவாழ்வு தந்தார். தந்தையே இனிமேல் நாங்கள் எங்களுக்காக வாழாமல், எங்களுக்காக இறந்து உயிர்த்த அவருக்காகவே வாழும் பொருட்டு விசுவசிப்போர் எங்கள் மீது தூய ஆவியை உம்மிடமிருந்து முதற் கொடையாக அனுப்பினார். இவ்வாறு, அவரது அலுவலைத் தூய ஆவி இவ்வுலகில் தொடர்ந்து நடத்தி, புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார். ஆகவே, இறைவா, தூய ஆவி இக்காணிக்கைகளைப் புனிதப் படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இவ்வாநு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிலையான உடன்படிக்கையாக எங்களுக்கு விட்டுச் சென்ற இந்த மாண்புமிக்க திருப்பலியை நாங்கள் நிறைவேற்றுமாறு, இக்காணிக்கைகள் அவரது உடலும் இரத்தமுமாக மாறுவனவாக! ஏனெனில், தூயவரான தந்தையே, உம்மால் அவர் மகிமை பெற வேண்டிய நேரம் வந்ததும், உலகில் இருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்து அவர், இறுதிவரையும் அன்புகூர்ந்து, அவர்களோடு உணவு அருந்துகையில், அப்பத்தை எடுத்து, வாழ்த்துரைத்து, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ; அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்! இறைவா, உமது திருச்சபைக்காக நீரே ஏற்பாடு செய்த இப்பலிபொருளைக் கண்நோக்கியருளும். இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறுகின்ற எல்லாரும் தூய ஆவியால் ஒரே உடலாக இணைக்கப் பெற்று, உமது மாட்சியின் புகழுக்காக, கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருள் ஆகுமாறு தயவாய் அருள்புரியும். இறைவா, இன்று யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோமோ, அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவு கூர்ந்தருளும், உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....., எங்கள் ஆயர்.... ஆண்டகை, ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர் ஆகிய அனைவரையும் நினைவு கூர்ந்தருளும். இப்பலியை ஒப்புக் கொடுப்போரையும், இங்கிருப்போர் அனைவரையும் உம் மக்கள் எல்லாரையும், நேர்மனத்தோடு உம்மைத் தேடிவரும் யாவரையும் நினைவு கூர்ந்தருளும். கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் நினைவு கூர்ந்தருளும். இறந்தவர்களில் உம்மீது விசுவாசம் கொண்டவர்கள் யாரென நீர் ஒருவரே அறிவீர். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தருளும்; இரக்கமுள்ள தந்தையே, இறைவனின் அன்னை புனிதமிக்க கன்னி மரியாள், உம் அப்போஸ்தலர், புனிதர் அனைவரோடும் உம்முடைய பிள்ளைகளாகிய நாங்களும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ள அருள்புரியும். பாவத்தினாலும் சாவினாலும் வரும் அழிவிலிருந்து விடுதலை பெற்ற படைப்புகள் அனைத்தோடும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமது அரசில் உம்மை புகழ்ந்தேத்துவோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
மக் : ஆமென். திருவிருந்துச் சடங்கு : குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. (குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)
மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும். (பாடல் திருப்பலியில்) உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! (குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்) குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்! (கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்) குரு : கிறிஸ்துவின் திருவுடல் திருவிருந்துப் பல்லவி: கொரி 5:7,8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியாகிவிட்டார். எனவே, நேர்மை, உண்மை என்னும் புவியாத அப்பத்தை விருந்தாக உண்போம், அல்லேலூயா. நன்றி மன்றாட்டு: இறைவா, இம்மாபெரும் இரவில் விழித்திருந்து உம் வார்த்தைகளைக் கேட்டு, குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பிரியாவிடையாக, திருத்தொண்டர் அல்லது குரு சொல்வது: சென்று வாழுங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.
|