0541. யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன - இறைவா
1. அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும்
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
ஆதரித்தே அரவணைப்பாய்
2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதய்யா
குணமதிலே மாறாட்டம்
குவலயம் தான் இணைவதெப்போ
3. வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல்
உலகிருக்கும் நிலை கண்டு உனது மனம் இரங்காதோ
|